Wednesday, November 25, 2015

நாராயணனால் பலமிழந்த ஹிரண்யகசபு

தன் மகன் பிரகலாதனை..'ஹிரண்யகசபுவே நம..' என்று சொல்லச் சொல்லி..அது முடியாமல்..பிரகலாதனும் 'நாராயணாய நம' என மாறி..மாறி சொன்னதால் மனம் வெறுத்து..கோபத்துடன்..'பிரகலாதா நீ சொல்லும்..அந்த நாராயணன் எங்கிருக்கிறார்' என்கிறான் ஹிரண்யகசபு..

'தந்தையே..அந்த நாராயணன்..தூணிலும் இருப்பார்..துரும்பிலும் இருப்பார்"

'அப்படியெனில் நீ சொல்லும் அந்த நாராயணன்..இந்த.. தூணில் உள்ளானா?'

ஒரு தூணைக்காட்டி ஹிரண்யன் கேட்க..'ம்''இருக்கிறார் ' என்றான் பிரகலாதன்.

ஹிரண்யன் தன் கதாயுதத்தால்..தூணை பிளக்க ..அது பிளந்து..நரசிம்மன் வெளிப்பட்டு.. ஹிரண்யனை வதம் செய்கிறார்..

ஆனால் இன்று.

ஹிரண்யன் கேட்கிறார்..'பிரகலாதா..நீ சொல்லும் நாராயணன்..இந்த தூணில் இருக்கின்றானா?'

'தந்தையே! அந்த நாராயணன்..எல்லாத் தூணிலும் இருப்பார்"

ஹிரண்யன் தன் கதாயுதத்தால்..தூணை..தாக்க..தூண் பிளக்க வில்லை..

ஹிரண்யனுக்கு ஆச்சரியம்..தான் பலம் இழந்தோமா என..

பிரகலாதன் சிரித்துக் கொண்டே சொல்கிறான்..'தந்தையே..உங்களால் தூணை உடைக்க இயலாது ஏனெனில் அதனுள் இருப்பது 'நாராயணா முறுக்கு கம்பிகள்' என்கிறான்..

@@@@@ ##### @@@@@@ ####

சந்தானத்தைப் பார்த்து..'சபாஷ்...விளம்பரம் அருமையாக எடுத்துள்ளீர்கள்..' என்றார் நாராயணா முறுக்குக் கம்பி தயாரிப்பாளர்.

தான் எடுத்த முதல் விளம்பர படம் அருமையாய் வந்ததால் அந்த வருடம் தான் விஷுவல் மீடியம் படித்து வெளிவந்த சந்தானம் மனம் மகிழ்ந்தான்.

No comments: