Thursday, June 18, 2020

அப்பா - 3

ஒரு பெரிய கருங்கல்..

அதை எடுக்கின்றான் ஒரு சிற்பி.உளியால் அடித்து..அடித்து..செதுக்கித் செதுக்கி ஒரு அழகான சிலையாக வடிக்கின்றான்.பார்ப்பவர் வியக்கின்றனர்.தெய்வத்தன்மை உள்ளதாக அனைவராலும் போற்றப்படுகின்றது.

தந்தையும் அப்படித்தான்.தன் மகனிடம் உள்ள திறமையை உணர்கிறார்.இவனை உருவாக்கும் விதத்தில் உருவாக்கினால்..பெரிய ஆளாய் வருவான் எனத் தோன்றுகிறது.அந்த சிற்பியினைப் போல ஆகிறார் அப்பா..

ஆனால்.அதை உணராது..அவர் சொல்வதைக் கேட்காது..காயப்படுத்துகிறோம்.அப்போது அதைத்  தவறு என நாம் உணர்வதில்லை.

தூக்கி வளர்த்தவனை..நம்மை ஆக்கி விடப்போகிறவரை..பாசத்துடன் அணுக மறுக்கிறோம்.

நம் பெயருக்கு முன்னால் அவன் எழுத்தைத்தான் இனிஷியலாய் போட்டுள்ளோம் என்பதை மறக்கின்றோம்.

பெற்றதுடன் நில்லாது,நமக்கு கல்வியினையும் தந்து,நம்மைச் சுற்றியுள்ளோர் நம்மை மதிக்கும் படியும் செய்கின்றார் தந்தை.

உளியின் அடிகளைத் தாங்கியப் பின்னர்தான் ஒரு கல்லினால் வணங்கும்  தெய்வசிற்பமாக முடிகிறது.அதுபோல, ஒரு தந்தையின் கண்டிப்பினால்தான் அவனால் நல்ல குடிமகனாக ஆக முடியும்.

நம்மை செதுக்கி செதுக்கி அழகான, அன்பான, பொறுப்புள்ள குடிமகானய் மாற்ற..அந்த தந்தை தன் வாழ்நாளில் செய்யும் தியாகங்கள் எவ்வளவு..எவ்வளவு?

(தொடரும்)   

No comments: