ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Tuesday, December 11, 2012
ரஜினிக்கு இன்ப அதிர்ச்சி! சிவாஜி 3D, எப்படி? - ஏவி.எம். சரவணன்
ரஜினிகாந்த் பல்லக்கிலிருந்து இறங்கி நின்று ஸ்ரேயாவைப் பார்த்து "உன் கால் கொலுசொலிகள் போதுமடி, பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி' என்று பாடியபடி திரையில் தன் தொடையைத் தட்டும்போது பறந்து வரும் தூசி நம் கண்களில் விழுந்து விடுமோ என்று நாம் கண்களை ஒரு வினாடி மூடிக் கொள்கிறோம்; ஸ்ரேயா நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியாக நீந்தும்போது தெறிக்கும் தண்ணீர் நம் மீது பட்டுவிட்டதோ என்று நாம் நம் உடையை தொட்டுப பார்த்துக் கொள்கிறோம்; தீ தீ என்று ரஜினி பாடும்போது அவர் கையிலிருக்கும் துப்பாக்கி பறந்து நம் அருகில் வந்து நின்று ஒருவனை சுட்டுவிட்டு திரும்பவும் ரஜினியின் கையில் போய் சேருகிறது; ஒரு காட்சியில் ரஜினி சுண்டி விடும் நாணயம் நம்மை நோக்கி வேகமாக வர நாம் நம் முகத்தில் அது மோதிவிடாமலிருக்க தலையை குனிந்து கொள்கிறோம்.
÷இந்த அனுபவமெல்லாம் 3D தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்ட ஏவி.எம்மின் "சிவாஜி' படத்தின் சில காட்சிகளைப் பார்த்தபோது நமக்கு ஏற்பட்டவைதான். ஏற்கெனவே பார்த்த படம்தான்; பார்த்த காட்சிகள்தான். ஆனாலும் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் 3D நிகழ்த்தியிருக்கும் மாயாஜாலம் பிரமிக்க வைக்கிறது. இது 3Dயாக மாற்றம் செய்யப்பட்ட படம் என்பதை நம்ப முடியவில்லை. 3Dயாகவே எடுக்கப்பட்ட படம் என்கிற எண்ணம்தான் உண்டாகிறது. எப்படி நிகழ்ந்தது இந்த மேஜிக்?
÷""உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்த "சிவாஜி' படத்தை 3Dயாக மாற்றலாம் என்கிற ஐடியா முதலில் தோன்றியது எங்களுக்கு அல்ல. பிரசாத் ஸ்டுடியோ அதிபர் சாய் பிரசாத்துக்குத்தான்'' என்று "சிவாஜி' முப்பரிமாணதன் காரணத்தை விளக்கினார் படத்தின் தயாரிப்பாளரான ஏவி.எம். சரவணன்.
÷அவருடைய தாத்தா எல்.வி. பிரசாத் காலத்திலிருந்தே அவர்கள் குடும்பத்திற்கும் ஏவிஎம்முக்கும் ஒரு நெருக்கமான உறவு உண்டு. அவர்கள் ஸ்டுடியோவில் இருக்கும் இஎப்எக்ஸ் என்கிற தொழில்நுட்பப் பிரிவு படங்களில் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குவதற்கு மிகவும் புகழ்பெற்றது. பொதுவாக படங்களில் ஒரு சில காட்சிகளிலோ அல்லது பாடல் காட்சியிலோ இத்தகைய கிராபிக்ஸ் தொழில்நுட்பம் இடம்பெறும்.
÷இப்படி அவர்கள் உருவாக்குகிற கிராபிக்ஸ் காட்சிகள் அகில இந்திய அளவில் பெரிய பாராட்டைப் பெற்றிருந்தாலும் ஒரு முழு படத்தையும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்ற வேண்டும் என்கிற ஆசை அவர்களுக்கு இருந்தது. அதற்கு ஏற்ற படமாக சிவாஜி இருப்பதால் அப்படத்தை 3Dயில் மாற்றலாம் என்கிற யோசனையை சாய் பிரசாத் எங்களிடம் தெரிவித்தார். எங்களுக்கும் அது நல்ல யோசனையாகப் படவே உடனே சம்மதம் தெரிவித்தோம்.
÷"சிவாஜி' படம் மூன்று மணி பத்து நிமிடம் ஓடக் கூடியது. அதை இரண்டு மணி நேரமாகக் குறைத்தால் நன்றாக இருக்கும் என்று சாய் பிரசாத் கூறினார். ஆனால் நாங்கள் எவ்வளவோ குறைத்தும் எங்களால் நாற்பது நிமிடத்திற்கு மேல் குறைக்க முடியவில்லை. எனவே இப்போது சிவாஜி 3D படத்தின் நேரம் 2 மணி 32 நிமிடம்.
÷"சிவாஜி' படம் வெளிவந்து இந்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியோடு ஐந்து ஆண்டுகள் முடிவடைகிறது. எனவே அப்படம் ரீலிஸானபோது விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கப்பட்ட 5 வருட உரிமை முடிவடைந்து உரிமை மீண்டும் எங்களுக்கே வருகிறது. அதனை கணக்கிட்டு 3D வேலைகளுக்கு எட்டு மாதம் ஆகலாம் என எண்ணி கடந்த ஆண்டு நவம்பரில் 3D தொழில்நுட்ப பணிகளை பிரசாத்தில் தொடங்கினார்கள்.
÷நானூறு தொழில்நுட்பக் கலைஞர்கள் இரவு பகலாக வேலை செய்தும் 3D பணிகள் முடிவடைய ஒரு வருடம் ஆகிவிட்டது. அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது இது மற்ற 3D படங்கள் போல் அல்ல. புதிதாக அறிமுகமாகியிருக்கும் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இப்படம் தயாரானது. இரண்டாவது இப்படி முழு படமும் ஒவ்வொரு பிரேமும் 3Dயில் நவீன தொழில்நுட்பத்துடன் உருவாவது இந்தியாவிலேயே இது முதல்முறை. எனவே இந்த தொழில்நுட்பம் பிடிபடுவதற்கே சில மாதங்கள் ஆயிற்று.
÷முதலில் இரண்டு பாடல் காட்சிகளையும் மற்றும் சில காட்சிகளையும் மட்டும் 3D தொழில்நுட்பத்தில் மாற்றி எங்களுக்குக் காட்டினார்கள். அதைப் பார்த்த நாங்கள் அசந்துவிட்டோம் என்பதுதான் உண்மை. உடனே ரஜினிக்கு போன் செய்து இந்த விஷயத்தைக் கூறினேன். அவருக்கு சிவாஜி படம் 3Dல் மாற்றப்படுகிற விஷயமே அப்போதுதான் தெரியும். இந்த டெக்னாலஜி முழு படத்திற்கும் பயன்படுத்தப்படுவது இது முதல்முறை என்பதால் நாங்கள் யாரிடமும் இதுபற்றி முன்கூட்டியே கூறவில்லை.
÷ரஜினி வந்தார். ஆர்வமாக படத்தைப் பார்த்தார். படம் ஓடிக்கொண்டிருக்கும்போது ஒரு ரசிகரைப் போல் உற்சாகமாக சிரித்து ரசித்துப் பார்த்தார். படம் பார்த்து முடித்ததும் வியந்து பாராட்டினார். எப்படி எப்படி என்று எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
÷ரஜினியிடம் "கோச்சடையான் படம் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்துவிடுமா' என்று நான் கேட்டேன். அவர் "இல்லை அந்தப் பட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன' என்று கூறினார். "அப்படியானால் உங்கள் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி சிவாஜி 3D ரிலீஸ்' என்று நான் கூறினேன். அவர் அதைக் கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். "சூப்பர்' என்னோட ரசிகர்களுக்கு இந்தப் படம் ரொம்ப பிடிக்கும், ரொம்ப நன்றி' என்று ரொம்ப மகிழ்ச்சியாக சொன்னார்.
÷படத்தின் டைரக்டர் ஷங்கர் இந்த 3D மாற்றத்தைப் பார்த்துவிட்டு, "நான் 3Dல் மாற்றப்பட்ட பல ஹாலிவுட் படங்களை பார்த்திருக்கிறேன். அதையெல்லாம் விட சூப்பர் குவாலிட்டி இந்தப் படத்தில்தான்' அப்படின்னு சொன்னார்.
÷படத்தோட கேமராமேன் கே.வி. ஆனந்த் "நாற்பது நிமிடப் படம் குறைஞ்சதே தெரியல. அதே விறுவிறுப்பு அதே கலகலப்பு... மறுபடியும் பாக்கணும்போல இருக்கு' அப்படின்னார்.
÷கவிஞர் வைரமுத்து படத்தைப் பாத்துட்டு "இந்தப் படம் ரஜினியை ரசிகர்களுக்கு அருகில் கொண்டு செல்லும்' அப்படின்னு பாராட்டினார்.
÷இந்தப் படத்தோட ஒலியமைப்புல "டால்பி அட்மோஸ்'ங்கற புது தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கு.
÷சென்னை சத்யம் தியேட்டர் வளாகத்துல இருக்கிற செரின் தியேட்டர்ல இந்தப் படத்துக்காகவே புதிதாக 20 லட்ச ரூபாய் செலவுல "அட்மோஸ் சவுண்ட் சிஸ்டம்' பொருத்தியிருக்காங்க.
இந்த "டால்பி அட்மோஸ் சவுண்ட் சிஸ்டம்' உலகத்திலேயே நூறு தியேட்டர்களில்தான் இருக்கு. அதில இந்தியாவில இருக்கற ஒரே தியேட்டர் செரின். இந்த சவுண்ட் சிஸ்டத்தில படம் பாக்கறது ஒரு புது அனுபவமா இருக்கும்.
ரசிகர்களைப் போலவே நாங்களும் ஆர்வமாகக் காத்துக் கொண்டிருக்கிறோம், 12.12.12க்காக.
ஏவி.எம். சரவணனின் முகத்தில் இன்னொரு மாபெரும் சாதனை படைத்து முடித்திருக்கும் பெருமிதம்!
(நன்றி-தினமணி)
Monday, December 10, 2012
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடும்..கலைஞரும்
கலைஞர் ஒரு அறிக்கையில் சொல்லியுள்ளது..
கேள்வி: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டினை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழக முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்த போதிலும், 'வால்மார்ட்' நிறுவனம் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினை தமிழகத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியினை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறதே?.
பதில்: வானகரத்தில் 'வால்மார்ட்' நிறுவனத்தின் சார்பில் 7 ஏக்கர் பரப்பளவில் வணிக வளாகமும், அண்ணா நகரில் மாக்கெட்டிங் அலுவலகமும் தொடங்கி அதற்கான பணிகள் நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன. மளிகை கடைக்காரர்களை அணுகி குறைந்த விலையில் உங்களுக்கு பொருட்களை விநியோகிக்கிறோம் என்று கூறி, அவர்களை உறுப்பினர்களாக ஆக்குவதற்கான முயற்சியில் தீவிரமாக அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறதாம்.
இந்த செய்திகள் உண்மையாக இருக்குமேயானால் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடுகள் நுழைந்துவிடக்கூடும். சம்பந்தப்பட்டவர்களின் இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் பற்றி விசாரித்தபோது, நாங்கள் சில்லறை வர்த்தகம் செய்யவில்லை, கடைகளுக்கு மொத்தமாக பொருட்களை வழங்கப் போகிறோம் என்று கூறுகிறார்களாம். எனவே தமிழக அரசு இந்த செய்தி உண்மையா என்பதை அறிந்து உடனடியாக அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
டிஸ்கி-
மகன்-அப்பா...குழந்தையையும் கிள்ளி விட்டு..தொட்டிலையும் ஆட்டுவது என்று ஏன் சொல்கிறார்கள்?
அப்பா-ஏதேனும் ஒன்றிற்கு ஆதரவாகவும்...அடுத்த நிமிடமே மறுப்பாகவும் பேசுவதற்கு என்ன சொல்வது...தெரியுமா?
மகன்-தெரியாது
அப்பா-சில விஷயங்கள் தெரியாமல் இருப்பதே நல்லது..
மகன்-நீ என்ன சொல்றேன்னும் புரியல
அப்பா-உனக்குமட்டுமா புரியலை..புரியாது மாதிரி நடிபவங்களுக்குக் கூட புரியலை
Sunday, December 9, 2012
பட்டையை கிளப்பப்போகும் விஸ்வரூபம்
தசாவதாரக் கமலின் விஸ்வரூபம்
கமலின் விஸ்வரூபம் படம் ஜனவரி 11ஆம் நாள் வெளியாகிறது.பொங்கலை ஒட்டி முக்கிய நடிகர்கள் படங்கள் சிலவும் வெளியாவதால்...தியேட்டர் பிரச்னைகள் கண்டிப்பாக ஏற்படும்.எதிர்ப்பார்த்த தியேட்டர்கள், காட்சிகள் ஆகியவை குறையக் கூடும்.
தவிர்த்து...இப்போதெல்லாம்..எவ்வளவு முடியுமோ..அவ்வளவு காட்சிகளை படம் வெளியாகி..விமரிசனங்கள் வருவதற்குள்..நடத்தி வசூலைப் பெறுவதே நோக்கமாகி உள்ளது.
இந்நிலையில்..தியேட்டர் எண்ணிக்கை..பொங்கல் வெளியீடு படங்களுக்கு குறையும்.தவிர்த்து.100 கோடிகளுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்படும் படங்கள்.. ஒருவேளை சரியாய் இல்லையெனில்..தயாரிப்பாளர்..விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடையக்கூடும்.
அதற்கு என்ன வழி..என எண்ணியே கமல்..தன் படம் வெளியாகும் முதல் நாள் ஒரு காட்சியை டிடிஎச் சில் ஒளிபரப்ப ஏற்பாடுசெய்துள்ளார்.இதற்காக 50 கோடிகள் விலை பேசியுள்ளதாகத் தகவல்.(ஒரு இணைப்பிற்கு 1000 ரூபாய் என்பது வேறு விஷயம்..)
இப்போது..படம் வெளியாவதற்கு முன்னதாகவே தயாரிப்பாளர்..செலவில் கணிசமான தொகை கிடைத்து விடுகிறது.
இப்போது..இப்படம்...பொங்கல் விடுமுறை காலத்தில்...அதாவது..வெளியான நாளிலிருந்து 15ஆம் நாள் வரை..அதாவது ஐந்து நாட்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெறும்.அப்போது..மீண்டும் கணிசமான வசூல் கிடைக்கும்.மேலும்..வெளிநாடுகளில் வசூல்...இவையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால்..படம் ஹிட் ஆகாவிடினும்..தயாரிப்பாளர் நஷ்டத்திலிருந்து தப்பிவிடுவார்.
இதுபோல..இனி வரும் நாட்களிலும்..லோ பட்ஜெட் படங்களும்..வெளியிடும் முன் சேனல்களுக்கு விற்கப்படலாம்
இது எல்லாப் படங்களுக்கும்..அதன் அதன் செலவிற்கேற்ப வசூல் ஆகும் நிலையை உருவாக்கும்.
கமலின் இந்த முடிவு..கண்டிப்பாக வரவேற்க வேண்டிய ஒன்று..
திரையரங்க உரிமையாளர்களிடமிருந்து இதற்கு எதிர்ப்புகள் வரலாம்..ஆனால் காலப் போக்கில்..எல்லா படங்களுக்கும் இனி திரையரங்குகள் கிடைக்கும் நிலை வரும்.மேலும் திரையரங்கில் படம் பார்ப்பவர்கள் அரங்கிற்குத் தான் வருவர்.
துப்பாக்கி படம் .திருட்டு டிவிடியில் வந்தும் ..திரையரங்கிற்கு மக்கள் வரவில்லையா..
மாற்றான்..வெளியானதுமே..விமரிசனங்கள் வந்தும்..முதல் சில நாட்கள் வசூலில் பட்டையைக் கிளப்பவில்லையா..
ஆகவே..இப்படி யாகுமோ...அப்படியாகுமோ என மைதாசாக எண்ணாமல்..கமலின் இந்த முடிவு...திரையுலகை அடுத்த ஒரு புது பாதைக்கு அழித்து செல்லும் என நம்புவோமாக.
Friday, December 7, 2012
உங்களுக்குத் தெரியுமா?
1.பணத்தால் வாங்க முடியாதவை இவை
1.புத்தகத்தை வாங்கலாம்...அறிவை வாங்கமுடியாது
2.உணவை வாங்கலாம்..பசியை வாங்கமுடியாது
3.பகட்டை வாங்கலாம்...பண்பாட்டை வாங்கமுடியாது
4.படுக்கையை வாங்கலாம்..உறக்கத்தை வாங்கமுடியாது
5.கேளிக்கைகளை வாங்கலாம்...மகிழ்ச்சியை வாங்கமுடியாது
6.ஆயுதங்களை வாங்கலாம்...வீரத்தை வாங்கமுடியாது
7.வேலைக்காரர்களை வாங்கலாம்...சேவை மனப்பான்மையை வாங்கமுடியாது
8.அமைதியான சூழலை வாங்கலாம்...ஆனால் மனச்சாந்தியை வாங்கமுடியாது
2.உலகத்திலேயே அருமையானவர்கள்
1.தன்னுடைய சரக்கின் கெடுதியைக் கூறும் வியாபாரி
2.புகழை விரும்பாத கொடையாளி
3.மாற்றைக் குறைத்துக் கூறாமல் பொன் வாங்கும் வாணிபன்
4.எவ்வித லஞ்சமும் வாங்காத ஊழியன்
5.தண்டனையை நியாயம் என ஒப்புக்கொள்ளும் குற்றவாளி.
3.காய்களைப் பார்க்கலாம், பழங்களைப் பார்க்கலாம்..ஆனால் அவற்றின் பூக்களைப் பார்க்க முடியாது.அப்படி பூக்கள் தோன்றாமல் பழங்கள் தோன்றும் மரங்கள்
1.அரசமரம்
2.அத்திமரம்
3.ஆலமரம்
ஆகவே தான் இம்மரங்கள் புனிதமானவையாக சொல்லப்படுகின்றன.
Wednesday, December 5, 2012
சிவாஜி ஒரு சகாப்தம் -3
1955ல் சிவாஜி நடித்து வெளிவந்த படங்கள்...
காவேரி,முதல்தேதி,உலகம் பலவிதம்,மங்கையர் திலகம்,கோடீஸ்வரன், கள்வனின் காதலி
மங்கையர் திலகம் ...தவிர மற்ற படங்கள் எதிர்ப்பார்த்த அளவு சோபிக்கவில்லை.
காவேரி படத்தில்..குதம்பை சித்தர் பாடலும்..சித்த சுவாதீனமுற்றவர் போல சிவாஜி நடிப்பும் புகழப்பட்டன.
முதல்தேதி...சிவாஜி, அஞ்சலிதேவி, என்.எஸ்.கே.,நடித்தபடம்..கதையம்சம் பாராட்டும்படி இருந்தாலும்...படத்தின் பெரும் பகுதி..கனவு என்று இருந்ததால்..படம் தோல்வி.
உலகம் பலவிதமும், கோடீஸ்வரனும்...சொல்ல ஒன்றும்..இல்லாமல்..வந்து போனது..அவ்வளவே..
கள்வனின் காதலி...கல்கியின் கதை..சிவாஜி, பானுமதி நடித்தது.. அவ்வளவுதான்.
மங்கையர்திலகம்...சிவாஜி,பத்மினி,சுப்பையா நடித்த படம்.'நீல வண்ண கண்ணா வாடா"பாடல் ஹிட்.படமும் ஹிட்.,சிவாஜியின் அண்ணியாக பத்மினி.
மொத்தத்தில்...இவ்வாண்டு சுமாரான..ஆண்டு அவருக்கு.
1956ல் வந்த படங்கள்-
நான் பெற்ற செல்வம்,நல்ல வீடு,நானே ராஜா,தெனாலிராமன்,பெண்ணின் பெருமை,ராஜா ராணி,அமரதீபம்,வாழ்விலே ஒரு நாள், ரங்கோன் ராதா.
நான் பெற்ற செல்வம்...ஜி.வரலட்சுமி ஜோடி.படம் வெற்றி...நான் பெற்ற...பாடல் ஹிட்.
நானே ராஜா படத்தில்..சாம்ராட் அசோகனாக சிவாஜி ஒரு காட்சியில் அட்டகாசமாக நடிப்பார்..படம் ஆனால் தோல்வி.
நல்ல வீடு, தெனாலிராமன் ஆகிய படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றிபெறவில்லை.
பெண்ணின் பெருமை..சாவித்ரி,ஜெமினி உடன் நடித்திருப்பர்.படம் வெற்றி.சிவாஜி வில்லன் போன்ற பாத்திரம்..இந்த மூன்று நடிகர்கள் பின்னாட்களில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தனர்.
அமரதீபம்..ஸ்ரீதர் கதை..வசனம்..சாவித்திரி ஜோடி..பத்மினியும் படத்தில் உண்டு.படம் வெற்றி.ஏ.எம்.ராஜாவின்...தேன் உண்ணும் வண்டு போன்ற பல ஹிட் சாங்க்ஸ் உண்டு இப்படத்தில்.
வாழ்விலே ஒரு நாள்.ஜி.வரலட்சுமி...படம் தோல்வி.
ரங்கோன் ராதா ..அண்ணாவின் கதை..உடன் பானுமதி..எஸ்.எஸ்,ஆர்., கலைஞரின் பாடல்கள்..(பொது நலம்)., படம் வெற்றி.
இனி 1957 படங்கள் அடுத்த வாரம்.
மேலும் நண்பர் ஜோ தரும் அதிகத் தகவல்கள்
வருடம் - 1954 & 1955
1. முதன் முதலாக தமிழில் ஒரே நடிகரின் இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது நடிகர் திலகத்திற்கு தான்.
படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
வெளியான நாள் - 13.04.1954.
2. முதன் முதலாக மதுரையில் ஒரே படம் இரண்டு தியேட்டரில் திரையிடப்பட்டது நடிகர் திலகத்தின் படம் தான்.
படம் - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
திரையிடப்பட்ட அரங்குகள் - தங்கம் & நியூசினிமா.
3. அதே நாளில் அந்த நாள் படமும் மதுரை - ஸ்ரீமீனாக்ஷி திரையரங்கில் வெளியானது. ஆக முதன் முதலாக மதுரையில் ஒரே நடிகரின் படங்கள் மூன்று திரை அரங்குகளில் வெளியானதும் நடிகர் திலகத்திற்கு தான்
4. முதன் முதலாக ஒரு நடிகர் நடித்த இரண்டு படங்கள் ஒரு வருடத்தில் ஒரே நாளில் வெளியிட்ட சாதனை மட்டுமல்லாது அதே வருடத்தில் மீண்டும் ஒரு முறை ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானதும் நடிகர் திலகம் மட்டுமே செய்த சாதனைகளாகும். அவை பின்வருமாறு
படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
வெளியான நாள் - 13.04.1954.
படங்கள் - கூண்டுக்கிளி & தூக்கு தூக்கி.
வெளியான நாள் - 26.08.1954
5. முதன் முதலாக சென்னையில் 6 திரையரங்குகளில் வெளியான தமிழ் படம் - எதிர்பாராதது.
6. முதன் முதலாக சென்னையில் 5 திரையரங்குகளில் 80 நாட்களை கடந்து ஓடிய தமிழ் படம் - எதிர்பாராதது.
அரங்குகள் - சித்ரா,காமதேனு, பிராட்வே, மகாலக்ஷ்மி, பாரத்.
7. முதன் முதலாக ஒரே வருடத்தில் ஒரு தமிழ் பட கதாநாயகன் நடித்த அதிகமான படங்கள் வெளியானது இந்த வருடத்தில் தான். நடிகர் திலகம் நடித்த 10 படங்கள், 1954-ல் வெளியானது.
8. இதில் மூன்று படங்கள் 100 நாட்களை கடந்தன.
மனோகரா
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி -
[சென்னை - காசினோ, சேலம் - நியூ சினிமா, திருச்சி -பிரபாத்.]
எதிர்பாராதது
9. முதன் முதலாக பந்துலுவும் நடிகர் திலகமும் ஒரு முழு நீள படத்திற்கு இணைந்தது இந்த படத்தில் தான். படம் - முதல் தேதி.
10. முதன் முதலாக படம் முழுவதும் கனவு காட்சியாகவே திரைக்கதை அமைக்கப்பட்ட படம் - முதல் தேதி.
11. முதன் முதலாக தமிழ் திரை உலகில் நடிக்க வந்த மூன்றே வருடங்களில் 25 படங்கள் அதுவும் நாயகனாகவே நடித்தவர் நமது நடிகர் திலகம் மட்டும் தான். [1952 -1955]
March 6, 2009 12:53:00 AM PST
ஜோ / Joe said...
வருடம் - 1956
1.இரண்டு வருடங்களுக்கு முன் நடந்தது போல் மீண்டும் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானது இந்த வருடத்தில் தான்.
படங்கள் - நான் பெற்ற செல்வம் & நல்ல வீடு
வெளியான நாள் - 14.01.1956
2. முதன் முதலாக 43 நாட்கள் வித்யாசத்தில் ஒரு கதாநாயகனின் 6 படங்கள் வெளியானது நடிகர் திலகத்திற்கு தான். அவை
நான் பெற்ற செல்வம் - 14.01.1956
நல்ல வீடு - 14.01.1956
நானே ராஜா - 25.01.1956
தெனாலி ராமன் - 03.02.1956
பெண்ணின் பெருமை - 17.02.1956
ராஜா ராணி - 25.02.1956
3. எதிர்பாராதது படத்தை தொடர்ந்து சென்னையில் 6 திரையரங்குகளில் வெளியான படம் நானே ராஜா.
4. நடிகர் திலகத்தின் காரக்டர் நெகட்டிவாக இருந்தாலும் பொது மக்கள் ஏற்று கொண்டதால் தமிழகத்தில் 5 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது பெண்ணின் பெருமை. அவை
சென்னை - காசினோ, பிராட்வே, மகாலெட்சுமி.
சேலம் - நியூ சினிமா
திருச்சி - ஜுபிடர்
5. சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகத்தில் கலைஞரின் 16 பக்க வசனத்தை ஒரே டேக்-ல் நடிகர் திலகம் பேசி நடித்த படம் ராஜா ராணி.
6. முதன் முதலாக சிவாஜி பிலிம்ஸ் விநியோகித்த தமிழ் படம் - அமர தீபம்.
7. முதன் முதலாக ஒரு தமிழ் படம் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளாக (continous 100 House full shows) ஓடிய சாதனையை நிகழ்த்தியதும் நடிகர் திலகத்தின் படம் தான்.
படம் - அமர தீபம்
அரங்கு - காசினோ
8. முதன் முதலாக தன்னை விட வயதான ஒருவருக்கு தந்தையாக நடிகர் திலகம் நடித்த படம் - வாழ்விலே ஒரு நாள்.
9. முதன் முதலாக அண்ணா கதை எழுத, கலைஞர் திரைக்கதை வசனம் தீட்ட, நடிகர் திலகம் நடித்த படம் ரங்கோன் ராதா
தமிழுக்கு அமுதென்று பெயர் - 5
இன்றைய பதிவில் காளமேகப் புலவரின் மற்றொரு சிலேடைப் பாட்டைப் பார்க்கலாம்.
பாம்பையும், வழைப்பழத்தையும் சிலேடையாகக் கையாண்டப் பாடல்..
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்
பாம்பைப் பொறுத்தவரை நஞ்சு இருக்கிறது.
தோல் இருக்கிறது. காலத்திற்குக் காலம் தன்தோலை உரிக்கும் வழக்கம்
இருக்கிறது. சிவனின் முடியிலே அமர்ந்திருக்கிறது கோபத்திலே அதன்
பற்கள் பட்டுவிட்டால் யாரும் உயிர் தப்பமுடியாது.
அதேபோல, வாழைப்பழம்,
நஞ்சிருக்கும் (நன்கு கனிந்து நைந்து இருக்கும். )எ
அதற்கு வெளித் தோல் இருக்கிறது. உண்பதென்றால் அந்தத் தோலை உரிக்கவேண்டும்.
சிவனின் முடிக்கு அபிஷேகம் செய்யப்படும் பழங்களில்
ஒன்றாக இருக்கிறது. (-வெஞ்சினத்தில் -
துணைஉணவாக இருக்கும்போது என்று பொருள்படும்).
துணையுணவாக உட்கொள்ளும்போது நமது பற்கள் பட்டுவிட்டால் மீளாது,
வயிற்றினுள்ளே சென்றுவிடும். ஆகவே வாழைப்பழமு; பாம்புக்கு நிகராகின்றது
என்பது பாடலின் கருத்தாகின்றது.
அடுத்த பதிவில் மற்றொரு பாடலுடன் சந்திப்போம்.
Tuesday, December 4, 2012
தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ வும், தினமணி தலையங்கமும்
இது மட்டுமே போதாது!
By தினமணி
சிவசேனை நிறுவனர் தலைவர் பால் தாக்கரே மறைவின்போது, முகநூலில் கருத்துத் தெரிவித்ததற்காக இரு பெண்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரிய அளவில் பேசப்பட்டதாலும், ஊடகங்கள் கேள்வி எழுப்பியதாலும் தற்போது மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதன்படி, தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ-ன் கீழ் பெறப்படும் புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்வதாக இருந்தால், ஐ.ஜி. அல்லது டி.ஜி.பி. போன்ற காவல்துறை உயர் அதிகாரிகளின் அனுமதிக்குப் பிறகுதான் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்திருக்கிறார்.
இது இப்பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்க உதவுமே தவிர, பிரச்னைக்குத் தீர்வு என்று எடுத்துக்கொள்வதற்கில்லை. ஏனெனில் இந்தச் சட்டத்தின் மூலம், கருத்துச் சுதந்திரத்துக்கு அனுமதி கிடைத்துவிட்டது என்று யாரும் சொல்லிவிட முடியாது. கருத்துச் சுதந்திரத்தை தீர்மானிக்கும் சக்தி, ஒரு காவல்நிலையத்தின் கையிலிருந்து, காவல்துறை உயர் அதிகாரியின் கையில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே இந்த வழிகாட்டு நெறிமுறை மூலம் வழக்குப் பதிவுகள் மேலிடத்துத் தீர்மானமாக இருக்குமேயொழிய, இப்போதும் சில கருத்துகளை வெளிப்படையாகப் பேசிவிட முடியாது என்பதே உண்மைநிலை.
ஒரு அரசியல் தலைவர் அல்லது ஒரு முதல்வர் அல்லது ஒரு அமைச்சர் தொடர்பான விமர்சனத்தை ஒருவர் வெளிப்படுத்தினால் அவரை அரசு மற்றும் அரசியல் நெருக்குதல் காரணமாக ஒரு காவல்துறை உயர் அதிகாரி வழக்குப் பதிவு செய்ய அனுமதி தராமல் இருப்பாரா என்ன?
"வதேராவைக் காட்டிலும் கார்த்தி சிதம்பரம் அதிக சொத்து சேர்த்திருக்கிறார்' என்ற ட்விட்டர் தகவலுக்காகத்தான் ரவி சீனிவாசன் என்பவர் மீது பிரிவு 66ஏ-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகச் சாதாரண தகவல். இப்போது வழிகாட்டு நெறிமுறை கூறப்பட்டுள்ள நிலையில் இதே ட்விட்டர் தகவலில் தற்போது வேறொரு அரசியல் புள்ளியின் மகன் அல்லது மகள் பெயரை மாற்றி அனுப்பினால், அப்போதும் அனுப்பியவர் கைது செய்யப்படுவார். ஏனென்றால் அந்தத் தகவல் மெய்யா பொய்யா என்பதல்ல பிரச்னை. அந்தப் பெயருக்குரியவர் அரசியல் சக்தியாக இருக்கிறார் என்பதுதான். முன்பு, காவல் நிலையத்துக்குக் கொடுக்கப்பட்ட நெருக்குதலை, இனிமேல் காவல்துறை உயர் அதிகாரிகளுக்குக் கொடுப்பார்கள், அவ்வளவுதான்.
பிரிவு 66ஏ சொல்வது என்ன? 1. புண்படுத்துகிற அல்லது தொல்லைதருவதான தகவல்களை அனுப்புதல்; 2. ஒரு தகவல் பொய்யென்று தெரிந்திருந்தும், அச்சம், மனச் சங்கடம், ஆபத்து, இடையூறு, அவமானம், பொய்க்குற்றச்சாட்டு, பகை, வெறுப்பு ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை அனுப்புதல்; 3.போலியான முகவரிகளுடன், அல்லது முகவரி இல்லாமல் மோசடியான, மனச்சங்கடம் தருகிற, அச்சமூட்டுகிற தகவல்களை, புகைப்படங்களை, விடியோக்களை இணைத்து அனுப்புதல் ஆகியவை குற்றச் செயல். இதற்கு 3 ஆண்டுகள் அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்கலாம்.
பொய்யான ஒரு தகவலை, அது மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பும் என்று தெரிந்திருந்தும் மற்றவர்களுக்கு அனுப்புவது குற்றம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அண்மையில் வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிராக அச்சமூட்டும் குறுந்தகவல்கள், மின்அஞ்சல்கள் பரப்பப்பட்டு, அதனால் அம்மாநில மக்கள் அடைந்த பீதி அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்டவர்களை இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்வதில் யாருக்கும் ஆட்சேபணை கிடையாது. அதேபோன்று, "லாட்டரியில் இத்தனை லட்சம் விழுந்தது' என்பது போன்ற பொய்யான முகவரியிலிருந்து தகவல் அனுப்புவோரைக் கைது செய்வதிலும் யாருக்கும் ஆட்சேபணை இல்லை.
ஆனால், இந்தச் சட்டத்தில் முதலில் இடம்பெற்றுள்ள "புண்படுத்துகிற' (அபன்ஸீவ்) "தொல்லையான' (மெனாசிங்) என்பதற்கு என்ன பொருள் என்பது இந்திய சட்டத்தில் சரியாக வரையறுக்கப்படவில்லை; இது அவரவர் மனக் கருதுகோளுக்கு ஏற்ப மாறக்கூடியது என்பதுதான் தற்போது இந்தச் சட்டத்தின் மீது அனைவரும் முன்வைக்கும் குற்றச்சாட்டு.
அடுத்ததாக, "ஒரு பத்திரிகையில் வெளியாகும் கருத்து அல்லது விமர்சனம் குற்றமாகாதபோது, ஒரு ட்விட்டர் அல்லது மின்அஞ்சல், குறுந்தகவலில் சொல்லப்படும் கருத்துக்கு ஏன் கைது செய்யப்பட வேண்டும்?' என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில், வாக்கெடுப்பு நடத்தினால் மத்திய அரசை திமுக ஆதரிக்கும் எனும் கருத்தைப் பத்திரிகைகள் விமர்சனம் செய்ய முடியும். "திமுக பல்டி' என்றுகூட தலைப்பு போட முடியும். ஆனால், இதையே ஒரு குறுந்தகவலாக, இணைய தளத்தில் அனுப்பினால் மட்டும் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66ஏ-ன் கீழ் குற்றமாகப் பார்க்கப்படும். இது என்ன வேடிக்கையான கருத்துச் சுதந்திரம்?
அரசியல் மேடைகளில் ஆபாசமாகப் பேசிக் கொள்கிறார்கள். அரசியல் கட்சிகள் நடத்தும் பத்திரிகைகளில் ஒருவரை மற்றவர் தரக்குறைவாக விமர்சித்துக் கொள்கிறார்கள். ஆனால், ஆட்சி அதிகாரமும், சட்டத்தைத் தங்களது ஏவலாளாகப் பயன்படுத்தும் சாமர்த்தியமும் இருப்பதால் பொதுமக்கள் இவர்களை விமர்சித்தால், கருத்துத் தெரிவித்தால் குரல்வளையை நெரிக்க முற்படுகிறார்கள். நன்றாக இருக்கிறது இவர்களது ஜனநாயகப் பண்பு!
மத்திய அரசு, இத்தகைய விவகாரங்களில், சட்டத்தின் நுட்பங்களில் தெளிவு காண முயற்சி செய்ய வேண்டும். "வழிகாட்டு நெறிமுறை' என்ற பெயரில், "யார் வழக்கைத் தீர்மானிப்பது' என்கின்ற அதிகார மையம்தான் மாற்றப்பட்டுள்ளது. இது மட்டுமே போதாது.
(நன்றி - தினமணி)
Monday, December 3, 2012
வாய் விட்டு சிரிங்க..
1.ஆசிரியர்- திரவ பொருளுக்கு ஒரு உதாரணம் சொல்
மாணவன்- இருட்டு சார்...இராத்திரியிலே கரண்ட் கட்டாச்சுன்னா அடுத்த நாள் பேப்பர்ல'ஊரே இருளில் மூழ்கியது'
என்று போடறாங்களே!!
2.நான் ஒரு திரில்லான கதை எழுதி இருக்கேன்..ஆனா அதை முடிக்கத்தான் முடியலை
ஏன்?
குற்றவாளி யார்னு என்னாலே கூட கண்டுபிடிக்க முடியலை.
3.அதோ போறாரே..அவர் தீவிர காங்கிரஸ்காரர்னு நினைக்கிறேன்.
எப்படி சொல்ற
அவர் பொண்ணு சோனியா இருக்கு..கேட்டா என் தலைவி ஞாபகமா அப்பிடியே இருக்கட்டும்னு சொல்றார்
4.தமிழ் டீச்சரை லவ் பண்ணினது தப்பாப்போச்சு
ஏன்
லவ் லெட்டர் எழுதினா.. அதில் எழுத்துப் பிழை,சந்திப்பிழைன்னு ஏதாவது தப்பு கண்டுபிடிச்சுக்கொண்டே
இருக்கா..
5.அப்பா-நேற்று கணக்கு ஹோம் ஒர்க்கை என்னை போடச்சொன்னே..இன்னிக்கு நீயே போடறே
மகன்- யார் போட்டா என்ன..இரண்டு பேரும் தப்பாத்தானே போடப்போறோம்.
6.என் மனைவி ஒரு தேவதை
நீ அதிர்ஷ்டக்காரன்..என் மனைவி இன்னும் உயிரோடு இருக்கா
'ஹயத்' Hayat (ஈரானியன் மூவி.) விமரிசனம்..
'ஹயத்' Hayat (ஈரானியன் மூவி.) விமரிசனம்..
ஹயத் என்னும் ஈரானியன் படத்தை சமீபத்தில் பார்த்தேன்.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
குழந்தைகள் What is determination and struggle என்பதை அறிய இப்படம் பார்க்க வேண்டியது அவசியம்
ஹயத் என்னும் பத்து..அல்லது பன்னிரெண்டு வயது இருக்கும் பெண்ணிற்கு..மேலே படிக்க எழுத வேண்டிய ஸ்காலர்ஷிப்பிறகான பரீட்சை அன்று காலை.
மின்சாரமும்..கட்..(மின்சாரம் வரும்போது...இயக்குநரின் அருமையான இயக்க டச்..)
காலையில் எழுந்ததுமே..தந்தை நினைவின்றி படுக்கையில்...ஹயத்தின் தாயார் , அவள் செய்ய வேண்டிய காரியங்களைச் சொல்லி விட்டு...தந்தையை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்கிறார்.
ஹயத்..வீட்டு மாட்டிற்குத் தீவனம் வைத்து விட்டு..தங்கை பாப்பாவை...தம்பியை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு..வேலைகளை கவனிக்கிறாள்.அடடா..ஒரு வறுமை நிலையில் உள்ள வீட்டு குழந்தைகள் படும் பாட்டை பட இயக்குநர் எவ்வளவு அருமையாக சொல்லியிருக்கிறார்...
பரீட்சைக்கு நேரமாகிறது.தம்பி பள்ளிக்கு செல்கிறான்.ஹயத்..தங்கை பாப்பாவை எடுத்துக் கொண்டு யார் வீட்டிலாவது விட்டு விட்டு பரீட்சைக்கு செல்ல பார்க்கிறாள்.சரிபடவில்லை.
அந்த பெண் குழந்தையை வைத்துக்கொண்டு...பாடங்களையும் மனதில் சொல்லிக் கொண்டு..கவலையுடன் அலைவது..பார்க்கும் போது சோகம் நம்மை தொற்றிக் கொள்கிறது.(valume of milk to calculate maths,physics to bend a lock...இப்படி பாட ஞாபகங்கள்)
அந்தப் பெண்ணின் நடிப்பு.அவளது தம்பி அக்பரின் நடிப்பு..இவற்றை பாராட்டி சொல்லிக் கொண்டே போகலாம்..
அவளால் பரீட்சை எழுத முடிந்ததா..? குழந்தையை எங்கே விட்டுச் சென்றாள்...படத்தை பாருங்களேன்..
Directed by
Gholam Reza Ramezani (as Gholamreza Ramezani)
Writing credits
(in alphabetical order)
Mojtaba Khoshkdaman
Gholam Reza Ramezani
Cast (in alphabetical order)
Mohammad Sa'eed Babakhanlo ... Nabat
Mehrdad Hassani ... Akbar
Ghazaleh Parsafar ... Ghazaleh
Produced by
Mohammed Bagher Ashtiani .... producer
Original Music by
Hamidreza Sadri
Cinematography by
Saed Nikzat
Film Editing by
Saeed Shahsavar
Sunday, December 2, 2012
மணம் வீசும் எண்ணங்கள்
உன்னைப் பற்றிய
எண்ணங்களை
மனதில் விதைத்தேன்
நினைவென்னும்
நீர் பாய்ச்சினேன்
இப்போது
அவ்வெண்ணங்கள்
செடியாகி..
அரும்புவிட்டு..
மலர்ந்து..
மனமெங்கும்..
மணம் வீசிக் கொண்டிருக்கின்றன.
Friday, November 30, 2012
ஆய கலைகள் 64...அவை என்ன என்ன..?
விகடனில் கவிஞர் வைரமுத்துவின் பதில்கள் பகுதியில் "ஆய கலைகள் அறுபத்தி நான்கு எவை?' என கூறியுள்ளார்.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1) ஆடல்
2)இசைக்கருவி மீட்டல்
3)ஒப்பனை செய்தல்
4)சிற்பம் வடித்தல்
5)பூத் தொடுத்தல்
6)சூதாடல்
7)சுரதம் அறிதல்
8)தேனும், கள்ளும் சேகரித்தல்
9)நரம்பு மருத்துவம்
10)சமைத்தல்
11)கனி உற்பத்தி செய்தல்
12)கல்லும் பொன்னும் பிளத்தல்
13)கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல்
14)உலோகங்களில் மூலிகை கலத்தல்
15)கலவை உலோகம் பிரித்தல்
16)உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல்
17)உப்பு உண்டாக்குதல்
18)வாள் எறிதல்
19)மற்போர் புரிதல்
20)அம்பு தொடுத்தல்
21)படை அணி வகுத்தல்
22)முப்படைகளை முறைப்படுத்தல்
23)தெய்வங்களை மகிழ்வித்தல்
24)தேரோட்டம்
25)மட்கலம் செய்தல்
26)மரக்கலம் செய்தல்
27)பொற்கலம் செய்தல்
28)வெள்ளிக்கலம் செய்தல்
29)ஓவியம் வரைதல்
30)நிலச் சமன் செய்தல்
31)காலக் கருவி செய்தல்
32)ஆடைக்கு நிறமூட்டல்
33)எந்திரம் இயற்றல்
34)தோணி கட்டல்
35)நூல் நூற்றல்
36)ஆடை நெய்தல்
37)சாணை பிடித்தல்
38)பொன்னின் மாற்று அறிதல்
39)செயற்கை பொன் செய்தல்
40)பொன்னாபரணம் செய்தல்
41)தோல் பதனிடுதல்
42)மிருகத் தோல் உரித்தல்
43)பால் கறந்து நெய்யுருக்கல்
44)பொன் முலாமிடுதல்
45) தையல்
46)நீச்சல்
47)இல்லத் தூய்மையுறுத்தல்
48)துவைத்தல்
49)மயிர் களைதல்
50)எள்ளில் இறைச்சியில் நெய் எடுத்தல்
51)உழுதல்
52)மரம் ஏறுதல்
53)பணிவிடை செய்தல்
54)மூங்கில் முடைதல்
55)பாத்திரம் வார்த்தல்
56)நீர் கொணர்தல், நீர் தெளித்தல்
57)இருபாயுதம் செய்தல்
58)மிருக வாகனங்களுக்குத் தவிசு அமைத்தல்
59)குழந்தை வளர்ப்பு
60)தவறினை தண்டித்தல்
61)பிற மொழி எழுத்தறிவு பெறுதல்
62)வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல்
63)மேற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு
64)வெளிப்படுத்தும் நிதானம்
சுக்கிர நீதி சொல்லும் ஆய கலைகள் அறுபத்தி நான்கும் இவைதான்.
(டிஸ்கி- வெறும் ஏட்டுப் படிப்பு மட்டுமே கலை அல்ல.நம்மை விட பெண்கள் அதிகம் அறிந்தவர்கள்)
Thursday, November 29, 2012
காவிரி நதி நீர்..(தினமணி தலையங்கம்) கண்டிப்பாக படிக்கவும்
பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை!
By ஆசிரியர்
சாட்சிக்காரன் காலில் விழுவதைக் காட்டிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்'. இது நீதிமன்ற நடவடிக்கை மற்றும் காலதாமதத்தால் சலிப்புற்ற மக்களின் சொலவடை. அதை நீதிமன்றமே சொல்லத் தொடங்கினால் எப்படி?
ஒரு பிரச்னை முதல்முறையாக நீதிமன்றத்தின் படியேறும்போது இத்தகைய ஆலோசனை சரியானது. நியாயமும்கூட. ஆனால், காவிரிப் பிரச்னை அப்படியல்ல. கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கு. காவிரி நடுவர் மன்றம், நதிநீர் ஆணையம், பிரதமர் முன்னிலையில் சமரசம் என்று எதுவுமே தீர்மானமான முடிவைத் தராத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தால், நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்களேன் என்று சொன்னால் எப்படி? கர்நாடகத்தைத் தமிழகமும், தமிழகத்தைக் கர்நாடகமும் பல வகையிலும் விமர்சனங்களை அள்ளி வீசிய பிறகு பேசித் தீர்த்துக் கொள்வது எப்படி சாத்தியம் என்று உச்ச நீதிமன்றம் யோசிக்க வேண்டாமா?
காவிரி நீர்ப் பங்கீட்டில் கர்நாடகம் யாருக்குமே கட்டுப்படாமல் தன்னிச்சையாக இயங்கிவருவதால்தான் இன்றைய சிக்கல் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பது இந்தியா முழுமைக்கும் தெரியும். கர்நாடக மாநிலம் தமிழகத்துக்குத் தர வேண்டிய 52.8 டிஎம்சி தண்ணீரை வழங்கவும், பருவம் (ஸீசன்) என்றால் என்ன என்பதை வரையறை செய்யவும் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்திருக்கின்றனர். இதன்படியே, தமிழக முதல்வர் ஜெயலலிதா நவம்பர் 29}இல் பெங்களூர் சென்று பேசவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பேச்சுவார்த்தையில் முடியாமல்தான் மத்திய அரசிடம் போய் நின்றோம். மத்திய அரசு நியமித்த நடுவர்மன்றத் தீர்ப்பை கர்நாடகம் ஏற்கவே இல்லை. இடைக்காலத் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டதும் கிடையாது. காவிரி நதிநீர் ஆணையத்துக்கும் பிரதமரின் உத்தரவுக்கும்கூட மறுப்பு தெரிவித்தார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே நிறைவேற்றத் தவறியதால், நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளான மாநிலம் கர்நாடகம். இந்நிலையில்தான், அதாவது பேசித் தீரவில்லை என்ற நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தைத் தமிழக அரசு அணுகுகிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் சொல்கிறது, ""இரு மாநில முதல்வர்களும் பேசித் தீர்வுகாண வேண்டும்'' என்று.
இதைச் சொன்னதற்குப் பதிலாக, "நாங்கள் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார்கள். எங்கள் தீர்ப்புக்கு மரியாதையே கிடையாது. ஆகவே நீங்களே முடிந்தால் பேசிப் பாருங்கள்' என்று நீதிபதிகள் மிக வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாம். அத்தகைய மெய்யான வார்த்தைகள், இந்திய அரசையும், மற்ற மாநிலங்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும். ஆனால் நீதிபதிகள் அதைச் சொல்லாமல், இரு மாநில முதல்வர்களும் பேசித் தீர்வு காண்பது முடியாதது ஒன்றுமில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
தினமும் வினாடிக்கு 9,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி நதிநீர் ஆணைய உத்தரவுக்கே 3 நாள் மாநில எல்லையில் பஸ்கள் ஓடவில்லை. நடிக நடிகையர்களும் பங்குகொண்ட எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. இந்த உத்தரவை நிறைவேற்றாவிட்டால், அணையின் பொறுப்பை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் என்ற அச்சத்தின் காரணமாகவே கர்நாடகம் பணிந்தது. இந்நிலையில் கர்நாடக முதல்வர், தமிழகம் கேட்கும் நியாயமான அளவு தண்ணீரை வழங்க முன்வருவாரா?
இது ஒருபுறம் இருக்க, காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் பிரதமரை அவமானப்படுத்தும் வகையில் கர்நாடக முதல்வர் வெளிநடப்பு செய்தபோது இந்தியாவில் எந்தச் சலனமும் இல்லை. ஆனால், பெங்களூரில் தமிழக முதல்வருக்கு - அது யாராக இருந்தாலும் - அவமானம் நேர்ந்தது என்றால், தமிழ்நாடு கொந்தளித்து விடாதா? அதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் ஏற்படக்கூடிய எதிர்போராட்டங்கள், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், இதைப் பற்றியெல்லாம் உச்ச நீதிமன்றம் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்திருந்தால், இத்தகைய ஆலோசனையைச் சொல்லியிருக்காது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும்கூட, தமிழக அரசின் கோரிக்கைகளை ஏற்கக் கேரளம் மறுக்கிறது. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் உள்ளன. இதிலும்கூட, இரு மாநில முதல்வர்களும் பேசித் தீர்வு காண வேண்டும் என்றால், தமிழக முதல்வர் திருவனந்தபுரம் சென்று அவமானப்பட வேண்டுமா?
இலங்கைச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு வழக்குத் தொடுத்தால், அந்த வழக்கிலும்கூட, "தமிழக முதல்வர் இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் பேசித் தீர்வுகாண வேண்டும்' என்று நீதிமன்றம் சொல்லுமா?
இதுவரை பல முறைக்கு மேல் தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூவரும் கடந்த 40 ஆண்டுகளாகப் பல்வேறு கர்நாடக முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வராதது காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை. மத்திய அரசு நடுவர்மன்றம் அமைத்தும் பயனளிக்காத பிரச்னை இது. அதனால்தானே உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு முறையிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்தால் எப்படி?
கர்நாடக மாநிலம் காவிரியின் மேல்பகுதியில் இருக்கிறது. அவர்கள் அணையைத் திறந்தால்தான் தமிழகத்துக்குக் காவிரி நீர். இந்தப் புவியியல் காரணங்களால், கர்நாடகம் "கொடுப்பவன்' நிலையில் இருக்கிறது. தமிழகம் "கொள்பவன்' நிலையில் இருக்கிறது. கர்நாடகம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தமிழகத்தை ஒருநாளும் அழைக்கப்போவதில்லை. அவர்களுக்கு அது தேவையில்லாத வேலை. ஆனால், தமிழகம்தான் பேச்சுவார்த்தைக்கு அவர்களிடம் செல்ல வேண்டும், வாசலில் நிற்க வேண்டும், அவர்கள் சொல்லும் மறுதேதிக்கெல்லாம் போயாக வேண்டும், அவர்கள் கொடுப்பதைப் பெற்றாக வேண்டும். இதற்குப் பெயர் பேச்சுவார்த்தையாக இருக்க முடியாது. பிச்சை கேட்பதாகத்தான் இருக்க முடியும்!
தமிழுக்கு அமுதென்று பெயர் - 4
தமிழில் பல அற்புதங்கள் உண்டு..
முன்னெறி தெய்வங்களான அம்மாவும்..அப்பாவும்..தமிழின் முதல் உயிரெழுத்தான 'அ'வில்தான் ஆரம்பிக்கின்றன .
அடுத்து சொல்லப்படும் தெய்வமான ஆசிரியர் தமிழின் இரண்டாம் உயிரெழுத்தான "ஆ" வில் ஆரம்பம்
அடுத்து சொல்லப்படும் தெய்வம்..தமிழின் மூன்றாம் உயிழுத்தான 'இ'யில் ஆரம்பம்..இறைவன்.
அத்துடன் இல்லாது அ வில் ஆரம்பிக்கும் சொற்கள் கிட்டே கொண்டு வருவதுடன் சம்பந்தப்பட்டவை. அண்மை,அருகாமை,அப்புதல்,அள்ளுதல்,அணைத்தல்
'இ' கீழே கொண்டுவருவதற்கான சொல் - இறக்குதல்,இறங்குதல்,இழிதல்
'உ' எழுத்து தூரத் தள்ளுவதற்கும்..மறைப்பதற்கும் உரித்தானது ..உதைத்தல்,உமிழ்தல்,உண்ணுதல்,உதறுதல்
'எ' எழுச்சி வார்த்தைகள்..எடுத்தல்,எட்டுதல்,எய்தல்,எழுதல்
இனி தமிழ் சிலேடை-
இம்மை..மறுமை பற்றி ஒரு நிகழ்ச்சியில் கி.வா.ஜ., பேசினார்.அப்போது மைக் தகராறு செய்யவே..உடனே..வேறொரு மைக் பொருத்தப்பட்டது.அதுவும் கோளாறு செய்யவே..உடன் அவர் இம்மைக்கும் வேலை செய்யவில்லை..மறு மைக்கும் வேலை செய்யவில்லை.எனவே வாய் மைக்கே முதலிடம் என்று கூறி மைக் இல்லாமல் பேசி முடித்தாராம்.
துணை நடிகைப் பற்றி யுகபாரதியின் கவிதை ஒன்று
இவள் வீட்டுப் பாத்திரத்தில்
சிலநாளே சுடுசோறு
என்றாலும் நடிக்கிறாள்
திரைப்படத்தில் பலவாறு
2) வயிற்றுக்கு மிகநெருங்கி
வருகின்ற காமெராவில்
தெரியாது இவள் பசியும்
தெய்வத்தின் வஞ்சகமும்
Wednesday, November 28, 2012
உறவுகளும்..நாமும்...
உறவுகள்....
இதில்தான் எத்தனை வகை..
தாய்,தந்தை,தாத்தா,பாட்டி,மனைவி,மகன்,மகள் போன்ற குடும்ப உறவுகள்..
வெளியே..நண்பர்கள் என சமூக உறவுகள்.
நம் வாழ்க்கைத்தரத்தை தீர்மானிப்பதில், உறவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.உண்மையில்..ஒருவருக்கு உதவிகள் தேவைப்படும்போதுதான்..உறவுகளின் ஞாபகம் வருகிறது.ஆனால்..எதிப்பார்ப்புகள் நிறைவேறாத போது...உறவில் விரிசல் ஏற்படுகிறது.
நம் உறவுகள்..நம்மை..விட்டு விலக, நம் கோபமும் காரணமாகிவிடுகிறது.நம் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் போதுதான் கோபம் ஏற்படுகிறது.உறவுகள் நமக்குப் பிடிக்காத காரியம் செய்யும்போது கோபம் வருகிறது.நமக்கு கோபம் வருவது போல..உறவினருக்கும் கோபம் வரும் என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை.
சற்று யோசனை செய்தால்..இவை புரியும்..
நம் வீட்டில் வேலை செய்யும்..நபர்கள் கூட..தன் மீது ஒருவர் அதிகாரம் செலுத்துவதை விரும்புவதில்லை.அதனால்...அவர்களையும்..நமக்கு சமமாக...நம்மில் ஒருவராக..எண்ணி பழகினால்..எதிர்ப்பார்த்ததற்கு மேல் பலன்கள் கிட்டும்
உறவுகள்..தொடர..யாரையும் நிர்வகிக்க முயற்சி செய்யாதீர்கள்.
உறவுக்கு ஆதாரம் அன்புதான்..ஆகவே அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்.வெறுப்பை..வெறுத்து ஒதுக்குவோம்.
உறவுப்பூக்கள் மலரும்..
கடைசியாக ஒரு ஜோக்..
நண்பன்-ஏன்..காலையிலிருந்து வருத்தமாய் இருக்கீங்க?
இவர்- என் மனையுடன் சண்டை..ஒரு மாசம் பேசமாட்டேன்னு சொல்லிட்டா
நண்பன்-இது சந்தோஷ விசயம் தானே...ஏன் வருந்த வேண்டும்
இவர்-அந்த ஒரு மாசம்..இன்னியோட முடியுதே!
"மின்சாரத் தாக்குதல்"
தமிழக அரசு மக்கள் மீது ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது.'இப்படிப் போடப்போகிறோம்,போட வேண்டியிருக்கலாம்'என்றெல்லாம் முன் எச்சரிக்கை கொடுத்துவிட்டதனால் மட்டும், தாக்குதலின் அதிர்ச்சி குறைந்துவிட முடியாது.
அக்டோபர் முதல் தேதியிலிருந்து தமிழ்நாடெங்கும் 15 சதவிகித மின்சார வெட்டு அமுலுக்கு வந்துள்ளது.இதை குறித்துத் தொழில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களும் பொது மக்களும் அதிர்ச்சியும் பெரும் கவலையும் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு, முதலில் 25 சதவிகிதம்,பிறகு 50சதவிகிதம்,அதன் பின்னர் ஃபெப்ரவரியில் 75 சதவிகிதம் என்று மின்வெட்டை அமுலுக்கு கொண்டுவந்த போது,'தென்மேற்குப் பருவ மழை ஏமாற்றிவிட்டது; நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இல்லாததால் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது.'என்று இயற்கையின் மேல் பாரத்தைப் போட்டார்கள்.மக்களோ,அந்த எட்டு மாதங்கள் சொல்லொணா அவதிக்கு இலக்காகி,இருளில் கிடந்து திண்டாடினார்கள்.தமிழகத்தில் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது.பல தொழிற்சாலைகள் குறைந்த நேரம் இயங்கி, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்தின. பம்பு செட்டை நம்பிய பயிர்கள் வாடி உலர்ந்து பதராகிவிட்டன.
இத்தனைக்கும் தென்மேற்குப் பருவ மழை இவ்வாண்டு ஏமாற்றவில்லை.நீர்த்தேக்கங்கள் பல நிறைந்துள்ளன.மேட்டுர் அணையில் இதுவரை ஏற்பட்டிராத அளவு நீர் தேங்கியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் வெட்டு எதற்கு?
ஒன்று மட்டும் நிச்சயம்.இப்படி அடிக்கடி வெட்டு ஏற்படுமென்ற அச்சம் தோன்றினால், புதுத் தொழில்களைத் துவக்கவோ, ஏற்கனவே உள்ள தொழில்களைப் பெருக்கவோ அத்துறைகளில் ஈடுபடுபவர்கள் பயப்படுவார்கள்.தடையில்லாமல் வசதியாக மின்சாரம் கிடைக்கும் மாநிலங்களைத் தேடிப் போவார்கள்.தமிழகம் பின்தங்க வேண்டிய நிலை ஏற்படும்.
