Monday, January 30, 2012

2ஜி ஊழல்...- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு





2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மூளையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டி 
விசாரணை நடத்த ஜனதா கட்சி தலைவர் சாமி பிரதமரிடம் அனுமதி கோரியும் பதில் இல்லை. இந்நிலையில் யாராவது 
அரசு ஊழியர், அதிகாரிகள், அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடர அரசு உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரினால்
 3 மாதத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ஊழல் செய்த முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவுக்கு எதிரான விசாரணையை 
பிரதமர் மன்மோகன் சிங் தாமதம் செய்தார் என்று கூறி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது 2ஜி ஊழல் விவகாரத்தில் 16 மாத காலமாக ஆ. ராசாவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் பிரதமர் எடுக்காதது ஏன் 
என்று மத்திய அரசின் சட்ட அதிகாரிகளிடம் கேள்வி கேட்கப்பட்டது. சூடான விவதாதத்திற்கு பிறகு கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம்
 24ம் தேதி தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.


2ஜி வழக்கில் ஆ. ராசா மூளையாக செய்ல்பட்டதாக குற்றம்சாட்டி விசாரணை நடத்த அனுமதி கோரி சாமி பிரதமருக்கு கடிதம் எழுதினார். 
ஆனால் கடந்த 11 மாதங்களாக பிரதமர் அலுவலகம் இது குறித்து பதில் அளிக்கவில்லை.


இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளில் ஏ.கே. கங்குலி வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி ஓய்வு பெறுவதால் 
இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.


நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது,


யாராவது அரசு ஊழியர், அதிகாரி, அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை கோரியோ, வழக்கு தொடர அனுமதி கோரியோ எந்த குடிமகனாவது 
அரசு உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரினால் அவர்கள் 3 மாதத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் பதில் அளிக்காத பட்சத்தில்
 4வது மாதத்தில் அனுமதி அளித்ததாகக் கருதி அந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


(நன்றி - தட்ஸ் தமிழ்)


1 comment:

aotspr said...

ஊழல் இல்லா தமிழகம் அமையுமா....?????
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"