Saturday, May 16, 2020

நானும் ரௌடிதான்..-1

அம்பத்தூரில் என் பதின்மவயதில் "குள்ள கோவிந்தன் " என்ற உள்ளூர் பற்றி பலர் பேசுவதைக் கேட்டும்..அவனுக்கு பயப்படுவதைப் பார்த்தும், நாமும் ஒரு ரௌடி ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அத்ற்கேற்றாற் போல..ஒருநான் கடைவீதிக்கு வந்தபோது..கையில் ஒரு மருந்துச்சீட்டும்.ஒரு ரசீதும்,சில மருந்துகளையும் வைத்துக் கொண்டு தெருப்பாலச் சுவரில் அமர்ந்தபடியே சிந்தித்துக் கொண்டிருந்தான் என் கதாநாயகன் குள்ள கோவிந்தன்.

மற்றவர்கள் பயப்படுவது போல அவன் இல்லை என்று எனக்குத் தோன்றியது.அதற்குள் அவன் "தம்பி" என்று கூப்பிட்டான்.

உள்ளூர பயம் எடுத்தது..சற்று முற்றும் பார்த்தேன்.அங்கு நான் மட்டுமே இருந்தேன்.அவன் உடனே "உன்னைத்தான் தம்பி..இங்க வா" என்றான்.

பயத்துடன், வரமாட்டேன் என்பது போல தலையை இடமும், வலமும் ஆட்டினேன்.

"உன்னை ஒன்னும் செய்ய மாட்டேன் வா.." என்றான்.அவன் குரலில் சற்று கனிவு இருந்தாற்போலத் தெரிய ,அவனிடம் போனேன்.

அவன், மருந்து வாங்கின ரசீதையும், கையில் மிச்சம் இருந்த காசையும் காட்டி, "௳ருந்துகடைக்காரன் சரியா பாக்கிக் கொடுத்திருக்கின்றானா?" எனப் பார்க்கச் சொன்னான்.

நானும் சரி பார்த்து "சரியாய் இருக்கிறது" என எனக்குக் கூட கேட்காத குரலில் பயத்துடன் சொன்னேன்.."டேங்க்ஸ்" என்ரான் என்னைப் பார்த்து சற்று சிரித்தபடி.அப்பஒது அவன் வாய் கோணியது.சற்று சப்போட்டா வாசனை வந்தது.

வீட்டுக்கு வந்ததும் அப்பாவிடம்..பெருமையாக குள்ள கோவிந்தனிடம் பேசினேன் என்றேன்.

அப்பா, 'அவனோட எல்லாம் உனக்கு என்ன பேச்சு" என்றார்.

நான் விஷயத்தைக் கூறி..அவன் கிட்ட சப்போட்டா பழ வாசனை வந்தது அப்பா.."ரௌடிங்கன்னால வாசனை வருமா?"என்றேன்.

அப்போது மதுவிலக்கு அமுலில் இருந்த காலம்..

அப்பா சொன்னார், "அவன் சாராயம் குடிச்சு இருக்கான்..கள்ள்ச்சாராயம்" என்றார்.

அப்போதுதான் அவன் வாய்க் கோணி பேசியதன் அர்த்தம் புரிந்தது.

(நான் ரௌடி ஆனக்கதைத் தொடரும்)



No comments: