Sunday, February 13, 2011

வாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)





1) தன்னோட உரைன்னு போர்ச்சுகல் உரையைப் படித்துட்டு..அதனால் தப்பு இல்லைன்னு சொல்லிட்டாறாமே மைய அமைச்சர்

அதுவரைக்கும் தன்னோட நாடுன்னு நெனச்சு போர்ச்சுகல் போலையே

2)எந்தக் கட்சியுடனும் கூட்டணிக்குத் தயார்னு பி.ஜெ.பி., சொல்லியிருக்கே

பி.ஜெ.பி., ஒன்னும் தீண்டத்தகாத கட்சியில்லைன்னு ஒரு சமயம் சொன்னாரே..அந்தக் கட்சித் தலைவர் கிட்ட இவங்க போய் கேட்கலாமே

3)சட்டமன்றத் தேர்தலை ஒட்டி சோனியா தமிழகத்திலே ஐவர் குழுவை அமைச்சிருக்காங்களே

தமிழகத்திலே காங்கிரஸ்ல ஐந்து கோஷ்டிகள்தான் இருக்குன்னு யாரோ தப்பாய் சொல்லியிருப்பாங்க

4)ராஜாவை விடுவிக்கக் கோரி விமானத்தை நிறுத்தும் போராட்டம் நடத்த்ப் போறாங்களாமே

இதுவரைக்கும் நடந்துள்ள ஊழல்களில் மாபெரும் ஊழல் அல்லவா? அதனால போராட்டமும் மாபெரும் நிலையில் இருக்கணும்னு நினைக்கறாங்கப் போல இருக்கு

5)தமிழகத்தில் இப்போது நடந்துவருமாட்சி 'பொற்கால ஆட்சி"ன்னு ஜெயகாந்தன் பேசியுள்ளாரே!

அது போகட்டும்..மேலவை எப்ப வருது?

6)ஒரு கிசு கிசு

புள்ளிவிவரங்கள் கட்சி விஷயங்கள் அடக்கி வாசிக்கப்படுதே ஏன்?

ஏதோ பிரம்மாண்டத் திட்டம் இருக்குன்னு சொல்றாங்க.

7)தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தா 225 விருதுகள் கொடுப்பதாகத் தலைவர் சொல்லியிருக்கார்

அவர் வாங்கி வைச்சிருக்கிற விருதையெல்லாம் கையிலேயே வைச்சிருக்க முடியுமா? அதையெல்லாம் இப்படித்தான் திருப்பித் தரணும்



11 comments:

goma said...

அடுத்தது ராக்கெட் நிறுத்த போராட்டமா?

ராமலக்ஷ்மி said...

அருமை:))!

சக்தி கல்வி மையம் said...

தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..

பாட்டு ரசிகன் said...

நல்ல நகைச்சுவைகள ரசித்தேன்..

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா ஹா அருமை அருமை.....

Unknown said...

தன்னோட உரைன்னு போர்ச்சுகல் உரையைப் படித்துட்டு..அதனால் தப்பு இல்லைன்னு சொல்லிட்டாறாமே மைய அமைச்சர்//
அவர்களுக்கு தப்பு சரி என்று அறியக்கூடிய தன்மை(வயதாகிவிட்டதால்) போய்விட்டது இனி சி பி ஐ விசாரித்தால் தான் அது தப்பென்றே அவர்களுக்கு புரியும். ஆனாலும் சி பி ஐ கைது செய்தாலும் அவர் குற்றவாளி ஆக மாட்டார். தள்ளாத வயதில் இவர்களை தேர்ந்தெடுத்த மக்களை சொல்ல வேண்டும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி sakthistudycentre-கருன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பாட்டு ரசிகன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கே. ஆர்.விஜயன்