Thursday, March 1, 2012

'கின்னெஸ்' ரிகார்டில் இடம் பெறுமா இந்த அரசு..??!!!




எந்த ஒரு அரசும்..பதவி ஏற்ற நாள் முதல்..இவ்வளவு வழக்குகளில் மாட்டித் தவிக்கவில்லை..

சமச்சீர் கல்வி வழக்கு..

தலைமைச் செயலகம் மாற்றல் வழக்கு

அண்ணா நூற்றாண்டு நூலக வழக்கு

பேருந்து கட்டண உயர்வு வழக்கு

ஆவின் பால் விலை உயர்வு வழக்கு

மின் கட்டண உயர்வு

மக்கள் பணியாளர் நீக்கம் வழக்கு

எதிர்க்கட்சி தலைவர் தற்காலிக நீக்க வழக்கு (இப்பதிவும் போது என் நினைவில் வந்துள்ள வழக்குகள் இவை)

தவிர்த்து காவல்துறையினரால் மாற்று கட்சியினர் மீது நில அபகரிப்பு வழக்குகள்

முல்லைபெரியாறு வழக்கு

கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டம்

தனிப்பட்ட முறையில்..முதல்வரின்..வருவாய்க்கு அதிகமாய் சொத்து சேர்த்த வழக்கில் ஆஜரானது..

மீண்டும் சிபிஐ யின்..பிறந்த நாள் பரிசுகள் பற்றி முதல்வர் மீது வழக்கு...

இப்படி..வழக்குகள் மேல் வழக்குகளை சந்தித்த/போடப்பட்ட ஆட்சிகள் வேறு ஏதேனும் இருக்குமா என்பது சந்தேகம் தான்.உயர்நீதி மன்றத்தில் இதற்கென தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.

இன்று அரசு ஏதேனும் முக்கிய முடிவு எடுத்தால் ..அடுத்த நாள் அதன் மீது வழக்கு போடப்படுகிறது.அரசு வழக்கறிஞர்கள் பாடுதான் திண்டாட்டம்.

இந்த சோதனைகள் போதாது என...ஆட்சி அமைத்தது முதல் இதுவரை பல மந்திரிகள் மாற்றம்..இரு அமைச்சர்கள் மரணம்..அதனால் வந்த இடைத்தேர்தல்...

என்னாவாயிற்று தமிழகத்திற்கு..? முதல்வர் தன் போக்கை சற்று மாற்றிக் கொண்டால்..பெருபாலானவை தவிர்க்கப்பட்டிருக்கும்.

கின்னஸ் உலக ரிகார்ட் பற்றி அறிந்தவர்கள் ...இன்றுள்ள தமிழக அரசு கின்னஸ்ஸில் இடம் பெற வாய்ப்புள்ளதா என தெரிவிக்கவும்...


2 comments:

ஹேமா said...

அப்பாடி...கொஞமாச்சும் வெட்கம் இருக்குமா !

Unknown said...

அருமையான, சிந்திக்க வேண்டிய பதிவு!

பதில்...? காலம் சொல்லும்!

புலவர் சா இராமாநுசம்