எப்படியாகிலும் தொழில் வளர்ச்சிக்கும் இதர துறைகளுக்கும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்தே தீருவது என்ற உறுதியோடு, தற்போதைய மின்சார நெருக்கடியை ஓர்'அவசர நிலையா'கக் கருதி, தமிழக அரசு செயலாற்ற வேண்டும்.,
(இது ஆனந்த விகடன் தலையங்கம்..வெளியான தேதி..7-10-73)..இன்றைக்கும் பொருந்தியுள்ளது அல்லவா?
நன்றி- ஆனந்தவிகடன்
Tuesday, November 27, 2012
வாய் விட்டு சிரிங்க..
1.தலைவர்..பொருளாதாரம் பலமாக இருக்கிறது...பலஹீனமாக இருக்கிறது என இரண்டு தலைப்பிலும் பேச்சை தயாரிக்கச் சொல்லி இருக்கார்..ஆளும் கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..எதிர்க் கட்சி கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..அதற்கேற்ப பேசிடலாம்னு.
2.என் மனைவியை கண் கலங்காம வைச்ச்க்கணும்னு பார்த்தேன்..முடியலை
ஏன்?என்ன ஆச்சு
அவ மெகா சீரியல் நடிகையா இருக்கறதாலே..வீட்ல எது பேசினாலும்..கண்ணீரோடத்தான் பேசறா
3.கடைக்காரர்-இலவச இணைப்பை 'கேட்'டு வாங்குங்கன்னு சொல்றது..இந்த சின்னப் புத்தகத்தாங்க..வீட்டு 'கேட்"டு இல்லைன்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்றீங்களே
4.உங்கம்மாவோட நான் சண்டை போடறதால எனக்கு சாபம் கொடுத்துட்டாங்க
என்னன்னு
காலத்துக்கும் சுமங்கலியா இருன்னு
5.டி.வி.ல நிகழ்ச்சி கொடுக்க ஏன் உங்க நாயை இழுத்துக் கிட்டு வர்றீங்க
இது டாக் ஷோன்னு சொன்னாங்களே
6.நீதிபதி-(குற்றவாளியிடம்)உனக்குத் தேவையானால் அரசாங்கமே வக்கீல் ஏற்பாடு செய்யும்
குற்றவாளி-வேண்டாங்க...எனக்கே நல்லா பொய் பேசத் தெரியும்.
Monday, November 26, 2012
இருந்தால் நன்றாயிருக்கும்
தன் பழைய மாணவன் வந்து சொன்னதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டுப் போனார் பேராசிரியர் அனுமந்த ராவ்.
கிருஷ்ணகுமார்..அவரிடம் படித்த மாணவன்.புத்திசாலி.அதனால்தான் பல ஆண்டுகள் ஆகியும் அவன் அவர்
ஞாபகத்தில் இருந்தான்.அவன் முதுநிலை படிப்பு படித்து முடிந்ததுமே..ஏதேனும் ஒரு தலைப்பில் ஆராய்ச்சி
செய்து..டாக்டர் பட்டம் வாங்கச் சொன்னார்.ஆனால்..அன்று அவன் மறுத்து விட்டான்.ஆனால் ஏழெட்டு
ஆண்டுகள் கழிந்து அவனே வலிய வந்து கேட்கிறான் என்றால்...அதுக்கூட ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.
அவன் ஆராய்ச்சி செய்ய தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு..'கடவுள் இருக்கிறாரா..இல்லையா'
'குமார்..இப்படிப்பட்ட தலைப்பை பல்கலைக்கழகம் அங்கீரித்து இருக்க வேண்டும்.நான் கேட்டுப் பார்க்கின்றேன்.
பிறகு நீ உன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம்'
ஒரு நிமிடம்..யோசித்தவன்'சார்,இந்த தலைப்பில்..ஆராய்ச்சி செய்ய அனுமதி கிடைக்க வில்லை என்றாலும்..நான்
ஆராய்ச்சி செய்யத்தான் போறேன்..என்றான் பிடிவாதமாக.
'சரி..உன் ஆசையைக் கெடுப்பானேன்..நீ முயற்சி செய்..ஆனால் பல நூற்றாண்டுகளாக மனிதர்களிடம் இருந்து வரும்
நம்பிக்கை கடவுள் பக்தி.எந்த ஒரு காரியத்திற்கும்..அது முதல் நம்பிக்கை ஆகும்'
'இல்லை சார்..நீங்கள் சொல்லும் அந்த நூற்றாண்டுகளில்..அதைப்பற்றி அபிப்ராயபேதங்களும்..இருந்திருக்கின்றன'
'குமார்..எனக்குத் தெரிந்தவரை..சிவன் பெரியதா..சக்தி பெரியதா..சைவம் பெரியதா..வைஷ்ணவம் பெரியதா..இப்படித்தான்
அபிப்பிராய பேதங்கள் இருந்திருக்கின்றன.நீ சொல்லும்..அந்த அடிப்படையிலேயே மறுப்பு சென்ற நூற்றாண்டில்தான்
ஏற்பட்டிருக்கிறது என நினைக்கின்றேன்'
'சார்..இது சம்பந்தமாக அனேக புத்தகங்கள் சேகரித்து வைத்திருக்கிறேன்.கடவுளை மறுத்த பெரியாரின்
சிந்தனைகளையும் படித்து வருகின்றேன்..நாயன்மார்கள்..ஆழ்வார்கள் சொன்னதை படிக்கிறேன்..'
பேச்சை..திசைதிருப்ப எண்ணிய பேராசிரியர்'சரி..இப்போ உன்னைப் பற்றி சொல்.உனக்கு திருமணமாகிவிட்டதா,
குழந்தைகள் உண்டா?'
'சார்..எனக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஓடி விட்டன.இது நாள் வரை குழந்தைகள் இல்லை..இப்போதுதான் என் மனைவி
7 மாத கர்ப்பம்'என்றான்.
'பாராட்டுகள்' என்றார் பேராசிரியர்.
'ஏன் சார்..நீங்கள் சொல்லும் கடவுள் இருந்திருந்தால்..அந்த ராமர் கடவுள்தானே..அவர் ஏன் சிவ பக்தனான ராவணனை
அழிக்க வேண்டும்.சிவ பக்தனான ராவணனுக்கு சிவன் ஏன் முதலிலேயே அறிவுறித்தி பிறன் மனை விழையாமையை
உணர்த்தி..அவனை சீதை மேல் ஆசை வராமல் தடுத்திருக்கலாமே'
'அது இதிகாசம்..மேலும்..ராமர்..சீதை இவர்கள் பூமியில் அவதரித்ததுமே மனிதர்கள்.இறைவன் இல்லை'
'சரி அது போகட்டும்.தன் மாமன் கம்சனைக்கொல்ல ..கிருஷ்ணன் அவதரித்தான்..பின் அவனே பாண்டவர்களுடன்
சேர்ந்து கௌரவர்களை அழித்தான்..திரௌபதியை துகில் உரித்தபோது உடன் காப்பாற்றவரவில்லை.நீ என்னை முற்றிலும்
நம்பாமல் கைகளால் மறைத்திக்கொண்டிருந்தாய்.எப்போது என்னை நம்பி..கைகளை உயர்த்தினாயோ அப்போது உதவிக்கு வந்தேன்
என்பது..நீங்கள் சொல்லும் அந்த கடவுள் ஒரு sadist என்று ஆகவில்லையா?'
'கடவுளை முழுவதுமாக நம்ப வேண்டும் என்பதற்காக அப்படி கூறப்பட்டது'
ஏன் சார்..தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்..என்பதற்காக திரௌபதி அப்படி
செய்திருக்கலாம்..இல்லையா?'
பேராசிரியர் இதற்கு பதில் கூற வாயைத்திறந்த போது ..குமாரின் அலைபேசி ஒலித்தது.
அதை இயக்கினான் குமார்'என்ன..அப்படியா?..இப்போதே வருகிறேன்' என்றவன்..'சார் என் மனைவிக்கு திடீரென உடல்னலம்
சரியில்லை..அவள் வயிற்றில் கரு அசையவே இல்லையாம்..உடன் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.பிறகு சந்திக்கிறேன்'என
விரைந்தான்.
பேராசிரியர் தலை ஆட்டினார்.
**** **** **** ****
இரண்டு..மூன்று மாதங்கள் ஓடி விட்டன
திரும்ப ..ஒரு நாள் கிருஷ்ணகுமார் அவரைப் பார்க்க வந்தான்.தன் ஆராய்ச்சித் தலைப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததா என
அறிந்துக்கொள்ள.
'அது இருக்கட்டும்..உன் மனைவி எப்படி இருக்கிறாள்?குழந்தை பிறந்து விட்டதா?'
'அந்த ஆச்சர்யத்தை ஏன் கேட்கிறீர்கள்?உங்களிடம் வந்த அன்று அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன்.
வயிற்றில் இருந்த சிசுவிற்கு மூச்சே இல்லை.மருத்துவர்கள் இறந்துவிட்டது என்றனர்.ஆனாலும் ஒரிரு நாட்கள் பார்க்கலாம் என்றனர்
மருத்துவர்கள்.அழுதபடியே வீட்டிற்கு வந்தவள்..இளையராஜாவின் திருவாசகத்தை வி.சி.டி.யில் ஓட விட்டாள்.அது ஒலிக்க..ஒலிக்க..
சிசு அசையத்தொடங்கியது.மருத்துவருக்கு விஷயத்தைச் சொல்ல..ஆச்சர்யப்பட்ட அவர்..தினமும் என் மனைவியை அதைக்
கேட்கச் சொன்னார்.போன வாரம் சுகப்பிரசவம்.பையன்'என்றான் உற்சாகத்துடன்.
ஆச்சரியம் அடைந்தார்..பேராசிரியர்..'ஏம்ப்பா இது எதனால் என்று நினைக்கிறாய்?''இது கடவுளின் அருள் என்று உனக்குத்
தோன்றவில்லையா?கடவுள் காப்பாத்திட்டாரு'என்றார்.
'அப்போ அதற்கு முன்னால்..அந்த சிசுவிற்கு..அந்த நிலை ஏற்பட்டது யாராலே?'பதில் கேள்விக் கேட்டான்.
'குமார்..பிரபஞ்சம் தான் கடவுள்.நேற்று அறியாததை இன்று அறியலாம்.இன்று அறியாததை நாளை அறியலாம்.
ஆனால்..எப்போதுமே அறிய முடியாதது ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும்..அது பிரபஞ்ச ரகசியம்.புரிந்துக் கொள்'
என்றார்.சற்றே குழம்பியவன்..'சரி நீங்கள் சொல்வதை ஒப்புக்கொண்டாலும்..இறைவன் என்று ஒருவன் தானே இருக்க
முடியும்..நீங்கள் பல கடவுள்களை சொல்கிறீர்களே?'
'குமார்..நீ..ஒருவன்..ஆனால் உன் பேற்றோருக்கு நீ மகன்..மனைவிக்கு கணவன்..தம்பிக்கு அண்ணன்..அண்ணனுக்கு
தம்பி..இப்படி இருக்கும்போது..அந்த கடவுள் பலருக்கு பல பெயரில் இருப்பது என்ன தப்பு'
சற்று நேரம் என்ன செய்வது என்று தெரியாமல்..யோசித்தான் அவன்.
அதை பயன்படுத்திக் கொண்ட பேராசிரியர்'இப்ப நீ கடவுள் இருக்கிறதை நம்புகிறாய் இல்லையா'என்றார்.
'இருந்தால்..நன்றாயிருக்கும்'என்றான்.
Sunday, November 25, 2012
சிவாஜி ஒரு சகாப்தம் - 2
1954ல் இவர் நடித்து வெளிவந்த படங்கள்
மனோகரா, இல்லறஜோதி, அந்தநாள், கல்யாணம் பண்னியும் பிரம்மச்சாரி, துளிவிஷம், கூண்டுக்கிளி, தூக்கு தூக்கி, எதிர்பாராதது. இவைத் தவிர..மனோகரா..ஹிந்தி மற்றும் தெலுங்கு.
மனோகரா...மீண்டும் கலைஞர்..கதை வசனம்.மாபெரும் வெற்றி பெற்ற..படம்..பராசக்தி..கோர்ட் காட்சி வசனம் போல்...இப்படத்திலும்...கிளைமாக்ஸில்..கண்ணாம்பா,சிவாஜி வசனங்கள்..தனியாக இசைத்தட்டாகவே வந்து..அனைவராலும் முணுமுணுக்கப்பட்டவை. இப்படத்தில்..கிரிஜா என்னும் நடிகை நடிகர் திலகத்தின் ஜோடி.டி.ஆர்.ராஜகுமாரி,எஸ்.ஏ.நடராஜன்..வில்லி..வில்லன்.
இல்லறஜோதி..கண்ணதாசன்..கதை..வசனம்..படம் எதிர்ப்பார்த்த அளவு பேசப்படவில்லை.
எஸ்.பாலசந்தர் கதை வசனத்தில் வந்த படம்..அந்தநாள்.தயாரிப்பாளர் ஏ.வி.ஏம்.,சிவாஜிக்கு..வில்லத்தனமான கதானாயகன் பாத்திரம்.தேசதுரோகம் செய்யும் அவரை..அவர் மனையாக வரும் பண்டரிபாயே கொலை செய்துவிடுவார்.(பின்னாளில் வந்த கே.பாலசந்தரின்..அச்சமில்லை..அச்சமில்லை.ஞாபகம் வருகிறதா?)அந்தநாளில்..அந்தநாள் தான் பாடல்களே இல்லாமல் வந்த முதல் தமிழ் படம் எனலாம்.
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி...நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து..பி.ஆர்.பந்துலு எடுத்தபடம்.பத்மினி காதானாயகி.படம் வெளிவந்த போது..எதிர்ப்பார்த்த வெற்றி அடையவில்லை என்றாலும்..இரண்டாவது..மூன்றாவது ஓட்டங்களில்..வசூலை குவித்தது எனலாம்.
துளிவிஷம்...சிவாஜி வில்லன் பாத்திரம்..பாரதிதாசன் கதை என்பதைத் தவிர..சொல்ல ஒன்றுமில்லை.
கூண்டுக்கிளி....தமிழ்த் திரையில்..புரட்சி நடிகரும்..நடிகர் திலகமும் நடித்து வந்த ஒரே படம்.டி.ஆர்.ராமண்ணா தயாரிப்பு..இயக்கம்.பி.எஸ்.சரோஜா நாயகி.சிவாஜிக்கு வில்லன் பாத்திரம்..படம் ஏனோ படு தோல்வி.
எதிர்பாராதது..ஸ்ரீதரின் கதை வசனம்.நாயகனின் நாயகி (பத்மினி)யே..எதிர்பாராமல்..நாயகனுக்கு அம்மா வாகிறார்.(மூன்று முடிச்சு?).படம் வெற்றி. சிற்பி செதுக்காத பொற்சிலையே..என்ற ஏ.எம்.ராஜாவின் பாடல் இன்றும் கேட்க இனிமையானது.
தூக்கு தூக்கி...என்ன சொல்ல முடியும்..வெற்றி..வெற்றி...வெற்றி..தான்.இன்றும் இப்படத்திற்கு ரசிகர்கள் உண்டு.பத்மினி.லலிதா,ராகினி,பாலையா..இப்படி நட்சத்திரக் கூட்டம்.இப்படப் பாடல்களைப் பாட..திருச்சி லோகனாதனைக் கேட்டார்களாம்.அச்சமயத்தில் பீக்கில் இருந்ததால்..அவர் அதிகத் தொகைக் கேட்க தயாரிப்பாளர்கள்..அவ்வளவு முடியாது என உரைக்க ..அப்போ..மதுரைல இருந்து ஒரு
பையன் வந்திக்கான்..அவனை பாடச்சொல்லுங்க..என்றாராம்..லோகநாதன். அந்த பாடகர்தான்..டி.எம்.எஸ்.,
பெண்களை நம்பாதே...ஏறாத மலைமேலே..அபாய அறிவிப்பு, சுந்தரி சௌந்தரி..குரங்கிலிருந்து போன்ற அற்புதமான பாடல்கள் நிறைந்த படம் இது.
இனி 1955ல் வந்த படங்கள்...அடுத்த பதிவில்...
Thursday, November 22, 2012
நான் படித்த சில அருமையான வரிகள்...
1.தப்பு செய்யற யாருக்குமே பலம் கிடையாது..எப்பவும் அப்படிப்பட்டவர்களை முறியடிக்க சாதுர்யம்தான் முக்கியம்.
2.பெண்களுக்கு சம அந்தஸ்து இருக்கா..அவளுக்குன்னு ஒரு மனசு இருக்குன்னு கூட சிலர் நினைக்கறதில்ல,(சிலர் என்பதை மனதில் கொள்ளவும்)
3.பேனாவில்..மையும்..திமிரும் இருந்தா..எதை வேண்டுமானாலும் எழுதிடறதா?
4.பணம்..பெண்..இரண்டுமே போதையானது..அது நல்ல வழியில் வந்தா நிலைக்கும்...கெட்ட வழியில் வந்தால் விட்டு ஓடிடும்..
5.you can erase some one from your mind..getting them out of your heart is another story.
6.winners never quit...quitters never win
7.வண்டிக்கு வருத்தம் ஏது...அதை இழுக்கற மாட்டுக்குத்தான் வலி தெரியும்.
8.படிப்பறிவு என்பது வேறு..கல்வி அறிவு என்பது வேறு..படிப்பறிவு என்றால் ..அடுத்தவரின் அறிவை உள்வாங்குகிறோம்..கல்வி அறிவு என்றால் உள்ளே இருக்கும் ஆற்றல் வெளியே வருவது.
9.தந்தை...ஒரு நண்பனைப்போல உன்னைக்கவனிக்கிறார்..வேலைக்காரனைப்போல உனக்கு பணிந்து போகிறார்..குருவைப்போல வழி காட்டுகிறார்..
10.அழுக்கிலே நெருப்பு பத்தி எரிஞ்சாலும்..நெருப்பில அழுக்கு கொஞ்சம் கூட ஒட்டறதில்ல...
11.உலகில் இன்று எது வேண்டுமானாலும் விலைக்கு கிடைக்கும்...விலைக்கு கிடைக்காத ஒன்றே ஒன்று..தாயின் அன்பு மட்டுமே..
இவற்றை எல்லாம்..எழுதியவர்கள் யார் என தெரியவில்லை...எழுதியவர்களுக்கு நன்றி.
Wednesday, November 21, 2012
வரலாறு படைக்கப் போகும் விஸ்வரூபம்..
சமீபத்தில் கமல்ஹாசன்..விஸ்வரூபம் படம் வெளியாவதில் தாமதம் ஏன்? என்பதற்கு...
இப்படம் 3000 பிரிண்டுகள் போடப்படுகின்றன.அதனால்தான் படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது என்றார்.
3000 பிரிண்டுகள் எனில் கண்டிப்பாக 3000 திரையரங்குகள்.ஒரு அரங்கில் குறைந்த பட்சம் நாளைக்கு நான்கு காட்சிகளாவது திரையிடப்படுமெனில்..ஒருநாளைக்கு 12000 காட்சிகள்.ஒரு காட்சிக்கு நிகர வருமானம் 20000 என்று வைத்துக் கொண்டாலும்..ஒரு நாளைக்கான வசூல் 24 கோடி.படம் ஐந்து நாட்கள் ஓடினாலும் வசூல் நூறு கோடிகளைத் தாண்டும்.
ஆகவே படம் வெற்றியடைய வாழ்த்தினாலும்...வசூலிலும் அது சாதனைப் புரியும் என எதிர்பார்க்கலாம்.
வாய் விட்டு சிரிங்க...!!
1.நேத்து கண்காட்சியில என் மனைவி காணாம போயிட்டா..
நீ கண்காட்சி போறதை முன்னாலேயே சொல்லக்கூடாது,..நானும் என் மனைவியை அழைச்சுட்டு வந்திருப்பேன்.
2.என் மனைவிக்கும்...எனக்கும் பெரிய சண்டை
ஏன்
ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினார்னு என் மனைவி கிட்ட சொன்னேன்..நான் செத்தா நீ என்ன கட்டுவேன்னு கேட்டா..உன் தங்கச்சியை கட்டுவேன்னு சொன்னேன் அதுதான்.
3. நம்ம தலைவர் ..ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியோட கூட்டு வைச்சிருக்கறதால...நம்ம கட்சிக்கு பச்சோந்தி சின்னம் கேட்கிறாராம்.
4. சுடச்சுட சாம்பாரைக் கொட்டிட்டேன்னு..காதில பஞ்சை ஏன் அடைச்சிக்கிற
நான் சாம்பாரை கொட்டினது உங்க அம்மா மேல..
5.நடுராத்திரி பெண் பார்க்கப்போறியா...ஏன்?
பொண்ணு ஸாஃப்ட்வேர் இஞ்சினீயர்...நைட்ஷிஃப்ட் அதுதான்..
6.உன்னை நம்பி வந்தவங்களை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வருது..
நம்பி வரவங்களைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவங்களை எப்படி ஏமாற்றமுடியும்?
7.என்னோட லட்சியமே ஒரு கோவில் கட்டறதுதான்
அவ்வளவு பக்தியா?
அதெல்லாமில்லை...கோவில் கட்டினா...மெகா சீரியலுக்கு வாடகைக்கு விடலாம்..அதுதானே இன்னிக்கு முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்
8..நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்
என்ன சொல்றீங்க
இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே
9.(வேகமாக ஓடும் காரை நிறுத்திய போக்குவரத்து காவலர்) சார்...நீங்க மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில போறீங்க
ஏன்..அபாண்டமா பொய் சொல்றீங்க?..நான் காரையே 10 நிமிஷம் முன்னாலதான் எடுத்தேன்.
10.உங்க வீட்டு பெண்கள் எல்லாம்...cat walk பழகறாங்களா? ஏதாவது ஃபேஷன் ஷோவில கலந்துக்கிறாங்களா?
இல்ல...வீட்ல இருக்கிற எலிகளை பிடிக்கத்தான்.
11.பேச்சுப் போட்டியில அரை மணி நேரம் பேசியும் உனக்கு பரிசு கிடைக்கலையா? எதைப்பற்றிப் பேசினே?
சுருங்கச் சொல்லி விளக்க வைப்பது எப்படின்னு
12.வக்கீல் சார்...என் கேஸ் ஜெயிக்குமா?
உண்மையை சொல்லணும்னா..ஜெயிக்கிறது கஷ்டம் தான்
உண்மையைச் சொல்றதாயிருந்தா இருந்தா...உங்களை வக்கீலா வைச்சிருக்க மாட்டேனே
Tuesday, November 20, 2012
தமிழுக்கு அமுதென்று பெயர் - 3
காளமேகம் பிற்காலப்புலவர்.நகைச்சுவை மன்னர்.
ஒரு நாள் வெயில் நேரம்.புலவருக்கோ தாகம்.அப்போது மோர் விற்று வருகிறாள் ஒரு பெண்.அவளிடம் மோர் வாங்கிகிறார்.அவளோ..காசு வேண்டாம்..என் மீது ஒரு கவி பாடுங்கள் என்கிறாள்.
உடன் கவி'அம்மையே..உன் மகத்துவத்தைக் காட்டிலும்..உன் மோரின் மகத்துவம் மிகப்பெரிது.அதைப்பாடுகிறேன்..என்கிறார்.
மோரே..நீ இம்மண்ணுலகப் பிறவியா..இல்லை..இல்லை..நீ தேவலோகப் பிறவி.திருமால் 10 அவதாரம் எடுத்தார்..நீ 3 அவதாரம் எடுத்தாய்.திருமாலுக்கு உவமை கூறும் வகையில் பெருமை மிக்க கருமை நிற வானில் சஞ்சரித்தாய்.உனக்கு கார் என பெயர் சூட்டி மண்ணுலகிற்கு அழைத்தோம்.திருமால் மண்ணுலகில் தேவகி வயிற்றில் அவதரித்தது போல் நீயும் மண்ணுலகில் நீராய் பொழிந்தாய்.
கண்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்தாலும்..யசோதை என்ற இடையர் குல பெண்ணிடம் புகுந்தான்.நீயும் நீராய் பொழிந்து பிறந்த இடத்தில் நில்லாமல்..இந்த ஆச்சியின் குடத்தில் புகுந்தாய்.உடனே இவளும் உனக்கு மூன்றாவது பெயர் 'மோர்" என சூட்டி விட்டாள்.உன் திருநாமத்தை 'மோரோ..மோர்..'என பன்முறை ஓதி பாராட்டுகிறாள்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிப் பிறவுமாகி நிற்கும் இறைவனை எப்படிப் பாராட்டுவேன் என்கிறார் மணிவாசகர்.காராகி,நீராகி,மோராகி நிற்கும் உன்னை எப்பேரால் வாழ்த்துவேன் என்கிறார் காளமேகம்.அம்மையே..பிடியுங்கள் உங்கள் மோர் மீது என் ஆசுகவி என்கிறார்.
கார் என்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீர் என்ரு பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின்
வார் ஒன்று பூங்குழலார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே
Monday, November 19, 2012
சிவாஜி ஒரு சகாப்தம்..- 1
(2009ல் என் வலைப்பூவில் இத்தொடரை எழுதினேன்.இன்று பல புதியவர்கள் இணையத்தில் எழுத ஆரம்பித்துவிட்ட நிலையில், இத் தொடரை மீள் பதிவிடுவது அவசியம் எனக் கருதியதால் ...மீள் பதிவிடுகிறேன்)
சிவாஜி கணேசன்...
தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்..
இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான்.
ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது.
படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப்படித்தான் இருப்பார்கள்..என்று நம் கண் முன் நிறுத்திய ஒப்பற்ற கலைஞன்.
ஆம்...அவர் ஒரு பல்கலைக்கழகம்..சகாப்தம்..
இனி வாரம்தோறும் ..1952 முதல் அவர் நடித்த படங்கள் பற்றி..எழுதலாம் என்ற ஆசை.இப்பதிவு..அவர் நடிப்புப் பற்றி மட்டுமே..இதில்..அரசியல் வாழ்க்கை போன்றவற்றை எழுதப்போவதில்லை.
என் நினைவிலிருந்தும்..படித்த சில புத்தகங்களை வைத்தும் இப்பதிவு எழுதப்படுவதால்..இதில்..ஏதேனும் விட்டுப்போயிருந்தாலோ..தவறிருந்தாலோ..அவற்றை சுட்டிக்காட்டினால்..பதிவில் மாற்றம் செய்துவிடுகிறேன்.
இனி..கலையுலக சக்கரவர்த்தியாய் திகழ்ந்தவர் பற்றி..
தமிழ் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த வி.சி.கணேசன் 1952ல் பராசக்தி மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.இவர் ஏற்ற பாத்திரத்தில் ..கே,ஆர்.ராமசாமி நடிக்க வேண்டும்..என்று சம்பந்தப் பட்டவர்கள் கூற.. அப்படத்தின் கதை வசனம் எழுதிய கலைஞர் பிடிவாதமாக..கணேசன் தான் நடிக்க வேண்டும் என்றாராம்.கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கணேசன் பேசிய முதல் வசனம் 'சக்சஸ்..சக்சஸ்" என்பதுதான்.பின் திரையில் வெற்றியுடன் ஆட்சி புரிந்தார் என்று நாம் அறிவோம்.
அதே வருஷம் வந்த படம் பணம்..என்.எஸ்.கே.,மதுரம்.,பத்மினி., ஆகியோர் நடித்தது.
பராசக்தி 42 வாரங்கள் ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது.
1953ல் சிவாஜி நடித்து வந்த படங்கள்..பூங்கோதை,திரும்பிப்பார்,அன்பு,கண்கள்,மனிதனும் மிருகமும்,பரதேசி(தெலுங்கு),பொம்புடு கொடுகு(தெலுங்கு)
பூங்கோதை
-----------------
தெலுங்கில் பர்தெசி என்றும் தமிழில் பூங்கோதை என்றும் எடுக்கப்பட்ட படம் அஞ்சலி பிக்க்ஷர்ஸ் தயாரிப்பு.திரைக்கதை,இயக்கம் எல்.வி பிரசாத்.இசை ஆதி நாராயண ராவ்.
சிவாஜி யின் முதல் படமாக இது வெளிவந்திருக்கக் கூடும்.ஆனால்..நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் கேட்டுக் கொண்டதன் பேரில்..சற்று தள்ளி ..சில மாதங்கள் இடைவெளியில் வந்த படம் இது. 7-2-53 அன்று இப்படம் வெளியானது.
நடிகர் திலகத்துடன் ஏ.நாகேஸ்வர ராவ், அஞ்சலி தேவி, ரங்காராவ் நடித்திருந்தனர்..
சீகிரி என்னும் மலை வாசஸ்தலத்தில் பூ வியாபாரம் செய்து வருபவ்ள் லட்சுமி
சந்திரன் அங்கு வந்து தங்கும் நேரத்தில் ,அப்பூக்காரியுடன் காதல் ஏற்பட்டு..ஒரு கோயிலில் இருவரும் மணமுடிக்கின்றனர். லட்சுமி கரு தரித்ததும் ..மணமான செய்தியை அறிகிறார் அவர் தந்தை.சந்திரனை அவர் பார்க்க விரும்புகிறார்.ஆனால்..அவனோ தவிர்க்க முடியாத காரணங்களால் அவ்விடத்தை விட்டு ..லட்சுமியிடமும் சொல்லாது சென்று விடுகின்றான்.
