Wednesday, October 1, 2008

M.G.R.,படப்பாடல்களும்..அறிவுரைகளும்.. பாகம்-2

மேலும் சிலப் பாடல்களை இப்பதிவில் பார்க்கலாம்.,

கொடுத்தெதெல்லாம் கொடுத்தான் - அவன்
யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்-இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

மண்குடிசை வாசலென்றால்
தெய்வம் வர மறுத்திடுமா

சிலர் வாழ வாழ
பலர் வாட வாட
ஒருபோதும் தெய்வம் கொடுக்கவில்லை

ஆனந்த ஜோதி படப் பாடலில்

ஒன்று எங்கள்ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே

வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
உப்பு நீரின் வடிவிலே
ஒன்று சேரும் கடலிலே

எங்கவீட்டுப் பிள்ளைபடத்தில் நான் ஆணையிட்டால் பாடலில்

ஒரு தவறு செய்தால்
அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்க சொல்வேன்-அதில்
பிழைக்கச் செய்வேன்-அவர்
உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன்

விவசாயி படப்பாடலில்

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்

(தொடரும்)

2 comments:

நசரேயன் said...

புரட்சி தலைவரின் பாடல் பவனி மீண்டும் மீண்டும் வருக

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி..மீண்டும் வாருங்கள்