Friday, March 22, 2013

எருதின் நோய்


எருதின் நோய்

காக்கை அறிய வாய்ப்பில்லை

இழப்பின் வலி

இழந்தவரே அறிவார்..

பாறாங்கல்லிலும் ஈரம் இருக்குமாம்

அதனைவிடக் கடினமானவர்க்கு

கனிவென்றால் தெரியுமா?

பதவி தந்த சுகம்..

பல்லாயிரம் உயிர் நாசம் அறியுமா?

இன்றைய சரித்திரம் படிக்கும்

நம் வாரிசுகள்...

எள்ளி நகைக்கட்டும்

எண்ணி எண்ணி நம் தலைவர்கள்

சுயநலத்தை...

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை வரிகள்...

இன்றைய சரித்திரம் படிப்பது வீண்வேலை...