Monday, April 27, 2015

குறுந்தொகை-212



தோழி கூற்று
(தலைவனது குறையைத் தலைவி நயக்கும்படி, “தலைவனது தேர்வந்து வறிதே பெயர்வதாயிற்று; அவன் விருப்பம் கழிந்தது. அது கருதி வருந்துகின்றேன்” என்று தோழி கூறியது.)
   
நெய்தல் திணை-பாடலாசிரியர் நெய்தற் கார்க்கியன்

இனி பாடல்-
 
கொண்க னூர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
   
தெண்கட லடைகரைத் தெளிமணி யொலிப்பக்
   
காண வந்து நாணப் பெயரும்
   
அளிதோ தானே காமம்

விளிவது மன்ற நோகோ யானே.




                          -நெய்தற் கார்க்கியன்.



 தலைவன் ஏறிச் சென்ற, கொடுஞ்சியை உடைய உயர்ந்ததேரானது, தெள்ளிய நீரைஉடைய கடலை அடைந்த கரைக்கண், தெளிந்த ஓசையை உடைய மணிகள் ஒலிக்கும்படி,  நாம் காணும்படி வந்து பின்பு நாம் நாணும்படி, மீண்டு செல்லா நிற்கும்; காமம் இரங்கத் தக்கது;  நிச்சயமாக அழியக்கடவதாகும்;  இவை கருதி யான் வருந்துவேன்.



    (கருத்து) தலைவன் குறை பெறாமல் வருந்திச் சென்றான்.

   

    கொடுஞ்சி - தாமரை மொட்டின் வடிவமாகச் செய்து தேர்முன்நடப்படுவது; தேரூரும் தலைவர் இதனைக் கையால் பற்றிக் கொள்வதுவழக்கம்; “தம்பால்நயந்து வந்தோரது குறையைப் போக்குதல் அறநெறியாளர் கடனாதலின்,அதனைச் செய்யாமையால் வறிதே தலைவன் மீண்டது நாணத்தைத்தருவதாயிற்று; “

No comments: