Tuesday, February 21, 2012

மின்வெட்டிற்கு காங்கிரசே காரணம்....




'இன்றைய மின் தடைக்கும், தமிழக மின் வாரியம் கடன் சுமையில் தத்தளிப்பதற்கும் 1991 களில் மத்தியில் பொறுப்பு வகிச்ச காங்கிரஸ் அரசுதான் முதல் காரணம்.அப்போ காங்கிரஸ் அரசு பின் பற்றிய புதிய பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக எதிர்கால மின் உற்பத்தி அனைத்தும் தனியாரின் கட்டுப்பாட்டிர்கு விடப்பட்டது. அதன்படி மின் வாரியங்கள் தங்கள் தேவைக்காக புதுசா மின் உற்பத்தியில் ஈடுபடுகிற தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமா மின்சாரத்தின் விலையை நிர்ணயிக்க தனி சட்டத் திருத்தமும் கொண்டுவரப்பட்டது.உண்மையில் தமிழ் நாடு மின்சார வாரியம் மின்சாரத்தை வாங்கி விற்கும் ஒரு ஏஜென்சிதான்.மின்சாரத்திற்கு  அநியாய விலை வைக்கும் தனியார் உற்பத்தி நிறுவனங்களிடம் ஒருமுறை ஆந்திர அரசு பேச வேண்டிய விதத்தில் பேசி விலையைக் குறைக்க வைத்தது.அந்த அணுகுமுறை இப்போது நமக்குத் தேவை.வாரியத்திற்கு இருந்த கொஞ்சநஞ்ச அதிகாரமும் 1998ல் ஒரு தனிச்சட்டம் மூலம் உருவாக்கப்பட்ட மின்சார ஒழுங்குமுறை அணையத்திடம் குவிக்கப்பட, இப்போது ஒழுங்குமுறை ஆணையம் தனியார் நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு இருக்காங்க' என்கிறார்களாம் மின்சார அரசியல் தெரிந்தவர்கள் .

தகவல் -குமுதம்


1 comment:

aotspr said...

சரியாக சொன்னீர்கள்....



"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"