Tuesday, April 7, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 98

நீதிமன்றத்தில் ஒரு முக்கிய வழக்கு ஒன்று வருகிறது.அதற்கான தீர்ப்பு சொல்ல வேண்டிய நாள்.

இரு பக்கத் தரப்பும் செல்வம் மிக்கவர்கள்..அவரவர்க்கென அவர்களுடன் ஒரு கூட்டத்தையே தங்களுக்கு ஆதரவாக வைத்துக்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என ஒவ்வொரு தரப்பும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில்..தீர்ப்பு வழங்கப்போகும் நீதிபதி என்ன செய்ய வேண்டும்..

வள்ளுவர் சொல்வதைப் பார்ப்போம்..

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி (118)

என்கிறார்.

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள்போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.

அந்த நீதிபதி நியாயம் யார்பக்கம் உள்ளட்ஹோ அவருக்கு ஆதரவாக நீதி வழங்க வேண்டும்.

 அதுதான்  நடுவுநிலையாளருக்கான தகுதியாகும்.

பகைவர்,அயலோர்,நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

தகுதி எனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின் (111) 

No comments: