Wednesday, July 10, 2013

குறள் போற்றுவோம் - 3



இந்தியா...

தனது மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட தீபகற்பம்.

ஆனால் கடல் நீரால் என்ன பயன்?.நதிகளில் தண்ணீர் இல்லை.கடல் நீர் விவசாயத்திற்கு பயன் படுமா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

ஆனால்..ஒரு அடிப்படை உண்மையை மறந்துவிடுகிறோம்.

அந்த கடல்தான் தன் நீரை ஆவியாக்கி, மழைமேகமாக்கி மழையை தருவிக்க மூல காரணமாய் உள்ளது.ஆனால் அந்த கடல் நினைக்கும் இடத்தில் மழை பொழிய வாய்ப்பில்லை.

ஆகவே..கடல் நீர்  சூழ்ந்த உலகமாயினும்..அதிலிருந்த்து தோன்றும் மழை தேவையான இடங்களில் பெய்யாது பொய்த்துவிடின் விளைச்சல் இல்லை...நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படுகிறது.

வள்ளுவரும்..வான்சிறப்பில் சொல்லுவது என்ன.....

'விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி'  - 13

பொருள் - கடல்நீர் சூழ்ந்த உலகமாய் இருந்தாலும், மழைநீர் பொய்த்து விட்டால், பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.


1 comment:

இராஜராஜேஸ்வரி said...

அந்த கடல்தான் தன் நீரை ஆவியாக்கி, மழைமேகமாக்கி மழையை தருவிக்க மூல காரணமாய் உள்ளது.ஆனால் அந்த கடல் நினைக்கும் இடத்தில் மழை பொழிய வாய்ப்பில்லை.

அருமையான பகிர்வு..!