இடைபட்ட காலத்தில்..லட்சுமியின் தந்தை ஊராரின் ஏச்சுகளைக் கேட்க முடியாது தற்கொலை செய்து கொள்கிறார்.லட்சுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. இதனிடையே அவளைத் தேடிவரும் சந்திரனிடம் அவள் இறந்து விட்டதாகத் தகவல் சொல்லப் படுகிறது.
சந்திரனின் நண்பரின் மகன் ஆனந்த.நண்பன் இறக்கும் நேரத்தில் ..ஆனந்தை வளர்க்கும் பொறுப்பை சந்திரனிடம் ஒப்படைக்கிறான்.
லட்சுமியின் பெண் வளர்ந்து வளர்ந்து..ஆனந்தை விரும்புகிறாள்.ஆனால் லட்சுமி அதை விரும்பவில்லை..
சந்திரன் ,லட்சுமியை மீண்டும் சந்தித்தானா..ஆனந்த் லட்சுமியின் மகளை மணந்தானா..என்பதே மீதக்கதை.
திரும்பிப்பார்
------------------
அடுத்து.திரும்பிப்பார்..
வெளியான தேதி 10-7-1953
இதிலும் கலைஞர் வசனம்..
மாடெர்ன் தியேட்டர்ஸ் தயாரிக்க டி ஆர் சுந்தரம் இயக்கம்.
ஜி ராமநாதன் இசையில் எஸ்.சி.கிருஷ்ணன் பாடிய "கலப்படம்..கலப்படம்" என்ற பாடல் பிரபலம்
பண்டரிபாய் நடித்திருந்தார்...படம் வெற்றி..இதில் இவர் ஏற்று நடித்த பாத்திரம் பெயர் பரந்தாமன்..
திரும்பிப்பார் படத்தில் செக்ஸ் ஒன்றே வாழ்க்கையின் பரமானந்தம் என நினைத்து, யாராக இருந்தாலும் பெண்டாள துடிக்கிற மோசமான வேடம் பாத்திரம்.. பராசக்தி குணசேகரனுக்கும் அடுத்த ஆண்டு வந்த திரும்பிப்பார் பரமானந்தத்திற்கும் இடையேதான் நடிப்பில் எவ்வளவு வேறுபாடு..
.படம்..மாபெரும் வெற்றி படமாக அமைந்தது எனலாம்.
1954..அடுத்த பதிவில்...
.படம்..மாபெரும் வெற்றி படமாக அமைந்தது எனலாம்.
1954..அடுத்த பதிவில்...
துப்பாக்கி...- என் பார்வையில்..
துப்பாக்கி படத்தை இணைய நண்பர்கள் பலரும் தோய்த்து காயப்போட்டு விட்ட நேரத்தில்..எனது விமரிசனம் தேவையா? என ஒரு நிமிடம் நினைத்தாலும்...உடன்..நீண்ட நாள் கழித்து..முன்னணி நடிகர் ஒருவர் நடித்து..வெற்றி பெற்றுள்ள படம் என்பதால்..கண்டிப்பாக விமரிசனமாய் இல்லாமல் என் எண்ணங்களை எழுத வேண்டும் என எண்ணியதால்தான் இப்பதிவு .
விஜய்..இளைய தளபதி பட்டத்திற்கு தான் தகுதியானவர் தான் என்பதை நிரூபித்துள்ளார்.காஜலோடு ஆட்டம் போடுவதில் ஆகட்டும்..வில்லனோடு மோதும் காட்சியில் ஆகட்டும், சத்யனோடும்..ஜெயராமுடனும்..காமெடி செய்வதில் ஆகட்டும்...சூப்பர்.
பழைய இளமையும், துள்ளலும் அமர்க்களப்படுத்தி விட்டார்.
திரைக்கதையை வடிக்க முருகதாஸ் பட்ட மெனக்கடல் தெரிகிறது.ஆனால் நாடகம் போல ஒரு காட்சி காதல், அடுத்த காட்சி துப்பாக்கி என மாறி மாறி வருவதை சற்று தவிர்த்திருக்கலாம்.மற்றபடி குறை சொல்ல முடியாது.தனி காமெடி டிராக் இல்லாமல்..பல இடங்களில் சிரிக்க வைத்துள்ளார்.ஜெயராமன் நன்கு ஒத்துழைத்துள்ளார்.
ஒளிப்பதிவு..சந்தோஷ் சிவன்...எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத்..பட வெற்றிக்கு உறுதுணையாய் உள்ளனர்.ஹாரீஸ் ..ம்..ஹூம்..ஏமாற்றி விட்டார்..பாடல்களில்.ஆனால் பின்னணி இசை நன்கு உள்ளது.
டீவி செய்தியில் ஜெயா டீவியும், புதிய தலைமுறையையும் காட்டி விட்டனர்..(சன்..கலைஞர்..???)
27-12-12 அன்று குண்டு வெடிப்பு என சொல்லி அதை முறியடிக்கும் படம் 13-11-12 அன்றே வந்துவிட்டதே (வரும் முன் நடப்பதைக் காட்டி விட்டார் .போதிதர்மன் முருகதாஸ்.
சத்யன் ஒரு சப் இன்ஸ்பெக்டர் ரேங்க்..ஆனால்...கண்ட்ரோல் ரூமில்..யாருக்கும் தெரியாமல் அமர்ந்து,..நகரில் நடப்பதைக் கண்காணிப்பது..சற்று ஓவராகத் தெரியவில்லையா..முருகதாஸ் சார்.
கிளைமாக்ஸ்.. பாராட்டப்பட வேண்டிட ஒன்று.கிளேஷே ஆக இருந்தாலும்.
பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும்..இரண்டே முக்கால் மணி நேரம் போவதே தெரியாமல் படம் வேகமாகப் போகிறது தான் திரைக்கதையின் வெற்றியாகும்.
வெற்றிபெற்ற விஜய் கூட்டணியை வாழ்த்துவோம்.
Sunday, November 18, 2012
மதப் பிரச்னை, ஜாதிப் பிரச்னை இவை வராமல் படம் எடுப்பது எப்படி?
படத்தயாரிப்பாளரை..கதாசிரியர் ஒருவர் பார்க்க வந்தார்.தயாரிப்பாளரிடம், "ஐயா..தீவரவாதத்தை ஒழிக்கும் விதத்தில் என்னிடம் ஒரு சப்ஜெக்ட் உள்ளது..கேட்கிறிர்களா'? என்றார்.
தனது முந்தைய படம் அருமையாய் இருந்தும்..சில சாதி அமைப்புகளாலும்..மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது என சில, பல சங்கங்களால் மிரட்டப்பட்டதாலும், திரையரங்குகளில் படத்தைக் காட்டவிடாமலும் ஆர்ப்பாட்டம் செய்ததால்..படம் தோல்வியடைந்ததால் , மனம் வெறுத்திருந்த தயாரிப்பாளர், 'ஐயா..இனி அப்படிப்பட்ட படங்களே வேண்டாம்..வெறும் காதல் கட்சிகள் படமே போதும்' என்றார்.
'ஐயா..என் கதைகள் அப்படிப்பட்ட பிரச்னைகள் வரக் காரணமேயில்லை.ஏனெனில்..இதில் வரும் காதாபாத்திரங்கள் அனைவருமே தலைக்குத் தொப்பி அணிந்திருப்பர்.அவர்களின் பெயர்களும்..எக்ஸ், ஒய், இஜட் என்றுதான் இருக்கும்.ஆகவே எந்த மதத்தினர் அதிருப்தியும் வர வாய்ப்பில்லை' என்றார் கதாசிரியர்.
இப்படி செய்யும் முறை தயாரிப்பாளருக்குப் பிடித்துப்போக...பட விளம்பரம் கீழ்கண்ட முறையில் செய்யப்பட்டது.
"ஏ..புரடக்க்ஷன்ஸ் அளிக்கும்
"B:"
கதை - C
தயாரிப்பு -D
திரைக்கதை இயக்கம் - E
நடிகர்கள் - F, G, H
Saturday, November 17, 2012
சாதியால் வந்தது ஐயா...தொல்லை..
சாதி இரண்டொழிய வேறில்லை...பாலர் பாடத்திலேயே நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது.
அதன் பின் பாரதி..'சாதிகள் இல்லையடி பாப்பா..குலம் தாழ்ச்சி..உயர்ச்சி சொல்லல் பாவம்..' என்றார்.
ஆனாலும்..சாதி என்பது...தமிழர்களிடையே..மட்டுமல்ல..இந்தியர் அனைவரிடமுமே அழிக்க முடியாத ஒன்றாக உள்ளது.வடக்கே நடக்கும் கௌரவக் கொலைகளே இதற்கு ஆதாரம்.
வாக்குகளுக்காக...சாதிகள் இல்லையென..குடிசை வீட்டில் அமர்ந்து..அவர்களுடன் உணவு உண்டவரும்...ஒரு கட்டத்தில் நானும் பிராமண சமூகத்தைச் சார்ந்தவன் என்று பேசினார்.
தன் குடும்பத்தினர் பற்றி எழுதியதற்கு..இவ்வளவு வருடங்களாக தன் ஆதரவு பத்திரிகையாய் இருந்தாலும்..அதிக் கூட கணக்கில் எடுக்காது..'நான் பார்ப்பன ஜாதியில் பிறந்திருந்தால்..அப்பத்திரிகை பல வழக்குகளை சந்திக்கும் என்பதால்..இப்படி எழுதியிருக்குமா?நான் பிற்படுத்தப் பட்ட சாதியில் பிறந்ததால்தானே அப்பத்திரிகை இப்படி எழுதுகிறது' என்கிறார் ஒரு தலைவர்.
தமிழகத்தில் ஜாதிக்கட்சியாய் ஆரம்பித்து..பின் அரசியலுக்காக பெயரை மாற்றிய கட்சியும்...இதுவரை எங்கள் சாதியைச் சார்ந்தவர் யாரும்..பதவிக்கு வரவில்லை என்று கூறுவதுடன்..'இனி சாதிக் கட்சிகளுடன் தான் கூட்டணி' என்கிறது..
தமிழகத்தில்..தங்கள் சாதி பெயரில் கட்சிகளோ..சங்கங்களோ அமைக்காதார் யார்..
யாதும் ஊரே..யாவரும் கேளிர்..
இது படிப்பதற்கும்...வாய்ப்பந்தல் போடவுமே பயன்படுகிறது.
தன் வீட்டுக் கல்யாணம் என்றால் முதலில்...நாம் பார்ப்பது அதே சாதியைச் சார்ந்த மணமகனையோ/ மணமகளையோத் தானே!
இப்படி எங்கும்..எதிலும் சாதிதான் என்ற நிலையில்..'பிறாமணாள்' என்ற பெயரை உபயோகிப்பது தவறா..?
பொதுவாக சாப்பாடு ஓட்டல்களில்..'சைவ ஓட்டல்...அசைவ ஓட்டல்' என்றாலே போதுமானது.
அது முடியாது எனில்...மாமி மெஸ், ஆச்சி மசாலா, நாயுடு ஹால். ஐயங்கார் பேக்கரி' என்பது போல..
'ஐயர் ஓட்டல்' என பெயர் வைத்துக் கொள்ளலாம்..அதைவிடுத்து
'பிறாமணாள்' என பெயர் வைத்தது.. அது தப்பா//சரியா..என்பதைவிட.. தேவையா என்பதே கேள்வி..
சமைக்கப்படும் உணவுவகை தரமாக, சுவையாக இருந்தால்..
அது பிறாமணாளாய் இருந்தால் என்ன..இல்லாவிட்டால் என்ன..மக்கள் ஆதரவு கண்டிப்பாக இருக்கும்.அந்த உணவகங்களுக்கு.
சரவணபவன் என்ன பிறாமணாளா...தரமான ஓட்டல் என்றால்..இன்று அந்தப் பெயரும் மனதில் தோன்றும் விதமாக ஆகவில்லையா?
அதைவிடுத்து..தேவையில்லாமல்...அசட்டுப் பிடிவாதத்துடன் அப்பெயரை வைத்ததால்...அவருக்கு செலவில்லா விளம்பரம் கிடைத்தாலும்....வாடகைக்கு இருந்த இடத்தை காலி பண்ணச் சொல்லவில்லையா..?
அதனால்..அந்த ஓட்டல் அதிபருக்கு, தேவையில்லாமல்..வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதல்லவா?
இனிமேலும்..தன் பலத்தை உணர்ந்து சாமானியன் முடிவெடுக்க வேண்டும்..
Friday, November 16, 2012
பிரதமர் அலுவலகமும்..கடிதங்களும்...
அலுவலகத்தில் நுழைந்த பிரதமர் வாசலில் சிலர் நிற்பதைப் பார்த்து, தன் செயலரிடம்,'அவர்கள் எல்லாம் யார்?' என வினவ..
அதற்கு செயலர், 'அவர்கள் பழைய பேப்பர்களை எடுக்கும் வியாபாரிகள்' என்கிறார்.
"ஓகோ..அப்படியா..ஆமாம் ..அதிலும் சில்லறை வர்த்தகத்திற்கு அந்நிய முதலீடை பயன்படுத்தலாமா?' -பிரதமர்.
'அந்த அளவு...வியாபாரம்.." என செயலர் இழுக்க..
'அலுவலகத்திற்கு உள்ளே வந்து பாரும்...தமிழக முதல்வர், மற்றும் கலைஞரிடம் இருந்து வந்த கடிதங்கள் மலை போல குவிந்திருக்கு' - பிரதமர்.
செயலர் உடன், 'ஐயா ..மறந்து விட்டேன்..இன்று கூட நாடார் சமுகத்தை இழிவுபடுத்தி சி.பி.எஸ்.இ., பாடத்தில் உள்ளதை நீக்க வேண்டும்..என தமிழகத்திலிருந்து மூன்று கடிதங்கள் வந்திருக்கு.
'மூன்றா..ஒன்று முதல்வர், மற்றொன்று கலைஞர்..மூன்றாவது யாரிடமிருந்து..?"
"அந்த மூன்றாவது கடிதம்..இன்று வரை தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராய் இருக்கும் விஜய்காந்த் என்பவரிடமிருந்து'
'அப்படியா..அப்போ..இனி தமிழகத்திலிருந்து இனி வரும் கடிதங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்....நான் சொன்னது சரி..அதிலும் அந்நிய முதலீட்டுக்கு ஏற்பாடு பண்ணவும்'
செயலர் என்ன செய்வது என அறியாது..வெளிநாட்டில் பழைய காகிதங்கள் வாங்கும் நிறுவனம் உள்ளதா? என ஆராயத் தொடங்கினார்.
Thursday, November 15, 2012
கொள்ளை..(ஒரு பக்கக் கதை)
காலை எழுந்ததும்..கையில் காஃபியுடன்..அன்றைய தினசரியை எனக்கு படித்து விட வேண்டும்..அப்போதுதானே..நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகளை நம்மால் அறிய முடியும்.
கடந்த சில நாட்களாக செய்தித்தாள்களில் நான் வசிக்கும் அசோக்நகர் பகுதியில் ..ஏதேனும் ஒரு இடத்தில் பட்டப் பகலில் கொலை..கொள்ளை என்றிருக்கிறது.நாடே கெட்டுப் போச்சு..
நான் நினைத்தது சரி....'அசோக் நகரில் நேற்றும் பகல் கொள்ளை' என்றது தலைப்புச் செய்தி.அதைப் பார்த்ததும்..உடன் மனைவையைக் கூப்பிட்டேன்..'பார்த்தியா..நேற்றுக் கூட நம்ம ஏரியாவிலே திருட்டுப் போயிருக்கு..' என்றவாறு ..அவள் கழுத்தில் அணிந்திருந்த கிட்டத்தட்ட பத்து பவுன் சங்கிலியைப் பார்த்தேன்.
'மேல படியுங்க' என்றாள்.
'அசோக் நகர்..18 ஆம் தெருவில் உள்ள சுபிக்க்ஷா அடுக்குமாடி குடியிருப்பில்..இரண்டாம் தளத்தில் உள்ளது 8 ஆம் எண் உள்ள..ஃப்ளாட்.அங்கு வசிக்கும் கந்தசாமி என்பவரும்..அவரது மனைவி லட்சுமியும் வேலைக்குச் செல்லும் தம்பதிகள்.அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தினமும் வேலைக்குச் செல்வது வழக்கம்.நேற்றும்..அப்படிச் சென்று விட்டு மாலை வீடு திரும்பியவர்கள்..வீடு திறந்திருப்பதைப் பார்த்து..உள்ளே சென்று பார்த்த போது..பீரோவை உடைத்து 35 சவரன் நகைகள்..ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்'
படித்து முடித்து..'பார்த்தியா நாம ஜாக்கிரதையா இருக்கணும்' என்றேன்.
திடீரென ..'என்னங்க..நம்ம ஃப்ளாட்டும் 18ஆவது தெருதானே..' என்றாள் சகதர்மணி .
'சுபிக்க்ஷா' நம்ம ஃப்ளாட் தானே.'
'நம்ம வீட்டு நம்பர் 7..அப்போ 8..அடடே..நம்ம பக்கத்து வீடுங்க..' என்றாள் படபடப்பாக
Wednesday, November 14, 2012
'துப்பாக்கி'யால் சர்ச்சை.. விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு!
துப்பாக்கி படத்தில் முஸ்லீம்களை விமர்சித்திருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதையடுத்து நடிகர் விஜய்யின் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள துப்பாக்கி திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. தமிழகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் நன்றாக இருப்பதாக பாசிட்டிவான ரிசல்ட் வர ஆரம்பித்துள்ள நிலையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
மும்பை தீவிரவாத சதிச் சம்பவப் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இந்த நிலையில் முஸ்லீம்களை விமர்சிப்பது போல இப்படம் உள்ளதாக தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. மேலும் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் இணைந்து விஜய் வீட்டு முன்பு போராட்டம் நடத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து விஜய் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வரும் நீலாங்கரை வீட்டுக்கும், அவரது பெற்றோர் வசித்து வரும் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
(தட்ஸ் தமிழ்)
Tuesday, November 13, 2012
தமிழுக்கு அமுதென்று பெயர் - 2 (குறள் விளக்கம்)
அவன் அனைவரின் நலம் நாடும் நண்பனாய் திகழ்ந்தான்.
நண்பர்களுக்கு ஏதேனும் கெடுதல் வந்தால்...அதனால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்றாலும் கவலையின்றி அவர்கள் நலனுக்கு உழைத்தான்.
நண்பர்கள் நலமே தன் மூச்சு எனத் திகழ்ந்தான்.
அவன் நண்பர்களும் அவனை தலை மீது வைத்துக் கொண்டாடினர்.
காலம் ஓடியது..
அவன் முதுமை அடைந்தான்..முன்னர் போல அவனால் நண்பர்களுக்கு உதவிட முடியவில்லை.அப்படியே அவன் உதவ எண்ணினாலும்..சந்தர்ப்பம், சூழ்நிலை அதற்கேற்ப அமையவில்லை.
அவன் இனி பயனற்றவன்..என அறிந்த உடன் இருந்த நண்பர்கள்..அவனை விட்டு விலகினர்..விலகியவரில் சிலர் அவனைத் தூற்றினர்..அவன் அவர்களுக்கு கொடுமை இழப்பதைப் போல பேச ஆரம்பித்தனர்.
ஆனால் அவனுடன் ,அவன் நிலை அறிந்து சிலர் இன்னமும் இருக்கின்றனர்..அவற்றில் ஒருவர்..
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைக் கூட நம் உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது...என்றார்.
துப்பாக்கி - எதிர்பார்ப்புகளே ஏமாற்றம் தருகின்றன....
இளையதளபதி விஜய்..மற்றும் முருகதாஸ் கூட்டணியில் தீபாவளிக்கு வந்துள்ள படம் துப்பாக்கி.
இப்படம் ஆரம்பித்த நாள் முதல்..வெளியாகும் நாள் வரை சந்தித்த சோதனைகள் எவ்வளவு?
படத்தலைப்பிற்காக இப்படம் பட்ட பாடு எவ்வளவு?
சென்சாரில் கூட ரீரிகார்டிங் சரியாக அமையாத அவசரத்தில்...தவணை கேட்டதாக வேறு செய்திகள் வந்தன.
படவெளியீடு தேதி வேறு..தள்ளிப் போனது.வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கு இதனால் நஷ்டம் என்று வேறு செய்தி.
இவ்வளவையும் மீறி..இந்தாண்டு பெரும் பொருள் செலவில் வெளியான..சகுனி,மாற்றான்,தாண்டவம்,பில்லா 2, ஆகிய படங்களும்
வசூலில் வெற்றி என்றாலும்..தோல்வி படங்களாக அமைந்தன.துப்பாக்கியும் அப்படித்தான் ஆகப்போகிறது என ரசிகர்களிடையே வதந்தி வேறு.
எல்லாவற்றையும் தாண்டி விஜய் வெற்றி பெற்றுள்ளார்..என வரும் ரிபோர்ட்டுகள் தெரிவிக்கின்றன.
இதற்குக் காரணம்..மற்ற படங்கள் எதிர்ப்பார்ப்பு இருந்தது..அதனால் ஏமாற்றம் ஏற்பட்டது.
அந்த ஏமாற்றம்..இந்த படத்திற்கான எதிர்ப்பார்ப்பை குறைத்தது.
அதுவே..இப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையானது எனலாம்.
வாழ்த்துகள் விஜய்.., முருகதாஸ்.
(டிஸ்கி- எச்சரிக்கை - படம் வியாழன் அன்று பார்க்கிறேன்...அதற்கு பின் என் விமரிசனம் )
Monday, November 12, 2012
தீபாவளி...
வெடித்துச் சிதறின
வெடிகளின் ஓசை
அதைவிட
அதைத் தயாரித்த
குட்டிக் கரங்களின்
விசும்பல் ஓசை
அதிகமாய்க் கேட்டது
செவியில்
Saturday, November 10, 2012
தீபாவளியும்..துப்பாக்கியும்...
அப்பா...துப்பாக்கி..என பேச்சை ஆரம்பித்தான் பையன்..
'துப்பாக்கியும் ஆச்சு...கிப்பாக்கியும் ஆச்சு..மனுஷன் கிடந்து அவதிப்படறான் தீபாவளிக்கு..இதுல இவனுக்குத் துப்பாக்கியாம்.'.அப்பா முணுமுணுத்தார்.
"குழந்தை என்ன கேட்டுட்டான்னு இப்படி எரிஞ்சு விழறீங்க..அவன் என்ன நிஜ துப்பாக்கியா கேட்கிறான்..கள்ளத் துப்பாக்கித்தானே..எவ்வளவு வருஷமா தீபாவளி கேப் வெடிக்க துப்பாக்கி கேட்டுட்டு இருக்கான்..நீங்களும் ஒவ்வொரு வருஷமும் அவனை டபாய்ச்சுனு தானே இருக்கீங்க' என்றாள் மனைவி.
'விவரம் புரியாம பேசாதே...தீபாவளிக்கு மாப்பிள்ளை வரேன்னு சொல்லி இருக்கார்.அவருக்கு துணி, வாட்ச் இதெல்லாம் வாங்கணுமேன்னு கவலைல நான் இருக்கேன்..இந்த சமயத்திலே என் கவலைத் தெரியாம...நீங்க வேற..'
'அடடே..உங்களுக்கு விவரம் தெரியாதா.9ஆம் தேதியே துப்பாக்கி படம் வரும்னு..மாப்பிள்ளை ரிசர்வ் பண்ணீருந்தாராம்.ஆனால் நாலு நாள் படம் தள்ளிப் போனதால...முதல் நாள் ரிசர்வ் பண்ணினவங்க டிக்கெட் எல்லாம்..படம் வெளிவரும் 13ஆம் தேதிக்கு மாற்றிக் கொடுத்துட்டாங்களாம்.அதனாலே..தீபாவளிக்கு வரமுடியாதுன்னு மாப்பிள்ளை சொல்லிட்டார்"
'அப்பாடா..படம் வெளிவர தாமதம் ஆனதுலே..யாருக்கு எவ்வளவு நஷ்டமானா என்ன...எனக்கு லாபம்.வாழ்க விஜய்.டேய்..கடைக்கு கிளம்பு..உனக்கு இந்த வருஷம் துப்பாக்கி நிச்சயம் வாங்கித் தரேன்'
Friday, November 9, 2012
இலவசம்..இலவசம்..தேவையா?
பக்கத்து வீட்டிற்கு வந்த செய்தித்தாளை இரவல் வாங்கி படிக்கும் போதுதான்..அந்த போட்டி பற்றிய அறிவிப்பை படித்தேன்.இலவசங்கள் தேவையா? என்ற தலைப்பிற்கு கட்டுரை எழுதச் சொல்லி இருந்தார்கள்.
அன்று ஞாயிற்றுக் கிழமை யாக வேறு இருந்ததால்..என்னை நண்பன் ஒருவன் சாப்பாட்டிற்கு அழைத்திருந்தான்..அவனுடன் சாப்பிட்டவாறே இப்போட்டியைப் பற்றிக் கூறினேன்.அவன் கண்டிப்பாகக் கலந்துக் கொள் என்றான்..அப்போதுதான் மேசையில் கிடந்த பேனாவைப் பார்த்தேன்.அதைக் கையில் எடுத்து அதையும், நண்பனையும் மாறி மாறி பார்த்தேன்.வேணுமானால் வைத்துக் கொள் என்றான்.பதிலுக்கு 'நன்றி' என்றவாறே என் சட்டையில் அப்பேனாவைக் குத்திக்கொண்டேன்.
அடுத்த நாள்..அலுவலகம் வந்ததும்..மேசையைத் திறந்து இரண்டு வெள்ளைத்தாள்களை எடுத்தேன்.
'இலவசம்' பற்றி என்ன எழுதுவது..என்று யோசித்த படியே..பக்கத்து மேசை ரகுவைப் பார்த்தேன். தன் வெற்றிலைப் பெட்டியைத் திறந்து ஆடாக மாறி இருந்தான்.அவனிடம் சென்று..இரண்டு வெற்றிலையையும்,சீவலையும் எடுத்து வாயில் போட்டு மென்றவாறே என் இருப்பிடம் வந்து கற்பனை ஆமையை (எவ்வளவுநாள் குதிரை என்று சொல்வது..மேலும்..எனது கற்பனை மெதுவாகவே வருவதால்..ஆமை என்பதே சரி) தட்டிவிட்டேன்.
பொங்கலுக்கு அரசு இலவசமாகத் தரும் வேஷ்டி..சட்டைப் பற்றி எழுதலாமா? இல்லை நண்பகல் இலவச உணவு பற்றி..வேண்டாம் ..வேண்டாம் ..அது குழந்தைகளுக்கு..அதில் கை வைக்க வேண்டாம்.இலவச சைக்கிள் ,இலவச டி.வி., இலவச நிலம் ..எதைப் பற்றி எழுதுவது?
ஆமை ஓட மறுத்தது..
அந்த சமயம் அலுவலகம் கொடுக்கும் இலவச தேநீர் வந்தது.அதைக் குடித்துவிட்டு..வெளியே வந்தேன்..வெளியே நண்பன் ஒருவன் புகைத்துக் கொண்டிருந்தான்.அவனிடம் ஒரு சிகரெட் ஓசி வாங்கினேன்..அவனே பற்றவும் வைத்தான்.சிறிது நேரம் அரட்டை அடித்தேன் அவனிடம்.திரும்ப மேசைக்கு வந்தேன்.
எண்ணம் இலவசம் பற்றியே இருந்ததால்..அலுவலக வேலை ஓட மறுத்தது..மதியம் ஒரு மணி..
பக்கத்து மேசை ரகு..சாப்பிடப் போகலாமா? என்றான்.உடன் தலையாட்டினேன்.ஏனெனில்..அவன் யாரிடமும் எதையும் இலவசமாக பெறமாட்டான்..நான் ஹி..ஹி..ஹி..
அதைத் தவிர ரகு..அவனோடு யார் வந்தாலும்..அவர்களுக்கு செலவு செய்வான்..(பிழைக்கத் தெரியாதவன்)
சாப்பிட்டுவிட்டு..வந்ததும் மேலதிகாரி கூப்பிட்டு வங்கிக்குச் சென்று..கவனிக்க வேண்டிய வேலைகள் சிலவற்றைச் சொன்னார்.'மிகவும் அவசரம்..வண்டியில் சென்று விடுங்கள்'என்றார்.
'சார்..நான் இன்று வண்டி கொண்டுவரவில்லை' என ஒரு சின்ன பொய்யைச் சொன்னேன்.'சரி..சரி..ஆட்டோவில் சென்று விடுங்கள்' என்றார்.அப்பாடா..நூறு ரூபாய் கிளைம் பண்ணலாம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.வங்கி வேலைகளை முடித்துவிட்டு..திரும்ப மணி நாலாகிவிட்டது.இனி எழுதினாற்போலத்தான்..என எண்ணிய போது..நண்பன் ஒருவன் தொலைபேசினான்.அன்று மாலை திரைப்படம் ஒன்றிற்கு இரண்டு டிக்கட் இருப்பதாகவும்..வருகிறாயா? என்றான்..
கரும்பு தின்னக் கூலியா? 'சரி' என்றேன்.அலுவலகம் விட்டு கிளம்பும் போது ஞாபகமாக வெள்ளைத்தாள்களை எடுத்துக் கொண்டேன்.
சினிமா..இரவு டின்னர் எல்லாம் நண்பன் செலவில் முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்ததும்..எழுதத் தொடங்கினேன்...
"ஏழைகளுக்கு..இலவசம்..இலவசம் என்று கொடுத்து அரசு அவர்களை சோம்பேறி ஆக்கிவிட்டது..' என ஆரம்பித்தேன்....
Subscribe to:
Posts (Atom)

