Tuesday, June 30, 2020

#TVR தமிழ் இதழ்களை அலங்கரித்த ஓவியர்கள் -8



1928ல் பிறந்தவர் வெங்கட் ரமணி.

இவரது1953ஆம் ஆண்டு கோவிந்தன் எனும் இவர் உறவினர் ஒருவர் திருமணத்திற்கு திருவாரூர் சென்ற இவர் தாத்தாவிடம் Joy this year.Boy next year ' என்று அலங்கார எழுத்துகளில் ஒரு வாழ்த்துமடலை எழுதி கோவிந்தனிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பினார்.

அந்தத் திருமணத்திற்கு விகடன் அதிபர் எஸ் எஸ் வாசனும் சென்றிருந்தார்.அவரிடம் தாத்தா நடேச ஐயர், பேறன் வரைந்திருந்த அழைப்பிதழினைக் காட்டி.."ஏன் பேரன் எழுதியது..எவ்வளவு அழகாக எழுதியிருக்கின்றான் பாருங்கள்" என்று சொன்னதுடன் நிற்காது, "அவனுக்கு உங்க விகடனில் ஒரு வேலைப் போட்டுத் தாருங்களேன்" என்றிருக்கிறார்.

வாசனும், "அதற்கென்ன ..கொடுத்தால் போயிற்று..நாளைக்கு காலை 8 மணிக்கு அனுப்பி வையுங்க" என்றுருக்கிறார்.

உடனே தாத்தா..பேரனுக்கு தந்தையடித்து..வரச் சொல்ல, வெங்கட் ரமணியும் வந்தார்..

அவரைப் பார்த்த வாசன்,''உன் படங்கள் எல்லாம் பார்த்தேன். நன்றாக இருந்தது. தேவனிடம் சொல்லியிருக்கிறேன். நீ நேரே ஆனந்த விகடன் ஆபீசுக்குப் போய் தேவனைப் பார்!'' என்றார் .

அங்கு,தேவனின் அறைக்கு. சற்றுத் தள்ளி ஒரு ஷெட்டில் கோபுலு, சித்ரலேகா, சில்பி, சிம்ஹா, ஸாரதி ஆகிய ஓவியர்கள் இருந்தார்கள். அங்கேயே இவருக்கும் ஒரு மேஜை, நாற்காலி போட்டுக் கொடுத்தார்கள். சுற்றி இருந்தவர்களோ ஓவிய உலகில் பெரிய ஜாம்பவான்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு கொசு மாதிரி இவர் ஒடுங்கி உட்கார்ந்தார்.

இவர் பெயர் வெங்கடரமணி என்பதால், 'ரமணி’ என்ற பெயரில் அந்தப் படத்தை வரைந்திருந்தார். ஆனால், அந்தக் காலத்தில் ரமணி என்று வேறு ஒரு புகழ்பெற்ற ஓவியர் இருந்தார். அவர் பெயர் சுப்பிரமணி. அவர் சுப்பு என்ற பெயரிலும், ரமணி என்ற பெயரிலும் படங்கள் வரைவார். அதனால், இவரை வேறு பெயரில் வரையச் சொன்னார் தேவன். 

''நீங்களே ஏதாவது பெயர் சொல்லுங்களேன், சார்!'' என்று கேட்டார் இவர்.உடன் இவரின் ஆங்கிலப் பெயரில் முதல் எழுத்தையும் கடைசி மூன்று எழுத்துக்களையும் சேர்த்து, வாணி என்று வைத்துவிட்டார்



சில்பி இவர் படம் வரைவதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருப்பாராம். அவர் பார்க்கிறார் என்று தெரிந்ததும் இவருக்கு உள்ளுக்குள் உதறலாக இருக்கும். ஒரு நாள் அவர் இவரைக் கூப்பிட்டு, ''எத்தனை நாளைக்குத்தான் ரூமுக்குள்ளேயே இருந்து வரைவாய்? வெளியே நாலு இடங்களுக்குப் போய் நேரடியாகப் பார்த்து லைஃப் ஸ்கெட்ச் பண்ணு. அப்பத்தான் கை பழகும்'' என்று சொன்னாராம்.. அதன்படியே விகடன் அலுவலகத்தில் அலவன்ஸ் வாங்கிக் கொண்டு வெளியே போய் வரையத் தொடங்கினார். வரைந்ததை மறுநாள் ஓவியர் கோபுலுவிடம் கொண்டு வந்து காண்பிப்பார். அவர் இன்னின்ன இடத்தில் இப்படி வரையணும் என்று சொல்லிக் கொடுத்துத் திருத்தித் தருவாராம்..

ஆர்ட்ஸ் ஸ்கூல் எதிலும் சேர்ந்து இவர் படிக்கவில்லை.சித்திரமும் கைப் பழக்கம் என்பது இவருக்கு சரியாய் இருக்கும்


எங்கே படம் வரையச் சென்றாலும், சில்பிஇவரையும் உடன் அழைத்துப் போவார். அவர் வரைவதை அருகிலிருந்து கவனிக்கச் சொல்வார். கரன்ட் கம்பம், எருமை மாடு, சைக்கிள் ரிக்ஷா என்று கண்ணில் பட்டதையெல்லாம் வரையச் சொல்வார். 'சைக்கிள் ரிக்ஷா தலைகீழாகப் புரண்டிருந்தால் எப்படி இருக்கும்னு வரை, பார்க்கலாம்!’ என்பார்.

'என்ன சார் இது, எப்படி வரைய முடியும்?’ என்பார் வாணி புரியாமல்.

 'சைக்கிள் ரிக்க்ஷா அடியில் மல்லாந்து படுத்துக்கொண்டு வரை!’ என்பாராம் சில்பி.. 'ஒரு கதையில் இருவர் சைக்கிள் ரிக்க்ஷாவில் போகும்போது விபத்து ஏற்பட்டு, ரிக்க்ஷா உருண்டு புரண்டுவிட்டது என்று சீன் வந்தால் எப்படி வரைவாய்? அதனால், இப்போதே  வரைந்து பழகிக்கொள்ள வேண்டும்’ என்பாராம். அதே போல், 'ஒரு சிம்னி விளக்கை வரைவதானால், வெறுமே அதை நேராக அப்படியே வரையாதே! படுக்கப்போட்டு வரை. முதுகுப்புறம் இருந்து வரை. இப்படிப் பல ஆங்கிளில் வரைந்தால்தான் அதன் உருவம் மனதில் பிடிபடும்’ என்பாராஒரு நாள் தேவன் இவரைக் கூப்பிட்டு, ஒரு சிறுகதைக்குப் படம் வரையச் சொன்னார். சித்தார்த்தன் என்கிற எழுத்தாளர் எழுதிய 'கோமதியின் நெஞ்சம்’ என்கிற கதை. அதை எடுத்துக்கொண்டு போய் கோபுலுவிடம் கொடுத்து, ''சார், இதுக்கு என்னைப் படம் போடச் சொல்லியிருக்கிறார். எப்படிப் போடணும்னு சொல்லித் தாங்களேன்'' என்று கேட்டார் வாணி

 அவரும் ரஃப் ஸ்கெட்ச் செய்து காண்பித்து, ''இப்படிப் போடு'' என்று ஐடியா கொடுத்தார்.

அதை அப்படியே வாங்கி, அதன் மீதே அழகாக வரைந்து எடுத்துக்கொண்டு போய் தேவனிடம் கொடுத்தார் ''பிரமாதமா வரைஞ்சிருக்கியே!'' என்று பாராட்டினார். அந்த வார ஆனந்த விகடனில் அந்தப் படம் பிரசுரமாயிற்று. ஆனந்த விகடனில் இவர்வரைந்த முதல் படம் அது.

பின்னர் வாணிக்கு ஏறுமுகம்தான்.

தொடர்கதைகள்,சிறுகதைகள்,இவரே ஜோக்ஸ் எழுதி வரைந்த ஓவியங்கள் என விகடனை அலங்ககரிக்கத் தொடங்கின இவரது ஓவியங்கள்.மணியன்,மெரீனா உட்பட பல பிரபலங்களின் படைப்புகளுக்கு இவர் ஓவியம் வரைந்தார்
.

விகடன் வளர்ச்சிக்கு எழுத்தாளர்கள் மட்டுமின்றி..ஓவியர்களும் பெரும் பங்குப் பெற்றனர் என்பதற்கு வாணியும் ஒரு உதாரணம் ஆகும்.
2017ஆம் ஆண்டு அமரர் ஆனார்.

No comments: