Thursday, January 29, 2009

தமிழன் உயிர் பற்றி கவலையில்லை....

அன்று...தமிழுக்காக ...உயிர் தமிழுக்கு..உடல் மண்ணுக்கு..என்றவாறே..உயிர் நீத்த..சிவலிங்கம்..அரங்கனாதான்...போல இன்று..உயிர் தமிழனுக்கு என உயிர் நீத்த முத்துக்குமரா...உன் தியாகத்தை என்ன வென்று சொல்ல...இந்த பதிவிடும் போது...எழுத்துக்கள் தெரியவில்லை...கண்களில் கண்ணீர்த்திரை..

ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆட்சியைப் பிடிக்க..தமிழனின் ஆதரவு தேவை..ஆனால்..தமிழன் உயிர் பற்றி கவலையில்லை.

முத்துக்குமரா! போய் வாய்யா..போய் வா...

உனக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி.

4 comments:

தமிழ் ஓவியா said...

முத்துக் குமாரின் உணர்வை மதிக்கிறேன். அதே வேளை இது போன்ற குறிப்பாக தீக்குளிப்பு போன்ற போராடங்கள் தேவையில்லாதது. அருள்கூர்ந்து யோசித்து மாற்றுப் போரட்ட வடிவத்தை கையிலெடுங்கள்.

இது குறித்து தி.க.தலைவர். கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள செய்தி இதோ:

“அந்தோ! கொடுமை! கொடுமை!! ஈழத் தமிழர் பிரச்சினை:
சென்னையில் இளைஞர் தீக்குளித்து மரணம்

தற்கொலைப் போராட்டத்தைக் கைவிட்டு
அறப்போர்பற்றி சிந்தியுங்கள்!
தமிழர் தலைவர் கி. வீரமணி அன்பு வேண்டுகோள்

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க வேண்டி மாணவர்கள் உண்ணாவிரதம் போன்ற அறப்போர்களில் ஈடுபட்டதைத் தாண்டி, இன்று சென்னை சாஸ்திரி பவன் முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்குத்தானே தீக்குளித்து இறந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனைக்குரியது; ஆழ்ந்த துன்பத்தைத் தருவது.
இந்தியப் பேரரசு இதுபோன்ற கொடுமைகள் நடக்காவண்ணம் மேலும் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்த முன்வாருங்கள்.

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க இங்குள்ள நாம் உயிர்த் தியாகம் செய்வது என்பதனால் முழுப் பயன் அடைந்து விட முடியாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடிட உயிருடன் இருப்பது அவசியமாகும்.

எனவே, மாணவத் தோழர்களே, இளைஞர்களே அருள்கூர்ந்து இம்மாதிரி தற்கொலைப் போராட்ட முயற்சியைக் கைவிட்டு, வேறு ஆக்க ரீதியான அறப்போர்கள் பற்றி சிந்தியுங்கள் என்று அன்புடனும், உரிமையுடன் மாணவத் தோழர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

———நன்றி “விடுதலை” 29-1-2009

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
தமிழ் ஓவியா

2009 Tamil said...

ஈழத்தமிழருக்காய் தன் உயிர் நீத்த அந்த மாமனிதருக்கு என் கண்ணீர் அஞ்சலி.அவர் பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு ஈழத்தமிழர் சார்பில் என் ஆழ்ந்த அனுதாபங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி 2009 Tamil