Saturday, December 22, 2018

வள்ளுவன்

வள்ளுவனின் ஒவ்வொரு குறளிலும்ஆழ்ந்த அரத்தம் இருக்கும்.
உதாரணத்திற்கு இந்தக் குறளைப் பாருங்கள்..

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு"

ஒருவருக்குத் தீக்காயம் ஏற்படுமேயாயின்..அது ஆறக்கூடியதாயினும், ஆறியபின் அதன் வடு உடலில் இருக்கும்.

ஆனால்..ஒருவரை, மற்றவர் காயப்படும்படி பேசினால், அப்படிப் பேசப்பட்ட பேச்சு காலப்போக்கில் இருவரும் மற
ந்துவிடுவார்.ஆனாலும், .தீயினால் சுட்ட வெளி வடு போல அல்லாது..மனத்திற்குள் அவ்வடு காயப்பட்டவர் மனதில் ரணமாய் ஆறாமல் என்றுமிருக்குமாம்.

தீக்காயம் ஆறும் ஆனால் வடு மறையாது
மனக்காயம்  வடு இன்றி மறைந்தாலும், அதனால் ஏற்பட்ட ரணம் உள்ளே ஆறவே ஆறாது.

ஆகவே..மறந்தும்எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவர் மனது புண்படும் வார்த்தைகளை பேசிவிடக் கூடாது.

No comments: