Friday, August 24, 2018

நாடகப்பணியில் நான் - 37



குடும்பம் ஒரு சிலம்பம் நாடகம் 100 ஆவது காட்சியை முடித்ததும் அடுத்த நாடகம் பற்றி குழுவினருடன் ஆலோசித்தேன்.

ஒரு அருமையான கதை என்னிடம் உள்ளது.அதை நாடகமாக்கம் செய்ய வேண்டும் என கதையினை முழுதும் விவரித்தேன்.அனைவருக்கும் கதை பிடித்திருந்தது.

இந்நிலையில், எங்கள் நாடக ஆஸ்தான நடிகனாய் இருந்த ராம்கி, இம்முறை நான் நாடகமாக்கம்-வசனம் எழுதுகிறேனே என்றார்.

அவரின் திறமையை நான் அறிந்தவன் ஆதலால், அதற்கு இசைந்தேன்.

நான் எதிர்பார்த்ததற்கு மேலாக அருமையாய் ஸ்கிரிப்ட் வந்தது.

இப்போது சென்ற பதிவின் இறுதியில் சொன்னேனே! நாடகத்தின் தலைப்பினைக் கேட்டு கேபி சிரித்தார் என்று.அந்த தலைப்பினைக் கூறுகிறேன்..

சில மாதங்களுக்கு முன்னர்தான் நண்பர் வேதம் புதிது கண்ணன் , கதை,வசனத்தில் வந்து மாபெரும் வெற்றியினைப் பெற்ற படம் "வேதம் புதிது"

என் நாடகத்தின் தலைப்போ..."வேதம் புதிதல்ல"
..இதைச் சொன்னதும் அவர் சிரித்தார்.அதற்கான அர்த்தம்.. ம் ஹூம்..இதுவரை நான் அறியவில்லை.

நாடகம் வெற்று நாடகமாக அமைந்தது

வீயெஸ்வி அவர்கள் நாடகத்தினைப் பார்த்து,பாராட்டி விமரிசித்தார்..கூடவே என் தலையில் அவரது மோதிரக்கையினால் ஒரு குட்டினை வைத்தார்.

கதையில் முடிச்சுகள் இருக்கலாம்...ஆனால் இக்கதையில் கதை முழுதுமே முடிச்சுகள் என்றார்

அந்த விமரிசனத்தை நான் மிகவும் ரசித்தேன்.


No comments: