Wednesday, September 30, 2020

"விச்சுளிப் பாய்ச்சல் -4" (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)

 



மூத்த இருளன் நிகழ்ச்சி பற்றி சொல்லி முடித்ததும்..இளைஞன் ஒருவன் மேலத்தைத் தட்டி நிறுத்தினான்.


அனைவர் கண்களும் அந்த இளம் பேரழகியின் மீது.


பாவம் என்ற கண்கள், பச்சாதாபக் கண்கள், இரக்கக் கண்கள், பாசக் கண்கள்,காமக் கண்கள் என பலரின் கண்கள் பல செய்திகளைக் கூறியபடி அப் பெண்ணின் மீது நிலைத்திருந்தது.


சபையினருக்கு நடுவே வந்து நின்ற பெண், அனைவருக்கும் தன் இரு கரங்களைக் கூப்பி வணங்கினாள்..பின்..


"கர கர" என மூங்கிலின் உச்சிக்கு ஏறிச் சென்றாள்.


வள்ளல் மூச்சியப் பிடித்துக் கொண்டார்.


காதணியை கழற்றி எறிந்தாள். பின் பறந்து வந்து அக் காதணி தரையைத் தொடுமுன் கையில் பற்றினாள்.மீண்டும் மூங்கிலின் முனைக்குச் சென்றாள்.


எல்லாமே..சில கண் இமைக்கும் நேரங்களில் நடந்து முடிந்தது.மக்கள்..விடாது கரவொலி எழுப்பி..தங்கள் மகிழ்ச்சியினையும்,பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.


சடையநாத வள்ளல்..மனம் மகிழ்ந்து பலப்பல பரிசுகளைத் தந்தார்.


பின் இருளர் கூட்டம் அவரிடம் இருந்து விடைப் பெற்றது.நெகிழ்ந்து போன வள்ளல்..அப்பெண்ணை நோக்கி.."தாயே! உனக்கு அந்த சரஸ்வதி கடாட்சம் இருப்பதால்..உன் கவி புனையும் ஆற்றலை வளர்த்துக் கொள்.கூடிய விரைவில் மீண்டும் இங்கு வா.வருகையில் நீ புனைந்த கவிதைகள் அனைத்தினையும் ஒரு தனி வண்டி மூலம் எடுத்து வர வேண்டும்..புரிந்ததா..?"என வாஞ்சனையுடன் வழி அனுப்பினார்.


அப்பெண்ணும் அவரிடமிருந்து கண்ணீருடன் விடை பெற்றாள்.


வள்ளலின் அன்பும், தமிழ் போற்றும் குணமும் அனைவரின் உள்ளங்களிலும் நிறைந்து இருந்தது.


அடுத்து அந்த கூட்டம் பாண்டிய நாடு செல்லத் தீர்மானித்தது.மதுரையில் வழுதிப் பாண்டியனிடம் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்த்தி..பரிசினைப் பெற வேண்டும் என்பது அக்கூட்டத்தினரின் நீண்ட நாள் ஆசையாகும்.


மதுரை வந்ததுமே..விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்ச்சியும் நடத்த முடிவானது.


மக்கள் திரளாகக் காத்திருந்தனர்.


நிகழ்ச்சி ஆரம்பிக்கு முன் வழக்கம் போல மூத்த இருளன் நிகழ்ச்சி பற்றி அறிவித்தார்.மேளம் தட்டப்பட்டது.


இளம் பெண் வந்து அனைவரையும் வணங்கினாள்.


மன்னன்..தனது அரசியுடன் வந்திருந்தான்.அரசி தொழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.மன்னன்..அந்தப் பெண்ணைப் பார்த்த விழிகளை அவளிடமிருந்து அகற்றாமல், அவளது பேரழகை ரசித்துக்கொண்டிருந்தான்.


தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த ராணி அதனைப் பார்த்து..விரைவாக வந்து மன்னனின் அருகே அமர்ந்தாள்.விரக தாபத்துடன் மன்னன் அப்பெண்ணியப் பார்ப்பதை அவள் விரும்பவில்லை.


நடந்த நிகழ்வுளை அப்பெண்ணும் ஓரளவு புரிந்து கொண்டாள்.


மேளம் தட்டி முடிக்கப் பட்டதும் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகப் போகீறது..


பாவம்..அந்தப் பெண் நிகழ்ச்சிக்குப் பின் தனக்கு ஆகப் போகும் நிலையை உணரவில்லை.


மூங்கிலின் உச்சிக்குச் சென்று பாய்ச்சலுக்குத் தயாரானாள்.    

No comments: