Friday, February 11, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (11-2-11)





அமெரிக்கா, இராக் மீது தொடுத்த யுத்தத்தில் 1,09,032 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.இதில் 66,081 பேர் அப்பாவி மக்கள்.இராக் படையைஸ் சேர்ந்தவர்கள் 15,196 பேர்.என விக்கிலீக்ஸ் கசியவிட்டுள்ள தகவல்

2)கலைஞர் தொலைக்காட்சியில் தயாளு அம்மாளுக்கு 60 சதவிகித பங்கும், கனிமொழிக்கு 20 சதவிகித பங்கும் தொலைக்காட்சியின் நிர்வாகிக்கு 20சதவிகித பங்கும் உள்ளதாம்.(.கலைஞருக்கு அவர் வசிக்கும் வீடு தவிர வேறு சொத்து இல்லை)

3)சீனாவில் பஞ்சம் வரும் அபாயம் உள்ளதாம்.கோதுமை பயிராகும் 140லட்சம் ஹெக்டேர் நிலத்தில் 50 லட்சம் ஹெக்டேர் நிலம் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளதாம்..25 லட்சம் பொதுமக்கள் 27லட்சம் மற்ற உயிரினங்களும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர் என ஐ.நா.வின் உணவு மகமை தெரிவித்துள்ளது

4)உலகிலேயே நீளமான நதி நைல் நதியாகும்.4145 மைல்.அடுத்து அமேசான் 3900 மைல்கள்.உலகின் 97 விழுக்காடு நீர் கடலில்தான் உள்ளது.இரண்டு விழுக்காடு அண்டார்டிக்,ஆர்டிக்கில் உள்ள உறந்த ஐஸ் ஆகும்.மீதம் ஒரு விழுக்காடே நதிகளின் மூலம் கிடைக்கிறது.இந்த ஒரு விழுக்காட்டிற்குத்தான் எவ்வளவு தகராறு மனிதர்களிடையே

5)விபச்சாரத்தை சட்ட பூர்வமாக்க வேண்டும்.இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.அவர்கலும் இந்த சமுதாயத்தின் ஒரு அங்கம்.அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விபச்சாரத்தை சட்ட பூர்வமாக்குவதே வழி என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,பிரியா தத் கூறியுள்ளார்.

6)ஒரு ஜோக்..

ஒரு கட்சியின் அறிவிப்பு

தலைவர் எதிர்பார்த்த கூட்டணி வரும் தேர்தலில் கிடைக்காததால் தலைவருக்கு தேறுதல் சொல்ல தொண்டர்களே அணிதிரண்டு வாரீர்.
7...சமீபத்தில் நான் ரசித்த ஒரு விளம்பரம்






8 comments:

ஈரோடு கதிர் said...

ஆமா லேபிள்ல ஏன் நகைச்சுவைனு போட்டிருக்கீங்க.

:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஜோக் ஞாபகத்திலேயே இருந்தேனா..அதனால்தான்..
இப்ப மாத்திட்டேன்..
நன்றி கதிர்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நகைச்சுவைன்னு வந்தேன்..
இருந்தாலும் நல்ல தகவல்கள் தெரிந்துக் கொண்டேன்..
விளம்பரமும் சூப்பர்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஓட்டும் போட்டாச்சி..

MANO நாஞ்சில் மனோ said...

//தலைவர் எதிர்பார்த்த கூட்டணி வரும் தேர்தலில் கிடைக்காததால் தலைவருக்கு தேறுதல் சொல்ல தொண்டர்களே அணிதிரண்டு வாரீர்//


நீங்க பாமாக'வை நக்கல் பண்றது புரியுதுங்கோ....

Chitra said...

.கலைஞருக்கு அவர் வசிக்கும் வீடு தவிர வேறு சொத்து இல்லை)


.....அய்யோ பாவமே !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் வாக்களித்தமைக்கும் நன்றி சௌந்தர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano