Friday, February 10, 2012

தமிழ் எழுதத் தெரியாது - ரஜினிகாந்த்.




(தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (10-2-12))

ஒரு சமயம் பெர்னார்ட்ஷா சர்ச்சிலுக்கு 'இன்று ஒரு பெரிய விழாவில் நான் கலந்து கொள்கிறேன்.நீங்களும் வாருங்கள்...உங்கள் நண்பர்கலுடன் - அப்படி யாராவது உங்களுக்கு இருந்தால்' என்று கிண்டலாக கடிதம் எழுதினார்.
அதற்கு சர்ச்சிலின் பதில்..'இன்று ஒரு முக்கியமான நிகழ்ச்சி இருப்பதால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.உங்களது அடுத்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் -  அப்படி ஏதேனும் ஒன்று நடந்தால்.."

ஏட்டிக்கு போட்டி...???!!!

2)தாயார் பெயரை இனிஷியலாக பயன் படுத்தி வரும் நாடு ஸ்பெயின் ஆகும்.

3)கடுகை ஆயிரம் பங்கிட்டு
 அதிலொரு பங்கு அளவுள்ள
 ஒரு பொருள் கருப்பையில் தங்கி
 தானே ஊட்டிக் கொண்டு
 தன்னையே பகிர்ந்து
 பல்கி ஓரண்டம் போலாகி
 காற்றடைத்த பந்தில் காற்றுக் குறைந்து
 சப்பையாதல் போல் ஒடுங்கிப் பள்ளம்
 விழுந்து, இதுவே நீண்டு, மேலும்
 உருமாறிக் கொண்டே போய்
 உறுப்புகளையும் படிப்படியாக தோற்ருவித்து
 ஒரு மனிதக் குழந்தையாகத் தாயின்
 கருப்பையிலிருந்து வெளியே வந்து
 ஒரு சரித்திரத்திற்கு ஆளாகிறது

(இப்படி தாயின் கருவில் குழந்தை வளர்வதை வர்ணித்தவர் டாக்டர் என்.சேஷாத்திரி நாதன் அவர்கள்)

         - அமுதசுரபியில் சுதா சேஷய்யன்

4)அரசியல்னா என்னன்னு தெரியாம, முழுதும் புரிஞ்சுக்காம வெறும் சினிமா பாப்புலாரிட்டியை வைச்சு அரசியல்ல நான் இறங்க மாட்டேன்.அரசியல்வாதி ஆகிறதுக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது என்கிறார் அஜீத்...

5)1022 நில அபகரிப்புகள் இதுவரையில் செயல்பட்டுள்ளதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது.

6)எனக்குத் தமிழ் எழுதத் தெரியாது, ஆங்கிலம் அவ்வளவாக வராது, தெலுங்கு மறந்து விட்டது என்றுள்ளார் ரஜினிகாந்த்.

7)ஜோக்ஸ்...

  இங்கே நேற்று வரை இருந்த அணையை திடீர்னு காணலையே..
  அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய பல நிபுணர் குழுக்கள் வந்து ..ஆங்காங்கே..துளையிட்டு..சுண்ணாம்பு..கலவையை எடுத்துச் சென்றுட்டாங்க.

8) தலைவர் பெயர் கின்னஸ்ல வந்திருக்கு
  என்ன சாதனைப் பண்ணினார்
  நில அபகரிப்பு அதிக பட்சமாக செய்திருக்கிறாராம்

2 comments:

ஹேமா said...

சுண்டல் சுவை.கடுகு சமாச்சாரம்,தாயின் பெயர் கையெழுத்தில் அற்புதம் ஐயா !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா