Saturday, November 28, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.தலைவர்..பொருளாதாரம் பலமாக இருக்கிறது...பலஹீனமாக இருக்கிறது என இரண்டு தலைப்பிலும் பேச்சை தயாரிக்கச் சொல்லி இருக்கார்..ஆளும் கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..எதிர்க் கட்சி கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..அதற்கேற்ப பேசிடலாம்னு.

2.என் மனைவியை கண் கலங்காம வைச்ச்க்கணும்னு பார்த்தேன்..முடியலை
ஏன்?என்ன ஆச்சு
அவ மெகா சீரியல் நடிகையா இருக்கறதாலே..வீட்ல எது பேசினாலும்..கண்ணீரோடத்தான் பேசறா

3.கடைக்காரர்-இலவச இணைப்பை 'கேட்'டு வாங்குங்கன்னு சொல்றது..இந்த சின்னப் புத்தகத்தாங்க..வீட்டு 'கேட்"டு இல்லைன்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்றீங்களே

4.உங்கம்மாவோட நான் சண்டை போடறதால எனக்கு சாபம் கொடுத்துட்டாங்க
என்னன்னு
காலத்துக்கும் சுமங்கலியா இருன்னு

5.டி.வி.ல நிகழ்ச்சி கொடுக்க ஏன் உங்க நாயை இழுத்துக் கிட்டு வர்றீங்க
இது டாக் ஷோன்னு சொன்னாங்களே

6.நீதிபதி-(குற்றவாளியிடம்)உனக்குத் தேவையானால் அரசாங்கமே வக்கீல் ஏற்பாடு செய்யும்
குற்றவாளி-வேண்டாங்க...எனக்கே நல்லா பொய் பேசத் தெரியும்.

9 comments:

koodalnagar said...

:))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி vinoth

வால்பையன் said...

Super

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி வால்

வடுவூர் குமார் said...

1 & 2 சூப்பர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி வடுவூர் குமார்

Prathap Kumar S. said...

//5.டி.வி.ல நிகழ்ச்சி கொடுக்க ஏன் உங்க நாயை இழுத்துக் கிட்டு வர்றீங்க
இது டாக் ஷோன்னு சொன்னாங்களே//

பயங்கர கடி...ரத்தம் வருது...

//6.நீதிபதி-(குற்றவாளியிடம்)உனக்குத் தேவையானால் அரசாங்கமே வக்கீல் ஏற்பாடு செய்யும்
குற்றவாளி-வேண்டாங்க...எனக்கே நல்லா பொய் பேசத் தெரியும். //

ஹஹஹ...முடில...

எல்லாமே சூப்பர்.. புதுசா இருக்க...சொந்த சரக்கா சார்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நாஞ்சில் பிரதாப்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//எல்லாமே சூப்பர்.. புதுசா இருக்க...சொந்த சரக்கா சார்...//

மண்டபத்தில யாரும் எழுதிக் கொடுக்கவில்லை சாரே!!