Friday, March 16, 2012

கலைஞருக்கு ஒரு கடிதம்...




தலைவர் கலைஞர் அவர்களுக்கு

வணக்கம்..

கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர், கலைஞர் என்ற பன்முகம் கொண்ட அஷ்டாவதானியான உங்கள் மீது தமிழ் மக்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பற்று உண்டு.இந்த பற்று கட்சிகளை மீறிய ஒன்று.

ஆனால்..சமீபத்தில் தாங்கள் பேசியுள்ள பேச்சு..என்னைப் போன்று உங்கள் மீது அபிமானம் உள்ளவர்களையும்..அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் ஆகட்டும்..இலங்கை பிரச்னை ஆகட்டும்...வாலிப உள்ளங்கள் தான் அளவிற்கு அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு தீக்குளித்துள்ளன..இள ரத்தம், உணர்ச்சி வேகம்,உயிர் தியாகம் செய்யும் நோக்கு ஆகியவை தோன்றும் போது தங்களுக்கு முன்னேயுள்ள தாய், தந்தையர், இளம் மனைவி, குழந்தைகள் ஆகியோர் பற்றி எண்ணம் அவர்களுக்கு தோன்றுவதில்லை.

அதனால்தான், இப்படி ஏதேனும் நேருகையில்...தலைவர்கள் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களை, 'உணர்ச்சிவசப்படாதீர்கள்..தீக்குளிப்பது போன்ற செயல்கள் பிரச்னையை தீர்த்து வைக்காது..' என்றெல்லாம் கூறி இளைகர்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டுவருவது வழக்கம்.

இதெல்லாம் தெரிந்த நீங்களே..'அண்ணா நூற்றாண்டு நூலகம் , இடிக்கப்படுமேயாயின்...நான் தீக்குளித்தாவது அதை காப்பேன்' என்றுள்ளீர்கள்.பழுத்த அரசியல்வாதியான நீங்கள் உணர்ச்சி வேகத்தில் இதைக் கூறியிருக்க மாட்டீர்கள்..பின்..இதைக் கூற வேண்டிய அவசியம் என்ன...'மக்களின் உணர்ச்சியைத் தூண்டவா?..நீங்கள் இப்படிச் சொன்னதால் சங்கரன் கோவிலில் வாக்குகள் திமுகவிற்கு மக்கள் போடுவார்கள் என்றா? அதற்காக என்றால்...உங்களையே நம்பி..உங்கள் சொற்களையே வேதவாக்காக எண்ணும் லட்சக்கணக்கான தொண்டர்களில்..யாரேனும் ஒருவர்..தலைவரே சொல்லிவிட்டார்..அவர் உயிரே போகையில்..என் உயிரும் முதலில் போகட்டும் என தீக்குளித்தால்..அந்த உயிரை மீண்டும் நீங்கள் தரமுடியுமா?

இப்படி இளைஞர்கள் உணர்ச்சியைத் தூண்டும் வகையில்..மூத்த தமிழகத் தலைவர் நீங்கள் பேசியுள்ளது அழகல்ல...குழந்தைகள் பேசுவது போல பேசியுள்ளீர்கள்..

இதனால் தான் வயதானவர்களும் குழந்தைகளுக்கு சமமாய் நினைக்க வேண்டும் என நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனரோ?

மொத்தத்தில்...உங்களின் இப்பேச்சு கண்டிக்கத் தக்கதே..

அன்புடன்
ஒரு தமிழக குடிமகன்

No comments: