Friday, May 22, 2020

நானும் ரௌடிதான் - 8

அப்பாவிற்கு என்மேல் ஏதோ சந்தேகம் வ்ர ஆரம்பித்திருக்கிறது போலும்.

ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, "வர வர  ஐயா வீட்லேயே இருக்கறதில்ல'பெரிய பெரியசிநேகம் எல்லாம் ஏற்பட்டிருக்காப் போல இருக்கு" என்றார் நைசாக.

'அதெல்லாம் ஒன்னுமில்ல அப்பா" என்றேன் மெல்லிய் அகுரலில்.

"இதோ பார்..உன்னைப் பத்தி அப்பபப்  கம்ப்ளைண்ட்" வந்துகிட்டு இருக்கு..இதெல்லாம் நல்லதுக்கு இல்ல.ஜாக்கிரதை" என்றார்.

என்னைப் பத்தி யாரோ அப்பாகிட்ட போட்டுக் கொடுத்து இருக்காங்க என்ற அளவில் புரிந்தது.

அதற்கேற்றார் போல குள்ள கோவிந்தன் ஒருநாள் என்னிடம் சொல்ல ஆரம்பித்தான்.."இதோ பார் தம்பி..நீ....ர ஜாதி.நீங்க ரொம்ப அமைதியானவங்க.என்னைப் பாரு ரௌடின்னு பேர் வாங்கிட்டேன்.ஆனா உண்மையைச் சொல்லணும்னா என் உடம்புல சக்தியே கிடையாது.இருக்கற பலத்தைக் கூட குடிச்சு..குடிச்சு அழிச்சுக்கிட்டேன்.யாரையாவது மிரட்டணும்னா.."டேய்..என்னா நெனச்சுக்கிணு இருக்க..எம்மேல கைய வைத் தெரியும்..கீச்சுடுவேன்..நெஞ்சுல இருக்கற மஞ்சாசோற எடுத்துடுவேன்  (அத்துடன் சில கெட்ட வார்த்தைகளையும் கூறி) அப்படி..இப்படி உதார் உடுவேன்.உண்மையிலே என்னைத் தட்டினா தாறாந்துடுவேன்.நீ ரௌடியாணும்னு ஆசைப்டாத.உங்கப்பா சொல்றபடி..படிச்சு ஒரு கலட்டராவணும்..இனிமே என்னைப் பாக்க வராதே..நான் போறேன்.." என்று போய் விட்டான்.

பிறகு அவர் எங்கேப் போனார்னே தெரியல..காணவேயில்ல..குப்பால் கடைக்கும் வரதில்ல.."அதிகக் குடியில செத்துட்டார்னு" சொன்னாங்க சிலர்.சிலர், "கள்ளச்சாரய கேஸ்ல் அரெஸ்ட் ஆயிட்டர்னாங்க"

நானும் அவரை கொஞ்ச கொஞ்சமா மறந்துட்டேன்.

சில நாட்கள் கழிந்து அப்பா ,அம்மாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தார்,"அந்த சைக்கிள் கடை குப்பால யாரோ அரசியல் எதிரிங்க வெட்டிக் கொலைப் பண்ணிட்டாங்கன்னு.

கத்தி எடுத்தவன் ,கத்தியாலத்தான் சாகணும்" என்றார் அம்மா.

நான் அரை ரௌடி ஆகி பின் முழு நல்லவன் ஆகிவிட்டேன்.

(முற்றும்)

No comments: