Thursday, October 1, 2020

"விச்சுளிப் பாய்ச்சல் -5" (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)


 

அந்த விச்சுளிப் பாயும் பெண்ணீன் விச்சுளிப் பாய்ச்சலை மட்டுமின்றி..அவள் அழகைனையும் காண ஆடவர்கள் கண்கள் விரும்பிக் கொண்டிருப்பதை அவர்களுடன் வந்த மனைவியர்கள் உணர்ந்தார்கள்.


பாண்டியனின் மனைவியும்..மனதிற்குள் "அடடா..இவள் எவ்வளவு அழகு" என வியந்தாள்.அடிக்கடி மன்னனைப் பார்த்தாள்.ம்ன்னனாய் இருந்தால் என்ன, அவனும் ஆடவன்தானே! அவள் அழகை ஆசைத் தீர பார்த்துக் கொண்டிருந்தான்.


அவனின் கண்கள் வேறு எந்தப் பக்கமும் பாராது, அவளையேப் பார்த்துக் கொண்டிருப்பதை எண்ணிய அரசி அவனை தன் பக்கம் திருப்ப முயன்றாள்.


அந்த கழைக்கூத்தில் அவளின் ஒவ்வொரு விளையாட்டினையும் மக்கள் ரசித்தனர். இப்போது அவளின் விச்சுளிப் பாய்ச்சல் மட்டுமே மீதமிருந்தது.அதற்கான ஆயத்தங்களைக் குழுவினர் செய்து கொண்டிருந்தனர்.


ஒருவேளை ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால்..அதற்காக, பாதுகாப்பாக அவர்கள் ஒரு முரட்டுப் படுதா ஒன்றை பிடித்தபடி நின்றனர்.தவறி விழுந்தால் அதன் மீது விழலாம்.ஆனால், அதுவும் பாதுகாப்பானது என சொல்லிவிட முடியாது.


பாண்டிய மன்னன் தன் கையில் இருந்த மோதிரம் ஒன்றை ,ஒருவனிடம் கொடுத்து..அவள் பாயும் போது அதை வீசச் சொன்னான்.அப்படி அவன் வீசுவதை, அவள் பாய்ந்து பிடிக்க வேண்டும்.


அரசியாரோ, "மோதிரம் வேண்டாம்.வேறு ஏதேனும் கொடுக்கலாமே! வேண்டுமானால் என் அணிகலன்களில் ஒன்றினைத் தருகிறேன்" என்றாள்.


மன்னன் அவளை, "எனக்கு எதைக் கொடுப்பது எனத் தெரியும்..நீ பேசாமல் இரு" எனக் கடிந்து கொண்டான்.


வீசி எறியும் பொருள் அதைப் பிடிக்கும் அப்பெண்ணுக்கே சொந்தம் என்பதால் மன்னனின் மோதிரம் அவளுக்கு செல்வதை ராணி விரும்பவில்லை.


இதுநாள் வரை தன்னைக் கடிந்து கொள்ளாத மன்னன் இப்போது கடிந்து கொள்வதைக் கண்டு அரசியாரின் அச்சம் அதிகரித்தது.அப்பெண்ணை மன்னன் மனம் நாடுகிறது..ஒரு கழைக்கூத்தியை அவன் விரும்புவதா"  அரசியின் உடல் நடுங்கியது.


இப்போது அப்பெண் கம்பத்தின் உச்சியில் பாய்ச்சலுக்குத் தயாராய் ஏறிக் கொண்டிருந்தாள்.


அவள் ஏறும் நளினம் தான் என்ன?அவள் உடல் மெழுகால் ஆனதோ?அவள் வலிமையினைப் பார்த்தால், இரும்பின் உரம் இருக்க வேண்டும்.ஆனாலும் வளைவும், நெளிவும் கொடி போலத்தான் இருக்கிறது  என்றெல்லாம் அரசிக்குத் தோன்றியது.


அவள் இப்போது கம்பத்தின் உச்சியில் இருந்தாள்.


அரசன் கொடுத்த மோதிரத்தை கீழே ஒருவன் பிடித்துக் கொண்டிருந்தான்.மீன் குத்திப் பறவையினைப் போல அவள் அந்த மோதிரத்தை அவனிடம் இருந்து பறித்துச் செல்ல வேண்டும்.


அப்போது, மன்னனின் பார்வையை அவளிடம் இருந்து விலக்க அரசியார் ஒரு தந்திரம் செய்தாள்..


அந்த தந்திரம்..எதிர்பாராத நிகழ்ச்சிகளெல்லாம் நடைபெற வித்திட்டவிட்டதை விதி என்று தானே சொல்ல வேண்டும்.

No comments: