Saturday, May 16, 2009

தேர்தல் முடிவுகளும்...மக்களும்...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..

பணநாயகம் வென்றது..தோற்ற கட்சியினர்கள் சொல்வது..எப்போதுமே வழக்கம்.தி.மு.க., முதன் முதலில் தமிழக அரசை பிடித்தவுடன்..அப்போதைய முதல்வர்...'நாட்டில் விஷக்கிருமிகள்' நுழைந்து விட்டன.' என்று சொல்லவில்லையா.

அதாவது..தோல்வியை நம்மால் தாங்க முடியவில்லை..அதற்கான காரணம் எதாவது சொல்ல வேண்டாமா?

தேர்வில் தோற்ற மாணவன்..வாத்தியார் சரியா பேப்பரை திருத்தவில்லை..அவுட் ஆஃப் சிலபஸ்ல கேள்வி கேட்டுட்டாங்க..என்றெல்லாம் சொல்வதில்லையா? அப்படித்தான்.

பாதி முடிவுகள் வந்த போதே..காங்கிரஸ் முன்னிலை என தெரிந்ததும்..அத்வானி, மன்மோகனுக்கு வாழ்த்து தெரிவித்த..அரசியல் பண்பாடு..நம் தமிழகத்தில் இல்லை.

5 தொகுதிகளில் மட்டுமே வென்ற லாலு..காங்கிரஸுடன் கூட்டு வைக்காதது தவறு..என்று சொன்னது போல நம் தலைவர்களால் சொல்ல முடியவில்லை.

மக்கள் மனோநிலை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறது.அவர்களுக்கு தேவை..நிலையான ஆட்சி.அதற்கேற்ப ஓட்டளித்துள்ளார்கள்.

பல இடங்களில்...மாநிலக் கட்சிகள்..தங்கள் பலத்தை தவறாக கணக்குப் போட்டு விட்டன.

ஆந்திராவில்..தனியாக ஆட்சி அமைப்போம்..என..சிரஞ்சீவியும்...தெலுங்கு தேசம்கட்சியும் சொன்னாலும்..வென்றது..தனிப்பெரும்பான்மையாக காங்கிரஸ்தான்.

தமிழகத்தில்...அரித்மெடிக் சரியாகத்தான் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.அ.தி.மு.க.உடன் இருந்த கூட்டணிக் கட்சிகள் ..தி.மு.க.,வில் இருந்த போது 40க்கு 40 கிடைத்தது.அது பிரிந்ததால்தான் 9 இடங்களில் அ.தி.மு.க., வென்றது.

சில காங்கிரஸ் தலைவர்கள் வெல்லக் கூடாது என்ற மனோபாவம் தமிழக மக்களிடம் எல்லா இடங்களிலும் இருந்ததால்தான்..இவ்வளவு வெற்றியிலும்..தங்கபாலு,இளங்கோவன்.மணிசங்கர், தோல்வி யுற்றனர்.

எப்படியானாலும்.....நிலமை சாதகமாக இல்லை என பரவலாக செய்திகள் இருந்தும்..மா பெரும் வெற்றி பெற்ற தி.மு.க., வை வாழ்த்துவோம்.

தமிழக புத்திசாலி வாக்காளர்கள்...

தமிழக..அதுவும் குறிப்பாக சேலம்,,ஈரோடு,மயிலாடுதுரை வாக்காளர்களுக்கு நன்றி.என் பதிவுகளில்..காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில்..காங்கிரஸ் தோற்கடிக்கப் படவேண்டும் என எழுதி இருந்தேன்.குறிப்பாக அடக்கமின்றி..பேசிய தங்கபாலு,இளங்கோவன் ஆகியோரை குறிப்பிட்டிருந்தேன்.

இவர்களுடன்..மத்தியில் அமைச்சர் பதவி வகித்த மணிசங்கர ஐயர் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார்.

இவர்களை மக்கள் சரியாக தண்டித்து விட்டனர்.

அடுத்து..தேர்தலுக்கு தேர்தல் ஆதாயத்திற்காக கூட்டணி மாறிய..பா.ம.க., ஒரு தொகுதியிலும் வெற்றி பெற வில்லை.

தென் சென்னை..தி.மு.க., வேட்பாளர் அறிவிக்கப் பட்ட போதே வீக்கான வேட்பாளர் என எண்ணினேன்.அது உண்மை ஆயிற்று.

மற்றபடி..தி.மு.க.,விற்கு ஓட்டளித்து அது போட்டியிட்ட 21 தொகுதிகளில் 18ல் வெற்றிக் கனியை கொடுத்த வாக்காளர்களுக்கு நன்றி.

முதலில் தோற்றதாக அறிவிக்கப்பட்ட சிதம்பரம் அதே 3000 வாக்குகள் வித்தியாசத்தில் மறு எண்ணிக்கையில் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.:-)))

Friday, May 15, 2009

அதிபுத்திசாலி அண்ணாசாமியின் கருத்துக் கணிப்பு..

அண்ணாசாமி ஒரு பத்திரிகை நடத்திவருகிறார்.அவ்வப்போது..நடக்கும் நிகழ்ச்சிகளை..நமது பிரத்தியேக நிருபர் என்று செய்தி வெளியிடுவார்.

உண்மையில்..அவரும்..அவர் மனைவி ..மற்றும் உறவினர் ஆறு பேரும்தான் அங்கு எல்லாம்.

தேர்தல் கணிப்புப் பற்றி மற்ற பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதைக் கண்டவர்..தன் பத்திரிகையிலும்..ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட எண்ணினார்.ஆனால்..சர்வே எடுக்க ஆட்கள் இல்லையே என்ன செய்வது என நினைத்தவர்.. தன் பத்திரிகை உறவைக் கூப்பிட்டார்.

தான்..தி.மு.,க., ஆதரவு எனச் சொல்லிவிட்டு மற்றவர்களைக் கேட்டார்.அவர் மனைவி,மற்றும் இருவர்..தி.மு.க.,விற்கு ஓட்டு என்றனர்.

வேறு மூவர் அ.தி.மு.க.,விற்குதான் எங்கள் ஓட்டு என்றனர்.

எஞ்சியவர்..இம்முறை விஜய்காந்திற்கு ஓட்டு என்றார்.

எட்டில்..நால்வர்..தி.மு.க., அப்போது தி.மு.க.விற்கு..50% ஆதரவு.

எட்டில் மூவர் அ.தி.மு.க., அப்போது..37.5 % அதி.மு.க.,

எட்டில் ஒருவர் விஜய்காந்த்,..அப்போது தே.மு.தி.க., 12.5%

தி.மு.க.,விற்கு 50%ஆதரவு...நம் பத்திரிகை கருத்துக் கணிப்பில் என செய்தி வெளியிட்டார்.

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (15-5-09)

1.ஆயுள்,கர்மம்(செயல்பாடு),பொருளாதாரம்,மரணம்,அறிவு இவை ஐந்தும் பிறக்கும்போதே நிர்ணயிக்கப்படுகிறது.
பிறப்பு..தகப்பன் அளிப்பு..இறப்பு ஆண்டவன் அழைப்பு..இவை இரண்டுக்கும் இடைப்பட்டது அரிதாரம் பூசாத நடிப்பு என்னும் வாழ்க்கை.

2.ஒரு எறும்பு தன்னைவிட 50 மடங்கு எடை அதிகமுள்ள பொருட்களைத் தூக்கிச்செல்லுமாம்.தன் குடும்பத்துக்காகவும்,எதிர்காலத்திற்காகவும்..எவ்வளவு சுமை தூக்கி உழைக்கிறது?அது..என்றாவது..நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன்னு புலம்பி இருக்கிறதா?இல்லை..என் உழைப்பை இன்னொருவன் திருடிட்டான்..அவன் எனக்கு துரோகம் பண்ணிட்டான்னு எரிச்சல் பட்டிருக்கா? அது பாட்டிற்கு..தன் கடமையைச் செய்..பலனை எதிர்ப்பாராதேங்கிற மாதிரிதான் நடக்கிறது.

3.ஒருவனுக்கு கோபம் வந்தால்..மிருகம் மாதிரி நடக்கிறான் என்கிறோம்..ஆனால்..அப்படி சொல்வது தவறு. ஏன் தெரியுமா? ஏனென்றால்...மிருகங்களிடையே பொறாமை, குரோதம்,சுயநலம், அடுத்தவனை கெடுப்பது போன்ற ஈனத்தனங்கள் கிடையாது.அவை கள்ளங்கபடமில்லா குழந்தைகள் போல.

4.உங்களைவிட திறமையில்லாதவனுக்கு..உங்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு கொடுத்துவிட்டார்கள் என வருத்தப்படுகிறீர்களா? கவலைப்படாதீர்கள்...திறமையில்லாமல் மேலே வந்தவர்கள்..அந்த நிலை என்று பறிபோகுமோ என்ற பயத்தில்தான் வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள்.

5.லண்டனில் ஒரு பல்பொருள் அங்காடியை ஒருமுறை காந்தி பார்க்க ஆசைப்பட்டாராம்.பார்த்துவிட்டு..ஏதும் வாங்காமல் வெளியே வந்தாராம்.உடன் இருந்தவர்கள் அதைப்பற்றிக் கேட்டபோது 'உலகில் எவ்வளவு பொருள்கள் இல்லாமல் என்னால் வாழமுடியும் என்பதை தெரிந்துக் கொள்ளவே இங்கே வந்தேன்' என்றாராம்.

6.அனுபவம்

அனுபவம் விவேகத்திற்கு தந்தை
அனுபவம் துன்பத்தின் சாரம்
அனுபவம் அறிவின் முகம் பார்க்கும் கண்ணாடி
அனுபவம்..சிறந்த வெற்றிக்கு அடிப்படை
அனுபவம் செயல்களை எளிதாக்கும்

(எங்கோ படித்தது)

7.ஒரு ஜோக்..
தலைவா..5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன்னு நீ சொன்னதை..எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்யறாங்க..
ஏன்
நம்ம தொகுதியில மொத்தமே 4.5 லட்சம் வாக்காளர்கள்தான்.

Thursday, May 14, 2009

கங்குலி மீண்டும் கேப்டன் ஆகிறார்..

இந்திய கிரிக்கெட் அணியை..உலகக் கோப்பையில் செமி ஃபைனல் வரை ந்டத்திச் சென்றவர் கங்குலி.

இந்திய அணியின் திறமையான கேப்டன்களில் இவரும் ஒருவர்.ஐ.பி.எல்.,20-20 இல் கல்கத்தா அணிக்கு இவருக்கு கேப்டன் பதவி வேண்டும் என்று எண்ணியும்...அதில்..பல சச்சரவுகள் இருந்ததால் ,குழுவில் ஒரு ஆட்டக்காரராகவே இருந்து..வருகிறார்.இந்நிலையில் மீண்டும் கேப்டன் ஆகும் சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்திருக்கிறது.

சென்னை தேனாம்பேட்டை 6வது குறுக்குத்தெருவில்..சிலர் சேர்ந்து ஒரு கிரிக்கெட் குழு ஆரம்பித்துள்ளனராம்.அவர்கள்..உள்ளூரில் உள்ள மற்ற குழுக்களுடன் மேட்ச் விளையாட உள்ளனராம்.அவர்களை வழி நடத்த சரியான கேப்டன் இல்லை என்பதால்..கங்குலியை அணுக உள்ளனராம்.

ஷாருக்கானும்..உடனடியாக அவரை மகிழ்ச்சியுடன் விடுவிக்க தயாராம்.

ஒரு சுற்று பயணம் முடிந்து..ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்கும்..கங்குலி..இதற்கு ஒப்புக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

Wednesday, May 13, 2009

தேர்தல்ல ஜெயிச்சா இவங்க எங்கே கிளம்புவாங்க...???

ஜெ- மண்வெட்டி எடுத்துக்கிட்டு இலங்கையிலிருந்து தமிழ் ஈழம் தனியே வெட்ட கிளம்புவாங்க..
(ஆமாம்..சேது சமுத்திர திட்டம் வருமாங்க)

கலைஞர்- சோனியா..அன்னையை..சுத்த ப்ளாட்டினமே..தியாகத்தில் எவரெஸ்டே என அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார்
(ஆமாம்..இலங்கை தமிழருக்காக 3 மணி நேரம் உண்ணாவிரதம் எப்போது)

ராமதாஸ்- அடுத்து தி.மு.க., கூட்டணிக்கு ..அம்மாமீது..என்னென்ன புகார் சொல்லலாம் என எண்ணிப்பார்த்துக் கொண்டிருப்பார்.
(அப்படின்னா..அன்புமணிக்கு அம்ம கிட்ட கேட்ட ராஜ்யசபா இடம் என்னவாச்சு?)

வைகோ-இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக கைதாகி இருப்பார்.
(நாஞ்சில் சம்பத் கைதானா யார் வாதாடுவாங்க )

விஜய்காந்த்-அவருக்கே ஜெயிச்சதை நம்பமுடியாது.ஆனால் அதைச் சொன்னால் கலைஞர் காப்பியடித்து விடுவார் என்பார்.
(அண்ணியும்..மச்சானும் தில்லி பயணம்..விஜய்காந்தை பிரதமராக்கவா? பண்ருட்டி நிலமை?)

கம்யூனிஸ்ட்-மத்தியில் ஆட்சியை வெளியில் இருந்து ஆதரிப்பார்கள்
(123 மறந்து..எண்கள் 4 லிருந்து ஆரம்பிக்கிறது என்பார்களா)

அத்வானி-ராமர் கோவில் திட்டத்தை அடுத்த தேர்தல் வரை ஒத்திவைப்பார்.
(ரத யாத்திரை? போட்டியாக வரும் மோடி?)

மன்மோகன் சிங்-ஜிம் மிற்கு போய் உடற்பயிற்சி செய்வார்..அத்வானி வீக்கான பிரதமர் என்று சொல்லக்கூடாதே என்பதற்காக
(பாகிஸ்தான் சீக்கியர் பிரச்னை தீர்ப்பாரா)

(அடைப்புக்குறிக்குள் இருப்பவை நமது கேள்வி)

தே.மு.தி.க., வெற்றிமுகம்..FLASH NEWS

இன்றைய தேர்தல் ..தமிழகத்தில் பட ..ஓரிரு சம்பவங்களைத் தவிர மற்ற இடங்களில் அமைதியாக நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களே..எதிர்பாராத வகையில்..ஊடகங்களின் கணிப்பு..இணைய தள பிரகஸ்பதிகளில் கணிப்பு..என எல்லாவற்றையும் ஏமாற்றி..தே.மு.தி.க., எல்லா தொகுதிகளிலும் முன்னணியில் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில்..விஜய்காந்த்..நிருபர்களுக்கு..வாக்களித்து முடிந்ததும்..அளித்த பேட்டியில்..40க்கு 40ம் தே.தி.மு.க., வெற்றி பெறும் என்றும்..பல தி.மு.க.,வினர் டிபாசிட் தொகையை இழப்பதோடு..3ம் இடத்திற்கு தள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.இச் செய்தி அறிந்து..கலைஞர்,ஜெ..இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆண்டவனுடனான என் கூட்டணியில் ஆண்டவன் என்னை ஏமாற்றவில்லை.ஆகவேதான் பெரியவர்கள்..சாமியை நம்பு..ஆசாமியை நம்பாதே என்று கூறியுள்ளனர்.

விருதுநகரில்..கார்த்திக்கிற்கு..அமோக ஆதரவு உள்ளது.அவர் தே.தி.மு.க., விற்கு சரியான போட்டியாய் இருப்பதாகத் தெரிகிறது.இந்த தொகுதி மட்டுமே..தே.தி.மு.க., விற்கு வெல்வது சற்று கடினம்..ஆனாலும்..குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்..கார்த்திக்...தோற்கடிக்கப்பட்டு..தே.தி.மு.க., வெல்லும்..என்றும் அவர் தெரிவித்தார்.

இப்படியெல்லாம்..ஏப்ரல் 1ஆம் தேதி தேர்தல் நடந்திருந்தால் பதிவுகள் போடலாம்..ஆனால்..என்ன செய்வது..அதற்குக் கூட வழி இல்லாமல் போயிற்றே.

Tuesday, May 12, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 10

1963ல் வந்த படங்கள்

சித்தூர் ராணி பத்மினி
அறிவாளி
இருவர் உள்ளம்
நான் வணங்கும் தெய்வம்
குலமகள் ராதை
பார் மகளே பார்
குங்குமம்
ரத்தத்திலகம்
கல்யாணியின் கணவன்
அன்னை இல்லம்

அறிவாளி நீண்டநாட்கள் வெளிவராமல் இருந்த படமாதலால்..நகைச்சுவை நிறைந்த படமாய்..இருந்தும்..தோல்வியுற்ற படம்.தங்கவேலு,முத்துலக்ஷ்மி சப்பாத்தி நகைச்சுவை வயிறு புண்ணாகும் ஒன்று.

கலைஞர் வசனத்தில்..லக்ஷ்மி அவர்களின் பெண்மனம் நாவல்..இருவர் உள்ளமாக வந்தது.அருமையான பாடல்கள்..சிவாஜி,சரோஜா தேவி நடிப்பு ..படத்திற்கு வெற்றி அளித்தது.100 நாள் படம்.சிறிது கால இடைவெளி விட்டு மீண்டும் திரையிட்ட போதும் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம்.

குலமகள் ராதை,கல்யாணியின் கணவன் ஆகிய படங்களும்..நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்ததால் தோல்வியுற்றன.

ரத்தத்திலகம்..இந்திய..சீனப்போரை வைத்து வந்த படம்.

குங்குமம்...பாசமலர் படத்தை எடுத்த தயாரிப்பாளர் படம்.நல்ல பாடல்கல்..சிவாஜியின் அற்புத நடிப்பு ஆகியவை இருந்தும் தோல்விப்படம்.
அன்னை இல்லம்..சிவாஜி,தேவிகா நடித்த படம்..100 நாள் படம்.

பார் மகளே பார்..பெற்றால் தான் பிள்ளையா? என்ற நாடகம்..படமானது.100 நாள் படம்.

இந்த ஆண்டு 10 படங்கள் வந்தாலும்...4 படங்களே வெற்றி படங்களாக் அ மைந்தன எனலாம்.

1964 படங்கள் அடுத்த பதிவில்.

தேர்தல் கணிப்புகள்..அ.தி.மு.க.,அதிக தொகுதிகளில் வெற்றி

ஜெ அணிக்கு நிறைய தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக..பல பதிவுகள் இரண்டு நாளாக தமிழ்மணத்தில் காணப்படுகின்றன.ஒரு பதிவர்..ஜெ யின் கூட்டங்களில் அவர் பேச்சு இதற்கு ஒரு காரணம் என்றுள்ளார்.

ஈழப்பிரச்னை..பிரமாத மாறுதலை ஏற்படுத்தாது..என அனைத்துப் பிரிவினருக்குமே தெரியும்..ஏதோ ஆற்றாமையில்தான் பதிவிடுகிறோம்.கட்சி வேறுபாடின்றி..இரு திராவிட கட்சி தொண்டர்களிடையே
காங்கிரஸ் வெல்லக்கூடாது என்ற எண்ணம் உள்ளது.மேல்தட்டு மக்கள்,மத்திய வர்க்கத்தினர் கூட இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது சந்தேகமே.

தி.மு.க., கட்டுக்கோப்பான கட்சி என்பதால்..அதன் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்கள் ஓட்டுகள் சிதறாது.அதுவே..அக்கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில்
வாக்குகள் சிதறி..அ.தி.மு.க.வோ..அதன் கூட்டணியோ வெற்றி பெறும்.

ஆகவே..ஜெ வெற்றி பெறும் தொகுதிகளில் அவர் பேச்சாலோ,அவர் வாக்குறுதி நம்பியோ யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.

மேலும்..ஜெ கூட்டணி பலம் வாய்ந்தது,..என்பதில் சந்தேகமில்லை.கூட்டணி பலம்தான்..பேச்ச் பலம் இல்லை என்பது திட்டவட்டமே!

ஆகவே ஜெ பெறும் வெற்றி கணிசமாக இருக்கும்..என்பது..உண்மையே.

அதே போன்று தி.மு.க.,வும் 15 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.காங்கிரஸ் படு தோல்வி அடையும்.

இதுதான் நிதர்சனம்.

Monday, May 11, 2009

பிரதமரின் இரட்டை வேஷம்

அமிர்தஸரஸில்..ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன் மோகன் சிங்..'பாகிஸ்தானில் சிறுபான்மையினர்களான சீக்கியர் மீது ஜசியா என்ற மத வரி விதிக்கப்பட்டுள்ளது.

இது விஷயமாக இந்திய அரசு..பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது என்றும்..விரைவில் அவர்கள் குறை அகலும் என்றும் கூறியுள்ளார்.

சிறுபான்மையினரான சீக்கியர் மீது வரி விதிப்பிற்கே..நடவடிக்கை எடுக்கப்படும் என்னும் பிரதமர்..இலங்கையில் இனப்படுகொலை ந்டந்து வருவதைப் பற்றி அவ்வளவாக ஏன் கவலைப்படவில்லை.

ஏனெனில்..அங்கு அவதிப்படுபவன் சீக்கியன்...இங்கோ தமிழன்..

தமிழன் உயிர் பற்றி இவர்களுக்கு என்ன கவலை.

நம் பிரதமர்..மட்டும் இரட்டை வேடம் போடவில்லை..அனைத்து காங்கிரஸ்காரனும் இரட்டை வேடம் போடுகிறார்கள்.அதை உணர்ந்துக்கொள் தமிழனே.காங்கிரஸிற்கு பாடம் கற்பி. இதுதான் தருணம்.

தமிழா..ஒரு முறை வாக்குப்பிச்சைப் போட்டுவிட்டு 5 ஆண்டுகளுக்கு வாழ்க்கைப்பிச்சை எடுப்பதை நிறுத்துவோம்.நேர்மை,உண்மை இரண்டும் சேர்ந்த அரசால்தான் சமத்துவத்தை ஏற்படுத்த முடியும்.

கலைஞரும்...திருமா..வும்

ராமதாஸின் அன்பு தம்பியாக..இருந்து வந்த திருமா..கூட்டணி விஷயத்தில்..கலைஞரின் தம்பியாக மாறினார்.

தன் பதவியைக் காத்துக்கொள்ள சோனியாவை..தியாகச்செம்மல், சொக்கத்தங்கம் என்றெல்லாம் வர்ணித்த கலைஞர்..ஒரு நிலையில்..அன்னையே..எங்கள் இலங்கை தமிழர்களைக் காப்பாற்று என வேண்டினார்.

திருமா..வோ..ஒரு படி மேலே போய்விட்டார். கலைஞராவது..தி.மு.க., அரசுக்கு ஊறு ஏற்படக்கூடாது என்பதற்கு அப்படிச் சொன்னார் என்றால்..திருமா..ஒரு எம்.பி.பதவிக்கு என்ன சொன்னார் தெரியுமா?

சென்னையில் சோனியா கலந்துக் கொண்ட கூட்டத்தில் பேசிய திருமா 'இஸ்லாமியர்கள் அல்லாவை இறஞ்சுவதுபோல, கிறித்துவர்கள்..யேசுவை இறஞ்சுவது போல..எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும்..சோனியாவே இலங்கை தமிழர்களைக் காக்க உங்களை இறஞ்சுகிறேன்.' என சோனியாவை..அல்லா, யேசு ரேஞ்சுக்கு உயர்த்திவிட்டார்.

சந்தர்ப்பம் கிடைத்தால்..இருவரும் சோனியாவிற்கு கோவில் கட்டி விடுவார்கள் போலிருக்கிறது.

பதவி ஒரு மனிதனை என்னவெல்லாம் பேச வைக்கிறது..

ஆனால்..சோனியா அன்று திருமா..வை கண்டுக்கொள்ளவே இல்லை என்கிறது ஊடக செய்திகள்.

Sunday, May 10, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(அன்னையர்தின ஸ்பெஷல்)

1.வெண்ணைய்க்குள் நெய்யைப்போல்
விறகுக்குள்ளே தீயைப்போல்
மலருக்குள்ளே மணத்தைப்போல்
எள்ளுக்குள்ளே எண்ணைய்ப்போல்
பெண்ணுக்குள்ளே தாய்ப்பாசம்

2.தென்றலாய் இருந்தால்..தீண்டிப்பார்ப்பார்கள்..புயலாக மாறுங்கள்..பயந்து ஓடுவார்கள்

3.ஒரு பெண்ணின் ரோஷம்தான்..மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவை தோன்ற காரணம்,

4.பெண்களுக்கான சம அந்தஸ்து இருக்கிறதா? பெண்களுக்கும் ஒரு மனம் இருப்பதை பலர் உணர மறுக்கிறார்களே ..ஏன்?

5.பெண் ஆணைவிடத் தாழ்ந்தவளும் இல்லை..உயர்ந்தவளும் இல்லை..பெண் ஆணிலிருந்து வேறானவள்.ஆகவே பெண்களுக்கென பல சிறப்புச் சலுகைகள் கண்டிப்பாக வேண்டும்.

6.தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை..தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை.அதுபோல..தாயை பழிப்பவன் வாழ்ந்ததும் இல்லை.


நமக்கு முகவரி தந்தவள்..முகத்தைத் தந்தவள்..தரணியில் வாழவிட்டவள்..அன்னையே..உன்னை இரு கரம் கூப்பி வணங்குகிறோம் இந்நாளில்.

Friday, May 8, 2009

காங்கிரஸை தோற்கடிப்போம்...

தி.மு.க., கூட்டணியுடன்..அ.தி.மு.க., கூட்டணி வலுவுள்ளது.அதனால் தான் எனது முந்தைய பதிவு ஒன்றில் கூட அ.தி.மு.க., அதிக இடங்களில் வெல்லும் என சொல்லியிருந்தேன்.

சமீபத்தில் வேறு..சில காங்கிரஸ் வால்கள்..(தலை என்பதே காங்கிரஸில் இல்லை) தேர்தலுக்குப் பின் கூட்டணி மாற்றம் வரலாம் என பேச ஆரம்பித்துள்ளனர்.

காங்கிரஸை நம்பி தி.மு.க., கெட்டது.இல்லையேல்..காங்கிரஸை விடுத்து..அது..வலுவான கூட்டணி அமைத்திருக்கலாம்.கெட்ட பெயரையும் தவிர்த்திருக்கலாம்.சொக்கத்தங்கம் இல்லை பித்தளை என்பது தெரிந்திருக்கும்.

இந்நிலையில்..ஒரு வேளை அ.தி.மு.க., சில அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தால்...காங்கிரஸ் தி.மு.க.,வை கழட்டிவிட தயார்..இப்போது.

ஆகவே..தமிழக வாக்காளர்கள்..காங்கிரஸின் சந்தர்ப்பவாத அரசியலை உணர்ந்து...அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில்..அதைத் தோல்வி அடைய செய்யுங்கள்.அப்போதுதான்..தங்கபாலு...இளங்கோவன் ஆகியோர் நாவடக்கம் கொள்வர்.

தமிழன் இதிலாவது ஒற்றுமையாய் இருந்து அவர்களை தோற்கடிக்கட்டும்.

Thursday, May 7, 2009

பதிவர்களின் மனிதநேயம்...

பதிவர்கள் பெரும்பாலும் ஒருவருக்கு ஒருவர் பதிவுகள் மூலமே அறியப்படுபவர்கள்..ஆனாலும்..ஒரு பதிவருக்கு ஏதேனும் உடல் நலம் சரியில்லையெனில்..பதை பதைப்போர் எவ்வளவு பேர்?
நமக்குள் இந்த அன்னியோனியம் எப்படி வந்தது?

ஒருவருக்கு உடல்நிலை சரியில்லையெனில்..அவருக்காக பிரார்த்தனை செய்பவர்கள் எவ்வளவு பேர்?

கலைஞர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சேர்ந்து..சிகிச்சை முடிந்து வெளியேறியதும்...மருத்துவ மனையில்..தினசரி நடந்த நிகழ்ச்சிகளை எழுதினார்..அதை சற்று கிண்டல் செய்யும் விதத்தில்..எனக்கு..தலைவலி என்றும்...மருத்துவமனையில் அனுமதி...என ஒரு பதிவிட்டேன்..

உடன்...அந்நிகழ்ச்சியை உண்மையாக நினைத்து..கோவி சிங்கையிலிருந்து தொலைபேசி நலம் விசாரித்தார்.

பதிவர் இயற்கையோ...எதோ ..இதோட போயிற்றே..என என் உடல்நிலை குறித்து கவலைப்பட்டார்.எவ்வளவு வெள்ளந்தி மனம் படைத்தவர் இவர். மனம் கனத்தது..

தினசரி குறைந்தது இரு பதிவாவது இடும் நான்..கடந்த சிலநாட்களாக எப் பதிவும் இடவில்லை..உடன் மணிகண்டன்..எங்கே போயிட்டீங்க? என்கிறார்.

எனக்கும்...மென் துறை யில் வேலை புரியும் பதிவர்கள்..தொடர்ந்து சில நாட்கள் பதிவிடவில்லையெனில்..'ஐயோ..அவர்களுக்கு வேலையில் பிரச்னை ஏற்பட்டிருக்குமோ? என கவலை ஏற்படுகிறது..

பதிவுகள் இடுவதில் லாபம்..இருக்கிறதா என எண்ணுபவர்களுக்கு...இப்படிப்பட்ட நட்பு கிடைக்கிறதே...அது போதாதா?

நட்பைவிட சிறந்தது என்ன இருக்க முடியும்?

(யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி)

Monday, May 4, 2009

குட் டச் எது...பேட் டச் எது...10ஆம் தேதி தெரியும்

ஒரு குழந்தை அம்மாவிடம்...'அம்மா நான் எப்படி பிறந்தேன்'னு கேட்டுதாம்..அதற்கு அம்மா..சாமி கொண்டுவந்து கொடுத்தார்னு சொன்னாளாம்.அம்மாவின் பதிலில் திருப்தி அடையா குழந்தை அப்பாவிடம் போய் கேட்டதாம்..அப்பா சொன்னாராம்..'குரங்கிலிருந்து மனுஷன் பிறக்கிறான்'.

திரும்ப குழந்தை அம்மா கிட்ட வந்து..அப்பா சொன்னதை சொன்னதும்..அம்மா சொன்னாளாம்..'எங்க சைட்ல எப்படி வந்தாங்களோ..அதை நான் சொன்னேன்..அப்பா அவர் சைட்ல வந்ததை சொல்றார்'என்று.

கொஞ்சம் சீரியஸ் ஆவோம்..தினசரி பத்திரிகைகளில்..சின்னஞ்சிறுசு குழந்தைகள்..கயவர்களால்..காமுகர்களால்..சீரழிக்கப் படுவதை படிக்கிறோம்..இவர்கள் மனிதர்களா? என்று..இவர்கள் மீது காரி துப்பினாலும்...நமக்கென ஒரு கடமை இருக்கிறது.

நம் குழந்தைகளுக்கு..குட் டச் என்பது எப்படி இருக்கும்...கெட்ட எண்ண தொடுதல் எப்படி என சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இது சம்பந்தமாக ஒரு கலந்துரையாடல்..10ஆம் தேதி..கிழக்கு பதிப்பக மாடியில் (எல்டாம்ஸ் சாலை..மியூசிக் வேர்ல்ட் எதிரில்) 4.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது.டாகடர்.ருத்ரன், டாக்டர் ஷாலினி ஆகியோரிடம்..உங்கள் சந்தேகங்களை இவ் விஷயமாக கேட்டு தெளிவு பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு கிழ் கண்ட பதிவர்களை தொடர்பு கொள்ளவும்

லக்கிலுக்...9841354308
நர்சிம்...9940666868
அதிஷா..9884881824

பதிவர்களின்...இந்த உருப்படியான செயலில் பங்கு கொண்டு பயனடைவீராக.

Sunday, May 3, 2009

புலவர்களிடம் விளையாடும் தமிழ்..

வறுமையில் வாடிய புலவர் ஒருவர் ..ஒரு வள்ளலிடம் சென்று, அவரைப் புகழ்ந்து பாடினார்.

வள்ளலும்..'இரு... நூறு ரூபாய் தருகிறேன்' என்றார்.

புலவர் நூறு ரூபாய் பெற்றுக்கொள்ளவில்லை..'இருநூறு'ரூபாய்' தருவதாக சொன்னீர்கள்' என்றார்.

நூறை..இருநூறு ஆக்குகிறீர்களே...என்றார் வள்ளல்.

