Tuesday, January 31, 2012

ஜெயலலிதா - விஜயகாந்த் காரசார மோதல்





 தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும் இடையே கடும் காரசார மோதல் மூண்டது.
 இதன் இறுதியில் விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக உறுப்பினர்கள் அவையிலிருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

சட்டசபை இன்று கூடியதும் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்து தே.மு.தி.க. உறுப்பினர் சந்திரகுமார் கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதல்வர் ஜெயலலிதா எழுந்து இதுகுறித்து பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

அதற்கு சந்திரகுமார் என்ற தேமுதிக எம் எல் ஏ எழுந்து இதை ஏன் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு செய்யவி்ல்லை.அப்போதே செய்திருக்கலாமே என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த முதல்வர், விலை ஏற்றத்திற்கு பின்னர் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.,
தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும் என்று ஆவேசமாக கூறினார். உங்களுக்குத் திராணி இருந்தால் தனித்து நின்று பாருங்கள் என்றும்
விஜயகாந்த்தைப் பார்த்துக் கூறினார்.

இதைக் கேட்டு எழுந்த விஜயகாந்த் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி எப்படி வெற்றி பெறும் என்பது பற்றி அனைவருக்கும் தெரியும் என்றார்.

அதற்கு மீண்டும் எழுந்த ஜெயலலிதா தே.மு.தி.க.,விற்கு தனித்து போட்டியிட திராணி உள்ளதா. பெண்ணாகரம் இடைத்தேர்தலில்
 தே.மு.தி.க. டெபாசிட் இழந்தது என கூறினார்.

 தேமுதிக உறுப்பினர்கள் எழுந்து கடுமையாக கோஷமிட்டனர். பதிலுக்கு அதிமுகவினரும் கோஷமிட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தேமுதிக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர்..ஆளுநர் ஆட்சி எனில் தனித்து நிற்கத் தயார் என விஜய்காந்த் கூறினார்


2 comments:

Unknown said...

Nalla vaatham saithu tamil makkaluklu nallathu saivathai thavira suya puranam paadava unlalai vote pootu mla aakki anupinoam.

aotspr said...

அரசியல் வாழ்கையில் இதெல்லாம் சகஜமப்பா.....சாதாரணமப்பா..

"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"