Friday, March 9, 2018

6 அத்தியாயம்

ஆறு குறும்படங்கள்...தொகுத்து மொத்தமாய் ஒரு திரைப்படம்
1) சூப்பர் ஹீரோ (இயக்கம் கேபிள் சங்கர்)
2) இனி தொடரும் (ஷங்கர் வி தியாகராஜன்)
3) மிசை- (அஜயன் பாலா)
4)அனாமிகா (ரவி சுரேஷ்)
5) சூப் பாய் சுப்ரமணி (லோகேஷ்)
6) சித்திரம் கொல்லுதடி (ஸ்ரீதர் வெங்கடேசன்)

அமானுஷ்ய சக்தியை மையப்படுத்தி எடுத்தப் படங்கள்.
கிளைமாக்ஸ் ஒவ்வொன்றிற்கும் கடைசியில் சொல்லப்படுகிறது
புதிய முயற்சி.நல்ல முயற்சி.
ஆனாலும், ஏதோ குறைவது போல ஒரு உணர்ச்சி.
குறும்படத்தின் முடிவுகள், எதிர்பார்த்த முடிவுகளாகவே இருப்பதால், கிளைமாக்சில் உற்சாகம் குறைகிறது.
சித்திரம் கொல்லுதடி, வேண்டுமானால் சிறிது மாற்றத்தைத் தருகிறது.
கேபிள் ஷ்ங்கரிடம் இன்னமும் எனக்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கிறது.சாத்னைகள் புரிவதில் வல்லவர்.
இனி தொடரும்...திகிலுக்கு பதில், சிரிப்புதான் வருகிறது
மிசை...எங்கோ படித்த கதை உணர்வைத் தருகிறது
அனாமிகா..பயந்து ஒடும் காட்சிகளை அருமையாக படம் பிடித்துள்ளனர்
சூப் பாய்...சற்றே புன்னகைக்க வைக்கிறது
சித்திரம் கொல்லுதடி...இயக்குநர், கடஹசிரியர் உழைப்புத் தெரிகிறது.ஆனால், பாடல் வரிகளில் மனம் செல்லாததால், முழுமையாக ரசிக்க முடியவில்லை
புதிய முயற்சி என்று சொன்னாலும், முடிவுகள் புதுமையாக இல்லாதது போலத்தான் தெரிகிறது


No comments: