Wednesday, July 10, 2013

குறள் போற்றுவோம்..- 2



இன்று விளை நிலங்கள் எல்லாம் பட்டா போட்டு விற்கப்படுகின்றன.

அதற்கான காரணங்களில் ஒன்று விவசாயியின் வறுமை.

நமக்கு உணவை விளைவித்துத் தருபவன் வறுமையில் ஏன் வாட வேண்டும்.

காரணம்..அவன் உழைப்பிற்கான ஊதியம் கிடைப்பதில்லை.அவன் விளைச்சலுக்கு அவனால் விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை.அப்படியும் விவசாயம் செய்யலாம் என்றால், மழையில்லை. அதனால் நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன.தண்ணீரிலும் அரசியல்.ஆகவே கிடைத்த விலைக்கு விளைநிலத்தை விற்று விட்டு, நகரம் நோக்கி நகர்கிறான்.நகரத்தில் கூலி வேலையாவது செய்து பிழைக்கலாம் என்று.

விவசாயியின் வளம் குறைய மழை பிரதானக் காரணம்.இதைத்தான் வள்ளுவர் சொல்கிறார்..

 'ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
 வாரி வளங்குன்றிக் கால்'

இதன் பொருள்......

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத்தொழில் குன்றிவிடும்.

மழையை விவசாயியின் வருவாய் என அவர் குறிப்பிட்டது இக்குறளின் சிறப்பு.

1 comment:

sathishsangkavi.blogspot.com said...

குறளும், பொருளும் அருமை...