Saturday, February 19, 2011

கருணாமூர்த்தியும்..மாருதியும்





வாசலில் வந்து நின்ற மாருதியைப் பார்த்து, 'என்னய்யா, என்ன விஷயம்' என்றார் கருணாமூர்த்தி.

'ஒன்றுமில்லை' என்றவாறே, பற்களை எல்லாம் இழந்து..ஏற்கனவே கட்டிக் கொண்டிருந்த முப்பத்தி இரண்டு பற்களில், ஒன்று உடைந்துவிட,பதின்மூன்றை இழந்து மீதமிருந்த பதினெட்டுப் பற்களைக் காட்டி இளித்தான் மாருதி.

வழக்கமாய் எல்லோரும் சொல்வது போல கருணாமூர்த்தியும், "ஏய்யா, முப்பத்தி இரண்டு பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கறே!' என்றார் கருணாமூர்த்தி.

'அதுதாங்க வேணும்' என்றான் மாருதி.

'போனதடவை வந்த போதும் இதைத்தான் கேட்ட, ஆனா பதின்மூன்றை இழந்துட்டியே'

'இல்லீங்க..இந்த முறை அப்படி ஆகாது..பல் டாக்டரை எல்லாம் பார்த்து Baseஐ ஸ்ட்ராங்க பண்ணி வைச்சிருக்கேன்'

'சரி..சரி..இந்த முறையும் 31 தரேன்..அதைவைச்சு உன் பெர்ஃபார்மென்ஸைப் பார்த்து இரண்டு வருஷம் கழிச்சு மீதி ஒன்னைத் தரேன்'

'நீங்க சொன்னா சரி' என்ற படியே..இவ்வளவு நாட்களாகக் காட்டிக் கொண்டிருந்த வீராப்பையும்..அவிழ்த்து விட்டிருந்த வாலையும் சுற்றிக் கொண்டு வந்தான் மாருதி.


7 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நான் பஸ்ட்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாழ்த்துகளும்.. பின்பு வாக்குகளும்..

goma said...

ஓஹோ அரசியல் பன்ச்சா.....

vasu balaji said...

மாருதி:)))))). யப்பா. செம. ஆனா மரத்துக்கு எங்க போறது. வெட்டியாச்சே:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கவிதை வீதி # சௌந்தர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala