Wednesday, February 23, 2011

'‌மீனவ‌ர்க‌ள் எ‌ல்லை தா‌ண்டியத‌ற்கு டி.ஆர்.பாலுதா‌ன் காரண‌ம்'

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உ‌ள்‌ளி‌ட்ட படகு உரிமையாளர்கள் வற்புறுத்தியதால்தான் தாங்கள் எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் கூறியதாக இலங்கை மாடக்கால் பகுதி அருள்தந்தை ஆனந்த குமார் தெரிவித்திருக்கிறார்.


செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சியபோது இதனை தெ‌ரி‌‌வி‌த்த அ‌வ‌ர், இலங்கைக் கடல் எல்லைக்குள் ஊடுருவி, வலையைச் சேதப்படுத்தும் வகையிலான மீன்பிடிப்பு முறைகளை மேற்கொள்ளுமாறு தங்களை படகு உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தியதாகவும், படகுகளில் பெரும்பாலானவை முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமானவை என்றும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்ததாக அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மீனவர்கள் 'எவ்வளவு மீன் பிடிக்கிறார்களோ அந்த அளவுக்குத்தான் அவர்களுக்கு கூலி கிடைக்கும். குறைந்த அளவு மீன் பிடித்தால், படகு உரிமையாளர்கள் அவர்களுக்கு குறைந்த கூலிதான் தருவார்கள். இந்திய கடல்பகுதியில் குறைந்த அளவு மீன்களே கிடைக்கின்றன. அதனால்தான் இலங்கை கடல் எல்லைக்குள் அவர்கள் வருகிறார்கள். எல்லை தாண்டி மீன் பிடிக்குமாறு படகு உரிமையாளர்களும் வற்புறுத்துகிறார்கள்'' எ‌ன்று அரு‌ள்த‌ந்தை ஆன‌ந்தகுமா‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌சிறை‌பிடி‌க்க‌ப்ப‌ட்டத‌ற்கு இலங்கை கடற்படை எந்த வகையிலும் காரணமில்லை எ‌ன்று கூ‌றியு‌ள்ள ஆன‌ந்தகுமா‌ர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியல் தலைவரும், தி.மு.க.வினரும்தான் இந்த ‌நிக‌ழ்வுகளுக்குப் பின்னணியில் இருக்கிறார்கள் எ‌ன்றா‌ர்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் வருவதால் தனது அரசியல் எதிரிகளைத் தோற்கடிப்பதற்குத்தான் மீனவர் பிரச்சனை தி.மு.க.வுக்கு உதவியிருக்கிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ஆன‌ந்தகுமா‌ர், அதேபோல், இங்குள்ள அரசியல் தலைவருக்கும் இந்தப் பிரச்சனை பயன்பட்டிருக்கிறது எ‌ன்று‌ம் இந்த அரசியல் தலைவர் தன்மீது தமிழகத்திலுள்ள வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக தி.மு.க அரசுக்கு உதவி வருகிறார் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

சிறைபிடிக்கப்பட்ட ‌நிக‌ழ்வே, இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து நடத்திய நாடகம்'' என்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக மாநிலங்களவை தி.மு.க உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடத்தப்பட்ட போராட்டம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் அவர்கள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

(நன்றி வெப்துனியா )

5 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இங்க நடப்பது எல்லாம் ஓட்டுக்குதான்
மீனர்கள் பாதித்தால் இவர்களுக்கு என்ன

பதிவுக்கு நன்றி..

சக்தி கல்வி மையம் said...

எல்லாம் அரசியல் நண்பா...

சக்தி கல்வி மையம் said...

see.,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_23.html

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கவிதை வீதி # சௌந்தர்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி வேடந்தாங்கல் - கருன்