Friday, March 23, 2018

திருக்குறள் - இன்பத்துப்பால்

109 தகையணங்குறுத்தல்

காதலனுக்கு தன் காதலி பற்றி எண்ணிக் கொண்டிருப்பதற்கும்,அவளை அழகை வியப்பதற்கும் சொல்லியா கொடுக்க வேண்டும்.அன்றிலிருந்து இன்று வரை ஆண்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் போலிருக்கிறது.வள்ளுவனின் இக்குறளைப் பார்த்தால்....

குறள்.- 1081

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

உரை-

கனத்த காதணியை அணிந்துள்ள இவள் தேவ மகளோ! அல்லது அரியதோர் மயிலோ! மானிடப் பெண்தானோ இவள்.என் நெஞ்சு (இவளிடம்) மயங்கித் தவிக்கிறதே!

No comments: