Wednesday, February 16, 2011

தமிழக மீனவர் பிரச்னையும்..கலைஞரும்..

தமிழக மீனவர் பிரச்னைக்கு


நான் எடுத்த நடவடிக்கைகள் நூறு

பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் பலநூறு

பிரதமர் அளித்த உறுதிமொழிகளும் சிலநூறு

நிருபமாவை அனுப்பி வைத்தவர் பிரதமர்

உரைமாற்றி படிக்கும் புகழ்

அமைச்சரும் தந்தார் உறுதிமொழி

தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தது

எம் கட்சிதான்

கழகக் கண்மணிகள்

கனிமொழியுடன் பல ஆயிரம் கைது

சட்டசபைத் தேர்தலுக்கு முன்

செயல்வீரர்களாக நாங்கள்

கைதாவோம் அடிக்கடி இப்படி

எங்கள் தியாகத்தை உங்களுக்கு அறிவிக்க

இன்றும் எழுதத் தீர்மானித்தேன்

வன்மையாக மீனவர் கைதானதைக் கண்டித்து

பிரதமருக்கோர் கடிதம்

வழிமீது விழி வைத்துக் காத்திருப்பேன்

அவரது உறுதிமொழிக் கடிதத்திற்கு






8 comments:

goma said...

ஒவ்வொரு வரியும் சுத்தியல்

MANO நாஞ்சில் மனோ said...

நாசமா போறவனுங்க.......விடுங்க உங்க ஆதங்கம் புரிகிறது...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்று தீருமோ..
இந்தப்பிரச்சனை...
எல்லோரும் சேர்ந்து குரல் கொடுப்போம்..

rajkumar said...

kaditham elutuvatharku oru paraatuvila kuspu talimaiyil nadatthallaam

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி # கவிதை வீதி # சௌந்தர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Rajkumar