Wednesday, December 26, 2018

பிஜேபி மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா?

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேற்தல் முடிவுகள் குறித்து  செய்திகள் தரும் ஊடகங்களும் சரி, கட்சிகளும் சரி சரியான தகவல்களைத் தருவதாக நான் எண்ணவில்லை.

அவை கண்டிப்பாக பி ஜே பிக்கு பின்னடைவுதான்.ஆனால் சரிவு அல்ல.

எந்த மாநிலமாயினும் சரி.. சட்டசபைத் தேர்தல்களின் முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக பெரும்பாலும் இருப்பதில்லை.அப்படிப்பட்ட நிலையில் மத்தியபிரதேசத்திலும் அந்நிலை காணப்படுவதில் ஆச்சரியமில்லை.மேலும்..வாக்குகள் சதவிகிதமும் வென்ற அணிக்கும், தோற்றவர்களுக்கும் பெரும் சதவிகிதத்தில் இல்லை.ராஜஸ்தானிலும் இதே கதைதான்.

இன்றைய நிலையில், வலுவான கூட்டணி யார் அமைக்கிறார்களோ அந்தக் கூட்டணியே வெல்லும் என்ற நிலைதான்.

பாராளுமன்றத் தேர்தல் எனும் போது...சட்டசபைத் தேர்தலுக்கான மக்களின் மனப்பாங்கு மாறக்கூடும்.சென்ற சில தேர்தல்களில் கூட நாம் இதைப் பார்த்திருக்கிறோம்.

உண்மைநிலை என்னவெனில்...இன்றைய நிலவரப்படி காங்கிரஸ் பெரியதாக வளரவும் இல்லை..பி ஜேபி பெரிதாகத் தேயவுமில்லை.

இம்முறை எந்த ஒரு தனிக்கட்சியும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தோன்றவில்லை.

பெரும்பாலான இடங்களை வென்ற அணி...கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும்.

மீண்டும் தேவகௌடாக்களுக்கும்,சந்திர சேகர்களுக்கும், குஜரால்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் வந்தாலும் வரலாம்


No comments: