Saturday, August 11, 2018

நாடகப்பணியில் நான் - 25

எங்களது இரண்டாவது நாடகத்திற்கு புது எழுத்தாளர் ஒருவரை அறிமுகப்படுத்த எண்ணினோம் என்று சொன்னேன் அல்லவா? அவர் யார் ?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், எஸ்பளனேட் கிளையில் சேதுராமன் என்பவர் வேலை செய்து வந்தார்.அவரைப் பற்றி அறிந்து அவரை நண்பனாக்கிக் கொண்டோம்.பின் அவர் ஒரு நாடகம் எழுதித் தயாராய் வைத்திருப்பதாகவும், அதை மேடையேற்ற ஒரு குழுவினைத் தேடுவதாகவும் அறிந்தோம்.

அவர் , ஒருநாள் மாலை 5 மணிக்கும் மேல் வந்து எங்களை அலுவலகத்தில் சந்தித்தார்.

அவரிடம் இருந்த ஸ்கிரிப்ட் "புதியதோர் உலகம் செய்வோம்".சிறந்த வசனங்களும், நிறைய நடிப்பிற்கான தேவையும் அந்த ஸ்கிரிப்டில் இருக்க அதையே மேடையேற்றத் தீர்மானித்தோம்.

அந்த சேதுராமன், பின்னாளில் மிகவும் புகழ் வாய்ந்த எழுத்தாளர் ஆன பரத் (இன்று ka.பரத்) ஆவார்.

எங்களது முந்தைய நாடகத்தில் நடித்தவர்களில் ஒருவிரல் கிருஷ்ணா ராவ் தவிர்த்து மற்றவர்கள் இதிலும் நடித்தனர்.ஆனால் தந்தையாக நடிக்க சரியான நடிகர் கிடைக்காமல் தேடினோம்.

அப்போதுதான் அந்த நடிகர் எங்கள் கண்களில் சிக்கினார்.
 அவர் எல் ஐ சி யில் வேலை செய்து வந்த சுப்ரமனியன் என்பவர்

இப்படிச் சொன்னால் உங்களுக்குப் புரியாது.உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமானால்..
பல திரைப்படங்களில் தந்தை வேடத்தில் நடித்தவர்.துடிக்கும் கரங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, பாலைவனச் சோலை போன்ற படங்களில் நடித்தவர்.மணிபாரதி என கலையுலகினரால் அறியப்பட்டவர்

அவர் "புதியதோர் உலகம் செய்வோம்" நாடகத்தில் தந்தையின் வேடமேற்றார்
பின் அவர் சௌம்யா குழுவில் நிரந்தர உறுப்பினராக , எங்களது அடுத்தடுத்த நாடகங்களிலும் நடிக்கலானார்.

ஆமார், "புதியதோர்" நாட்கம் வெற்றி நாடகமா? அடுத்த பதிவில்

(தொடரும்)

No comments: