Friday, August 24, 2018

நாடகப்பணியில் நான் - 38



வேதம் புதிதல்ல நாடகம் குறித்து சில விவரங்களைக் கூற ஆசைப்படுகிறேன்.

கிறித்துவர் ஒருவர் தன் நண்பனுக்கு, தவறிழைத்து விடுகிறார்.அந்நண்பர் பின்னர் ஒரு கோவில் குருக்கள் ஆகிறார்.பின் பல ஆண்டுகள் குறித்து பாதிரியார் ஆகிவிடும் கிறித்துவ நண்பரிடம், அவர் தவறிழைத்ததால் பாதிக்கப் பட்ட பெண் பாவமன்னிப்பு பெற வருகிறாள்.  வேதம் என்ற அந்தப் பெண் ஃபாதரைப் பார்க்கிறாள்.கதை ஃபிளாஷ் பேக்கில் சொல்லப்படுகிறது.

இப்படிப் போகும் நாடகம்.

இந்த நாடகத்திற்கு அப்போது பிராமணர் சங்கத்தில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த மேற்கு மாம்பலம்வாசியான திரு ராமநாதன் என்பவர் எனக்கு தொலைபேசி, நாடகம் பிராமணர்களை துவேசிப்பதாகக் கூறி நாடகத்தை நிறுத்த வேண்டும் என்றார்.(இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெங்கட் அவர்களுக்கும் இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்தது)

நான் அவரிடம் கேட்டேன் "நீங்கள் நாடகம் பார்த்தீர்களா?"

"இல்லை" - அவர்

"இந்த வாரம் சனிக்கிழமை வாணிமகாலில் நாடகம் நடைபெறுகிறது.வந்து பாருங்கள்" என்றேன்.

இதனிடையே, வீயெஸ்வி அவர்களுக்கு தொலைபேசி, நாடகத்தில் ஆட்சேபத்துரியக் காட்சிகள் ஏதேனும் உள்ளதா?" எனக் கேட்டேன்.அவர் அதெல்லாம் ஒன்றுமில்லை என்றிட்டார்.

நாடகத்தைக் காண வந்த ராமநாதன், நாடகம் முடிந்ததும், தனக்குத் தவறான தகவல் வந்தது என்று கூறியதுடன் அல்லாது நாடகத்தைப் பாராட்டினார்

மற்றொரு செய்தி..

அந்நாடகத்திற்கு எங்களுக்குக் குறிக்கப்பட்ட சன்மானத்தொகை ரூபாய் 800 ஆகும்.
ஆனால், ஓம்விக்னேஷ்வரா கல்சுரல் அகடெமி சார்பில் நாடகம் மியூசிக் அகடெமியில் நடந்து முடிந்தது.அச்சபாவின் செயலாளராய் இருந்த திரு இராமசுப்ரமணியம் என்பவர் நாடகம் முடிந்ததும்..ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

நான் அவரிடம் இருநூறு ரூபாய் அதிகம் கொடுத்துள்ளீர்கள் என்றேன்.தெரியும்...இந்நாட்கத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்றார்.

ஒரு கலைஞனுக்கு இதைவிட மகிழ்ச்சியைக் கொடுக்கும் நிகழ்வு வேறு என்ன இருந்துவிட முடியும்.

இதே போன்று நிகழ்வு பின்னாளில் வேறு ஒரு சபாவிலும் எனக்கு நிகழ்ந்தது.அது குறித்து அப்போது சொல்கிறேன்

No comments: