Friday, December 17, 2010

விக்கிலீக்ஸும்..ராகுல் காந்தியும்..மற்றும் காவி தீவிரவாதமும்..

பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களை விட இந்தியாவில் அதிகரித்துவரும் இந்து தீவிரவாத அமைப்புகளால் தான் இந்தியாவிற்கு பேராபத்து உள்ளது என ராகுல் காந்தி இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் டிமோதி ரோமரிடம் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

இருப்பினும் தான் இந்திய தீவிரவாதத்தை மட்டுமல்ல..அனைத்து வகையான தீவிரவாதமும் இந்தியாவிற்கு ஆபத்தானது என்று கூறியதாக ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அமெரிக்க தூதர் கூறுகையில் 'ராகுல் காந்தி என்னை சந்தித்த போது..பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்திய முஸ்லிம்கள் சிலர் ஆதரவு அளிப்பதாகக் கூறி,அதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும்..ஆனாலும் அதிகரித்து வரும் இந்து தீவிரவாத அமைப்புகள் அபாயகரமானது ' என்றும் சொன்னதாகக் கூறியுள்ளார்.

மேலும் ராகுல் அவரிடம்'இந்து தீவிரவாதம் பயங்கரமானதாக இருக்கும் என கருதுவதாகக் கூறியுள்ளார்.

முஸ்லிம் சமுதாயத்தினருடன், மோதலில் ஈடுபடுவது,பதட்டத்தை ஏற்படுத்துவது என்று இந்து தீவிரவாத அமைப்புகள் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளன என்றுள்ளார்.

"தீவிரவாதம், மதவாதம் ஆகியவை எந்த ரூபத்தில் வந்தாலும்,யார் மூலம் வந்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து என்றும்..தீவிரவாதத்தில் யார் ஈடுபட்டாலும் அதை அனுமதிக்க முடியாது என்ற முறையில் ராகுல் அப்படிக் கூறியதாக காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

சும்மா கிடந்த சங்கு ஊதப்பட்டுவிட்டதே..என்பதே நம் கவலை.

14 comments:

தமிழ் உதயம் said...

தேர்தல் வந்தால், தங்கள் கட்சியினர் ஊழல் புகாரில் சிக்கி கொண்டால், நாட்டில் காங்கிரஸ்க்கு அவப்பெயர் அதிகரித்தால் - காங்கிரஸ் மக்களின் கவனத்தை திசை திருப்ப இப்படி ஏதாவது சொல்வார்கள். இந்திரா காலத்தில் இருந்தே அது காங்கிரஸ் பாலிஷி. சமிபத்திய திசை திருப்பல்... காவி மற்றும் புலிகள் குறித்த பயங்கரவாத பேச்சுக்கள்.

goma said...

சும்மா கிடந்த சங்கு ஊதப்பட்டுவிட்டதே..

ஒரு சங்கு சும்மா கிடக்கக் கூடாதே...

எல் கே said...

இளவரசர் அவசரக் குடுக்கை. என்ன எப்படி பேசணும்னு தெரியாதவர். உளறிக் கொட்டிவிட்டார். இப்ப சமாளிச்சு ஆகணும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி தமிழ் உதயம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி LK

Unknown said...

ராகுல் காந்தி ஒரு வெள்ளையன்.அவன் சொல்வதை எல்லாம் நரகலை போல எடுத்து கொள்ள வேண்டும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி nag

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

Unknown said...

ராகுல் சரியான அரைவேக்காடு அடிமுண்டம் என்று மீண்டும் ஒரு முறை தன்னை வெளிபடுத்தியிருக்கிறார். சரி லூசுல விடுங்க அரைக்கால் இந்தியனான அவருக்கு வேறு எப்படி யோசிக்க தோணும்.

சிநேகிதன் அக்பர் said...

விக்கி லீக்ஸ் எல்லாரையும் ஒரு வழிபண்ணாம விடாது போலிருக்கே :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி kudakku

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்பர்