அதற்கு புலவர் ,,'முன்னூறு ரூபாய் தருவதாக சொன்னீர்கள்' என்றார்.

வள்ளலுக்கு கோபம் வர'எவனையா..முன்னூறு தருவதாகக் கூறியது?' என்றார்.

ஆனால் புலவரோ..'நானூறு தருகிறேன்..என்று..நீங்கள் தானே சொன்னீர்கள்?'என்றார்.

வள்ளல் கூறினார்..நான் உமக்கு நூறு ரூபாய் கொடுப்பதாகத்தான் கூறினேன்.ஆனால்..நீரோ..இருநூறு,முன்னூறு,நானூறு..என உயர்த்தி சொல்கிறீர்களே!" என்றார்.

நான் எங்கே உயர்த்துகிறேன்..நீங்கள் தான் முதலில்..இரு...நூறு தருகிறேன் என்றீர்கள்.நான்..இரு...நூறு இரண்டையும் சேர்த்து இருநூறு என்றேன்.நீங்கள் எப்போது சொன்னேன் என்றதும்..முன்..நூறு தருவதாகச் சொன்னீர்கள் என்பதை..முன்னூறு தருவதாகக் கூறினீர்கள்..என்றேன்.எவனய்யா சொன்னது..என நீங்கள் வினவ..நான் நூறு தருகிறேன் என நீங்கள் சொன்னதைச் சேர்த்து..நானூறு தருவதாகக் கூறினீர்கள் என்றேன்'என்றார் புலவர்.

புலவரின் வாக்குவன்மையையும்..அவரின் தேவை.1000 ரூபாய்(100+200+300+400) என்பதையும் அறிந்து வள்ளல் ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார்.

Saturday, May 2, 2009

நடிகர்..தயாரிப்பாளர்..பாலாஜி அமரர் ஆனார்..

தமிழ் படத்தயாரிப்பாளர்களில்..அனேகமாக அனைத்துப் படங்களும் வெற்றி பெற்ற தயாரிப்பாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அதில்..முதலில் இருப்பவர் பாலாஜி..

மிகுந்த முயற்சிக்குப் பின்..ஜெமினிகணேசனின் ஆதரவுடன்..திரைஉலகில் அறிமுகமானவர் பாலாஜி.ஔவையார் படத்தில்..முருகனாக சிறு பாத்திரத்தில் நடித்தார்.பின்னர் படிப்படியாக முன்னேறி..பானை பிடித்தவள் பாக்யசாலி,மறுமலர்ச்சி போன்ற படங்களில் கதாநாயகன் ஆனார்.சிவாஜியுடன் பல படங்களில் நடித்தார்.

பின்..தன் மகள் சுஜாதா பெயரில் படத் தயாரிப்பில் ஈடுபட்டார்.ஜெமினி நடிக்க அண்ணாவின் ஆசை..இவர் தயாரித்த முதல் படம்.அது ஓரளவு வெற்றி பெற..தன் படத்தயாரிப்பைத் தொடர்ந்தார்.

சிவாஜியை வைத்து..திருடன்,தங்கை,எங்கிருந்தோ வந்தாள்..என் தம்பி..போன்று பல படங்களை எடுத்தார்.

பின்னர் கமலை வைத்து சில படங்கள் வந்தது..(சவால்)

பின் ரஜினியை வைத்து...தீ..பில்லா போன்ற வெற்றி படங்கள் தயாரித்தார்.

தமிழ்த் திரை உலகில் ராசியான தயாரிப்பாளர் ஆனார்., ஆனால் நடிப்பதையும் விட்டு விடவில்லை..கிட்டத்தட்ட அவர் படங்களில் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை அவரே செய்வார்.

சமீபத்தில் மீண்டும் தன் மகன் தயாரிப்பில் ஈடுபட...அஜித் நடிக்க பில்லா படமும்...சமீபத்தில் யாவரும் நலம் படமும் இவருடையதே..

எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாத இவர் கடைசியாக ஜெயா டிவியில்..திரும்பிப்பார்க்கிறேன்..என்ற நிகழ்ச்சியில் சமீபத்திதான் கலந்துக் கொண்டார்.

மோகன்லால் இவரது மருமகன் ஆவார்

கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டவர் இன்று அமரர் ஆனார்.

அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.

சிவாஜி ஒரு சகாப்தம் - 9

1962ல் வெளியான படங்கள்

பார்த்தால் பசி தீரும்
நிச்சயதாம்பூலம்
வளர்பிறை
படித்தால் மட்டும் போதுமா
பலே பாண்டியா
வடிவுக்கு வளைகாப்பு
செந்தாமரை
பந்தபாசம்
ஆலயமணி

சிவாஜி..பீம்சிங் கூட்டணியில்..பார்த்தால் பசி தீரும்,படித்தால் மட்டும் போதுமா? இரண்டுமே நூறு நாட்கள் படம்.தொடர்ந்து ஒரு நடிகரும்..இயக்குநரும்..பங்கு பெற்ற 5 படங்கள் 100 நாட்கள்.அவற்றில் 3 படங்கள் வெள்ளிவிழா.இந்த சாதனையை இதுவரை வேறு யாரும் முறியடிக்கவில்லை.

ஆலயமணி..கே.ஷங்கர் இயக்கத்தில்..நடிகர் பி.எஸ்.வீரப்பா எடுத்த படம்.100 நாட்கள் படம்.அருமையான பாடல்கள்.
கண்ணான கண்ணனுக்கு,பொன்னை விரும்பும்,சட்டி சுட்டதடா..போன்ற பாடல்கள்.

இந்த வருடம் அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றார்.நயாகரா நகரம்.சிவாஜிக்கு ஒரு நாள் மேயராக பதவி அளித்து கௌரவித்தது.

மற்ற படங்கள் பிரபல இயக்குநர்கள்,தயாரிப்பாளர்கள் ஆகியோருடன்..சிவாஜியின் அற்புத நடிப்பும் இருந்தும்..பிரமாத வெற்றி அடையவில்லை.

1963 படங்கள் அடுத்த பதிவில் காணலாம்.

Friday, May 1, 2009

பத்தே நாட்கள் ஓடிய எம்.ஜி.ஆர்., படம்....

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டெர்நேஷனல் தயாரிக்கும் உன்னைப்போல் ஒருவன் படத்தில் மோகன்லால் நடிப்பது தெரிந்த விஷயம்.

இது பற்றி கமல் கூறுகையில்..'மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்து விட்டன.இம்மாத இறுதிக்குள் ஷூட்டிங் முடிந்துவிடும்.உடனுக்குடன் எடிட்டிங்கும் முடிந்துவிடுகிறது.என்னை அறிமுகப்படுத்திய களத்தூர் கண்ணம்மா ஆகஸ்டில் பொன்விழா கொண்டாடுகிறது.அதே மாதத்தில் இப்படத்தை வெளியிட ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.'என்றார்.

இப்படத்தில் மலையாள நடிகரான மோகன்லாலை ஏன் நடிக்க வைத்துள்ளீர்கள் எனக் கேட்கிறார்கள்.என்னை தமிழன் என மலையாள ரசிகர்கள் பிரித்துப் பார்ப்பதில்லை.அப்படியிருந்திருந்தால்..என்னால் அங்கு 40 படங்கள் நடித்திருக்க முடியாது.மோகன்லால் சிறந்த நடிகர்..a wednesday என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் இது.இப்படம் அனைத்து ரசிகர்களையும் சென்று அடையுமா எனத் தெரியாது.அனைத்து ரசிகர்களையும் திருப்தி படுத்துவது எளிதல்ல.எம்.ஜி.ஆர்., நடித்த பாசம் படம் பரமக்குடியில் 10நாட்கள் தான் ஓடியது என்றும் கூறினார்.

இப்படத்திற்கு ஸ்ருதி ஹாசன் இசை அமைக்கிறார்.இரா.முருகன் வசனங்களை எழுத..மனுஷ்யபுத்திரன் பாடல்களை எழுதிகிறார்.

உன்னைப்போல் ஒருவன்...ஜெயகாந்தனின் ஒரு நாவல் பெயர்..இப்பெயரிலேயே ஜெயகாந்தன் படம் எடுத்து...தேசியவிருது பெற்றார்..என்பது ஒரு உபரி செய்தி.

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (1-5-09)

1.மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒருவித கர்வம் உள்ளவர்களாகவே இருக்கிறோம்.அதில் அறிவாளிகளும்(உங்களைச்சொல்லலைங்க), ஞானிகளும் கூட விதிவிலக்கல்ல.பிறரைவிட நாம் ஞானத்தில் பெரியவர்கள், அறிவில் பெரியவர்கள்..என்ற எண்ணம் இயல்பாகவே வந்துவிடுகிறது.பிறை தாழ்த்திப் பார்ப்பதில் ஒரு இன்பம்.

2.உலகத்தின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் சில விஷயங்கள் அழகாகத்தான் இருக்கும்.சூரியன்,சந்திரன்,குழந்தைகள்,புன்னகை,முதுமை,கடல்..இவை எல்லாம் உலகம் முழுதும் அழகுதான்.

3.உப்பு...இனிப்பாக மாறுமா? கண்டிப்பாக மாறும்.வியர்வைவர உழைத்தால் வாழ்வு இனிமையாக இருக்கும்.வியர்வை..உப்பு...அதனால் வாழ்வில் கிடைப்பது இனிப்பு.

4.அட்சயதிரிதியைக்கு மட்டுமல்ல..நம் வாழ்விலும் பின்னிப் பிணைந்துள்ளது தங்கம்.பொற்றாமரை பாதங்கள் என்கிறோம்.பொன்னான வாய்ப்பு..என்கிறோம்.குழந்தையை கொஞ்சும் போது 'என் தங்கமே'என்கிறோம்.பூமியை பொன் விளையும் பூமி என்கிறோம்.நல்ல காலத்தை பொற்காலம் என்கிறோம்...மனைவியை..ச்சின்னப்பையன் போன்றோர் தங்கமணி என்கிறார்கள்.

5.காய்கறிக்காரன்,ஆட்டோக்காரன் இவர்களுடன் பணத்திற்கு பேரம் பேசுகிறோம்.அவர்களிடம் கோபமாக பேசுகிறோம்.ஆனால் ..செய்தித்தாள்களில் அரசியல்வாதிகளின் கோடிக்கணக்கான ஊழல்
பற்றி படிக்கும் போது கோபம் கொள்வதில்லை.ஏமாற்றுவது ஒரு குற்றம் என்ற மனப்பாங்கு..நம்பிக்கை நம்மைவிட்டு போய் விட்டது.

6.வழுக்கை

பிறைநிலவு நுதலில் தொடங்கி
வளர்பிறையாய் வளர்ந்து
பௌர்ணமியாய் ஆனது தலை

7.தலைவர் ஏன் திடீர் உண்ணாவிரதம் இருக்கார்..
வயிறு சரியில்லையாம்...டாகடர் ஒரு நாள் வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கச் சொல்லியிருக்காராம்.