Tuesday, April 7, 2015

குறுந்தொகை-206






தலைவன் கூற்று
(பாங்கன் தன்னை இடித்துரைத்தபோது, “அறியாமையால் நான் காமநோயுற்றேன். இனிச் செய்யுமாறு யாது? நீவிர் அங்ஙனம் செய்யற்க”என்று தலைவன் கூறியது.)

மருதம் திணை -பாடலாசிரியர் ஐயூர் முடவன்

இனி பாடல்-
   
அமிழ்தத் தன்ன வந்தீங் கிளவி
   
அன்ன வினியோள் குணனு மின்ன
   
இன்ன வரும்படர் செய்யு மாயின்
   
உடனுறை வரிதே காமம்

குறுக லோம்புமி னறிவுடை யீரே.



_                         - ஐயூர் முடவன்
அறிவையுடையவரே,  அமிழ்தத்தைப்போன்ற,  அழகிய இனிய சொற்களையுடைய,  மனத்தாலுணர்தல் மாத்திரையே யியன்ற அத்தகைய இனிமையையுடையோளது,  குணமும்,  இத்தகைய,  இன்னாதனவாகிய துன்பங்களை உண்டாக்குமாயின், ஒருங்கு வாழ்தற்கு அரிது;ஆதலின், அதனை அணுகுதலைப்பரிகரிக்கவும்.

 

    (கருத்து) காமம் என்னால் தாங்கற்கரியது.

 
   ( ‘நான் அறிவின்மையால் இந்நோய் தலைக் கொண்டேன். இதனால் விளைந்த துன்பம் தீர்த்தற்கரிதாயிற்று. அறிவுடையீராகிய நீர் செல்லுதலை ஒழிமின்’ என்று தலைவன் தன் நிலைமையை ஒருவாறு புலப்படுத்தினான் நண்பனுக்கு)

No comments: