Thursday, April 30, 2009

தி.மு.க., தேர்தல் நடத்தை விதிமீறல்..???

நேற்று தமிழகத்து பேருந்து பயணிகளுக்கு ..பேருந்தில் ஏறியதும்..ஆச்சரியம் ஏற்பட்டது.பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டிருந்தது.

அதுவும்...சாதாரணமான குறைப்பு இல்லை...மிகவும் குறைப்பு.உதாரணமாக தாழ்தள பேருந்தில்...பாரிமுனையிலிருந்து...ஆவடிக்கு முன்னர் 13 ரூபாய் கட்டணம்...நேற்று முதல் அது 6 ரூபாயாகிவிட்டது.

தமிழகம் முழுதும் பேருந்துகளில் ஒரே சீரான கட்டணம் நேற்று முதல் அமுலுக்கு வந்தது.

முன்னர்..2 ரூபாய் கட்டணத்திற்கு..எல்.எஸ்.எஸ்.,எம் சர்வீஸ்,எக்ஸ்பிரஸ்,டீலக்ஸ்..ஆகியவற்றிற்கு முறையே 2.50.,3.,4., ரூபாய் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.இது மறைமுகமாக கூடுதல் கட்டணம் ஏற்றப்பட்டுள்ளதாக மக்களிடையே கருத்து நிலவி வந்தது.இந்நிலையில்..நேற்று முதல்...எல்லா பேருந்துகளிலும் சாதாரண கட்டணமே வசூலிக்கப்படுகிறது.ஏ.சி. பஸ் கட்டணத்தில் மாற்றமில்லை.

இது..மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆனால்..இந்நிலை எதுவரை நீடிக்கும்..என்ற ஐயமும் உள்ளது.

எதிர்க்கட்சிகள்..இது தேர்தலுக்காக..தி.மு.க., அரசின் செயல் என்று கூறினாலும்..மெட்ரோ நிர்வாகிகள்...நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயம் எனக் கூறுகின்றனர்.

ஆனால்...தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவோ..பஸ் கட்டணத்தைக் குறைத்தது..கண்டிப்பாக தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும்..இது விஷயமாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.

நவீன் சாவ்லா..இது விதிமீறல் அல்ல என சொல்வார் என எதிர்ப்பார்ப்போம்.

Wednesday, April 29, 2009

வாய் விட்டு சிரியுங்க...

1.அந்தக் கல்யாணத்தில அரை மணிக்கொரு முறை..இந்நிகழ்ச்சியை வழங்கியவர்னு விளம்பரம் பண்றாங்களே ஏன்?
பொண்ணோட அப்பா மெகாசீரியல் தயாரிப்பாளராம்...கல்யாணத்திற்கும் ஸ்பான்சர் வாங்கிட்டார்.

2.எதிர்க்கட்சித் தலைவர் நான் பயந்தவன் என்று நினைக்கிறார்.அவருக்கு ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்..மனசாட்சிக்குக்கூட பயப்படாதவன் நான்.

3.அவன் பண விஷயத்தில் ரொம்ப மோசம்..நேற்று கேட்டப்போது இன்னிக்கு தரேன்னு சொன்னான்.இன்னிக்குக் கேட்டா நாளைக்குத் தரேன்னு சொல்றான்..
அவன் உனக்கு ஏதாவது கடன் தரணுமா?
இல்லை...நான் தான் அவன் கிட்ட கடன் கேட்டிருக்கேன்.

4.மனைவி- வர வர டி.வி.யிலே நிகழ்ச்சிகள் பார்க்கணும்னா போரடிக்குது...உங்களுக்கு..?
கணவன்-உன்னைவிடவா எனக்கு டி.வி.,

5.அந்த ஜவுளிக்கடை முதலாளி..எந்தத் துணி வாங்கினாலும்...மீட்டர் என்ன விலைன்னு சொல்லிட்டு...மேல 5 ரூபாய் போட்டுக்கொடுங்கன்னு சொல்லுவார்
ஏன்?
இதுக்குமுன்னால ஆட்டோ டிரைவராய் இருந்தாராம்.

6.என்னோட பையனுக்கு எல்லா கேள்விக்கும்...விடை பாதிதான் தெரியும்..
எப்படி சொல்ற..
இந்தியாவிற்கு யார் சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததுன்னா..சோனியா காந்தின்னு சொல்லுவான்...கீதாஞ்சலி எழுதியது ஷர்மிளா தாகூர்ன்னு சொல்லுவான்.

7.மொக்கை,கவுஜ,சகா,மச்சி,ரிப்பீட்டேய்...இப்படியெல்லாம் என்னடா புதுசா பேச ஆரம்பிச்சிருக்கே?
தமிழ்ல பிளாக்ஸ்பாட் எழுத ஆரம்பித்திருக்கிறேனே

Monday, April 27, 2009

நாடக விழாவில் எஸ்.வி.சேகர் பேச்சு...

சென்னை கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் 20 ஆவது நாடகவிழா 22ஆம் தேதி நாரத கான சபா அரங்கில் நடந்தது.தொடர்ந்து 9 நாடகங்கள் 30ஆம் தேதி வரை நடைபெறும்.விழாவிற்கு நல்லி செட்டியாரும், கிருஷ்ணாஸ்வீட்ஸ் முரளியும் வந்திருந்தனர்.ஆரம்ப விழாவில் பேச சேகரை...மைலாப்பூர் எம்.எல்.ஏ., பேசுவார் என்றனர்.

உடன் வந்த சேகர்..'என் கட்சியே நான் ஒரு எம்.எல்.ஏ., என்பதை மறந்து விட்டது' என்றார்.

மேலும்..'எனக்கு பச்சை ஷால் போர்த்துவதா..அல்லது மஞ்சளா என விழாக்குழுவினர் யோசித்தனர்' என்றார்.தனது அரசியல் நிலைப்பாடு...தான் எந்த கட்சியில் இருக்கப்போகிறேன் என்பதை மே 15ஆம் தேதிக்குபின் அறிவிப்பதாகக் கூறினார்..அனைவரையும்...தேர்தல் நாளன்று ஓட்டு போட்டு விடுங்கள் என்றார்.

விழாவில் முதல் நாடகமாக என் எண்ணம்,எழுத்து,இயக்கத்தில் 'பத்ம வியூகம்' என்ற நாடகம் நடந்தது.

Sunday, April 26, 2009

கலைஞருக்கு ஏன் ஓட்டு போட வேண்டும்...

இந்த என் பதிவிற்கு...பல கண்டன பின்னூட்டங்கள் வரலாம்.ஆனாலும்...சற்று ஆற அமர சிந்தித்தால் தெளிவு கிடைக்கும்.

ஒரு அரசை...அதுவும்...மாநில அரசை..ஆளும் கட்சி..அம்மாநில மக்களுக்கு ஆற்றும் தொண்டை வைத்தே அடுத்த தேர்தலில் அது வெற்றி பெறும் வாய்ப்பை பெறுகிறது என்பது பொதுவான கருத்து எனலாம்.

ஆனால்...நம் ஜனநாயகத்தில்...இப்போ எல்லாம்..வலுவான கூட்டணி எந்த கட்சி அமைக்கிறதோ அதுவே...வெற்றி பெறும் நிலை உள்ளது.இல்லாவிடின்..1996-01 வரையிலான கலைஞர் ஆட்சி திறமையான ஆட்சி...திறமையாக செயல் பட்ட ஆட்சி.அதனாலேயே..2001 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறலாம்..என்று நினைத்த அரசியல் சாணக்கியன் கலைஞர் தப்புகணக்கு போட்டார். ஜெ வோ மற்ற கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைத்து 2001 தேர்தலில் வெற்றி பெற்றார்.

அப்போதுதான்..இதை உணர்ந்துக் கொண்ட கலைஞர்..2004,(நாடாளுமன்ற தேர்தல்)2006 தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தார்.வெற்றி பெற்றார்.2006 தேர்தலில் விஜய்காந்த் ஓட்டுகளை பிரித்ததாலும்..பெரும்பான்மையான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதாலும்...கலைஞர் அரசு...அறுதி பெரும்பான்மை பெறாவிடினும் , அதிக இடங்களை பெற்ற கட்சி என்பதால்..ஆட்சி அமைத்தது.

இன்று..பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகியதால்...தமிழகத்தில் அவர் ஆட்சி நீடிக்க காங்கிரஸ் தயவு கண்டிப்பாக தேவையானது.

மேலும்..இப்போது அணியில் காங்கிரஸ் மட்டுமே பிரதானக் கட்சி.காங்கிரஸை விரோதித்துக் கொண்டால்...கலைஞர் ஆட்சி இழக்க நேரிடும்.அதனாலேயே..இலங்கை பிரச்னையில்..கலைஞரால் தனிப்பட்டு எம் முடிவும் எடுக்கமுடியவில்லை.

சரி..இதெல்லாம்...தெரிந்ததுதானே என்கிறீர்களா? விஷயத்திற்கு வருகிறேன்...

நம் மக்கள் ..தேர்தல் என்று வரும்போது...கடந்த வருஷங்களில் ஆட்சி செய்தவர்களின் திறமையை நினைப்பதில்லை..அன்றைய பிரச்னையை மட்டுமே நினைக்கின்றனர்.

இலங்கை பிரச்னையால்...கலைஞருக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறமுடியா விடின்....தேர்தலுக்குப்பின் ஆட்சி கவிழ..வாய்ப்புள்ளது.பின் ஆட்சிக்கு வரும் கட்சியும்..இதே காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும்..இதையெல்லாம் கணக்குப் போட்டே..கலைஞர் காங்கிரஸை விட்டு வெளியே வர நினைக்கவில்லை.

இந்நிலையில்...கலைஞர் எதிர்ப்பு பதிவுகள் பல நான் இட்டிருந்தாலும்...அவர் ஆட்சிதான் தமிழகத்திற்கு இப்போது தேவை.அதற்காக தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு ஓட்டளிப்போம்.இலங்கை தமிழர் பிரச்னையில்..மெத்தனம் காட்டும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை தோற்கடிப்போம்.

நம் எதிர்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு தெரிவிப்போம்.

FLASH NEWS:விடுதலைப் புலிகள் போர்நிறுத்தம் அறிவித்தும்...இலங்கை அரசு அதற்கு தயாராய் இல்லாததால்...உடன் போர் நிறுத்தம் கோரி..கலைஞர் இன்று திடீர் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்.

Saturday, April 25, 2009

தேர்தல் சிப்ஸ்...

ஜெ யின் உடன் பிறவா சகோதரி சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டில்...நேற்று போலீஸார் திடீர் சோதனை நடத்தினார்கள்.இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும்...காங்கிரஸிற்கு ஓட்டளிக்கக்கூடாது
என்றும் பெரியார் தி.க.வினர் சி.டி.க்களை வினியோகிக்கின்றனர். அதை தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் போலீஸில் புகார் செய்யப்பட்டது.அதனால்..விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்
வீடுகளில் சோதனை செய்யப்பட்டது.நடராஜனின் வீட்டிலும் நடந்ததாம்.

2.இலங்கை பிரச்னை காரணமாக..தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புவதாக பாரதிராஜா கூறினார்.அதுபற்றி கேட்டபோது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...'அவர் யார் என சொல்லுங்கள்.ஒருகாலத்தில் இயக்குனராக இருந்தார்..அவ்வளவுதான்...' என்றார்.(நீங்கள் யார் என கேட்கும் காலம் வந்துவிட்டது)

3.இரண்டு மாதங்களாக சிறையில் இருந்த சீமானை...தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை சென்னை உயர் நீதி மன்றம்..ரத்து செய்ததால்..சீமான் நாளை விடுதலை செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

4.பா.ம.க., போட்டியிடும் ஏழு தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறக்கூடாது என கலைஞர்..அமைச்சர்களுக்கு..கட்டளை இட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

5.ராமதாஸ் தனியே வந்து தனி அணி அமைத்தால் ..தான் அவர் பின்னால் வரத்தயார் என திருமா தெரிவித்துள்ளார்.

6.டி.ஆர்.பாலுவை ஆதரித்து பேசிய வாசன்..'டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டால்...தொகுதி வளர்ச்சி பெறும் (??!!)...ஒட்டு மொத்த இந்தியாவே வளர்ச்சி பெறும் என்றார்.தேர்தலுக்கு தேர்தல் பச்சோந்தியாய் அணி மாறும் பா.ம.க., விற்கு பாடம் புகட்டுங்கள்..என்றார்.(முன்னர் மூப்பனார் கலைஞருடன் கூட்டணி,பின் ஜெ யுடன் கூட்டணி..அதனால் ப.சி., விலகல்...இதை எல்லாம் வாசன் மறந்திருப்பாறோ?!)

7.கடைசி நேரம் வரை பதவி சுகத்தை அனுபவித்து விட்டு...அணி மாறுபவர்களை தேர்தலில் தண்டியுங்கள் என்கிறார் தயாநிடி மாறன்...(குடும்பத்திற்குள் சமரசம் ஏற்படாவிட்டால்...இவர் என்ன செய்திருப்பார்?!)

Friday, April 24, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(24-4-09)

பேராசிரியர் ஆல்பர்ட் ஈன்ஸ்டீனிடம் 'வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி' ன்னு கேட்ட போது..அவர் கொடுத்த கணித சூத்திரம் A=X+Y+Z

A என்பது வாழ்க்கையில் வெற்றி
X என்பது கடின உழைப்பு
Y என்பது ஆரோக்யமான விளையாட்டு
Z என்பது என்ன தெரியுமா...
அதிகம் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருப்பது.

2.கால் தடுமாறினால் சமாளித்துக் கொண்டு விடலாம்.ஆனால் நாக்கு தவறினால் மீளவே முடியாது.

3.உடல் பருமனாய் இருப்பவர் இதயம் எவ்வளவு கஷ்டப்படுகிறது தெரியுமா? அநாவசியமாக அவர்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு பவுண்ட் சதைக்கும் ..அவர்கள் இதயம் 3 மைல் நீளமுள்ள இரத்தக் குழாய்களுக்கு இரத்தத்தை பாய்ச்ச வேண்டியிருக்கிறது. அதனால்தானோ என்னவோ பருமனாக உள்ளவர்களுக்கு அதிகமாக இதய நோய் வருகிறது.

4.நாம் சாதாரணமாக பேசும் வேகம் நிமிடத்திற்கு 125 வார்த்தைகள்.ஆனால் நாம் நினைக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 வார்த்தைகள்.அதாவது...நாம் பேசுவதைவிட நான்கு மடங்கு சிந்திக்கிறோம்.'வள வள' என பேசி நம்மை போரடிக்கும் நபர்...சிந்திக்கும் வேகத்தில் பேசவும் முடிந்தால்...நினைக்கவே பயமாய் இல்லை...

5.நாளும் பிரியாணி
நங்கைக்கு மூக்கூத்தி
சாராயத்திற்கு பணம்
ஏழை எதிர்ப்பார்க்கிறான்
மே 13வரை வரவை!!

6.தலைவா...புதுசா ஒரு லட்சம் பேரை சேர்த்துட்டோம்..வாக்காளர் பட்டியல்லே...ஆனா நீங்க 3 1/2 லட்சம் வித்தியாசத்திலே ஜெயிப்பேன்னு சொன்னீங்களே எப்படி...
அன்னிக்கு ஊருக்கு வரப்போகும் விருந்தாளிகளை வைச்சுதான்.

Thursday, April 23, 2009

பாவம்...பாவம்...பரிதாபம்...வைகோ..


வைகோ...என்னைப்போன்ற பலரால் ரசிக்கப்பட்ட அரசியல்வாதி...

கலைஞரைத் தவிர்த்து...குமரி அனந்தன், வைகோ பேச்சுக்களால் கவரப்பட்டவன் நான்.

தி.மு.க.,வில் இருந்த போது தன்மானம் பாதிக்கப்பட்டதாலும்...கொலைபழிச்சொல் சொன்னதாலும்..வெளியே வந்து மறுமலர்ச்சி கழகத்தை ஆரம்பித்தபோது...மறுபடியும்..அவர் அரசியல் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என எண்ணியவன் நான்.ஆரம்பகாலங்களில் அதற்கான சத்தியகூறுகள் இருந்தன.ஆனால்..மீண்டும்..தன்னை பழி சொல்லி அனுப்பிய தி.மு.க., வுடன் ஒரு சில இடங்களுக்காக கூட்டு வைத்த போது...சற்று தரம் தாழ்ந்தாலும்...ஏற்கனவே இருந்த கட்சியுடன் கூட்டு வைக்கிறார்...மறப்போம்..மன்னிப்போம்...பாணியில் என்றே எண்ணினோம்.

ஆனால்..அடுத்து வந்த தேர்தலில்...ஒரு சில இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்றதும்...தன்னை பொடா..வில் தள்ளிய வரலாற்றை மறந்து ஜெ யுடன் கூட்டணி வைத்தார்.

அவரின் இன்றைய நிலை...

நேற்று ஜெ வைகோவிற்கு..ஆதரவாக சிவகாசி அருகே ஒரு கூட்டத்தில் பேசினார்...அப்போது வேட்பாளர் வைகோவை அறிமுகப்படுத்தினார்.ஒரு கட்சியின் தலைவர் ...அறிமுகப்படுத்தப்படுகிறார்.
அந்த புகைப்படத்தைப் பாருங்கள்.அதற்குமேல் எழுத்துக்களால் சொல்லமுடியப் போவதில்லை.

(இதே வைகோ..மனுதாக்கல் செய்தபோது...அதிகாரி உட்கார்ந்து மனுவை பெற்றுக்கொண்டார் என்பதற்காக...நின்று வாங்கமுடியாதா? என்று கேட்டார்.உட்கார்ந்து வாங்கினால் தனக்கு அவமானம்
என்ற ரீதியில்.)

Wednesday, April 22, 2009

சரத்பாபுவிற்கு நீங்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது...

கடந்த சிலநாட்களாக சரத்பாபு என்ற பெயர் அடிக்கடி பதிவுகளில் காணமுடிகிறது.அவர் I.I.M.,ல் M.B.A.,படித்த இளைஞர் ..இட்லிக்கடைவைத்து அனேகருக்கு வேலை கொடுத்துள்ளவர் என்றெல்லாம் எழுதுகிறார்கள்.

இப்படி எழுதுவதையே கண்டிக்கிறேன்...ஐ.ஐ.எம்.,ல் அட்மிஷன் கிடைக்க எவ்வளவு கடுமையான போட்டி நிலவுகிறது...ஒரு பட்டதாரியை உருவாக்க அரசு பணம் லட்சக்கணக்கில் செலவாகிறது.அப்படி அரசு பணத்தில் படித்தவர்...(அம்மா கஷ்டப்பட்டு இட்லி விற்று படிக்கவைத்திருந்தாலும்)..ஒரு சிறந்த துறையில் ஈடுபட்டு...இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தன் பங்கிற்கு ஏதேனும் செய்திருக்கலாம்.இட்லி வியாபாரம் செய்து தொழிலதிபர் ஆக இப்படிப்பை பயன்படுத்தி இருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.முருகன் இட்லி கடை அதிபர் ஐ.ஐ.எம்.படிக்காமலேயே அனேகருக்கு வேலை கொடுத்துள்ளார்.

