Monday, April 6, 2020

வள்ளுவத்திருந்து தினம் ஒரு தகவல் - 97

நாம்  ஒரு ஆபத்தில் சிக்கிக் கொள்கிறோம். அதிலிருந்து வெளிவர இயலாது தவிக்கின்றோம்.

இந்நிலையில், நம் உறவினர் ஒருவரோ..அல்லது நண்பரோ உடனடியாக உதவிக்கு வந்து நம்மைக் காக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்.

சரியான நேரத்தில் அவர்கள் செய்த உதவி இந்த உலகினைவிட பெரியதாக மதிக்கப்பட வேண்டுமாம்..வள்ளுவர் சொல்கிறார்..

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது (102)

தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும் அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

, அதுமட்டுமல்ல்..அந்த..நண்பரோ...உறவோ நமக்கு செய்த உதவி மிகச் சிறியதாக இருந்தாலும்..அது செய்யப்பட்ட காலத்தை நினைப்போமானால் அச்சிறு உதவியும்..பெரிய உதவி போலவாம்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயந்தெரி வார் (104)

ஓருவர் செய்யும் திணையளவு சிறிய நன்மையைக் கூட, அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவர்.

அதேசமயம் அந்த உதவியைப் பெறும் நாம், இறுதிவரை அந்நண்பரை..உறவை மறக்கக் கூடாதாம்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு (110)

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு.ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.. விடுவது நல்லது.

சரி..ஒருவர் நமக்குட் தீங்கு செய்துவிட்டார்..என வைத்துக் கொள்வோம்..அப்போது என்ன செய்வது..

அப்படிப்பட்டவருக்கும் வள்ளுவர் சொல்கிறார்..

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று (108)

ஓருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல.அவர் தீமைசெய்திருந்தால் அதை அக்கணமே மறந்து விடுவது நல்லது.

No comments: