Friday, October 17, 2008

வாய் விட்டு சிரியுங்க..

1.நீதிபதி-(குற்றவாளியிடம்)கன்னிப்பெண்ணை கற்பழித்தக் குற்றத்திற்காக உன்னை தண்டிக்க விரும்புகிறேன்..நீ ஏதேனும் கூற விரும்புகிறாயா?
குற்றவாளி- இது என் கன்னி முயற்சி ஐயா..மன்னிச்சு விட்டுடுங்க

2.காதலன்-எவ்வளவு நாட்கள் நாம இப்படியே காதலராய் இருக்கிறது..உங்கப்பாவை வந்து நான் பார்க்கவா?
காதலி-வேண்டாம்..வேண்டாம்..அவர் சம்மதம்னு சொல்லிட்டா..என்ன செய்யறது

3.தயாரிப்பாளர்-நானே திரைக்கதை,வசனம்,இயக்கம்,ஒளிப்பதிவு,பாடல்,இசை எல்லாப்பொறுப்பையும் ஏத்துக்கிட்டு ஹீரோவாகவும் நடிச்சுடலாம்னு பார்க்கிறேன்..
நண்பர்-பக்கத்திலேயே ஒரு தியேட்டர் விலைக்கு வருதாம்..அதையும் வாங்கிட்டீங்கன்னா உங்க படத்தை அங்கே ரிலீஸ் செய்திடலாம்

4.அந்த சேனல் உரிமையாளரை ஏன் கைது பண்ணிட்டாங்க
உலகத்தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையா..பெரிய திரைக்கு வர்றதுக்கு முன்னாலேயே சின்னத்திரையில் படம் போட்டுட்டாராம்

5.தலைவர் வார்த்தைக்கு வார்த்தை தான் டாக்டர்னு சொல்றாரே..படித்து வாங்கின பட்டமா?
இல்ல..கொடுத்து வாங்கின பட்டம்

6.(இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள்) இவ்வளவு வயசாகியும் ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்க
எங்கப்பா இன்னும் தாத்தாஆகிற வயசாகல்லேன்னு என் ஜாதகத்தையே எடுக்கமாட்டேன்னுட்டார்.

4 comments:

சின்னப் பையன் said...

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன்

குசும்பன் said...

அருமை!

T.V.ராதாகிருஷ்ணன் said...

பாராட்டுக்கும்..தங்களது முதல் வருகைக்கும் நன்றி..மீண்டும் வாருங்கள்