Sunday, August 2, 2009

உடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..

இன்றைய..பல குழந்தைகள்..இளைஞர்கள் மத்தியில்..தீரா பிரச்னையையாக இருப்பது Obesity என்னும் உடல் பருமன் தான்.

உடல் பருமன் சர்க்கரை நோய்,இதய நோய்,ரத்த அழுத்தம்,பக்கவாதம் ஆகிய நோய்களுக்கு ஒரு காரணமாய் அமைந்துவிடுகிறது.

சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி..இருபது சதவிகிதம் குழந்தைகளும்,60 சதவிகிதம் இளைஞர்களும் அளவுக்கு அதிகமாக உடல் பருனாய் இருப்பதாய் தெரிய வந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம்..நமது உணவில் ஏற்பட்டுவரும் மாற்றம்தான் என தெரிய வந்துள்ளது.இட்லி,தோசை,பொங்கல்..ஆகியவை..இந்திய குடும்பங்களிலிருந்து..கொஞ்சம்..கொஞ்சமாய் மறைந்துஅவற்றின் இடத்தை..நூடில்ஸ்,பிஸ்ஸா,பர்கர் ஆகியவை பிடித்து வருகின்றன.

மேலும்..பணம்,புகழ்,ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு..பலர்..தங்கள் உடல்தகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.ஒழுங்கான உடற்பயிற்சி,நடை ஆகியவை வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக நினைத்து செயல் பட வேண்டும்.

BMI எனப்படும் body mass index ஐ நினைவில் கொள்ளுங்கள்..அதாவது..நமது எடையை கிலோகிராமில் எடுத்துக் கொண்டு..அதை நம் உயரத்தால்..உயரத்தை மீட்டர் ஸ்கொயரால்(M2) வகுக்கு வேண்டும்.

25 க்குள் ஈவு இருந்தால்..சரியான எடை
25 முதல் 30 வயதுவரை எடை அதிகம்
30க்கு மேல் Obesity

ஆரோக்ய உணவை அருந்தி..சரியான உடற்பயிற்சி செய்து..நோயை நம்மை அண்டவிடாமல் தடுப்போம்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் ...

4 comments:

மங்களூர் சிவா said...

/
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் ...
/

well said.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா

அத்திரி said...

நல்ல பதிவு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அத்திரி