Tuesday, January 24, 2012

பத்து ஆண்டுகள் பாத்ரூமில் அடைக்கப்பட்டிருந்த பெண்..




பாலஸ்தீனத்தில் தன் மகளை பத்து ஆண்டுகளாக பாத்ரூமில் அடைத்து வைத்திருந்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர் ஹசன் மெல்கம். இவர் இஸ்ரேல் குடியுரிமை பெற்றவர்.

இவர் தனது மனைவி விவாஹரத்து செய்தவர்.ஆனால் தன் மகள் பாராவை தன்னுடன் வைத்துக் கொண்டார்.ஆனால் அவளை சிறிய பாத்ரூமிற்குள் அடைத்து வைத்தார்.அப்போது அவர் மகளுக்கு வயது 11.அவளை இரவு நேரத்தில் மட்டும் வெளியே வர அனுமதித்தார்,ஆனால்..வீட்டை விட்டு வெளீயே போக அனுமதி இல்லை.இத் தகவல் பத்து ஆண்டுகள் கழித்து போலீஸிற்கு இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது..

இது குறித்து மகள் பாரா கூறுகையில் : நான் 10 ஆண்டுகளாக வெளி உலகை பார்க்கவில்லை. எனது அப்பா எனது முடியை அகற்றி விடுவார். அவ்வப்போது இரும்பு கம்பியால் அடிப்பார். என்றாவது ஒரு நாள் வெளிச்சத்தை காண்பேன் என்ற நம்பிக்கை இருந்தது . இனிமேல் தான் என் வாழ்க்கை துவங்குகிறது, எனது தந்தையை நான் வெறுக்க மாட்டேன் . அதே நேரத்தில் அவர் செய்த செயலை தான் நான்‌ வெறுக்கிறேன். ஏன் அவ்வாறு செய்தார் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை . அவ்வாறு இருந்தோமே என்ற கவலை எனக்கு இப்போது இல்லை என்றார் கண்ணீர் மல்க.


6 comments:

Chitra said...

நினைத்து பார்க்கவே முடியவில்லை. It is a heart breaking news!

ஹேமா said...

என்ன கொடுமை !

aotspr said...

கொடுரமான செயல்......




"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி kannan