சரி...அதுதான் போகட்டும்..என்றால்..எம்.பி., தேர்தலில் நிற்கிறாராம்..சுயேச்சையாக.கண்டிப்பாக வெற்றி அடைய முடியாது எனத் தெரியும்..இருந்தும் ஏன் நிற்கிறார்...இவருக்கும் அரசியல் ஆசை வந்து விட்டது எனலாம்.மக்களுக்கு சேவை செய்ய..அரசியலில் தான் ஈடுபட வேண்டும் என்று இல்லை.சமுதாயத்தில் பின் தங்கியவர்கள்..ஆதரவற்றோர் ஆகியவருக்கு இவர் தன்னால் முடிந்தவிதத்தில் உதவலாம்.ஒரு ராஜாராம்,ஒரு வித்யாகர் ஆக ஆகலாம்...அதைவிட்டு..ஒரு பாலு ஆக ஆசைப்படுவது...இப்போது...இவ்வயதில்...இவருக்கு தேவையில்லை.மலிவான விளம்பரத்திற்கு ஆசைப்படுகிறாரோ?

அப்படியே ஆசை இருக்குமானால்...ஒரு கட்சியில் சேரட்டும்...அடுத்து வரும் தேர்தல்களில் முயலட்டும்...

சுயேச்சைகள் வெற்றிபெரும் வாய்ப்பு இந்தியாவில் இல்லை.அப்படி வெற்றி பெறுவதானால்...எம்.எஸ்.உதயமூர்த்தி வெற்றி பெற்றிருப்பார்.ஜெயகாந்தன் வெற்றி பெற்றிருப்பார்.எஸ்.வி.,சேகர் அவருக்கு பழக்கமான...கிட்டத்தட்ட அனைவரையும் அறிந்த மைலாப்பூர் சட்டமன்ற தொகுதியிலேயே சுயேச்சையாக 1500 ஓட்டுகளே வாங்க முடிந்தது.சுயேச்சையாக வெற்றி பெற தாமரைக்கனியா இவர்?

ஆகவே...நண்பர் சரத்பாபு அவர்களுக்கு...அரசியல் ஆசை இவ்வளவு சீக்கிரம் வந்திருக்க வேண்டிய தேவையில்லை.

உங்கள் ஓட்டு வீணாகவேண்டுமானால்..அவருக்கு ஓட்டளியுங்கள்.

காங்கிரசிற்கு எதிராக ரஜினி ??

அரசியல் கட்சிகளே இதுவரை கிளப்பாத முழக்கத்தோடு ஈழப் போராட்டத்தில் ‘ரீ என்ட்ரி’ ஆகியிருக்கிறது தமிழ்த் திரையுலகம்.
”இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் போரை நடத்திவரும் சோனியாவை தமிழகத் துக்குள் விடமாட்டோம்!” என்பதுதான் தமிழ்த் திரையுலகத்தின் தடதட முழக்கம்.
ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் அமைப்பினரைச் சந்திக்க இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்றனர் திரைத்துறை பிரமுகர்கள். அங்கேயே மைக் பிடித்து மத்திய அரசுக்கு எதிராகவும், குறிப்பாக சோனியாவுக்கு எதிராகவும் கொந்தளிக்கத் தொடங்கி விட்டார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட, சினிமாத் துறையின் முக்கிய ஆட்கள் பலருக்கும் ஈழத் துயரங்களின் படங்களும் செய்திகளும் மெயிலில் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால்தான் இயக்குநர் பாரதிராஜாவோடு உணர்வாளர்கள் பலரும் கலந்து பேசி, காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் திரையுலகத்தினர் தீவிரப் பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளோம்.
சோனியா தேர்தல் பிரசாரத்துக்காகத் தமிழகம் வரும் பட்சத்தில், எங்கள் எதிர்ப்பைக் கடுமையாக காட்டுவோம். அங்கே தமிழர்களையும், இங்கே தமிழர்களின் உணர்வுகளையும் கொன்றுவிட்டு, தமிழகத்துக்கு சோனியா வரக் கூடாது!” என்றவர்கள் தொடர்ந்தனர்.
”கட்சி சார்பான திரைப் புள்ளிகள் மூலமாக எங்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளும் நடந்தது. அதை முறியடிக்கத்தான் ‘தமிழ்த் திரையுலக தமிழ் ஈழ ஆதரவு உணர்வுக் குழு’ என்ற பெயரில் தனி அமைப்பு தொடங்கியிருக்கிறோம். அதன் சார்பாக காங்கிரசுக்கு எதிராக இயக்குநர்கள் அமீர், சீமான் இருவரையும் தேர்தலில் போட்டியிட வைக்கவும் முடிவெடுத்திருக்கிறோம்.
ஈழப் போரைக் கண்டித்து நடந்த உண்ணாவிரதத்தில், ராஜபக்ஷேவுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த், எங்களுக்கு மிகப் பெரிய சக்தி.
பாரதிராஜா, சத்யராஜ், அமீர் போன்றோரின் வேண்டுகோளை ஏற்று, ரஜினிகாந்த்தும் காங்கிரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்ள சம்மதித்திருக்கிறார்.
அதோடு, உண்ணாவிரதப் போராட்டத்தின்போது ரஜினி பேசிய பேச்சை கேஸட்டுகளாகப் போட்டு, எங்கள் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவோம்.
பெங்களூருவில் இருக்கும் ரஜினி மன்றங்கள் எல்லாம் ஈழ விவகாரத்தைக் கையில் எடுத்துப் போராடிக் கொண்டிருக்க, இங்கேயுள்ள ரஜினி மன்றங்களும், விஜய், அஜீத் போன்ற மற்ற நடிகர்களின் மன்றங்களும் எங்கள் போராட்டத்தில் இணைந்துகொள்ளும் என நம்புகிறோம்.
அஜீத்கூட தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஈழத் தமிழர் விவகாரத்துக்காக ரத்து செய் திருக்கிறார்!” என்றனர்.
இயக்குநர்கள் இப்படிப் போராட… உதவி இயக்குநர்களும், ‘தமிழ் ஈழ ஆதரவு உதவி இயக்குநர்கள் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளுக்கும் போய்… காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனராம்.

சாவின் விளிம்பில் நிற்கும் தமிழினத்துக்கு இப்போதுகூட உதவ முன்வராமல், காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்தால்… அதற்கான விளைவுகளை அவர்கள் இந்தத் தேர்தலில் அனுபவித்தே தீருவார்கள்.
பிரசாரம், போட்டி குறித்தெல்லாம் இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது. தமிழ்த் திரையுலக தமிழீழ ஆதரவு உணர்வுக் குழு என்ன முடிவெடுத்தாலும் சரி, அதற்கு நானும் சீமானும் கட்டுப்படுவோம்!” என்றார்.
திரையுலக எதிர்ப்பு குறித்து தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்க பாலுவிடம் கேட்டோம். ”காங்கிரஸின் எத்தகைய முடிவையும் மேலிடத்திடம் கலந்து பேசித்தான் சொல்ல முடியும்!” என்றார் வழக்கமான காங்கிரஸ்குரலில்.
இதற்கிடையில் பி.ஜே.பி. தரப்பில் ரஜினியைத் தொடர்புகொண்ட சிலர், ‘ஈழ விவகாரத்தைக் கையில் எடுத்து காங்கிரஸை வீழ்த்துங்கள்!’ என சைலன்ட் அசைன்மென்ட் கொடுத்திருப்பதாகக் கிளம்பி இருக்கும் பேச்சும் காங்கிரஸை காய்ச்சலில் ஆழ்த்தி இருக்கிறது!

(எனக்கு வந்த மின்னஞ்சல் )

Tuesday, April 21, 2009

பூனைக்கும் தோழன்..பாலுக்கும் காவலா கலைஞர்?

இலங்கை தமிழருக்காக நான் குரல் கொடுப்பதை நாடகம் என்றும்..மோசடி என்றும்...விமரிசனம் செய்வதை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.

மத்திய அரசை நான் வலியுறுத்தவில்லையா?

கடிதம் எழுதவில்லையா?

பிரதமரை சந்திக்கவில்லையா?

சோனியாவை பார்க்கவில்லையா?

பிரணாப்முகர்ஜியை சென்னைக்கு வரச்செய்து பேசவில்லையா?

ப.சிதம்பரத்திடம் விவாதிக்கவில்லையா?

தந்திகள் கொடுக்கவில்லையா?

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தவில்லையா?

மனித சங்கலி நடத்தவில்லையா?

நீதி அரசர்கள் கொண்ட குழுவை..தில்லிக்கு அனுப்பி குடியரசு தலைவர், சோனியா ஆகியோருடன் பேசச் செய்யவில்லையா?

என்ன செய்யவில்லை? இவ்வளவு செய்தும் ..அரசியலுக்காக நான் நாடகம் ஆடுகிறேன் என இவர்கள் கூறலாமா?

(சமீபத்தில் நடந்த பேரணி...நாளைக்கு நடக்க இருக்கும்..பொது வேலைநிறுத்தம்..இதை சொல்ல ஏன் மறந்தார்?)

கூறுபவர்கள் கூறட்டும்...கூர்த்த மதி படைத்தோர்க்கு..உண்மை புரியும் ...என...இலங்கை தமிழர் பிரச்னைக்காக கண்ணிர் வடிக்கும் கலைஞர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்...மத்திய அரசைப் பொறுத்தவரை இது இன்னொரு நாட்டு பிரச்னை.மிகுந்த எச்சரிக்கையுடனும்..கவனத்தோடும் அணுகிட வேண்டிய பிரச்னை..என்றும் கூறியுள்ளார்.

Monday, April 20, 2009

மாறன் துதி பாடும் ஆற்காட்டார்...

இந்தியா முழுதும் ஒரு ரூபாயில் ஃபோனில் பேச வசதி செய்தவர் தயாநிதி மாறன் என மாறன் புகழ் பாடுகிறார் வீராசாமி.

அவருக்கும்...மாறன் பிரதர்ஸிற்கும் ஏழாம் பொருத்தம் என நாம் அறிவோம்.கலைஞருடன் மாறனை ஒட்டவிடாமல் தடுத்ததில் அவருக்கும் பங்கு உண்டு.

இந்நிலையில்...நேற்று அண்ணாநகரில் தேர்தல் அலுவலகம் திறந்த ஆற்காட்டார் பேசுகையில்...'தகவல் தொடர்புத்துறைக்கு எத்தனையோ அமைச்சர்கள் இருந்திருக்கின்றனர்.ஆனால் அனைத்திலும் முதன்மையாக திகழ்ந்தவர் மாறன்.அவரது திறமையால் இப்பொது 40 கோடி பேர் செல்ஃபோன் வைத்திருக்கிறார்கள்.கிராமங்கள்தோறும் டெலிஃபோன் வசதி உள்ளது..என மாறன் புகழ் பாடினார்...

இதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ஏன் கீழ்க்கண்டவற்றை கேட்கவில்லை...

அவர் திறமையானவர் என தெரிந்தும்...அவர் பதவியை ஏன் பறித்தீர்கள்?

தினகரன் சர்வேயாலா...அப்படியெனில்...திறமையைவிட குடும்ப நலன் முக்கியமா?

அவர் தி.மு.க.வில் இருந்தபோதே...அவரை விலக்கிவிட்டு அவரைவிட திறமை குறைந்த (??!!)வரை அவர் பதவிக்கு ஏன் நியமிக்க வேண்டும்..

திறமையானவர்களுக்கு...மக்களுக்கு நன்மை செய்தவர்க்கு...இப்படிப்பட்ட பரிசைதான் கட்சி வழங்குமா?

இல்லை...ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு துணைபோக மாறன் மறுத்தாரா?

குடும்ப சர்ச்சை தீர்ந்ததும்தான்...மீண்டும் திறமை கண்களில் பட்டதா?

இப்பதிவு திரித்துக் கூறப்பட்டது என சொல்லமுடியாது என எண்ணுகிறேன்.

கருணாநிதியின் பல்டி...

என்டிடிவிக்கு கலைஞர் பேட்டி கொடுத்துவிட்டு...பின்னர்...அவர் பேட்டி திரித்துக் கூறப்பட்டது..என்று பல்டி அடித்தாரே அதைப்பற்றிய பதிவு அல்ல இது.உடன் NDTV யே..தி.மு.க.விற்கு எதிரானது என்றும் கூறினார்.அப்படியென்றால் அவர் ஏன் பேட்டி கொடுக்க வேண்டும்.

இருப்பினும்..அப்பேட்டி பற்றி..எனது சிறு கருத்து...பேட்டியாளர் தமிழில் கேள்வி கேட்டிருக்கலாம்.அவர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்கப்போக..கலைஞரும் ஆர்வத்தில்..ஒரிரெண்டு ஆங்கிலத்தில் பேசினார்.பின் கேள்வியை சரியாக புரிந்துக்கொள்ளாமல் பதிலளித்து ம் விட்டார் என்றே எண்ணுகிறேன்..ஏனெனில்..கனிமொழியின் முகத்தில் அப்போது கவலை ரேகைகள் படிந்ததைப் பார்க்கமுடிகிறது.உடன் பேரன் இருந்திருந்தால்,
வயதான காலத்தில் பல்டி அடிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்றே எண்ணுகிறேன்.

சரி..தலைப்புக்கு வருவோம்...

ஆரம்பத்திலிருந்தே..வெற்றி நமதே...40ம் நமதே என்றவர்..இப்போது 30 இடங்களில் நாங்கள் வெல்வோம்..என்கிறார்.சுருதி சற்று குறைந்து விட்டது.

மேலும் ..கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பதுபோல...காங்கிரஸ்காரர்களுக்கு செல்லும் இடமெல்லாம்...எதிர்ப்பு வலுக்கிறது.

இனிவரும் காலங்களில் கலைஞர் மீண்டும் ஒரு பல்டி அடித்து..தன் வேட்பாளர்களைப்பற்றி மட்டுமே கவலைப்பட ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது.

Sunday, April 19, 2009

ஒற்றுமையாய் இருங்கள்..காங்கிரஸிற்கு தி.மு.க.அமைச்சர் அறிவுரை..

தமிழக காங்கிரஸ் தலைவரும்...சேலம் நாடாளுமன்றத்திற்கான வேட்பாளருமான தங்கபாலு நேற்று சேலத்தில்...கூட்டணி கட்சி உறுப்பினர்கள்...மற்றும் கட்சி ஊழியர்களுடன் பேசினார்.

அப்போது காங்கிரஸ் ஊழியர்கள் அவரை பேசவிடாது தடுத்தனர்.அவருக்கு எதிராக கோஷங்கள் போட்டனர்.

கூட்டத்திற்கு...தி.மு.க., அமைச்சரும், சேலம் மாவட்ட தி.மு.க., தலைவருமான வீரபாண்டி ஆறுமுகம் வந்திருந்தார்.நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைக் கண்ட அவர்...'இது தனிப்பட்ட மனிதருக்கான எதிர்ப்பை காட்டும் நேரமில்லை என்றும்..அனைவரும் தங்கபாலு வெற்றிக்கு பாடுபடவேண்டும்'என்றும் கூறினார்.

காங்கிரஸ் ஊழியர்களை சமாதானப் படுத்திய அவர்...மேலும் கூறுகையில்..'வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை..யார் வேட்பாளராயிருந்தாலும்..அவர் சோனியா காந்தியால் நியமிக்கப்பட்டவர்.அவர் வெற்றிக்கு நாம் பாடுபட வேண்டும்.காங்கிரஸ்காரர்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும்.அதுதான் முதலில் அவசியம்...அப்போதுதான்...நம்முடன் 5 ஆண்டுகள் இருந்து பதவி அனுபவித்துப் போனவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும்' என்றார்.

ஒரு மாநில தேசிய கட்சியின் தலைவரால்..தன் கட்சி ஊழியர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை...வேறு கூட்டணிக் கட்சி தலைவரால்தான் அது முடிகிறது..என்றால்...ஒரு திறமையற்றவரை தலைவராக்கியது யார் குற்றம்.

காங்கிரஸின் முதல் தோல்வி சேலத்தில் ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

Friday, April 17, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 8

1961ல் வந்த படங்கள்
பாவமன்னிப்பு
புனர்ஜென்மம்
பாசமலர்
எல்லாம் உனக்காக
ஸ்ரீவள்ளி
மருத நாட்டு வீரன்
பாலும் பழமும்
கப்பலோட்டிய தமிழன்

சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமின்றி...தமிழ்த் திரை உலகிற்கே மறக்க முடியா ஆண்டு. சிவாஜியின் அமர காவியங்கள் வெளியான ஆண்டு.

பாவமன்னிப்பு...சிவாஜி..பீம்சிங் கூட்டணி...ஜெமினி, சாவித்திரி,தேவிகா,ராதா..என நட்சத்திர கூட்டம்.தவிர அனைத்து பாடல்கலும் தேன்.விஸ்வனாதன்-ராமமூர்த்தி இசை.முதன்முறையாக இசைத்தட்டுகள் அதிக அளவில் விற்கப்பட்டது..இந்த படத்திற்குத்தான்.சாந்தி திரை அரங்கில் வெள்ளிவிழா கொண்டாட்டம்.தேசிய அளவில் இரண்டாம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெள்ளிபதக்கம் பரிசு பெற்ற படம்.

பாசமலர்...அண்ணன் தங்கை பாசம்...இன்று பாசத்துடன் இருக்கும் அண்ணன்-தங்கைகளைப் பார்த்து அவர்கள் பாசமலர்கள்..என்று சொல்லும் அளவு அனைவரையும் பாதித்த படம்.அருமையான பாடல்கள்..வெள்ளிவிழா படம்.தமிழின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படம்.சாவித்திரி...சிவாஜி..இருவரும் நடிக்கவில்லை...பாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள்.

பாலும் பழமும்...சரோஜாதேவியுடன் நடிகர்திலகம்..நல்ல பாடல்கள்..திறமையான நடிப்பு..ஆகியவற்றிற்காக 100 நாட்கள் ஓடிய வெற்றி படம்.

கப்பலோட்டியதமிழன்....படம் பார்த்த வா.உ.சி., குடும்பமே சிவாஜி அந்த பாத்திரத்தில்..வா.உ.சி., போலவே இருந்ததாக பாராட்டினர்.படம் ஆனால் உழைப்பிற்கேற்ற பலன் தரவில்லை.தோல்வி. ஆனாலும்..தேசிய அளவில் தேசிய ஒற்றுமைக்கான பட விருது பெற்றது.

மற்றபடி...ஸ்ரீதரின் புனர்ஜென்மம்,எல்லாம் உனக்காக,ஸ்ரீவள்ளி, மருதநாட்டுவீரன் ஆகியவை எண்ணிக்கையை மட்டுமே அதிகரித்தன.

இந்த ஆண்டு..கடந்த இரு வருடங்களில் 5 வெள்ளிவிழா படத்தைக் கொடுத்த சிவாஜி ஆண்டு
கட்டபொம்மன்,பாகப்பிரிவினை,இரும்புத்திரை,பாவமன்னிப்பு,பாசமலர்.
சிவாஜி படத்திற்கே 3 தேசிய விருதுகள் கிடைத்த ஆண்டு.

1962 படங்கள் அடுத்த பதிவில்.

Thursday, April 16, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (17-4-09)

1.தமிழ்மீது பற்றுக்கொண்ட சூரிய நாராயண சாஸ்திரியார் தன் பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டார்.அவர் ஒரு நாள் இலக்கணப்பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.அப்போது ஒரு மாணவன் எழுந்து 'ஐயா..நீங்கள் நடத்திய பாடத்தில் சீர் புரிகிறது.தளை புரிகிறது..தொடை புரிகிறது...அதற்கு மேல் ஒன்றும் புரியவில்லை...அதை சற்று விளக்கமாகக் கூறுங்கள் என்றான்.
அவனது கிண்டலைப் புரிந்துக் கொண்ட ஆசிரியர் 'தனியே என் அறைக்கு வா...விளக்குமாற்றால் விளக்குகிறேன்' என்றார்.வகுப்பு முழுதும் சிரித்தது.மாணவன் வெட்கி தலை குனிந்தான்.
(விளக்குமாற்றால்..இரு பொருள்..ஒன்று..துடைப்பத்தால்..மற்றும் ஒன்று..விளக்குமாற்றால்...விளக்கும் வழியில்)

2.ஆறறிவு என்கிறோமே..அப்படி என்றால்? உடல்,நாக்கு,மூக்கு,கண்,காது,இதயம் ஆகியவற்றால் அறிவதே ஆகும்.இது மனிதர்களுக்கு சரிதானே.

3.அம்மாவோ..அப்பாவோ..கட்டுப்பாடு என்ற பெயரில்..தங்கள் குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள்.பெற்றோரை எதிர்த்து..பதில் தாக்குதல் நடத்த முடியாத குழந்தைகள் மனதில் ஆற்றாமை இருந்துக்கொண்டே இருக்கும்.அதனால் பெற்றோரை பழி வாங்குகிறேன் என நமக்கு விருப்பமில்லா காரியங்களை செய்துக்கொண்டிருப்பார்கள்.இப்படிப்பட்ட குழந்தைகள் வளர்ந்த பின்னும்..சட்டத்துக்கு புறம்பான காரியங்களை சர்வசாதாரணமாக செய்வார்கள்.

4.ஒரு கட்சியினுடைய வலிமை..அதனுடைய சுய பலத்தில் இல்லை.,அந்தக் கட்சியை எதிர்க்கிற எதிர்க்கட்சிகளின் வலிமையில்தான் இருக்கிறது. _ அண்ணா

5.எப்போதும் விருப்பத்திற்குரியதாக இருப்பது சமயத்தில் அதிக பட்ச வெறுப்புக்கு உள்ளாகும்.

6.தேர்தல் நடக்கிறது
நாடெங்கும் நடக்கிறது
பணபரிமாற்றங்கள்
கறுப்பு வெள்ளையாகிறது
களங்கமில்லா காந்தியின்
சிரிப்புடன்.

7.தலைவா...நம்ம கட்சியில கேடிகள் அதிகமாயிட்டாங்க..
அதனால் என்னா..அவர்களுக்கும் சில கோடிகளை தள்ளிவிடுவோம்.

அம்மன் துதி பாடும் மருத்துவர் அய்யா...

நேற்று சென்னையில் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம் செய்யும் கூட்டம் நடந்தது.இனி மேல் வேட்பாளர் மாற்றம் வராது என நம்புவோமாக.

வெளியூர்களிலிருந்து பல வேன்களில் தொண்டர் கூட்டம் குவிந்தது.அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்...சாமான்யர்கள் பேருந்தில்...வாகன நெரிசல்களில் மாட்டிக்கொண்டு..வழக்கத்தைவிட ஓரிரு மணிகள் தாமதமாக வீடு போய் சேர்ந்தனர்.மே 13 வரை...இந்த நிலைதான்...என ஆங்காங்கே முணுமுணுப்புகள் இருந்தன.

கூட்டணி தலைவர்கள் பிரகாஷ் காரத்,ஏ.பி.பரதன்,ராஜா,வைகோ,வரதராஜன்,பாண்டியன் ஆகியோர்கள் பேசினர். வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஜெ பேசினார்.

ஆமாம்...முக்கியமான ஒருவர் எங்கே என்கிறீர்களா?

அந்த தலைவர் பேசவில்லை...ஜெ துதி பாடினார்.அவர் பேச்சின் சாரம்..

ஜெ..யின் பக்கம்தான் மக்கள் சக்தி இருக்கின்றது.தி.மு.க.,விற்கு எதிர் அலை வீசத் தொடங்கிவிட்டது.2008ல் வெள்ளம் வந்த போது கலைஞர் 1510 கோடி கேட்டார்...200 கோடிதான் கிடைத்தது.2005 வெள்ளத்தின் போது..முதலில் 500 கோடிகேட்டார் ஜெ அந்த தொகை கிடைத்தது.மீண்டும் 500 கோடி கேட்டார்.அதுவும் கிடைத்தது.காரணம் ராசி ஒருபக்கம் இருந்தாலும்..முகராசி என்ற ஒன்றும் உண்டு.(கலைஞருக்கு முகராசி இல்லை என்கிறாரோ?)

ஜெ பேசுகையில்...தமிழகம் சுட்டிக்காட்டுபவரே...இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆவார் என்றார்.???!!!

ராகுல் திராவிடும்...காம்பீரும்...மற்றும் நானும்

இந்திய கிரிக்கட்டில் சுவர் என்று வர்ணிக்கப்பட்டவர் ராகுல் திராவிட்..ரன் எடுக்காமலேயே..களத்தில் அதிக பந்துகளையும் சந்தித்து..மேட்சை டிரா செய்துள்ளார்.

இதற்கு முன்னால் ஓட்டங்கள் எடுப்பதில் ஆமையுடன் ஒப்பிடப்பட்டவர் ரவிசாஸ்திரி..

ஒருநாள் போட்டியில்37 ஓட்டங்களே எடுக்க அதிக பந்துகளை சந்தித்த சாதனையாளர் கவாஸ்கர்.

சமீபத்தில் நியூஸிலாந்த்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில்...இரண்டாவது மேட்சில்...காம்பீர்..நின்று நெடு நேரம் களத்தில் நின்றதால்...அந்த மேட்ச் டிரா ஆனது.காம்பீரும் திராவிடுடன் ஒப்பிடப்பட்டு இரண்டாவது சுவர் என அழைக்கப்பட்டார்.

ஆமாம்...இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்கிறீர்களா...கிட்டத்தட்ட 10 மாதங்களாக தமிழ்மணத்தில் பதிவிட்டு வரும் எனக்கு...இன்று 50 ஆவது ஃபாலோயர் வந்திருக்கிறார்.

இது...திராவிடின் சாதனையையும் முறியடிக்கும் சாதனைதானே..

(இப்பதிவிடும்போது 50 பேர்..சொல்லமுடியாது...இந்நேரம் ஓரிருவர் கழட்டிக்கோண்டிருந்தாலும் கழட்டிக்கொண்டிருப்பர்.)

Wednesday, April 15, 2009

தேர்தலுக்குப் பின் தி.மு.க.வை, கழற்றிவிடுமா காங்கிரஸ்...

காங்கிரஸை ஜெ தி.மு.க., விட்டு..தன்னிடம் வருமாறு சில தினங்களுக்கு முன் அழைப்பு விடுத்தார்.

ராமதாஸ்...தி.மு.க.,கூட்டணியில் இருந்தாலும்...அது..காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அ.தி.மு.க.,வில் சேர்வதற்கு முன் அன்புமணி தில்லி சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துவிட்டு வந்தார்.

இந்நிலையில் ஜெ...நேற்று தேர்தலுக்குப் பின் அணிகள் மாறும் என்று கூறியுள்ளார்.இதனால் பா.ஜ.க., கனவு கண்டுக் கொண்டிருக்கிறது.

ராமதாஸோ...மக்களவைத் தேர்தலுக்குப் பின் ஆட்சி மாறும் என்று கூறிவிட்டு...தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும் என்பது காங்கிரஸ்காரர்கள் கனவு..அவர்கள் கனவு நிறைவேற வேண்டும் என கூறியதாக கூறுகிறார்.

ஜெ வோ தி.மு.க., வினரை விமரிசிப்பது போல காங்கிரஸை விமரிசிப்பதில்லை.

இதைஎல்லாம் பார்க்கையில்...தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்று..அறுதிப்பெரும்பான்மை கிடைக்காவிடில்....ஆட்சி அமைக்க..தி.மு.க., வை கழட்டிவிட்டு...அ,தி.மு.க.உடன் கூட்டு சேரும் நிலையும் உருவாகலாம்.அப்போது தமிழகத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம்...என தெரிகிறது.

கூட இருந்து...யார்..யார்...யார்..யாருக்கு குழி பறிக்கப் போகிறார்கள் என்பது போகப்போக தெரியும்.

Tuesday, April 14, 2009

ஐ.டி. ஊழியர்கள் இனி டீ..காஃபி குடிக்கக்கூடாது

சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக...ஐ.டி., நிறுவனங்கள் பல சிக்கன நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இது தொடர்பாக ஒரு பெரிய நிறுவனம்...தனது ஊழியர்களுக்கு ஒரு இ மெயில் அனுப்பியுள்ளதாம்.அதில்...அந்நிறுவனம் தற்போது சந்தித்து வரும் பிரச்னைகளையும்...அதனால் செலவுகளை குறைக்க எடுத்துள்ள சிக்கன நடவடிக்கைகளையும் பட்டியலிட்டுள்ளதாம்.அதன்படி...

மே மாதம் ஒன்றாம் தேதி முதல்...ஊழியர்களுக்கு பணியின் போது வழங்கி வரும் டீ, காஃபி போன்றவை நிறுத்தப்படுமாம்.

வீட்டில் இருந்து அலுவலக பணியில் ஈடுபடுவோர்க்கு..இன்டெர்னெட் கட்டணத்தை இதுவரை நிறுவனம் வழங்கி வந்ததாம்.அதுவும் இனி ரத்து செய்யப்படுமாம்.அக்கட்டணத்தை இனி ஊழியரே செலுத்த வேண்டுமாம்...

தவிர...இனி அவர்கள் பெற்றுவரும் பல் வேறு சலுகைகளும் ..பல கட்டங்களில் ...படிப்படியாக குறைக்கப்படுமாம்.

இப்படி தகவல்களை அனுப்பியுள்ளது...சாதாரண நிறுவனம் இல்லை...

மிகப்பெரும்..ஐபிஎம் நிறுவனமே..

அட தேவுடா......

Monday, April 13, 2009

வாய் விட்டு சிரியுங்க...(சித்திரை முதல்நாள் ஸ்பெஷல்)

அதோ போறானே அவன் தமிழின துரோகி..
எதை வச்சு சொல்ற
இன்னிக்கு சித்திரை திருநாள்னு சொல்லாமே...தமிழ் புத்தாண்டுன்னு சொல்றான்.

2.ஆமாம்...இன்னிக்கு வெறும்..சித்திரை மாதம் பிறப்புதானே...பின் டி.வி.யில் ஏன் பண்டிகைநாள் போல நிகழ்ச்சிகள்.அவர்களை என்ன துரோகிகள்னு சொல்லணும்னு அதி புத்திசாலி அண்ணாசாமியின் சந்தேகம்.

3.தமிழ் புத்தாண்டை மாத்தினதாலே...புத்தாண்டும் விரோதியா பிறக்குது.

4.இன்று எந்த படமும் வெளியாகவில்லை..-செய்தி
அதனால் என்ன...கலைஞர்..சன் எல்லாவற்றிலும்..காலை..மாலை..இரவு என 3 படங்கள் உண்டே..

5.மயிலைக் கண்டு ஆடும் வான்கோழி போல ஏண்டா ஆடிக்கிட்டு இருக்க
மானாடா...மயிலாட நிகழ்ச்சில ஆடப்போறேன்..

6.இன்னிக்கு சந்திரன் பிரகாசமா இருக்கே ஏன்?
சூரியன் முன்னால நிற்கப்போகுதே..அதுதான்..ஆனால் அதன் ஒளியே சூரியனாலேன்னு மறந்து போச்சே..

7.இன்னிக்கு அம்பேத்கர் பிறந்த நாள்..நல்லவேளை அதையும் தைத்திங்களன்று மாற்றவில்லை...என்கிறார் ஒரு அபிமானி.