Saturday, May 16, 2020

நானும் ரௌடிதான் - 2

சைக்கிள் கடை ஒன்று அம்பத்தூரில் இருந்தது.அதை குப்பால் என்பவர் நடத்தி வந்தார்.

அவர் கடையில் சைக்கிளை வாடகைக்கு எடுத்து..சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டவன் நான்.

"அண்ணா..அண்ணா.." என அவரைச் சுற்றி வருவேன்.அத்ற்குக் காரணம் உண்டு.சுயநாலம் தான்.அரைமணி நேரம் சைக்கிளை வாடகைக்கு எடுத்துவிட்டு ஒருமணி நேரம் கழித்துத் திருப்பிக் கொடுப்பேன்.அவர் அதிகப்படியான அரைமணிக்குக் காசு கேட்க மாட்டார்.என்னுடைய பாசமிகு(!) அண்ணா தான் அதற்குக் காரணம்.

அவர் அரசியலில் ஆர்வம் உள்ளவர்.அரசியல் கட்சிக்காரகள் அவ்வப்போது அங்குக் கூடுவர்.

ஒருநாள்..பொழுது சாயும் நேரம்..நான் சைகிளை திருப்பிக் கொடுக்க வந்த போது..என் கதாநாயகன் குள்ள கோவிந்தன் அங்கு அமர்ந்திருந்தான்.

குப்பால்..உள்ளிருந்து ஏதோ எடுத்து வந்து அவனிடம் கொடுத்தான்.அதை வாங்கிக் கொண்டு கோவிந்தன் என்னைடம்.."கண்ணா..அந்தப் பெட்டிக்கடைக்குப் போய் ஒரு ஊறுகாய் பாக்கெட் வாங்கிட்டு வர்றியா? என பத்து நயாபைசாவை (அப்போதுதான் ரூபாய்,அணா போய் பைசா வந்து சில ஆண்டுகள் ஆகியிருந்த படியால்..அந்த பைசாவை நயாபைசா என்பார்கள்.பார்த்தீர்களா இந்த பைசாவில் கூட இருந்த ஹிந்தித் திணிப்பை)
நீட்டினான் (ர்).

அந்தப் பெட்டிக்கடையை நாயர் ஒருவர் நடத்திவந்தார்.அவர் ஒரு ஊறுகாய்ப் பாக்கெட்டை என்னிடம் கொடுத்து விட்டு, "தம்பி..அந்த கோவிந்தன் கிட்ட சகவாசம் வைச்சுக்காத.."என்றார்.

"ஆஹா..அந்த கோவிந்தனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டுவிட்டதை நாயர் அறிந்து கொண்டுவிட்டாரே!" எனமனம் மகிழ்ந்தது.அரை ரௌடி ஆகிவிட்டோம் என் மகிழ்ந்தேன்.அந்த கோவிந்தன் என்னை எடுபிடி வேலைக்கு அனுப்பியிருக்கிறான் என்பதை உணரவில்லை.

நான் ஊறுகாய் பாக்கெட்டைத் தந்தவுடன், குப்பால் கொடுத்திருந்த பாட்டிலைத் திறந்து, அதில் இருந்த தண்ணீரைக் குடித்து..ஊறுகாய் பாக்கெட்டை அப்படியேப் பிரித்து முழுதுமாய் நக்கினான் குள்ள கோவிந்தன்.

"டேய்..நீ வீட்டுக்குப் போ" என்றான் குப்பால்.

வீட்டுக்கு வந்த நான்..ரகசியமாக அம்மா இல்லாத போது அடுக்களைக்குள் நுழைந்து..ஒரு தம்ளர் தண்ணீரை எடுத்துக் கொண்டு..அதை கோவிந்தன் குடிப்பது போல ஒரே மூச்சில் குடித்துவிட்டு..ஆவக்காய் ஜாடியிலிருந்து ஊறுகாய் சற்று எடுத்து நக்கினேன்..

காரம் சர்ரென ஏற.."ஐயா..காரம்..காரம்.."ஏன நாக்கை வெளியெ நீட்டி அவதிப்ப்ட்டேன்.நீண்ட தூரம் ஓடி வந்து..தன் நாக்கினை நீர் வடிய நீட்டி இளைப்பாறும் நாய் போல நாக்கை நீட்டிக் கொண்டிருந்தேன்சில மணித்துளிகள்.

"உள்ளே என்ன பண்றே" அம்மாவின் குரல் கேட்டது.



No comments: