Tuesday, July 17, 2012

ஜனாதிபதி தேர்தல்: மம்தா அறிவிப்பு



 குடியரசுத் தலைவர் தேர்தலில் பல திருப்பங்களை ஏற்படுத்தி வந்த மமதா பானர்ஜி தமது இறுதி முடிவில் அதிரடியாக ஒரு பல்டி அடித்திருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பற்றி பின்னர் அறிவிப்பதாகவும் மமதா கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் தமது கட்சியினருடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மமதா கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாமைத்தான் நிறுத்த விரும்பினேன்.ஆனால் இதர கட்சிகளின் ஆதரவு அதற்கு கிடைக்கவில்லை. தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தாலும் திரிணாமுல் காங்கிரஸின் வாக்குகள் வீணாகிவிடும்.

பிரணாப் முகர்ஜியை ஆதரிக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்கும் கேட்டுக் கொண்டார்.பிரணாப்புக்கு வாக்களிக்க விருப்பம் இல்லை. இருப்பினும் மக்களின் விருப்பத்துக்காக பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறோம். மேலும் கூட்டணி நெருக்கடியால் இந்த முடிவை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார் அவர்.

முன்னதாக குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜியை வேறுவழியில்லாமல் ஆதரிப்பதாக மமதா கூறியுள்ளார். அதே நேரத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக எந்த முடிவையும் அவர் அறிவிக்கவில்லை. அது தொடர்பாக பின்னர் அறிவிப்பதாகவும் மமதா கூறியுள்ளார்.

மமதாவின் இந்த அறிவிப்புக்கு பிரணாப் முகர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.


Sunday, July 15, 2012

ஜனாதிபதி தேர்தலும்..திருமங்கலம் ஃபார்முலாவும்...




பல ஆண்டுகளாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் வழக்கத்தை அனைத்து கட்சிகளும் செய்து வந்தாலும், திருமங்கலம் இடைத் தேர்தலுக்குப் பிறகே, அப்படிப்பட்ட செயலில் வெல்லும் கட்சி திருமங்கலம் ஃபார்முலாவில் வென்றதாக ஊடகங்கள் சொல்லின.

கிட்டத்தட்ட அதே நிலை இன்றைய ஜனாதிபதி தேர்தலில் நடை பெற உள்ளது.

என்ன ..ஒரு வித்தியாசம்...தேர்தல்களில் மக்களின் வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டன..

ஆனால் இத்தேர்தலில் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வாங்கப்படுகிறார்கள்..அக்கட்சியின் மூலம்...அதாவது அக்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி என கோடிக்கணக்கில் வழங்கப் படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் பீகாரில் நிதிஷ்குமார் ஆதரிப்பதால் சிறப்பு நிதி வழங்கப்பட்டது.உத்தரபிரதேசத்திற்கும், முலாயம் சிங் ஆதரவு கிடைத்துள்ளதால் நிதி வழங்கப்பட உள்ளது.

மம்தா ஆதரவு கிடைக்குமேயாயின்..மேற்கு வங்கத்திற்கும் அவர் கேட்கும் நிதி வழங்க மைய அரசு தயாராய் இருக்கும்.

சாதாரண வாக்காளர் ஓட்டு போட சில ஆயிரம்...

மாநில அரசு ஆதரிக்க பல கோடி.

வாழ்க இந்திய ஜனநாயகம்.


(செய்தி - உத்தரப்பிரதேசத்திற்கு கிட்டத்தட்ட 450 பில்லியன் ரூபாய்க்கான ஃபைனான்சியல் பேக்கேஜ் தர மைய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாம்.இது ஜனாதிபதி தேர்தலில் மைய அரசை ஆதரித்ததற்காகவும், எதிர்காலத்தில் காங்கிரஸ் அரசுக்கு ஏதேனும் சிக்கல் வந்தால் காக்கவும்தானாம்)

Friday, July 13, 2012

இதயமில்லா ரயில்வே ஊழியர்..




 The General Manager                                                                      12.07.2012
Southern Railway
Chennai 600 003.


Sir,

Sub: Heartless Railway Employee – Punishable Action Requested.

Marina an employee at the Saidapet Railway Station behaves recklessly with a Differently Abled ticket buyer. The visually impaired    Mr.  Dharmaraj   was asked to go back and come in the queue every time he reached the window to buy his ticket. This was done in spite of   Mr.  Dharmaraj strictly following the queue pattern. When, another visually impaired person and our association vice president Mr.  Elumalai questioned it she answered callously saying that she will not issue any ticket come what may. All along she was issuing season rickets.

Another employee Prabhu joined hands with Marina to say that the ticket will not be issued to Mr.  Dharmaraj until he goes back to the tail end of the queue. This went on 11/07/2012 from 3pm to 4 52 pm and finally Mr.  Dharmaraj got his ticket.

All this took place in broad daylight with many men and women standing there. No body bothered to intervene, which shows the utter indifference pervading among humanity. A visually impaired person takes the complaint to the Station Master. Another Railway employee seated in the office admits to know of the rude behavior of Marina, but the Station Master does not express anything and seems to have taken no action against the rude Marina

The Differently Abled cannot be taken for granted and their self respect cannot be insulted in such a mean way. We request you to take immediate action has to be taken against Marina and Prabu.

If strict punishable action is not taken against them, a protest by disabled citizens will be organized in front of Southern Railway head office.

Thank you Sir.

Yours truly,

S. Namburajan-94442 95994
State Secretary.
Copy to: The DRM, Chennai Divisaion.



--
S. NAMBURAJAN
State Secretary, Tamilnadu Assn for the Rights of
All Types of Differently Abled & Caregivers - TARATDAC
New No.69, VGP Road, West Saidapet, Chennai 600 015.
# 044-23713161   Fax: 044-23715491    94442-95994

(இந்த செய்தி எனக்கு மெயிலில் வந்தது.விமல்வித்யா என்பவர் அனுப்பியிருந்தார்.அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.)




Thursday, July 12, 2012

'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை கிழித்த தமிழக காங்கிரஸார்!



 நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகியுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்தது டைம் பத்திரிக்கை. இந்தியாவைச் சேர்ந்தது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தால் அவர்களைப் பார்த்து அனைவரும் சிரிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
தமிழக இளைஞர் காங்கிரஸார் நேற்று சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் முன்பு திரண்டனர். அப்போது கைகளில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களை வைத்திருந்தனர். இந்தப் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்கள், இது என்ன டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை கையில் வைத்துள்ளீர்கள் என்று காங்கிரஸாரிடம் கேட்டபோது, இந்தப் பத்திரிக்கைதானே நமது பிரதமரை செயல் திறன் இல்லாதவர் என்று கூறியது என்று கோபமாக கேட்டனர்.
அதற்குப் பத்திரிக்கையாளர்கள் அட ஏங்க நீங்க வேற, இது வேற பத்திரிக்கை, அது வேறு பத்திரிக்கை, இரண்டும் வேறு வேறு நிறுவனம் என்று விளக்கினர். ஆனால் அதை கேட்க மறுத்த காங்கிரஸார் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். கைகளில் இருந்த டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை தாறுமாறாக கிழித்தும், காலில் போட்டு மிதித்தும் தங்களது எதிர்ப்பைக் காட்டி கோஷம் போட்டனர்.
ஆனால் நடந்த தவறை உணர்ந்து கொகண்ட மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ராம்குமார் இதுகுறித்து விளக்குகையில், சில தொண்டர்கள் தவறுதலாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களை கொண்டு வந்து விட்டனர். போராட்டத்திற்கு வரும் அவசரத்தில் இந்தத் தவறு நடந்து விட்டது. இருப்பினும் பெரும்பாலானவர்கள் கையில் டைம் பத்திரிகைதான் இருந்தது என்று கூறி சமாளித்தார்.
போராட்டம் குறித்து விளக்கிய மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், நாங்கள் எந்த மீ்டியாவுக்கும் எதிரானவர்கள் இல்லை. அமெரிக்க தூதரக அதிகாரிகளை சந்திக்கவே நாங்கள் திட்டமிட்டு வந்தோம். டைம் பத்திரிக்கை இந்தியத் தலைவர்களை தாக்கி எழுதுவதையே பிழைப்பாக கொண்டுள்ளது. முன்பு வாஜ்பாயை விமர்சித்து கடுமையாக எழுதியது. தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்துள்ளது. இது கண்டனத்துக்குரியது என்றார் அவர்.

நன்றி தட்ஸ்தமிழ்


Monday, July 9, 2012

எப்படி இருந்த பிரணாப்...! இப்போது இப்படி..




பழம்பெரும் எழுத்தாளர், பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார், எழுதியுள்ள பியான்ட் தி லைன்ஸ் என்ற சுயசரிதையில் மெளன்ட்பேட்டன் முதல் மன்மோகன் சிங் வரை பல தலைவர்கள் குறித்த பல அரிய தகவல்களை தொகுத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி குறித்து நய்யார் குறிப்பிட்டுள்ள ஒரு சுவாரஸ்யமான தகவல்..
அப்போது நான் ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கையில் ரெசிடென்ட் எடிட்டராக இருந்தேன். எனக்கு பிரணாப் முகர்ஜியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தனது வீட்டுக்கு வர வேண்டும் என்றும் தன்னுடன் டீ சாப்பிட வேண்டும் என்றும் அவர் அழைத்தார். அப்போது அவர் எந்த அரசுப் பதவியிலும் இல்லை.
நான், எனது மனைவியுடன் பிரணாப் வீட்டுக்குச் சென்றேன். அவரது வீட்டுக்குள் போனபோது ஹாலில் எந்தவிதமான பர்னிச்சரையும் பார்க்க முடியவில்லை. உட்காரக் கூட போதுமான சேர்கள் இல்லை, ரொம்ப ரொம்ப குறைவான சேர்களே இருந்தன. வீட்டில் வேலைக்காரர்கள் கூட யாரும் இல்லை. வீடு முழுக்க எளிமை நிரம்பி வழிந்தது. நான், எனது மனைவி மற்றும் பிரணாப் ஆகிய மூவரும் தரையில்தான் அமர்ந்தோம். பேசிக் கொண்டே டீ சாப்பிட்டோம்.

பிரணாப் முகர்ஜியின் மனைவி ஒரு டான்ஸர். ஆனால் அங்கீகாரம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருந்தார். பிரணாப் என்னிடம் பேசுகையில், தனது மனைவிக்கு ஒரு நல்ல விளம்பரத்தைத் தேடித் தருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அப்போதுதான் தெரிந்தது, ஏன் என்னை அவர் கூப்பிட்டார் என்று.
சில வருடங்கள் ஓடின. 'மிசா' முடிந்திருந்த நேரம். இப்போது மீண்டும் பிரணாப் முகர்ஜியை சந்தித்தேன். அதே பிரணாப் முகர்ஜிதான், ஆனால் வீடுதான் மாறிப் போயிருந்தது. வீடு நிறைய ஸ்டைலான பர்னிச்சர்கள் நிரம்பி வழிந்தன. விலை உயர்ந்த தரை விரிப்புகள் பளபளவென தரைகளை அலங்கரித்தன. எங்கு பார்த்தாலும் ஆடம்பரம் கொட்டிக் கிடந்தது. அப்போது பிரணாப் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தார்....!!

(நன்றி தட்ஸ்தமிழ்)


Sunday, July 8, 2012

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் 0





 உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சி மேயர் பதவிகளை பாரதிய ஜனதா கைப்பற்றியது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் 12 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 10 மாநகராட்சி மேயர் பதவிகளை அள்ளிச் சென்றது. லக்னோ, மீரட், கான்பூர், ஆக்ரா, வாரணாசி, ஜான்சி, கோரக்பூர், அலிகார், மொரதாபாத், காஜியாபாத் ஆகியவை பாஜக வசமாயின.

மற்ற 2 இடங்களில் அலகாபாத் மாநகராட்சி மேயர் பதவியை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் அபிலாஷா குப்தா கைப்பற்றி உள்ளார். இவர் மாநில முன்னாள் அமைச்சர் நந்த் கோபால் குப்தாவின் மனைவி ஆவார். பரேலி மேயர் பதவியை ஆளும் சமாஜ்வாடி கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ஐ.எஸ். டோமர் கைப்பற்றி உள்ளார்.

சில மாதங்களுக்கு முன் நடந்த பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இப்போது மாநகராட்சி மேயர் தேர்தலில் அக்கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.


பிரபல பதிவரின் தந்தையார் அமரர் ஆனார்




பிரபல பதிவரும், எழுத்தாளருமான ஷைலஜா அவர்களின் தந்தையும். முதுபெரும் எழுத்தாளருமான ஏ.எஸ்.ராகவன் காலமானார்

 எழுத்தாளர் ஏ.எஸ்.ராகவன் சென்னையில் இன்று மதியம் அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 85.
1960 - 70 களில் ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளிலும் சிறுகதைகள், தொடர்கதைகள், குறுந்தொடர்கள் எழுதியவர். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்ற இவர், எழுத்தாளராக மட்டுமல்லாமல் ஓர் சமூக ஆர்வலராகவும் விளங்கியவர். இவர் சென்னை நங்கநல்லூரில் வசித்துவந்தார்.
மறைந்த ஏ.எஸ்.ராகவன், எழுத்தாளர்கள் ஷைலஜா, ராஜரிஜி ஆகியோரின் தந்தை. எழுத்தாளர் இந்திராசௌந்தர்ராஜனின் பெரியப்பாவுமாவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
ஷைலஜா, ராஜரிஷி ஆகியோருக்கு இப்பிரிவை தாங்கும் திறனை அளிக்க இயற்கையை வேண்டுகிறோம்.



Friday, July 6, 2012

தாம்பரத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் பயிற்சி:




தமிழ்நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால் தாம்பரம் விமானப் படை தளத்தில் பயிற்சி பெற்று வந்த 9 சிங்கள வீரர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இந்தியாவின் வேறு ஒரு இடத்தில் பயிற்சி வழங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சார்க் நாடுகளின் விமானப் படை வீரர்களுக்கு தொழில்நுட்பட பயிற்சி சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப் படை தளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த பயிற்சி தொடங்கியது. இதில் சிங்கள வீரர்கள் 9 பேரும் இடம்பெற்றிருந்தனர். இதற்கு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தாம்பரம் விமானப் படை தளத்தை முற்றுகையிட்டு மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி போராட்டமும் நடத்தின. மத்திய அமைச்சர் வாசனும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தாம்பரம் விமானப் படை தளத்தில் பயிற்சி பெற்ற 9 சிங்கள வீரர்களையும் வெளியேற்றவும் அவர்களுக்கு வேறு ஒரு இடத்தில் பயிற்சி வழங்கவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

டிஸ்கி- பெங்களூருவில் பயிற்சிக்கு மாற்றப்பட்டனர் அவர்கள். மத்திய அமைச்சர் வாசன் எதிர்ப்பு, கலைஞர் ஆட்சேபம்...ம்..ஹீம்.. என்ன பிரயோசனம்...எருமை மாட்டின் மீது பெய்யும் மழை..என எருமையைக் கேவலப்படுத்த நான் தயாரில்லை.



Monday, July 2, 2012

தர்மம் - குறும்படம்




கலைஞர் டீவியில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் ஒலி/ஒளீ பரப்பான குறுந்தொடர்.

இதன் கரு, படமாக்கியவிதம் அனைத்தும் சிறப்பு.இதை நீங்களும் காண வேண்டும் என்பதால் இந்த பதிவு


பிரணாப் வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல்





 குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய திருப்பமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியின் மனுவை ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பு மனு பரிசீலனை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் முடிந்து இன்று வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக, பிஜூ ஜனதாதளம் மற்றும் பாஜக ஆதரவு வேட்பாளரான சங்மா திடீரென ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
அதாவது மத்திய அரசின் இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு (Indian Statistical Institute) தலைவராக இன்னமும் பிரணாப் முகர்ஜிதான் பதவி வகித்து வருகிறார். குடியரசுத் தலைவர் தேர்தல் விதிமுறைகளின்படிப் பார்த்தால் பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு செல்லாது என்று ஒரு போடு போட்டார். இதைக் கேட்ட தேர்தல் அதிகாரியான மாநிலங்களவைச் செயலர் ஒரு கணம் ஷாக்கிப் போனார். வேறுவழியின்றி பிரணாப்பிடம் விளக்கம் கேட்கிறோம் என்று கூறி வேட்பு மனு பரிசீலனையை நாளைக்கு ஒத்திவைத்துவிட்டனர்.
சுப்பிரமணியசாமி அதிரடி
இதனிடையே டிவிட்டரில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, "பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு நிராகரிக்கப்படும்? வேட்புமனு பரிசீலனை திடீரென நாளைக்கு ஒத்திவைப்பு...ரகசியமாக பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்து வருகிறார்" என்று தட்டிவிட்டிருக்கிறார்.
ஒருவேளை சங்மாவுக்கு போட்டுக் கொடுத்ததே சுப்பிரமணியசாமியாகவும் இருக்கலாம். அதே நேரத்தில் எப்படியும் தேர்தலில் அதிசயம் நிகழ்ந்து வெற்றி பெறுவேன் என்று சங்மா கூறிவந்தார். பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு நிராகரிக்கப்படும் நிலையில் சங்மாவின் ஆருடம் பலித்துவிடும்! நாட்டின் அரசியலில் பெரும்பரபரப்பும் ஏற்பட்டுவிடும்!

(நன்றி - தட்ஸ்தமிழ்)


Friday, June 29, 2012

சகுனி வெற்றி படமா..?




சகுனி படம் வெளியாவதற்கு முன் அதற்கு கொடுக்கப்பட்ட பில்டப் எவ்வளவு...

வழக்கம் போல விஜய் டிவி அதில் சம்பந்தப் பட்டவர்களை, தங்கள் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கச் சொன்னது என்ன..அப்படி பங்கேற்ற கலைஞர்கள் படத்தை ஆகா..ஓகோ என்று சொன்னதென்ன..

கடைசில் படம்..பத்தோடு ..பதினொன்றாக....

ம்ஹூம்..பதினொன்று என்று சொல்லக் கூட மனமில்லை..

மிகவும் சராசரியான அரைவேக்காடு பணம்..

ரயில்வே மேம்பாலம் கட்ட தங்கள் வீடு இடிபடும் என அதைக்காக்க சென்னை வந்து அரசியல்வாதிகளை சந்திக்க மூயன்று, கடைசியில் தானே அரசியலில் நுழையும்  காட்சிகள்... தன் கல்யாண மண்டபம் மேம்பாலம் அமைக்க இடிக்கப்பட்ட ஒருவரை சுட்டிக்காட்டவில்லை என்பதை நம்ப வேண்டும்..

இப்படி..ஆங்காங்கே..நடைபெறும், நடைபெற்ற அரசியல் செய்திகளை திரட்டி கொடுக்க முயன்றுள்ளவருக்கு..முக்கியமாக மேயர் பதவி அனைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது என தெரியாமல் போனதேன்.

ஊருக்கே சாப்பாடு போட்டு தன் சொத்துகளை இழந்த குடும்பம், மக்களுக்கு உதவ வரும் மேம்பாலத்திற்கு தன் வீட்டைத் தர மறுக்குமா...வேறு இடமில்லை என வாதாடினாலும்..அரசு இழப்பீடு தொகை கொடுக்குமே..

அரசியலில் ஈடுபடுவது, அரசை பிடிப்பது என எல்லாம் இலகுவாக நடப்பதைப் பார்த்தால்...2001,2006,2011 ஆகிய ஆண்டுகளில் நான் தான் முதல்வர் என்று சொல்லிவந்த அரசியல் தலைவர்கள் 2016ல் முதல்வராக வேண்டும் என்றால் கமலை (கார்த்தி) பிடித்துக் கொள்ளுங்கள்.

எந்த லாஜிக்கும் இல்லாமல், படம் பார்ப்பவர் காதுகளிலெல்லாம் பூவை சுற்றி அனுப்பும் இப்படம் வெற்றி படமா..

1154 திரையரங்குகளில் வெளியாகி இன்னும் சில நாட்கள் ஓடப்போகும் இப்படம் வசூலில் வெற்றி அடைந்திருக்கும்..ஆனால்...தரத்தில்..

வழக்குஎண்..சென்னையில் மூன்றே திரையரங்குகளில் சில காட்சிகளே ஓடிக்கொண்டிருக்கிறது..அப்படியாயின்..அது தோல்வி படமா..கண்டிப்பாக இல்லை

படத்தின் வெற்றி வசூலை வைத்து கணக்கிடப்படுவதில்லை எனில் சகுனி ஒரு தோல்விப்படமே  



Thursday, June 28, 2012

பேருந்து ஓட்டுநர்கள்....




எனக்கு முற் பிறப்பு...அடுத்த பிறப்பு ஆகியவைகளில் நம்பிக்கையில்லை..ஆயினும் அப்படி ஒன்று இருந்தால்...(எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கையில்லை..இருந்தாலும் என் ஜாதகம் அப்படி..என கலைஞர் சொல்வது போல அல்ல நான் இப்படி சொல்வது..கமல், கடவுள் இருந்தால் நல்லாயிருக்கும் என்பது போல)..சென்ற பிறவியில் அதிக பாவம் செய்தவர்களாய் இருந்தால்தான் இப்பிறவியில் பேருந்து ஓட்டுநர்களாக இருப்பார்கள் என்பேன்.

சென்னை போன்ற நகரில்..போக்குவரத்து நெரிசல், மெட்ரோ ரயிலுக்கான பணி என ஆங்காங்கே சுருங்கிய சாலைகள்..இதில்..கிட்டத்தட்ட 65 பயணிகள் பயணம் செய்ய வேண்டிய பேருந்தில்..100க்கும் மேல் பயணம்.. ஒரே டிரிப் என்றாலும் ஓகே..

ஆனால் காலை 5 மணி அளவில் துவங்கும் பணி..மாலை 2 மணி யளவில் முடிவு பெறுகிறது.(சில தடங்களில் முழு நாளும் வேல..அடுத்த நாள் ஓய்வு).உணவு ..கிடைக்கும் இடைவேளையில் முடித்துக் கொள்ளவேண்டும்.கொளுத்தும் வெயிலில் ..பேருந்தின் எஞ்சினிலிருந்து வெளியாகும் வெப்பம் வேறு...ஒரு டிரிப் என்றாலே தாவு தீர்ந்திடும்..ஆனால் இவர்கள் நாலு ஐந்து டிரிப்கள் அடிக்க வேண்டும்.

இடையில் பயணிகளுடன் சண்டையையும் சமாளிக்க வேண்டும்...

ஒருநாள் இப்படி பணி செய்தாலே..உலகே வெறுத்துவிடும்..

எல்லாமே ஒரு ஜான் வயிற்றுக்குத்தான்..

இதனிடையே..காலையில் வேலைக்குக் கிளம்பினால்..மாலை வீடு வந்து சேர்வது நிச்சயமில்லை..

ஓட்டுநர்கள்..அலைபேசியில் பேசியதால் தான் விபத்து என..ஒரு விபத்து எனில் உடனே சொல்லப்படும் கருத்து..ஆனால் விசாரணையில் விபத்துக்கான காரணம் வேறாய் இருக்கும்.

அண்ணா மேம்பால விபத்தும்..காரணம் இதையேத்தான் சொல்கிறது..அதே நேரத்தில்..சௌகரியமாக அமர்ந்து வண்டியை ஓட்ட வேண்டியவர் இருக்கை ..நழுவிவிடாமல் இருக்க கயிறு போட்டு கட்டப்பட்டிருந்ததை மறந்துவிடுகிறோம்.

ஊழியர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றனவா? அது முக்கியமில்லையா...

இதனால்..நான் ஓட்டுநர்களை ஆதரிப்பதாக எண்ண வேண்டாம்..

அவர்கள் பணிச்சுமையை உணர்ந்து...அவர்கள் மீதும் சிறிதேனும் பரிதாபப் படுங்கள்..

விபத்துகளுக்கான காரணத்தை..எடுத்தேன்..கவுத்தேன் பாணியில்...ஓட்டுநர்தான் விபத்துக்கான காரணம் என உடனடியாக பழியை அவர் மீது சுமத்துவதை தவிருங்கள்.

ஓட்டுநர்களும், வண்டியை எடுக்கையில்..பயணிக்கும் அனைத்து பயணிகள் உயிரும் அவர் கையில் உள்ளது என்பதை உணர வேண்டும்.

ஆமாம்..சமீபத்திய விபத்தில்..நடத்துனரை கைது செய்ய ..அவர் என்ன செய்தார்?


Thursday, June 21, 2012

காணாமல் போன அமைச்சர்கள்...




அம்மா கோட நாடு போனதும்..அமைச்சர்கள் 32 பேரை காணவில்லை.இவர்கள் எங்கு போய் இருப்பார்கள் என சரடு நாளிதழ் புலனாய்வுப் பிரிவு தேடுதலில் இறங்கியது.

அப்போது நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து அவர்கள் தில்லியில் முகாம் இட்டுள்ளதாகத் தெரிகிறது.

சரடு நிருபரிடம் ஒரு அமைச்சர் அகப்பட அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது.அந்த அமைச்சர் கூறியதிலிருந்து....

'புதுக்கோட்டையில் நடந்த இடைத்தேர்தலில்..எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் டிபாசிட் இழக்க வேண்டும் என விரும்பியதாகவும்..ஆனால் எதிர்த்த வேட்பாளர் டிபாசிட் பெற்றதால் அம்மாவிடம்..அங்கு முகாமிட்டிருந்த அனைத்து அமைச்சர்களும்..அர்ச்சனை பெற்றதாகவும் சொன்னார்.

இந்நிலையில் அம்மா ஊரில் இல்லாத நிலையில்..அம்மாவின் நன்மதிப்பைப் பெற 32 அமைச்சர்களும் தில்லியில் முகாமிட்டுள்ளதாகவும்..குடியரசுத் தேர்தலில் அம்மாவின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை டிபாசிட் இழக்க வைத்து..அம்மாவிற்கு எதிர்பாராத ஆச்சரியத்தை அமைச்சர்கள் குழு அளிக்கப் போவதாகவும் கூறினார்.

அடடா...இவர்களின் கட்சியின் பற்று..தம்மை மெய்சிலிர்க்க வைத்ததாக சரடு நிருபர் தெரிவிக்கிறார்.

இதனிடையே கலைஞர் தான் ஆதரிக்கும் வேட்பாளர் தோற்றால்..அதற்கான காரணம் என்ன சொல்லலாம் என அறிய செயற்குழு கூட்டத்தைக் கூட்டுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விஜய்காந்தோ..தேர்தலை தான் புறக்கணிக்கக் காரணம்..சோனியா தன்னை திராணி இருந்தால் தேர்தலில் நிற்கட்டும் எனக் கூறாததே காரணம் என்றார்.
   


Saturday, June 16, 2012

கலாம் என்றால் கலகக்காரரா.....





கலாம் என்றாம் கலகம் என்று பொருள் என்ற முறையில்..அப்துல் கலாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக வரும் செய்திகள் பற்றி கேட்ட போது கலைஞர் கூறியுள்ளார்.

கலகம் என்று சொன்னதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது..இஸ்லாமிய சகோதரர்களும் வெகுண்டு எழுகின்றனர்.

ஆனால்..கலைஞர் சொன்னதன் பொருள்...இந்து இதிகாசம்,புராணங்களில் வரும் நாரதரை கலகக்காரர் என கூறுவதுண்டு.அதே சமயம் நாரதர் செய்யும் கலகம் அனைத்தும் நன்மையிலேயே முடியும் என்றும் கூறுவர்.

கலைஞரும் அந்த அர்த்தத்தில்தான் கலாம் என்றால் கலகம் என்று கூறியுள்ளார்..அதாவது அப்துல் கலாமால் நல்லதே நடக்கும் என மக்கள் உணரவேண்டும் என்பதே கலைஞரின் கருத்து..

எப்படி என் சமாளிப்பு....


Thursday, June 14, 2012

ரூ.86 கோடியில் கட்டிய பங்களாவை பராமரிக்க ரூ.86.56 கோடி செலவு செய்த மாயாவதி





முன்னாள் உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி தான் முதல்வராக இருந்த போது தனது பங்களாவை பராமரிக்க மட்டும் ரூ.86.56 கோடி செலவு செய்துள்ளார் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநில சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆளும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ரவிதாஸ் மல்ஹோத்ரா முன்னாள் முதல்வர் மாயாவதியின் பிரமாண்ட பங்களா குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் அபிஷேக் மிஸ்ரா கூறுகையில்,

மாயாவதி தான் முதல்வராக இருக்கையில் மால் அவென்யூவில் உள்ள பங்களாவை பராமரிக்க மட்டும் ரூ.86.56 கோடி செலவு செய்துள்ளார். அதிலும் எலக்ட்ரிக்கல் பணிக்கு மட்டும் ரூ.20.09 லட்சம் செலவு செய்துள்ளார். இது குறித்து இதுவரை எந்த புகாரும் வராததால் விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை என்றார்.

5 ஏக்கரில் அமைந்துள்ள மாயாவதியின் பங்களாவை கட்ட அரசு கஜானாவில் இருந்து ரூ.86 கோடி எடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக ரூ.86 கோடியில் கட்டிய பங்களாவை பராமரிக்க ரூ.86.56 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

(தகவல் தட்ஸ்தமிழ்)

டிஸ்கி - இதைப் போய் பிரமாதமா சொல்றாங்க..60 கோடி ஃபோபர்ஸ் ஊழலுக்கு 200 கோடி செலவு செஞ்சு விசாரணைக் கமிஷன் அமைச்சவங்க நாங்க..


Wednesday, June 13, 2012

எஸ்.எம்.எஸ் பரிசு: கொள்ளை லாபம் அடிக்கும் டிவி- செல்போன் நிறுவனங்கள்!




லாட்டரி சீட்டு மோகம் ஒழிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தற்போது புதிதாக எஸ்.எம்.எஸ் அனுப்புங்க, பரிசை வெல்லுங்க என்ற கோஷத்துடன் களம் இறங்கியுள்ளன தொலைக்காட்சி நிறுவனங்கள்.

மக்களின் பணம் சம்பாதிக்கும் பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு, டி.வி.க்கள் வெவ்வேறு பெயர்களில், லாட்டரிக்கு இணையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. எப்படி எல்லாம் நம் பணம் பறிபோகிறது என்பதைப் பற்றி சின்னதாய் ஒரு ரவுண்ட் அப்.

கேம் ஷோவோ, ரியாலிட்டி ஷோ எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் பார்வையாளர்களையும் பங்கேற்கச் செய்கிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களின் பணத்தை கூட்டுக் கொள்ளை அடிக்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

உதாரணமாக கையில் ஒரு கோடி நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு ஒரு கேள்வியை கேட்பார்கள். சரியான விடையை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்ப வேண்டும் என்று கூறுவார்கள். அதை நம்பி உடனே லட்சோப லட்சம் எஸ்.எம்.எஸ்கள் பறக்கும். பரிசு என்னவோ பத்து பேருக்குதான் போகும். ஆனால் இந்த எஸ்.எம்.எஸ் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்கள், அலைபேசி நிறுவனங்கள், தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கைகோத்து வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான லாபம் அடித்து வருகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.

முன்பெல்லாம் பரிசுக்கு உரிய பதிலை போஸ்ட் கார்டில் எழுத வேண்டும் என்று கூறினார்கள். பின்னர் பரிசுக்குரிய விலை அதிகம் கொண்ட போஸ்ட் கார்டு விற்பனைக்கு வந்தது. அது மத்திய அரசின் தபால் துறையின் வருமானத்தை அதிகரித்தது. ஆனால் இன்றைக்கோ எந்த தொலைக்காட்சி என்றாலும் ஏதாவது ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்து, குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று சொல்வதை நம்பி பல லட்சம் பேர் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். அதில் கிடைக்கும் வருமானம், நிறுவனம் தரப் போகும் பரிசுத் தொகைக்கான செலவைவிட பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது என்பது பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் தெரியவில்லை.

கடந்த சில வாரங்களாக திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஓடவிட்டு அது தொடர்பான ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு விடை சொல்ல அழைக்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இதில் சரியான விடை எதுவாக இருக்கும் என்பதையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களே மறைமுகமாகக் கூறிவிடுகின்றனர். எனவே ரூ.5 ஆயிரம் பரிசுப் பணத்தைப் பெற்றுவிடும் ஆசையில் நேயர்கள் தொலைபேசியில் அழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகும் போதே, திரையின் கீழ் பாகத்தில் ஒரு தகவல், அடிவரியாக ஓடிக் கொண்டிருக்கிறது. ""உங்களின் தொலைபேசி அழைப்புக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.10 கட்டணம் ஆகும். அதிக நேரம் தொடர்பில் இருக்க விரும்பாதவர்கள், இணைப்பைத் துண்டித்துவிடவும்.''

திரையில் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொண்டால், உடனே நீங்கள் பதிலைக் கூறிவிட முடியாது. சில நிமிடங்கள் காத்திருந்த பிறகே, பதிலைக் கூற முடியும். இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், ""அழையுங்கள், உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம், பரிசை வென்றிடுங்கள்'' என்று தொடர்ந்து தூண்டிவிடும் வகையில் பேசுகிறார்கள்.

நீங்கள் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் உங்களுக்கு ரூ.20 போய்விடும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.14 வரையில் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்குப் போய்விடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு லட்சம் பேர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்துக் கொண்டாலும் மொத்த வருமானம் ரூ.20 லட்சம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு சுமார் ரூ.14 லட்சம் வருமானம். பரிசுத் தொகை உள்ளிட்ட எல்லா செலவும் சேர்த்தாலும் ரூ.2 லட்சம். மீதியெல்லாம் "கொள்ளை லாபம்.'

இதேபோல்தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பதிவு செய்ய குறைந்த பட்சம் 2 எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்கு செல்போன் நிறுவனங்களைப் பொருத்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.6.99 வரை ஆகும். பரிசுப் பணம் ஒரு கோடி ஆயிற்றே. போட்டியும் அதிகமாக இருக்கும்தானே. ஏழு கோடி தமிழரில் 10 லட்சம் பேர் இதற்கு முயற்சி செய்தாலும் தலா 2 எஸ்.எம்.எஸ். அனுப்புவதால் செல்போன் நிறுவனங்களுக்கு சராசரி வருமானம் ரூ.1 கோடி. நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் நிச்சயம். இப்படி ஏழு நாள்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நேயர்கள் பதில் அனுப்பி இதில் பங்கு பெறலாம்.

இதுதவிர நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் செய்வதில் கிடைக்கும் வருமானம், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு விளம்பர நிறுவனங்கள் தரும் செலவு என பார்த்தால் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள்.

இதேபோலத்தான் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் தங்களை தேர்ந்தெடுக்க எஸ்.எம்.எஸ் மூலம் ஓட்டுப் போடுங்க என்று கூறுகின்றனர். இதெல்லாம் நம் பணம் நம்மையறியாமலேயே கையை விட்டுப்போகிறது.

அறிவுத் திறனுக்குப் பரிசு என்றால் டோல் ப்ரி சேவையை அறிமுகம் செய்யலாமே?.

நன்றி - தட்ஸ்தமிழ்

Sunday, June 10, 2012

வெளிநாட்டில் பதுக்கியுள்ளது அனைத்தும் கறுப்பு பணமல்ல...-நிதி அமைச்சர்..




சட்டத்துக்கு முரணான செல்வத்தை வெளிநாடுகளில் பதுக்கிவைத்தால், அது தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு 37 நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அந்த நாடுகள் விவரங்களைத் தரட்டும். அதன் பின்னர் அது கறுப்புப் பணமா? இல்லையா? என்று முடிவு செய்யலாம்.

அந்த பணம் வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாகக் கூட இருக்கலாம். வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியப் பணத்தின் மதிப்பை அளவிட சிறிது காலமாகும்.

மத்திய அரசின் கைகள் கட்டப்பட்டுள்ளன. உணவுப் பொருள்களுக்கும் பெட்ரோல் பொருள்களுக்கும் மத்திய அரசு அதிக அளவில் மானியம் தர வேண்டியிருப்பதால், மாநில அரசுகள் கேட்கும் அளவுக்கெல்லாம் நிதிதர முடியவில்லை என்றார் அவர்.

கறுப்புப் பணம் தொடர்பாக அண்மையில் மக்களவையில் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தார். 97 பக்கம் கொண்ட அந்த வெள்ளை அறிக்கையில் கறுப்புப் பணம் வைத்திருப்போர் பெயர் எதுவும் குறிக்கப்படவில்லை.

டிஸ்கி - ஜனாதிபதிக்கான வேட்பாளர் தயார்..சிங்க்..சாங்க்..


Thursday, June 7, 2012

காந்திக்குப் பின் மிகச் சிறந்த இந்தியர் 50 பேர் பட்டியலில் ரஜினி!


தேசப் பிதா என கொண்டாடப்படும் காந்தியடிகளுக்குப் பிறகு இந்தியாவின் மிகச் சிறந்த மனிதர் யார் (Greatest Indian after Mahatma Gandhi)?
இந்தத் தலைப்பில் ஒரு வாக்கெடுப்பை நடத்தி வருகிறது ஹிஸ்டரி மற்றும் சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிகள். அவுட்லுக் பத்திரிகை ஆதரவுடன் இந்த வாக்கெடுப்பு நடக்கிறது.


தலைவர்களின் சர்வதேச புகழ், மக்கள் மீதான அவர்களின் தாக்கம், உதாரணத்தன்மை என பல விஷயங்களின் அடிப்படையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

பிபிசியின் வாக்கெடுப்பு விதிகளின் அடிப்படையில் நடத்தப்படும் இதில் 50 இந்திய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் பட்டேல், ஜவஹர்லால் நேரு, அன்னை தெரசா, அன்னை இந்திரா காந்தி, என தலைவர்களும் மனித நேய மாந்தர்களும் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் நமது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு நபரும் தனது பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி 10 தலைவர்களை வரிசைப்படுத்தலாம். அதாவது 10 வாக்குகளை அளிக்கலாம். இதுவரை 215332 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில், இப்போது 12வது இடத்தில் உள்ளார் ரஜினி. முதலிடத்தில் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளார். வாக்குகளின் அடிப்படையில் இந்த நிலை மாறிக் கொண்டிருக்கும்.

(தகவல் தட்ஸ்தமிழ்)



Wednesday, May 30, 2012

நான் வண்ணதாசன் அல்ல...




அழகிய கற்பனை ஒன்று

மனதில் தோன்ற

தாளை எடுத்து..வடித்தால்..

நினைத்ததில் பாதியைக் கூட

எழுத்தில் கொணர இயலவில்லை

ஆமாம்! நினைத்ததை

நினைத்தபடி எழுத

நான் வண்ணதாசனா..!!!

Monday, May 28, 2012

பாக்கியராஜின் பதில்..




இந்த வார பாக்யா (ஜூன் 1-7) இதழில் பாக்யாராஜின் கேள்வி பதில் பகுதியில் என்னைக் கவர்ந்த அவரது பதில்..

கேள்வி - தங்களைக் கவர்ந்த ஒரு தத்துவம்..?

பதில் - ஒரு நல்ல மனுஷன் எப்பவும் எல்லார்க்கும் இல்லேன்னு சொல்லாம எல்லா உதவியும் செய்வாரு.அவர் திடீர்னு ஒருநாள் நோய்வாய்ப் பட்டு இறந்து போனாரு.அப்ப அந்த ஊர்ல இருந்த ஒரு குருகிட்ட ஊரே போய் 'அவருக்கு எப்படி இப்படி நடக்கலாம்னு காரணம் கேட்டாங்க. அதுக்கு குரு சிரிச்சுகிட்டே ஒரு பூத்தொட்டியக் காட்டினாரு.அது விரிசல் விட்டு உடைஞ்சிருந்தது.தான் வளரக் காரணமாயிருந்த தொட்டியவே அந்த பூஞ்செடி உடைச்சிருச்சு.

அதாவது அது வளர போதுமானதா தொட்டி இல்லை.இப்ப செடியை எடுத்து வேற இடத்துல நடணும்.அதாவது இறந்தவர் உடல் பூந்தொட்டி மாதிரி.இறந்தவர் சேவை செடி மாதிரி.அதனால அந்த உடலிலிருந்து கடவுள் அவரை அப்புறப்படுத்தி வேறு விதமாக பிறக்க வைக்கப் போகிறார்னு அர்த்தம்.கூடிய சீக்கிரம் இது நடக்கும்' னாரு.ஜனங்களுக்கு இந்த விளக்கம் நியாயமாப்பட்டது.



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது- நாராயணசா‌‌‌மி





''முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது'' என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

மாநில விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாக ஏற்கனவே பல மாநிலங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே, முல்லைப் பெரியாறு தொடர்பாக தமிழக அரசும், கேரள அரசும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தால் மட்டுமே மத்திய அரசு தலையிடுவது குறித்து பரிசீலிக்கும் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.


டிஸ்கி- நல்லா சொன்னீங்க..இதைக் கேட்டும்.. தமிழக அரசை மைய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையில்தான் நடத்துகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரியவில்லையா..? மக்களே..

Friday, May 25, 2012

ஜனாதிபதிக்கான சிறந்த நபர் யார்..




ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல் பதவிக் காலம் முடிகிறது.

அடுத்த ஜனாதிபதிக்கான வேட்பாளர் யார்? என முடிவெடுக்க முடியாத நிலையில் இன்னமும் காங்கிரஸ் உள்ளது.

அனைத்து கட்சிகளும் ஏற் று கொள்ளும் வகையில் வேட்பாளர் இருக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர்.

ஜனாதிபதியாக வி.வி.கிரி இருந்த சமயம்..அந்த பதவி ரப்பர் ஸ்டேம்ப் என்ற பெயர் பெற்றது.

இன்றுள்ள நிலையில் அந்த பதவிக்கு ஏற்ற நபராக மன் மோஹன் சிங் மட்டுமே தெரிகிறார்.மைய அரசுடன் ஒத்து போவார்..அதே சமயம் வெளிநாடுகளுக்கு அடிக்கடி போய் வரவும் தயங்க மாட்டார்.

பேசாமல் காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை (எனக்கு ஹிந்தி தெரியாததால் பிரதமர் ஆக முடியாது என ஒரு சமயம் புலம்பியவர் இவர்) பிரதமர் ஆக்கி விட்டு..மன் மோகனை ஜனாதிபதி ஆக்கிவிடலாம்.


Thursday, May 24, 2012

'ஏ' ற்றம் தரும் 'ஏ' காரம்..






உயிர் நீ என்றான்

உயிரே நீ என்றாள்

கற்கண்டு நீ

கற்கண்டே நீ

வாழ்வு நீ

வாழ்வே நீ

'ஏ' காரங்கள்

"ஏ"ற்றமே தரும்

'ஏ" ஞ்சலே

Wednesday, May 23, 2012

+2 வில் மதிப்பெண்கள் குறைவா..அதனாலென்ன..




+2 முடிவுகள் வெளியாகி...மதிப்பெண்கள் தெரிந்து விட்டன.மேற்கொண்டு படிக்க மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டாலும்..அது ஒன்றே நம் வாழ்நாளைத் தீர்மானிப்பதில்லை என்பதை மாணவ மாணவிகள் உணர்ந்து கொண்டு..மனம் தளராது இருக்க வேண்டும்..
அவர்களுக்காக கீழே ஒரு வாசகத்தைக் கொடுத்துள்ளேன்..






Friday, May 18, 2012

மதனும்..விகடனின் குசும்பும்..




காலில் விழும் சமாச்சாரத்தில் மதனுக்கும், விகடனுக்கும் சர்ச்சை ஏற்பட்டு விகடனில் இனி மதனின் கேள்வி பதில் பகுதியும், கார்ட்டூனும் இடம் பெறாது விகடன் அறிவித்துள்ளது.

இது சம்பந்தமாக விகடன் எழுதுகையில்..'தற்போது மதன் இருக்கின்ற சூழ்நிலையில் 'ஹாய் மதன்" பகுதியை மட்டுமல்ல..கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்கு சாத்தியம் ஆகாது என முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.குறிப்பிட்ட ஒரு தரப்பை பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங்களையோ தவிர்த்துவிட்டு..செய்திகளையும் கருத்துகளையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என விகடன் கருதுகிறான்' என்றுள்ளது.

இப்படி எழுதும் விகடனும்..நமக்கேன் வம்பு..என்றவகையில் ரகசியமாக ஒரு வேலை செய்துள்ளது..

'த்னது பொக்கிஷம்' பக்கங்களில் (பக்கம் 67) தலைவனின் ஆசி..என்று போட்டு..1999ல் பா.ஜ.க. மத்திய அமைச்சரவையில் அமைச்சர் பதவி ஏற்பதற்கு முன்..கருணாநிதியிடம் ஆசி பெறும் டி.ஆர்.பாலு..என பாலு கலைஞரின் காலில் விழும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.




Thursday, May 17, 2012

விகடனிலிருந்து விலக்கப்பட்டார் மதன்!


 ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார், அதில் பல ஆண்டுகள் கார்ட்டூனிஸ்டாக, கேள்வி- பதில் பகுதி எழுதும் பொறுப்பிலிருந்த மதன்.

ஆனந்த விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் மதன். கார்ட்டூனிஸ்டாக நுழைந்து, எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், விகடன் குழும இதழ்களின் இணை ஆசிரியராக உயர்ந்தவர் மதன்.

அந்த பத்திரிகைகளில் மதன் எழுதிய தொடர்கள், கேள்வி பதில்கள் அவரை கார்ட்டூனிஸ்டிலிருந்து எழுத்தாளராக உயர்த்தின.

ஆனால் ஒரு கட்டத்தில், விகடனுக்கு வெளியிலும் பணியாற்ற முனைந்தார் மதன். அன்றைக்கு விஜய் மல்லையா நிர்வாகத்தில் இருந்த விஜய் டிவியில் இவர் நிகழ்ச்சிகள் செய்தார். மேலும் சினிமா படங்களுக்கும் வசனம் எழுத ஆரம்பித்தார்.

இந் நிலையில் விகடன் நிர்வாகத்துக்கும் அவருக்கும் பிரச்சனை வெடிக்க, 'golden handshake' என்ற முறையில் விகடனை மதன் சுமூகமாகவே பிரிந்தார்.

ஆனாலும் மதனின் கார்ட்டூன்கள் மற்றும் கேள்வி பதில் பகுதி மட்டும் தொடர்ந்து இடம்பெறும் என விகடன் அறிவித்திருந்தது. கடந்த இதழ்வரை மதனுக்காக இந்த இரு பகுதிகளும் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இவற்றுக்கு தனி வாசகர்களே உள்ளனர்.

இந்த நிலையில், 2.5.2012 விகடனில் மதன் கேள்வி பதில்கள் பகுதியில் வெளியான ஒரு புகைப்படம் விகடனிலிருந்தே மதனை வெளியேற்றியுள்ளது.

அந்தக் கேள்வியும் அதற்கு மதன் பதிலும்:

கேள்வி: உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?

பதில்: ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!

மேற்கண்ட கேள்வி- பதிலுக்குப் பொருத்தமாக, இன்றைய முதல்வர் ஜெயலலிதா காலில், ஒரு அமைச்சர் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் படம் இடம்பெற்றிருந்தது.

இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில், "பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் 'ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் - வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை.

2.5.2012 இதழில் 'காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!

ஜெயா டி.வியில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வியின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், 'அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.

முக்கியமான பிரச்சனைகள் எத்தனையோ சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்து கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.

...வரும் இதழிலேயே 'புகைப்படங்கள், லே- அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று கூறியிருந்தார் மதன் தனது கடிதத்தில்.

மதன் கேள்வி- விகடனின் அதிரடி பதில்...

இந்தக் கடிதத்துக்கு விளக்கம் அளித்து இந்த வார விகடனில் அதன் ஆசிரியர் கொடுத்துள்ள விளக்கமான பதில் இது...

மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

'ஹாய் மதன்' பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத- அதே சமயம், அந்தக் கேள்வி- பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.

அதேபோல், 'இது பொது அறிவுப் பகுதி மட்டுமே' என்று இப்போது மதன் குறிப்பிடும் 'ஹாய் மதன்' பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.

நடுநிலை இல்லை...

இதையெல்லாம் பார்க்கும்போது... தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், 'ஹாய் மதன்' பகுதியை மட்டும் அல்ல... கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு... செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.

எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி- பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார் விகடன் ஆசிரியர்.

இதன் மூலம் விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த மதன், முற்றாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பிரிவு நிச்சயம் இரு தரப்பினருக்கும் வருத்தமான விஷயம் தான்.

(நன்றி தட்ஸ்தமிழ்)

Wednesday, May 16, 2012

உங்களில் யாருக்கு நோமோபோபியா ?



உலகத்திலேயே மிகப்பெரிய பயம் என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்..?

ரொம்ப மூளையை கசக்காம தொடர்ந்து படிங்க...

உங்க போன் உங்க கிட்ட இல்லைனா உங்க ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்?

ஒரு நிமிடம் யோசித்து பாருங்க...

ஒரு பதற்றம், பயம், மன உளைச்சல் ...

இன்னும் சொல்லனும்னா...
அய்யயோ முக்கியமான கால் வருமே, நிறைய விஐபி காண்டாக்ட்ஸ் எல்லாம் இருக்கேன்னு நீங்கள் புலம்பூவீங்களா... கவலைப்படுவீங்களா...

இதுதாங்க உலகிலேயே மிகப்பெரிய பயம். இந்த பயத்தோடு நிறைய பேர் இருக்கிறார்களாம்.

இதை நாங்க சொல்லலைங்க... இங்கிலாந்தில் நடத்திய ஆய்வு ஒன்று இப்படி ஒரு தகவலை நமக்கு தருகிறது.

இந்த மாதிரி ஃபோன் காணாமல் போனால் பயப்படறதுக்கு பெயர் நோமோபோபியா.

அதாவது நோ மொபைல் போன் போபியா.

இந்த வியாதி உங்களுக்கு இருக்கிறதா என்று சந்தேகமிருந்தால் கீழ்காணும் சில அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா என்று சோதித்து பார்த்துக்கொள்ளுங்கள்.

* எப்பவுமே போன் சுவிட்ச் ஆப் செய்ய முடியாமை.
* மிஸ்டு கால், ஈமெயில், எஸ்.எம்.எஸ்சை அடிக்கடி பார்த்தல்
* போன் பேட்டரியை எப்பவும் முழுமையாக வைத்திருத்தல்
* பாத் ரூம் போகும் போது கூட கூடவே போனை கொண்டு செல்லுதல்

இந்த நோமோபோபியா நிறைய பேருக்கு உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
75 விழுக்காட்டினர் பாத்ரூமில் செல்போன் பயன்படுத்துகிறார்களாம். கேட்டால், மாடர்ன் செய்தித்தாள் என்று சொல்கிறார்களாம்.

தற்போது இங்கிலாந்தில் 1000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 66 விழுக்காட்டினரிடம் இந்த நோமோபோபியா இருப்பதாக அறிய முடிகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் இதேப்போன்ற ஆய்வை நடத்தியபோது, 53 விழுக்காட்டினர் போன் தொலைந்துபோனால் அச்சமடைய கூடிய வியாதி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்று ஆண்கள் அதிகமாக நோமோபோபொயாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று பெண்கள் அதிகாக உள்ளனர்
அதுவும் 18-லிருந்து 24 வயது வரை உள்ளவர்கள் தான் மொபைல் போனுக்கு அதிகம் அடிமையானவர்களாக உள்ளனர். இவர்களில் 77 விழுக்காட்டினர் சில நிமிடம் கூட போனை பிரிந்து இருக்க முடியவில்லையாம்.

இதேப்போன்று, 25-இருந்து 34 வயது வரை உள்ளவர்களில் 68 விழுக்காட்டினர் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், 75 விழுக்காட்டினர் பாத்ரூமில் செல்போன் பயன்படுத்துகிறார்களாம். கேட்டால், மாடர்ன் செய்தித்தாள் என்று சொல்கிறார்களாம்.

இதேப்போன்று, சராசரியாக ஒரு நாளைக்கு 34 முறை தங்கள் போனை எடுத்து சும்மாவே பார்த்து வைக்கின்றனராம்.

இதுகுறித்து ஆய்வு நடத்திய செகியூர் என்வாய் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான அன்டி கெம்ஷல் தெரிவிக்கும் போது, நாங்கள் 2008 ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்கள் தற்போது அப்படி தலைகீழாக உள்ளதாக கூறியுள்ளார். அதாவது, அன்று ஆண்கள் அதிகமாக நோமோபோபொயாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று பெண்கள் அதிகாக உள்ளனர் என்றார்.

தனது மெசேஜ்களை, பார்ட்னர் பார்த்துவிட்டால் அப்செட் ஆவோர் எண்ணிக்கை 49 விழுக்காடு உள்ளது. அதேசமயம், தனது போன் பாதுகாப்பு பற்றி பெரும்பாலானோர் கவலை படுவது இல்லையாம். வெறும் 46 விழுக்காட்டினர் மட்டுமே ரகசிய லாக் கோட் பாயன்படுத்துவதாகவும், 10 விழுக்காட்டினர் தனது தகவல்களை குறியீட்டு சொற்கள் மூலம் மறைத்து அனுப்புவதாக ஆய்வு கூறுகிறது.

இது இங்கிலாந்து நிலவரம்...
நம்ம ஊரில் இதுப்போன்ற வியாதி உள்ளவர்கள் எத்தனைப்பேரோ....?

தகவல் வெப்துனியா


பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர ராஜீவ்காந்தி விரும்பினார்-- கருணாநிதி






இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பினார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் எழுதிய 5 நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:

தமிழன் தலைகுனிந்து கிடப்பது ஜனநாயகத்தின் பெயரால் அல்ல. கடந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட முடிவுகளால் அல்ல. தேர்தல் தோல்வியைப் பற்றி கவலைப்படுகின்ற கட்சி அல்ல திராவிட முன்னேற்ற கழகம். நமக்குள்ளே இன ஒற்றுமை இல்லை. நமக்குள்ளே மொழி ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இதை மறுத்தும் பயனில்லை.

இலங்கை தமிழர்களுக்காக, ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்பதை இந்த நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக வைத்துக் கொண்டு வீரமணியிடமும், சுப.வீரபாண்டியனிடமும் உரையாடினேன். அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டப்பட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்துவிட்டு, எனக்கும் ஒரு தோதான தேதியில் சென்னையில் அமர்ந்து பேசி தமிழ் ஈழ, தனி ஈழ விடுதலைக்கான, டெசோ அமைப்பு மாநாட்டை சென்னையில் விரைவில் நடத்த இருக்கிறோம்.

திமுக சார்பில் ஆட்சியமைக்கப்பட்டு நான் முதல்வரானதும் மரியாதை நிமித்தமாக ராஜீவ் காந்தியை சந்தித்தேன். இப்போது ஒரு ரகசியத்தை நான் உங்களிடம் சொல்கிறேன். என்னிடம் ராஜீவ் காந்தி, பிரபாகரன் எப்படி இருக்கிறார்? என்று கேட்டார். பிரபாகரன் தலைமையில் தனித்தமிழ் ஈழம் உருவாக என்னால் ஆன உதவிகளை செய்வேன் என்று கூறினார். அதற்குள் ஏதேதோ தமிழ்நாட்டில் நடந்துவிட்டது. இதன் காரணமாக அந்த முயற்சி தொடரவில்லை. அந்த முயற்சி தொடர்ந்திருந்தால் ராஜீவ் காந்தியே தனித் தமிழ் ஈழத்தை பெற்றுத் தந்திருப்பார் என்றார் கருணாநிதி.


Tuesday, May 15, 2012

அவ்வை சண்முகம் நூற்றாண்டும்...நானும்..





திருவனந்தபுரத்தில் 1912 ஏப்ரல் 26-ல் பிறந்தவர் அவ்வை சண்முகம். தந்தையார் கண்ணுசாமிப் பிள்ளை. தாயார் சீதையம்மாள். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை இவருக்கு மாமன் முறை.
சிறந்த குணச்சித்திர நடிகராக உலா வந்தவர் அவ்வை. அவர் நடித்த கதாபாத்திரங்களில் மறக்கமுடியாதவை பிரகலாதந், ராசேந்திரன், மாமல்லன், மதுரகவி, சித்தர் சிவா, போக்கிரி ராஜா, முரட்டு முத்தையன்.
"நடிப்புத் திறமையைப் பொறுத்தவரையில் அவ்வை நாடகத்தில் அவ்வைப் பாட்டியாக நடிக்கும் டி.கே.சண்முகம் அவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்று சிபாரிசு செய்கிறேன். வேஷம், பேச்சு, நடையுடை பாவனை எல்லாம் அவ்வளவு பொருத்தம். நடிப்போ அபாரம். அவ்வையாரின் முகத் தோற்றங்கள் நடிப்புக் கலையின் உன்னத சிகரமாக விளங்கின..'' இப்படிப் பாராட்டியவர் எழுத்தாளர் கல்கி.
நாடக அரங்கம் தவிர, வெள்ளித் திரையிலும் முத்திரை பதித்தார் அவ்வை. 1935-ஆம் ஆண்டு வெளிவந்த "மேனகா' முதல் சமூகத் திரைப்படம். அந்தப் படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப் பட்டது. இதுதவிர, மனிதன், பில்ஹணன், ஓர் இரவு, பெண் மனம், பாலாமணி, பூலோக ரம்பை, கப்பலோட்டிய தமிழன் போன்ற பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
அறிஞர் அண்ணா முதலமைச்சரான பிறகு சட்டமன்ற மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) நியமிக்கப்பட்டார் அவ்வை.
நடிப்பு மேதையான அவ்வை, சிறந்த பாடகர், நல்ல கவிஞர். அண்ணாவின் "ஓர் இரவு' திரைப்படத்தில் ஜமீன்தாராக நடித்ததுடன், ஒரு பாடலையும் எழுதியுள்ளார்.
"எங்க நாடு - இது எங்க நாடு
எங்கும் புகழ் தங்கும் நாடு'
- என்று தொடங்கும் அந்தப் பாடல்.
ஒருசமயம் கடற்கரையில் நடைபெற்ற கூட்டமொன்றில், திடீரென்று அவ்வையை மேடைக்கு அழைத்து, "ஜெய பேரிகை கொட்டடா' என்ற பாரதியார் பாடலைப் பாடச் செய்து மகிழ்ந்தார். அன்றைய முதலமைச்சர். அவர்
காமராஜர்.
தன் முதல் மனைவி நோயுற்று திடீரென இறந்துபோக, அந்த உடலை வைப்பதற்குக் கூட இடம் கிடைக்காமல் தவித்தார் சண்முகம். அப்போது காலியாக இருந்த தன் புதிய வீட்டைத் தந்து உதவி செய்தார் ஒரு பிரமுகர். அவர் தந்தை பெரியார்.
தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளராக நான்கு ஆண்டுகள் பதவி வகித்தார் அவ்வை.
இயக்குநர் ஸ்ரீதர் எழுதித் தந்த "ரத்த பாசம்' நாடக எழுத்துப் பிரதியை ஒரே மூச்சில் படித்து முடித்து, அதை நாடகமாகத் தயாரித்தார் அவ்வை. அதுமட்டுமல்ல.. மேடையிலேயே ஸ்ரீதரை நிற்க வைத்து, "இந்த நாடகத்தின் எழுத்தாளர் இவர்தான்' என்று அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர் அவ்வை.
"சிவலீலா' நாடகத்தில் பாண்டியனாக நடித்தார் அவ்வை. அப்போது தன் குழுவில் புதியதாக இணைந்த நடிகர் ஒருவர் விரும்பிக் கேட்டதற்காக, தனது வேடத்தை அவருக்குக் கொடுத்து வாழ்த்தினார். அந்தப் புதிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.
பத்திரிகைத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர், நாடகத்தில் ஆர்வம் கொண்டார். அவரை "முள்ளில் ரோஜா' நாடகம் எழுதவைத்து, மக்களிடையே பிரபலமாக்கினார் அவ்வை. நாடகம் எழுதியவர் பின்னாளில் பிரபல இயக்குநர் ஆனார். அவர் ப.நீலகண்டன்.
கதர், கைத்தறி தவிர வேறு எந்த வகை ஆடைகளையும் அவர் அணிந்ததில்லை. சிவப்புக் கறை போட்ட கதர் வேட்டிதான் அவர் எப்போதும் அணிந்தார்.
நாடக விழாக்களுக்குத் தலைமை தாங்க ஒப்புக்கொண்டால், அழைப்பிதழ் தமிழில் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் இருந்தால், கிழித்துவிட்டு "விழாவுக்கு வர இயலாது' என்று விழா அமைப்பாளருக்குத் தகவல் தெரிவித்து விடுவார். அந்த அளவிற்கு தமிழ்ப் பற்று அவ்வைக்கு.
அவரது மணிவிழாவின் போது அன்பளிப்புத் தொகையாகச் சுமார் ஏழாயிரம் ரூபாய் கிடைத்தது. அந்தத் தொகை மூலம் பம்மல் சம்பந்த முதலியார் அறக்கட்டளையைச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் உருவாக்கினார் டி.கே.எஸ்.
அவ்வை சண்முகம் அவர்களுக்கு வாரிசுகளாக நான்கு புதல்வர்கள். ஒரு புதல்வி. இவர்களில் மூத்தவர் டி.கே.எஸ்.கலைவாணன்.

15-2-73 அன்று அவ்வை சண்முகம்.காலமானார். சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்கு அவ்வை சண்முகம் சாலை என்றே பெயர் சூட்டப்பெற்று, இன்றளவும் அது வழக்கத்தில் உள்ளது. (தகவல்- தினமணி)




அவ்வை சண்முகம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் 26-5-12 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.டி.கே.எஸ்., கலைவாணன் அவர்கள்..நாடகமேடையில் இன்று உள்ள பிரபலங்களை அன்று கௌரவித்தார்.நாடகம் எழுதி, தயாரித்து, இயக்கி,நடித்து வரும் நானும் கௌரவிக்கப்பட்டதை பெரும் பேறாக எண்ணுகிறேன்.



Monday, May 14, 2012

2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!




விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் எழுதிய ‘ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!’ என்ற புத்தகம் விற்பனையில் சாதனை படைத்து, 2 லட்சம் பிரதிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஊடகத்துறையில் கோபிநாத் என்ற பெயரை விட நீயா நானா கோபிநாத் என்ற பெயர்தான் பிரபலம். அந்த அளவிற்கு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது அந்த நிகழ்ச்சி. ஒரு டாக் ஷோ எப்படி இருக்க வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்.

தான் நிகழ்ச்சி நடத்துநர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளர் என்பதையும் தனது நூலின் வாயிலாக நிரூபித்துள்ளார் கோபிநாத். அவர் தனது அனுபவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் தனது எழுத்துக்களில் வடித்துள்ளார்.

2007ம் ஆண்டு தனது முதல் புத்தகமான ‘ தெருவெல்லாம் தேவதைகள்’ என்ற நூலை எழுதினார். அதைத் தொடர்ந்து எழுதிய ‘ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க !’ என்ற நூல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலில் பதிப்பிக்கப்பட்டது.

தற்போது அந்த நூல் 16வது முறையாக பதிப்பிக்கப்பட்டு 2 லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. அந்த புத்தகம் அனைவரும் கவர முதல் காரணம் அதன் தலைப்பே அதை வாங்கத் தூண்டுவதாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தை வாசித்தால் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

தகவல் தட்ஸ்தமிழ்


Saturday, May 12, 2012

யானைக்கு உதவிய ஈ




ஒரு காட்டில் யானை ஒன்று..குறுகிய பாலத்தைக் கடக்க முயற்சித்தது.பாலம் குறுகலாக இருந்ததால்..அது அதைக் கடக்க பயந்து என்ன செய்வது எனத் தெரியாமல் யோசித்தது.அப்போது அதன் முதுகில் சில கொசுக்கள் அமர்ந்திருந்தன.இந் நிலையில் ..ஒரு ஈ வந்து அதன் மீது அமர்ந்து..'யானையாரே..நான் இருக்கிறேன்..தைரியமாக பாலத்தைக் கடங்கள்' என்றது.

யானையும் ஈயின் நகைச்சுவையை ரசித்தபடியே..பாலத்தை அதி எச்சரிக்கையாகக் கடந்தது.

பின் ஈ. எல்லோரிடமும்..'என் பலத்தால்தான் யானையால் பாலத்தைக் கடந்தது' என பீற்றிக் கொண்டு திரிய ஆரம்பித்தது.


அன்னையர் தினம்...இப்பாடலைக் கேட்டீர்களா?



இதைவிட அன்னையின் பெருமைச் சொல்ல வேறு என்ன இருக்கிறது.
பாடலின் ஒரிஜினலும்..பிரகதி பாடிய (சூபர் சிங்கர் ஜூனியர் 2012)தும்.






Friday, May 11, 2012

வழக்கு எண் 18/9..- நீதிமன்ற விசாரணை




வழக்கு எண் 18/9 நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

நீதிமன்ற சிப்பந்தி - (குரலிடுகிறார்)வழக்கு எண் 18/9..பொதுஜனம் vs பாலாஜி சக்திவேல்

நீதிபதி- வழக்குரைஞர்கள் தங்கள் வாதத்தை ஆரம்பிக்கலாம்

பொதுஜன வக்கீல் - யுவர் ஹானர்..இந்த படம் சில தவறான உதாரணங்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக ..தனியார் பள்ளி கரஸ்பாண்டண்ட் ஒரு பெண்..அவர் ஒரு பிம்ப் ஆகவும்..அவரது குணத்தால் அவரது கணவர் விட்டுவிட்டு ஓடியதாகவும்..அவர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது போலவும்..அமைச்சர்கள் தொடர்பால் இப்படி நடப்பதாகவும் கூறப்படுவது ..பொதுமக்களிடையே...தேவையில்லாமல்...தனியார் பள்ளி நிர்வாகிகள் எல்லாமே இப்படியோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது.
அடுத்ததாக..காவல்துறை...இவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை? இந்த படத்திலும்..காவல்துறை அதிகாரி..ஏழைகளின் புகாரை வெகு அக்கறையுடன் வாங்குவது போல காட்டினாலும்...சொந்த நலனுக்காகவும்,அமைச்சரின் கட்டளைபடியும், ஜாதிக்காகவும் துரோகம் இழைப்பதாகக் காட்டப்படுகிறது..இதுவும் கண்டிக்கத்தக்கது.
+2 படிக்கும் செமிஸ்ட்ரி மாணவன்..தன் விருப்பத்திற்கு இணங்காத மாணவி மீது ஆசிட் கொட்டுவதாகக் காட்சியைப் பார்த்து...ஆண்டவா..இனி வரும் நாட்களில், ஏதேனும் பள்ளியில், யாரேனும் மாணவன் இது போன்ற செயலில் ஈடுபட்டு..இந்த படத்தைப் பார்த்து தான் கற்றுக் கொண்டதாக நடக்கக்கூடாது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள பாலாஜி சக்திவேல்... தன் முந்தைய "காதல்" படத்திலும்..பள்ளி மாணவி..படிக்காத மெக்கானிக் ஷாப் பையனுடன் ஓடுவதாகக் காட்டினார்..இப்படத்திலும்..பள்ளி மாணவி..பள்ளி மாணவனிடம் சிக்குவதாகச் சொல்லியுள்ளார்.இது..மாணவப்பருவத்தினடையே நஞ்சை விளைவிப்பதாகும்..இக்குற்றச்சாட்டுகளை ஏற்று படத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

நீதிபதி - எதிர்தரப்பு தன் வாதத்தை தொடங்கலாம்.

பாலாஜி வக்கீல்- யுவர் ஹானர்...நாட்டில் நடக்காத எதையும் என் கட்சிக்காரர் படத்தில் காட்டவில்லை.படம் பார்ப்போர் அனைவரையும் கவர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.ஃப்ளாட்ஃபாரக்கடை, வட இந்தியா முறுக்கு கம்பெனிக்கு விற்கப்படும் சிறுவர்கள்,கந்து வட்டி, உடலைவிற்று பிழைப்போர் திருந்துவது போன்ற பல விஷயங்களை இப்படம் சொல்கிறது.படத்தில்..எடிடிங் அருமையாக உள்ளது.எதிர்பாராத கிளைமாக்ஸ்.ஊடகங்கள் பாராட்டுகின்றன.இதையெல்லாம் கருத்தில் கொண்டு மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
நீதிபதி - இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, இந்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது..
         நாட்டில் நடப்பதைத் தான் கூறுகிறோம் என குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் கூறினாலும்..சமுதாயத்தில் உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.பள்ளியின் கரஸ் என காட்டப்பட வேண்டிய அவசியம் என்ன? விடலைப் பருவத்தினர் மீது பெற்றோர் ஒரு கண் வைத்திருக்க வேண்டும், பாக்கெட் மணி தாராளமாய் கொடுத்தாலும்..கணக்கு பார்க்க வேண்டும்..என்றெல்லாம் பெற்றோருக்கு அறிவுரையை மறைமுகமாகக் கூறியுள்ளதை இந் நீதி மன்றம் பாராட்டுகிறது.
மனுதாரரைப் பொறுத்தவரை..படத்தின் முன் பாதியில் இருந்த சமூக அக்கறை இயக்குநருக்கு பின் பாதியில் இல்லை என்பதை ஓரளவு உண்மையாய் இருந்தாலும்...வாழ்க்கையின் மறுபாதியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதை மறக்கக் கூடாது.

இப்படிப்பட்ட படம் எப்போதோ ஒன்று தான் வருகிறது.அதற்கும் தடை விதிக்க வேண்டும் என்பதை ஏற்கமுடியாது.

இது போன்று தேவையில்லாமல் வழக்கு போட்ட பொதுஜனம்..நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதால்..இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என இந்  நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
 

Wednesday, May 9, 2012

100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா




100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்து இந்தியா எப்படி இருந்திருக்கும்? உங்களிடம் திடீரென 200 கறுப்பு-வெள்ளைக் கால புகைப்படங்களைக் கொடுத்தால்....எப்படி துள்ளுவீர்கள்?

இந்த மகிழ்ச்சிதான் பழமை விரும்பிகளுக்கும் வரலாற்று ஆர்வர்களுக்கும் இப்போது! ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் உள்ள ராயல் கமிஷன் அலுவலகத்தில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு ஷூ பெட்டியை எதேச்சையாக திறந்திருக்கிறார்கள்..

அதில் கட்டுக்கட்டாக கிளாஸ் பிளேட் நெகட்டிவ்கள்.. பிரிண்ட் போட்டுப் பார்த்தால் அந்தக் காலத்து இந்தியா...

பெரும்பகுதி புகைப்படங்கள் கொல்கத்தா நகரில் எடுக்கப்பட்டவை.. சென்னை புகைப்படங்களும் கூட இதில் அடக்கம்! அனேகமாக இந்த புகைப்படங்கள் 1912-ம் ஆண்டு எடுக்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ், ராணி மேரி ஆகியோர் கொல்கத்தா வந்தபோது எடுக்கப்பட்ட படங்களும் இருக்கின்றன. அவர்கள் கொல்கத்தாவுக்கு வந்தது 1912தான்!

எடின்பரோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் தற்போது இந்த அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

இது குறித்த மேலும் விவரங்களுக்கு

http://canmore.rcahms.gov.uk/en/publication/?publication=indianegatives


Tuesday, May 8, 2012

கழுகு




காதலித்தான்

காதலித்தாள்

காத்திருந்தாள்

காதலனுக்கு

இலவு காத்த கிளியாய்

கழுகொன்று பறந்தது மேலே


Monday, May 7, 2012

எம்.ஜி.ஆருக்கு இருந்த மனக்குறைகள்...




மூத்த வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஃபேஸ்புக்கில் கூறியுள்ளது..

எம்.ஜி.ஆர்., அவரிடம் ஒருநாள்..'தினமும் என் வீட்டில குறைஞ்சது ஐம்பது, அறுபது இலைங்க விழுது.புகழின் உச்சியில் இருக்கிறேன்..ஆனாலும் இரண்டு குறைகளை போக்கிக்கவே முடியல.ஒண்ணு, "குழந்தைங்க வாரிசு இல்லாத குறை' என்று சொல்ல..

இடைமறுத்த வசனகர்த்தா, ":ஏன் காமராஜருக்குக் கூட வாரிசு இல்ல"

அதற்கு எம்.ஜி.ஆர்.,' அப்படி இல்ல..அவருக்கு கல்யாணமே ஆகாத காரணத்தால் குழந்தைங்க இல்லாம போயிடுச்சு.ஆனா எனக்கு இரண்டு, மூன்று கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தை கூட பிறக்கல"

பெரிய பெரிய ஜோசியரை எல்லாம் ரகசியமா வீட்டுக்கு வரவழைச்சு என் ஜாதகத்தை காட்டினப்ப எல்லோரும் ஒரே மாதிரி, இது பல தார ஜாதகம்! உங்க வாழ்க்கையில பல பெண்கள் குறுக்கிடுவாங்க.அவங்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்க கொடுப்பீங்க.ஆனா அவங்க யாரும் உங்களுக்கு வேண்டிய ஒரு குழந்தையைக் குடுக்க மாட்டாங்க.குடுக்கவும் முடியாது.குறை அவங்ககிட்ட இல்லை'ன்னு சொன்னாங்க.

என் அண்ணனுக்கு அத்தனைக் குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு ஏனோ எனக்கு ஒரே ஒரு குழந்தையைக் கூட கொடுக்க மனசு வரலே!"

என்னோட அடுத்த குறை, 'நான் பெரிசா ஒன்னும் படிக்க தெரிஞ்சுக்கல.இளமையிலே பட்ட வறுமை காரணமாக அந்த வாய்ப்பு, வசதி இல்லாம போயிடுச்சு'

நடிப்பிற்கு அப்பாற்பட்டு அவரது கண்கள் நீர் நிலையானதை நேரில் அந்த வசனகர்த்தா அன்றுதான் பார்த்தாராம்.  

இத்தகவலை இந்த வார பாக்யா இதழில் (மே 11-17) கேள்வி பதில் பகுதியில் பாக்கியராஜ் குறிப்பிட்டுள்ளார்.


விஜய் தம்மடிக்கும் காட்சி நீக்கம் - இயக்குநர் முருகதாஸ்




 பாமகவின் அமைப்பான பசுமைத் தாயகம் கடும் எதிர்ப்பு காரணமாக துப்பாக்கி படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி நீக்கப்பட்டது.

துப்பாக்கி படத்தில் விஜய் ஸ்டைலாக புகைபிடிப்பது போல சென்னை நகர் எங்கும் சமீபத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் வெளியானது. இதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்தது. பசுமை தாயகம் அமைப்பு மத்திய அரசுக்கு இது குறித்து கடிதம் எழுதியது.

நடிகர்கள் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்கள் ஒட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளது என்றும், அதையும் மீறி இவை ஒட்டப்பட்டு உள்ளது என்றும் அந்த அமைப்பு தன் கடிதத்தில் குற்றம்சாட்டியது.

முகப்ரேரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகை பிடிக்கும் போஸ்டர்களை அகற்றும்படி புகார் அளித்தார்.

"புகை பிடிப்பதால் இளைஞர் சமுதாயத்தினர் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிரபல நடிகர்களின் புகைபிடிக்கும் போஸ்டர்கள் அவர்களை தவறாக வழி நடத்தும்", என்றும் புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

ஆரம்பத்தில் இந்தக் காட்சிகளை நீக்கமாட்டேன் என இயக்குநர் முருகதாஸ் பிடிவாதமாக இருந்தார்.

ஆனால் இப்போது நீக்கிவிட சம்மதித்துள்ளார். இதுகுறித்து முருகதாஸ் கூறுகையில், "விஜய் புகைபிடிப்பது போன்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் படத்தின் விளம்பரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுபோன்று புகை பிடிக்கும் சீன்கள் எதுவும் படத்தில் இல்லை. விஜய் புகை பிடிப்பது போல் ஒரு காட்சியை மட்டும் போட்டோ ஷூட்டில் எடுத்தோம். அதையும் படத்தில் இருந்து நீக்கிவிட்டோம். இனிமேல் விஜய் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்களை விளம்பரத்துக்கு பயன்படுத்த மாட்டோம்," என்றார்.

தகவல் தட்ஸ்தமிழ்


Sunday, May 6, 2012

தாயும் கோயிலாகிறாள்..




கோயில்

கருவறையில் இறைவன்

தாயின் கருப்பையில்

குழந்தை

குழந்தையும், இறைவனும் ஒன்றெனில்

கருப்பையும், கருவறையும் ஒன்றல்லவா..?

கருவறை கோயிலில்

கருப்பை தாயிடம்

தாயும் கோயிலாகிறாள்..


Thursday, May 3, 2012

புதுக்கோட்டை இடைத் தேர்தலை திமுக புறக்கணிக்கும் -தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.




புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த முத்துக்குமரன் சாலை விபத்தில் பலியானதைத் தொடர்ந்து அங்கு ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இம்முறை போட்டியிடவில்லை. பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தது.

அதிமுக மட்டுமே போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளராக கார்த்திக் தொண்டமானையும் களமிறக்கி அமைச்சர்கள் படை கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்று சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் கேட்டதற்கு, மே 17-ந் தேதிதான் திமுக நிலை அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார். இடைத்தேர்தல் தேதியை தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் தீர்மானித்திருப்பதால் யார் போட்டியிட்டாலும் தோற்பது உறுதி என்ற நிலையில் திமுக தேர்தலை புறக்கணிப்பதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களையும் அதிமுக புறக்கணித்திருந்தது. அண்மையில் நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக டெபாசிட்டையே பறிகொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

(தட்ஸ்தமிழ்)


Wednesday, May 2, 2012

நடிகர் கட்சித் தலைவர் ஆனது தவறு...??!!




1)கற்பனை மிக்கவங்க தேவைன்னு தலைவர் கேட்கிறாரே ஏன்?
அவங்க கற்பனையை வைச்சு புதுசு புதுசா ஆளும் கட்சி மேல தப்பு சொல்லலாமாம்

2)ஆளும் கட்சி மாறினாலும் மக்கள் மாறல்லைன்னு எப்படி சொல்ற
ஆளும் கட்சி கூட்டம் முடிந்ததும்..அப்படியே அந்த கூட்டம் எதிர்க் கட்சி கூட்டத்திற்கும் போகுதே

3)சமச்சீர் கல்வியால மாணவர்களுக்கு எந்த பயனும் இல்ல
ஏன் அப்படி சொல்ற
அப்பவும் அவங்க பாடங்களை படிக்க வேண்டியிருக்கே

4)அந்த பேஷன்ட் பொழைச்சுட்டாரா எப்படி
கடைசி நேரத்துல டாக்டர் ஆபரேஷன் வேணாம்னு தீர்மானம் பண்ணிட்டாரு

5)234 தொகுதிக்கும் இடைத் தேர்தல் வந்தா நல்லா இருக்கும்
ஏன் அப்படி சொல்ற
ஒவ்வொரு தொகுதியும் ராஜ உபசாரம் பெறும்

6) அந்த ஆட்சியில இருக்கிற 70 அமைச்சர்ல 35 பேருக்கு ஒரே இலாகாவாமே அப்படியா?
ஆமாம்..
அப்படி என்ன இலாகா
இடைத்தேர்தல் இலாகா..இடைத்தேர்தல் வந்த அந்த தொகுதிக்கு இவங்க போய் பிரசாரம் செய்யணுமாம்

7)ஒரு டிரைவர் - இது வரைக்கும் நான் ஒரு போலீஸ்காரரிடமும் மாட்டியதில்லை
மற்றவர் - எப்படி
முதல் டிரைவர்- எந்தக் கட்சி ஆட்சிக்கு வருதோ..அந்தக் கட்சிக் கொடியை கார் முன்னால பறக்கவிட்டுடுவேன்

8)நடிகரை கட்சித் தலைவர் ஆக்கியது தவறாய் போச்சு
.என்னவாயிற்று
பொதுக்கூட்டம் நடத்த லொகேஷன் பாக்கச் சொல்றார்


Tuesday, May 1, 2012

"வங்கியில் கொள்ளை" பாக்கியராஜ் - பதில்




இந்த வார பாக்யா இதழில் பாக்யராஜின் கேள்வி பதில் பகுதியில்..அவரின் இந்த பதில் நகைச்சுவையாக இருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கேள்வி - வெளியே சொல்லமுடியாத கனவு ஒன்று?

பதில் - நியாயமா வெளியே சொல்ல முடியாத கனவுன்னு சொல்றதைவிட ஊமையின் கனவுன்னுதான் சொல்லணும்.அதுதான் வெளியே சொல்ல முடியாத கனவா இருக்கும்.ஆனால் யாரோ ஒருத்தர் கிட்ட அசிங்கமா அவமானப்பட்டா அதுவும் வெளியே சொல்ல முடியாத கனவுதான்.

ஒருமுறை டெல்லியின் திகார் சிறையிலிருந்து தப்பித்த ரெண்டு கொள்ளையர்கள் உடனடியா ஒரு கொள்ளையை அதே நைட்ல நடத்த திட்டமிட்டாங்க.அந்த திட்டப்படி வரிசையா வங்கிகள் இருந்த வீதிக்கு போனப்ப திடீர்னு தெருவிளக்குகள் எல்லாம் அணைஞ்சிருச்சு.ஒரு வழியா தேடிக் கண்டுபிடித்து வங்கியை அடைஞ்சாங்க.

வங்கி பாதுகாப்பு அமைப்பை செயலிழக்க வைச்சாங்க.கேமராவுக்கு போற ஒயரைத் துண்டிச்சாங்க.

சேஃப்டி லாக்கரைத் தேடிக் கண்டுபிடிச்சாங்க. அவங்க ஒரு பத்து சேஃப்டி லாக்கர்தான் இருக்கும்னு நினைச்சாங்க.ஆனா நூத்துக்கணக்கான சின்ன சேஃப்டி லாக்கர்கள் இருந்துச்சு.அவர்களுக்கு ஒரே சந்தோசம்.'இதுல இருக்கிற நகைகள், பணத்தைக் கொள்ளையடித்தால் போதும்.வாழ்நாள் முழுக்க வேற எதும் தேவை இல்லை'ன்னான் ஒருத்தன்.

முதல் சேஃப்டி லாக்கரின் பூட்டை உடைச்சாங்க.உள்ளே நகை, பணத்துக்கு பதிலா வெண்ணிற பால் போல ஒரு திரவம் மட்டுமே இருந்தது.மீண்டும் அடுத்த சேஃப்டி லாக்கரின் பூட்டையும் உடைச்சாங்க.ஆனா அதுலயும் அதுவே இருந்தது.மேலும் பத்து சேஃப்டி லாக்கரை உடைச்சும் ஏமாற்றமே மிஞ்சியது.

கோபத்துல மொத்தக் கண்ணாடி பாட்டில்களையும் உடைச்சாங்க.அந்த திரவத்தோட வாசத்தால குமட்டிட்டு வந்தது.ஒரு கிராம் தங்கம் கூட கிடைக்காத விரக்தியிலும், துர்நாற்றத்தாலும் தப்பினால் போதும்னு உடனே அங்கிருந்து கிளம்பிட்டாங்க.

அடுத்த நாள் செய்தித்தாள்கள்ல தலைப்பு செய்தி, 'டெல்லியின் மிகப்பெரிய விந்தணு வங்கியில் கொள்ளை"


Monday, April 30, 2012

தனி ஈழம் அமைக்க ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்-டெசோ தீர்மானம்



பல ஆண்டு முடக்கத்திற்குப் பின்னர் டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில், இன்று நடந்த அந்த அமைப்பின் முதல் கூட்டத்தில் தனி தமிழ் ஈழம் அமைக்க ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தனித் தமிழ் ஈழம் உருவாக்கியே தீர வேண்டும். அதைப் பார்க்காமல் நான் கண் மூட மாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி சமீபகாலமாக பேசி வருகிறார். காங்கிரஸிடமிருந்து வேகமாக விலகி வரும் திமுகவின் இந்தப் புதிய கோஷம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டெசோ உறுப்பினர்களான அன்பழகன், கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை கருணாநிதியும் உறுப்பினர்களும் சந்தித்தனர். அப்போது சுப. வீரபாண்டியன் கூட்டத் தீர்மானம் குறித்துக் கூறுகையில், இலங்கையில், சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே இனியும் ஒத்துப் போகாது. இரு வேறு இனங்களான இவர்கள் தனித் தனியாக வாழ்வதே சரியானதாக இருக்கும். தமிழர்களின் தாயகப் பகுதிகளான கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களைப் பிரித்து தனித் தமிழ் ஈழம் அமைப்பதே பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதாக இருக்கும். எனவே தனித் தமிழ் ஈழம் அமைப்பது தொடர்பான பொது வாக்கெடுப்பை ஐநா. பொதுச் சபை நடத்த வேண்டும். இதற்கு இந்திய அரசு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பின்னர் கருணாநிதி பேசுகையில், சிங்களர்களை ஒருபோதும் நாம் நம்ப முடியாது. நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்கள் அவர்கள். அவர்களின் உறுதிமொழியை நம்பித்தான் நான் கூட சென்னையில் உண்ணாவிரதம் இருந்ததை வாபஸ் பெற்றேன். ஆனால் அவர்கள் பொய்யான உறுதியமொழியை அளித்து விட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று குவித்தனர்.

இனியும் தமிழ் மக்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது. தமிழர்களுக்கென் தனி் நாடு, தமிழ் ஈழ நாடு அங்கே அமைந்தால் மட்டுமே தமிழ் இனம் அங்கு பிழைக்கும். எனவே இதை ஐ.நா. பொது வாக்கெடுப்பு மூலம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.


டெசோ பற்றி தெரிய http://www.envazhi.com/tamil-eelam-supporters-organisation-teso-an-overview/


தகவல் தட்ஸ்தமிழ்


Tuesday, April 24, 2012

அன்புடன் அழைக்கிறேன்...




எனது நாடகம் 'மழையுதிர் காலம்' 28ஆம் நாள் அரங்கேறுகிறது.அதற்கு அன்புடன் உங்களை அழைக்கிறேன்


Monday, April 23, 2012

திமுகவில் கட்சிக் கட்டுப்பாட்டை காப்பாற்றுவதற்கு 'அறுவை சிகிச்சை' தேவை:




திமுகவில் கட்சிக் கட்டுப்பாட்டை காப்பாற்றுவதற்கு 'அறுவை சிகிச்சை' தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை காப்பதற்கு இயக்க பாசம், கொள்கை பாசத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து மற்ற பாசங்கள் (பிள்ளை பாசம்) குறுக்கிடாமல் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கருணாநிதிக்கு வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுகவில் பொருளாளரும், இளைஞரணியின் பொறுப்பாளருமான மு.க.ஸ்டாலினுக்கும், மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க. அழகிரிக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இந் கி.வீரமணி திமுக தலைமைக்கு "மிக அவசரம் அவசியம்' என்ற தலைப்பில் ஒரு வேண்டுகோள் ஒன்றை அறிக்கை மூலம் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

திராவிடர் இயக்க நூறாவது ஆண்டு நடக்கும் இந்த முக்கியமான காலகட்டத்தில், திமுகவின் பொறுப்பாளர்களாக உள்ள பலரின் நடவடிக்கைகளைப் பற்றி ஏடுகளில், ஊடகங்களில் வரும் பல்வேறு செய்திகள் நம்மைப் போன்ற தாய்க் கழகத்திற்கும், உண்மையான திராவிடர் இயக்கப் பற்றாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அளவற்ற, வார்த்தைகளில் வடிக்க முடியாத துன்பத்தையும், மனவேதனையும் தருகிறது.

ஏற்கனவே திமுகவை அழிப்பதே தமது பிறவிப்பயன் என்ற ஊடகங்களுக்கு அவல் பாயாசம் சாப்பிட்டதுபோல சில நிகழ்வுகள் கிடைப்பதோடு விரிசல் என்று ஏகமாக விளம்பரப்படுத்தி, கட்டடத்தையே, கட்டுமானத்தையே காணாமல் போகச் செய்ய இத்தருணத்தை விட்டால் வேறு நல்ல தருணம் வாய்க்காது என்று கருதி, பரபரப்புப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன.

அய்யா அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் கூறிய அறிவுரை கல்லில் செதுக்கியதாகும். ''திமுகவை எதிரிகளால் அழிக்க முடியாது. இவர்களே ஒருவருக்கொருவர் அழித்துக் கொண்டால் தான் முடியும். திமுக கெட்டியான பூட்டு, அதற்குக் கள்ளச்சாவி போட்டுவிட யாரையும் அனுமதிக்கக் கூடாது.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் முன்னிரண்டும்கூட முக்கியமில்லை. கட்டுப்பாடுதான் முக்கியம். மிகவும் முக்கியம். எனவே இயக்கத்தை, கட்சியைக் காப்பாற்ற தயவு தாட்சண்யம் காட்டாமல் கட்டுப்பாட்டிற்காக தேவையான நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது'' என்றார்கள்.

இனமானப் பேராசிரியர் அன்பழகன், அப்போது தலைமையை எதிர்த்துக் கூறிய ஒரு கருத்துக்காக அவர் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, அவரை கண்டித்து அறிக்கைவிடத் தயங்கவில்லை தந்தை பெரியார்.

அப்போது அவ்வறிக்கையில் குறிப்பிட்டார்கள். ''எனக்கு அன்பழகன் மீது கோபமோ, வெறுப்போ இல்லை. கழகக் கட்டுப்பாட்டிற்காகத்தான் இப்படி எழுதிட வேண்டியுள்ளது. தலைமை இடத்தில் அன்பழகன் இருந்து கருணாநிதி இப்படி கூறியிருந்தால் அவர் மீதும் கட்டுப்பாட்டை மீறிக் கருத்துக் கூறியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் எழுதியிருப்பேன்'' என்று விளக்கமாக அவ்வறிக்கையில் குறிப்பிட்டார்கள்.

திமுக என்ற இயக்கம் காப்பாற்றப்பட வேண்டிய அவசியத்தை அன்று 1969-ல் தந்தை பெரியார் விளக்கியதை இப்போது அவர் தம் தொண்டன் என்ற முறையில் அதேபோல் திமுக என்ற மகத்தான திராவிடர் இயக்கத்தை அதற்கு சோதனை ஏற்படும் கட்டத்தில் அதனை நினைவூட்டும் கடமையும், பொறுப்பும் உண்டு நமக்கு என்பதால் இதனை எழுத நேரிட்டு விட்டது.

ஆளும் கட்சியின் மீது பலவகைகளிலும் அதிருப்திகள் தலை எடுக்கும் இக்காலகட்டத்தில் அவற்றை மனமாற்றம் செய்யும் வகையில் திமுகவில் உள்கட்சி பிரச்சனை என்பதை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதை அரசியலில் அனைத்தும் அறிந்த கலைஞருக்கு தெரியாததல்ல.

மேலும் அந்த அறிக்கையில் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார். ''கலைஞர் தலைமையை நான் ஏற்கமாட்டேன் என்று கூட்டத்திற்கு தலைமை வகித்த க.அன்பழகன் என்று சொல்லியிருப்பதாக பத்திரிகைகளில் படித்தேன். இது மிகவும் கண்டிக்கத்தக்கதோடு, இதற்கு ஒழுங்கு நடவடிக்கையை திமுக கட்சி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

சுவரை வைத்துக் கொண்டுதான் சித்திரம் எழுத வேண்டும் என்பதுபோல கட்சியின் மரியாதை குறையுமானால் தலைக்கு தலை தன் இஷ்டப்படி பேச நடக்க இடம் கொடுத்து வந்தால் பொதுத் தொண்டுக்கு கண்டிப்பாய் அதில் இடம் இருக்காது. கட்சித் தலைவரின் முதற்கடமை கட்சியின் கவுரவத்தை காப்பதுதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் கட்சி சாதாரண கட்சியானாலும் நான் உப தலைவரை நீக்கினேன். காரியதரிசியை நீக்கினேன். அதனால் எனக்கோ, கட்சிக்கோ ஒரு கெடுதியும் ஏற்பட்டு விடவில்லை.

பொதுமக்களுக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன். தி.மு.கழகத்திற்கு உழுது பயிரிட்டவர் அறிஞர் அண்ணாதான். இதற்கு நீர்பாய்ச்சி நல்ல விளைச்சலை உண்டாக்கியவர் கலைஞர்தான். கட்சிக்கு கலைஞர் இல்லாவிட்டால் பதவிக்கு ஏராளமான மெம்பர்கள் கிடைக்கலாமே ஒழிய, கட்சியை கட்டிக் காக்க கட்சி அங்கத்தினர்களில் பத்து பேர் ஆதரவை உடைய அங்கத்தினர் யாருமில்லை என்பதுதான் என் கருத்து.

இதை நான் திமுக அங்கத்தினர்களுக்கே சொல்கிறேன். எனவே இன்று திமுகவிற்கு வேண்டிய கட்டுப்பாடு, ஒழுங்குமுறை நடவடிக்கைதான். திமுகவினால் மக்களுக்கு ஆக வேண்டிய காரியம் ஏராளம் இருப்பதால் இதை நானாக எனது சொந்த முறையில் கடமையை முன்னிட்டு எழுதுகிறேன். அங்கத்தினர்கள் மன்னிப்பார்களாக''.

14.3.1969 அன்றைய விடுதலையில் கையொப்பமிட்டு தந்தை பெரியார் அறிக்கையில் காணப்படும் ஒரு சிறு பகுதி இது. மறுநாளும் இதுகுறித்த நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார் பெரியார்.

திமுக என்பது வெறும் கண்ணீரால் மட்டுமே வளர்ந்த இயக்கம் அல்ல. செந்நீர் விட்டும், பல்லாயிரம் தொண்டர்கள், தோழர்கள் தியாகத்தால் வளர்ந்தோங்கிய மகத்தான ஆலமரம் ஆகும். விழுதுகள் அதனை காப்பாற்றிட மட்டுமே பயன்பட வேண்டும். அதன் வேரினை அசைக்க என்றும் வீணர்களுக்கு விழுதுகளே துணை போகக்கூடாது.

தெரிந்தோ, தெரியாமலோ நோயாளியை காப்பாற்றிட அறுவை சிகிச்சை அவசியம். சில நேரங்களில் இயக்க கட்டுப்பாட்டை காப்பாற்றிட, கடும் சிகிச்சை, அது அறுவை சிகிச்சையானாலும் செய்துதானே தீரவேண்டும். நோயாளியை நோயிலிருந்து காப்பாற்றிட.

இயக்கமே எப்போதும் பிரதானமானது என்பதை அறியாதவர் அல்ல அதன் தலைவர் கலைஞர். இயக்கம் இருந்தால்தான் எவருக்கும் மதிப்பும், மரியாதையும் இந்த எண்ணம் எல்லோருக்கும் புரியும். எனவே கட்டுப்பாட்டை காப்பாற்ற இயக்க பாசம்- கொள்கை பாசத்திற்கு மட்டுமே முக்கியத்தவம் கொடுத்து மற்ற பாசங்கள் குறுக்கிட இடந்தராமல் காப்பாற்றிட முன்வரவேண்டும் என உரிமையுடன் உண்மை உணர்வுடன் தந்தை பெரியாரின் சிந்தனை வழிபட்ட நிலையில் கேட்டுக் கொள்கிறோம்.

திமுக வரலாற்றில் அண்ணாவுக்கு பிறகு கருணாநிதியின் உழைப்பு பல சோதனைகளை வென்று அவ்வியக்கத்தை காப்பாற்றி இருக்கிறது. இப்போதும் விரைந்த விவேகமான முடியும் நடவடிக்கையும்தான் இன எதிரிகளை வாயடைக்க செய்யும் நிலை ஏற்படும்.

இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.

(தட்ஸ் தமிழ்)

செய்திகள் -அரசியல் -வீரமணி

Sunday, April 22, 2012

விதவைகளாக தமிழ் இளம்பெண்கள்





தமிழர் பகுதியில் 45 ஆயிரம் போர் விதவைகளைப் பார்த்து அனைவருமே கண்ணீர் விட்டோம் என்று இலங்கை சென்று திரும்பியுள்ள மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.

அண்மையில் 12 பேர் கொண்ட இந்திய நாடாளுமன்ற குழு இலங்கைக்கு சென்று அங்குள்ள தமிழர் நிலைக்குறித்து ஆராய்ந்தது.
அதில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, கடந்த 16ம்தேதி முதல் 21ம்தேதி மதியம் வரை இலங்கையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தமிழ் மக்களை தனித்தனியாகவும், குழுவாகவும் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது என்றார்.

எந்த இடத்திலும் தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களோடும் வேறு சில தமிழர் அமைப்புகளோடும் விவாதித்தோம். அவர்கள் ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் கூடுதல் அரசியல் அதிகாரம் வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாணிக்கம் தோட்டம், செட்டிக்குளம் பகுதியில் தமிழ் மக்களோடு கலந்து உரையாடினோம். மட்டக்களப்பு பகுதியில் 45 ஆயிரம் விதவைகளை பார்த்தோம்.

அவர்களில் 13 ஆயிரம் பேர் 23 வயதுக்கு உட்பட்ட பெண்கள். இவர்களை பார்த்து நான் மட்டுமல்ல, சுஷ்மா சுவராஜ் உள்பட குழுவினர் அனைவரும் கண்ணீர் விட்டோம்.

யாழ்ப்பாணம் பகுதியில் கோவில்களில் ராணுவங்கள் முகாமிட்டுள்ளதை திரும்ப பெற வேண்டும் என்று மக்களும் வலியுறுத்தினார்கள்.

நாங்களும் ராஜபக்சேவிடம் வலியுறுத்தினோம்.

தமிழர்கள் பகுதியில் ராணுவத்தினரை திரும்ப பெற்று விட்டு ஆட்சியாளர்கள் மூலம் அன்றாட பணிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

கடந்த முறை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சென்று வந்த பிறகு தற்போது தமிழர் வாழும் பகுதியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு இன்னும் ஏராளமான குறைகள் உள்ளன. கல்வி, குடியிருப்பு, சமூக பொருளாதார முன்னேற்றம் என்று குறைகள் இருக்கிறது.

இவ்வாறு டிகே.ரங்கராஜன் கூறினார்.


(வெப்துனியா)

செய்திகள் - இலங்கை- நிகழ்வு

Thursday, April 19, 2012

அணை உடையும் அபாயம்; 1 லட்சம் பேர் வெளியேற்றம்




அணை உடையும் அபாயம் அதிகரித்து வருவதால் அப்பகுதியிலிருந்து மேலும் ஒரு லட்சம் பேர் வேறு இடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளனர்.

சீனாவில் உள்ள த்ரீ ஜார்ஜஸ் அணை உடையும் அபாயம் அதிகரித்து வருவதால் அப்பகுதியிலிருந்து மேலும் ஒரு லட்சம் பேர் வேறு இடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய நீர்மின்சாரத் திட்டம் செயல்பட்டு வரும் இந்த அணையின் கரைப்பகுதிகளில் தொடர்ந்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவதால் அந்த அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மிகப்பெரிய இந்த ராட்சத அணையின் 5,386 இடங்கள் அபாய இடங்களாக அதாவது உடையும் பகுதிகளாக சீன அரசு அடையாளம் கண்டுள்ளது.

நிலச்சரிவை தடுக்க 355 இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். ஆனால் நிலைமை மோசமாகவே உள்ளது. அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதால் ஒரு வேளை அணை உடைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.

எனவே இந்த பகுதியில் உள்ள 1 லட்சம் மக்களை நிரந்தரமாக அந்த இடத்தை விட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளனர்.

உலகிலேயே பெரிய அணையான இது யாங்சி ஆற்றில் 2006-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து 22 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணை கட்டுமான பணி 1994-ம் ஆண்டு தொடங்கி 2006-ல் முடிவடைந்தது.

இந்த அணையை கட்டி முடிக்க ரூ.2லட்சம் கோடி செலவிடப்பட்டது. அப்போது அணை பகுதியில் இருந்த 14 பெரிய நகரங்கள், 133 சிறு நகரங்கள், 1350 கிராமங்கள் காலி செய்யப்பட்டு 14 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த அணையைக் கட்டி முடித்தவுடன் பல நூற்றாண்டுகளாக யாங்சீ நதியின் பயங்கர வெள்ளத்தினால் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்பட்டதாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் இவ்வளவு தண்ணீரை தேக்கிவைப்பது பெரிய நிலநடுக்கங்களுக்கு வழி வகுக்கும் என்றும் இதனால் ஆற்றுச் சூழலில் நீண்ட நாளைய சேதத்தையும் ஏற்படுத்தும் என்று எச்சரித்தனர்.

மற்றொரு சுற்றுச்சூழல் குழுவான புரோப் இன்டெர்னேஷனல், சமீபத்தில் விடுத்த எச்சரிக்கையில், யாங்சீ நதியில் கட்டப்பட்டுள்ள 20 அணைகளால் பிரச்சனை ஏற்படும் என்றும் அப்பகுதி நிலநடுக்கப்பகுதி என்பதும் உறுதியான விஷயம் என்றும் தெரிவித்திருந்தனர்.

தகவல் வெப்துனியா

ஜார்ஜஸ் அணை -செய்திகள்

Monday, April 16, 2012

கேம்பஸ் இன்டெர்வியூவுக்கு தடை நீட்டிப்பு






கல்லூரிகளில் நேர்காணல் நடத்தி மாணவர்களை நேரடியாக தேர்வு செய்ய அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் கல்வி நிறுவனங்களில் மத்திய மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் நேரடியாக சென்று கேம்பஸ் இன்டெர்வியூ எனப்படும் வளாக நேர்காணல் மூலம் மாணவர்களை தேர்வு செய்கின்றன.

இதனால், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளதால், வளாக நேர்காணலை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பழனிமுத்து மனுதாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுத்துறை நிறுவனங்கள் நேர்காணல் நடத்தி நேரடியாக ஊழியர்களை தேர்வு செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்தது.

தற்போது இந்த தடையை நீட்டித்துள்ள உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக 3 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கேம்பஸ் வேலை தேர்வு

Saturday, April 14, 2012

உச்சி துன்பம்





துன்பத்தின் உச்சியில்

சுற்றமும்..நட்பும் அன்றி

என் நிழலும்

என்னை விட்டு விலகியதேன்

நான் பிராமணன்...' - சாதியைக் கையிலெடுக்கும் ராகுல்காந்தி!






உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் பின்னடவைச் சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி நிலையான வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக "சாதி" ஆயுதத்தை கையிலெடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் தலித்துகளின் நண்பனாக, இஸ்லாமியர்களின் நண்பனாக வேஷம் போட்டு காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்து பார்த்தது. கட்சியின் "நம்பிக்கை நட்சத்திரம்" என அழைக்கப்படும் ராகுல்காந்தி தலித்துகளின் குடிசைகளுக்குள் ஓடி, உட்கார்ந்து சாப்பிட்டு போட்டுக் காண்பித்த அத்தனை காட்சிகளுமே அட்டர் பிளாப்பில்தான் முடிந்தது!

பிற்படுத்தப்பட்ட மக்களும் இஸ்லாமியர்களும் சமாஜ்வாதி கட்சியை நம்புகின்றனர். தலித்துகள் மாயாவதி பக்கம் சாய்கின்றனர். இதனால் உத்தரப்பிரதேசத்தில் "பிராமணர்கள்" வாக்குகளைக் கவர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

இதன் முன்னோட்டமாக டெல்லியில் அண்மையில் ராகுல்காந்தி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த சாதி ஆயுதம் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது ராகுல்காந்தி சட்டென " நான் ஒரு பிராமின்... அப்புறம்தான் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்" என்று கூறியது கட்சியினரின் பிற்படுத்தப்பட்ட, தலித் பிரிவினரிடையே அதிர்வலைகளை உருவாக்கிவிட்டது.

காங்கிரஸ் கட்சிக்கென பாரம்பரிய வாக்காளர்களாக இருந்தவர்கள் பிராமணர்களே என்பதால் பிராமின் லாபி இத்தகைய ஒரு சூழலை காங்கிரசுக்குள் உருவாக்கி உள்ளது.

ராகுல்காந்தியின் இத்தகைய வெளிப்படையான ஒப்புதலால் காங்கிரஸ் கட்சியால் பிராமணர்களின் வாக்குகளைத் தக்க வைத்து அப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட முடியாது என்ற கனவில் அம்மாநில காங்கிரஸ் பெருந்தலைகள் இலவுகாத்துக் கொண்டிருக்கின்றன.

இதேபோல் கடந்த ஆண்டும் ராகுல்காந்தி தம்மை இப்படி பிராமின் என்று கூறியபோதே பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தலித்துகள், பிராமணர்களை ஒன்றிணைத்து மாயாவதி ஆட்சியைப் பிடித்த பார்முலாவை காப்பியடித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது.. தங்களுக்கு தலித்துகள், பிராமணர்கள் மற்றும் கணிசமான பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் சேர்ந்தால் ஆட்சியைப் பிடிக்கலாம் என எண்ணுகிறது காங்கிரஸ்.

ராகுல் தலைகீழாக நின்று போராடிப் பார்க்கிறார்.. எதைத் தின்றால் பித்தம் தெளியும் நிலையில்தான் காங்கிரஸ் கட்சி இருப்பதாகவே அதன் நடவடிக்கைகள் இருக்கின்றன.

இதனிடையே ராகுலின் இத்தகைய ஒரு கருத்து இணையதளங்களில் கடுமையாக அலசலையும் உருவாக்கியுள்ளது. ராஜீவ் ஒரு பார்சி குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர் தம்மை பிராமணர் என்று சொல்வது சரியா ? என்ற ரேஞ்சில் தொடங்கும் விமர்சனம் இத்தாலிய குடியுரிமை வரை நீண்டு கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியென்றால் தாழ்த்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட இனத்தின் காவலன் என்று தம்மை காங்கிரஸ் கூறிக் கொள்வது பொய்தானே என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உபி பிராமணர்களுக்காக, நாடு முழுவதும் உள்ள தலித் - பிற்பட்ட மக்களின் விரோதியாகப் போகிறதா காங்கிரஸ்?

தகவல் தட்ஸ்தமிழ்

காங்கிரஸ்-ராகுல்-செய்திகள்

Friday, April 13, 2012

ஏப்ரல் 28 ஆம் நாள் மழையுதிர்காலம் ஆரம்பம்




ஏப்ரல் 28 ஆம் நாள் சனிக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு சென்னை நாரத கான சபா அரங்கில் மழையுதிர்காலம் தொடங்குகிறது.

என்ன..ஒன்றும் புரியவில்லையா?

அன்று எனது புதிய நாடகம் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ஆதரவில் ..கோடை நாடக விழாவில்..என் எண்ணம் , எழுத்து, தயாரிப்பு, இயக்கத்தில் 'மழையுதிர் காலம்' நாடகம் அரங்கேறுகிறது.

பதிவுலக நண்பர்களை அன்புடன் நாடகத்திற்கு அழைக்கிறேன்..

நன்றி


நாடகம் - மழையுதிர்காலம்

Tuesday, April 10, 2012

பேருந்து கட்டண உயர்வும்..பயணிகள் படும் பாடும்...




பல ஆண்டுகளாக பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படவில்லையென...எல்லா ஆண்டுகளையும் சேர்த்து ஒரேயடியாக கட்டணங்களை உயர்த்தியுள்ளது ஒரு பக்கம் என்றாலும்..அப்பாவி மக்கள் நடத்துநர்களிடம் படும் அவஸ்தை இருக்கிறதே..அதைச் சொல்லி மாளாது.

கட்டண உயர்வுக்கு முன் நடத்துநர்கள் 50 காசு சில்லறையை பெரும்பாலும் கொடுத்ததில்லை.பயணிகளும் கேட்கத் தயங்கி விட்டுக் கொடுப்பதும் உண்டு.மீறிக் கேட்டால்..இறக்கி விட்டுவிடுவார்களோ என்ற பயம்.சில நடத்துநர்கள் பயணிகளை அர்ச்சனை செய்வதும் உண்டு.அப்போதெல்லாம் கட்டணத்தை 50 காசுக்கு பதிலாக ஒரு ரூபாய் என அமைத்தால் அதிகக் கட்டணம் அரசுக்காவது போகுமே என பெரும்பாலானவர்கள் சொன்னதுண்டு.

ஆனால் இப்போது எல்லாக் கட்டணமும்  ரூபாயளவிற்கு உயர்த்தப்பட்டாலும்..இப்போதும் சில்லறைப் பிரச்னை வேறு விதத்தில் தொடர்கிறது.

ஆறு ரூபாய் டிக்கட்டிற்கு 10 ரூபாய் கொடுத்தால்..நடத்துநர் ஒரு ரூபாய் இருக்கிறதா..என்கிறார்..அப்போதுதான் 5 ரூபாயாக திருப்ப முடியுமாம்.இல்லை என்றால் அர்ச்சனை தான்.அல்லது ஒரு 2 ரூபாயைக் கொடுத்துவிட்டு, இறங்கும் போது மற்ற ஒரு பயணிக்கு ஒரு ரூபாய் கொடுக்கச் சொல்லிவிடுகிறார்கள்.

தவிர்த்து..இது போன்ற அட்டூழியங்கள்...அதிகமாக..சென்ட்ரலிலிருந்து கிளம்பும் பேருந்துகளில் நடக்கிறது.பாவம்..பெட்டி படுக்கையுடன் ஏறும் பயணி மீதம் கேட்பதே இல்லை.

இதையெல்லாம் விடுங்கள் ஜம்பிங்க் ஸ்டேஜ் கேள்விபட்டிருக்கிறீர்களா...இல்லையா..இப்போது தெரிந்து கொள்ளுங்கள்..

உதாரணத்திற்கு..12நம்பர் பேருந்தில்..விவேகானந்தா காலேஜ் நிறுத்தத்தில் ஏறி..அடுத்த நிறுத்தமான வள்ளுவர் சிலை ஸ்டாப்பிற்கு..கட்டணம் 4 ரூபாய்..அடுத்த ஸ்டாப்பில் இறங்க நாலு ரூபாயா..என நடத்துநரிடம் கேட்டால்..லஸ் ஒரு ஸ்டேஜ் என்கிறார்.லஸ் தான் இந்த பஸ் போகாதே என்றால்..போகாதுதான்..ஆனால் அது ஒரு ஜம்பிங் ஸ்டேஜ் என்கிறார்,

பெசண்ட் நகர் சர்ச் ஸ்டாப்பிங்கில் 6டி பேருந்தில் ஏறி பீச் ஸ்டேஷன் டிக்கெட் வாங்கினால் (சொகுசு) முதல் நாள் ஒருவர் 13 ரூபாய் வாங்கினார்.அடுத்த நாள் வேறு ஒரு நடத்துநர் 15 ரூபாய் வாங்குகிறார்.

இதுபோல இன்னமும் பல வினோதங்கள் இந்த பஸ் கட்டண உயர்வில் நடைபெறுகிறது.

எதிர்த்து கேட்க பொதுஜனம் பயப்படுகிறது.

பேருந்து கட்டணம்

Monday, April 9, 2012

600 குழந்தைகளுக்கு தந்தையான விஞ்ஞானி




இங்கிலாந்து விஞ்ஞானி ஒருவரிடமிருந்து பெறப்பட்ட உயிரணுவிலிருந்து சுமார் 600 குழந்தைகள் பிறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் பெர்டோல்ட் வியஸ்னர் என்ற விஞ்ஞானி அவரது மனைவி மேரி பார்டன் உடன் சேர்ந்து மகப்பேறு மருத்துவமனை ஒன்றை நிறுவி இருந்தார்.

லண்டனில் 1940 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை மூலம் உயிரணு தானம் பெற்று பெண்கள் குழந்தை பேறு பெற்றுள்ளனர்.
அதில், 1940 முதல் 1960 களின் இடைப்பட்ட காலம் வரை சுமார் 1500 குழந்தைகள் பிறந்துள்ளன.

அவ்வாறு பிறந்த குழந்தைகளில் 600 குழந்தைகள் அந்த மருத்துவமனை நிறுவனரும் விஞ்ஞானியுமான பெர்டோல்ட் வியஸ்னரின் உயிரணு மூலம் பிறந்துள்ளது என தற்போது தெரிய வந்துள்ளது.

இவர் ஆண்டொன்றுக்கு 20 முறை உயிரணு தானம் செய்துள்ளார்.

இவர் உண்மையிலே 600 குழந்தைகளுக்கு உயிரியல் தந்தை என்றால், இவர் இதற்குமுன்னர் உள்ள சாதனைகளை முறியடித்தவர் என்ற பெருமையை அடைகிறார்.

அதாவது, அமெரிக்காவை சேர்ந்த உயிரணு கொடையாளர் ஒருவர் 150 குழந்தைகளுக்கு தந்தை என்ற பெருமையை பெற்று வந்தார். இப்போது அதனை முறியடித்தவராக வியஸ்னர் இருக்கிறார்.

600 குழந்தைகளுக்கு தந்தையான வியஸ்னர் கடந்த 1972 ஆம் ஆண்டு மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் வெப்துனியா

செய்திகள்

இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி அல்ல






இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டி இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பினர் சென்னை மெரீனா கடற்கரையில் பிரசாரம் மேற்கொண்டனர்.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை குஜராத் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி தீர்ப்பளித்துள்ளது.

இந்தி மொழி பெரும்பாலான மக்களால் இந்தியாவின் பல மாநிலங்களில் பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவ்வாறான அதிகாரபூர்வ அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறவில்லை என்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.

குஜராத் உயர்நீதிமன்றத்தில் சுரேஷ் கச்சாடியா என்பவர் 2009 ஆம் ஆண்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த வழக்கில் இந்தி மொழி, இந்தியாவின் தேசிய மொழி என்பதால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அடைக்கப்பட்ட பெட்டிகளின் மேல் அப்பொருளினைப் பற்றிய விலை, உள்ளடக்கம், தரம் ஆகிய விவரம் குறித்த தகவல்களை இந்தி மொழியில்தான் அச்சிட வேண்டும்.

இது தொடர்பான உத்தரவை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் விண்ணப்பித்திருந்தார்.இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முகோபாத்யாயா தலைமையிலான நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி மட்டுமே தவிர அது தேசிய மொழி அல்ல. இந்தியாவின் பெரும்பாலான மக்களால் இந்தி மொழி பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழி என்று வாதிடுவதை ஏற்க முடியாது.

இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தி மொழியை ஆட்சி மொழியாக மட்டுமே அங்கீகரித்துள்ளதே தவிர தேசிய மொழியாக அறிவிக்கவில்லை. அவ்வாறு எந்த அறிவிப்பும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதற்கான ஆதாரங்களும் ஏதுமில்லை.

எனவே இந்தி என்பது ஆட்சி மொழி மட்டுமே தவிர அது தேசிய மொழி அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறோம் என்று தெரிவித்தனர் என்று அந்த அறிக்கையில் தமிழர் பண்பாட்டு நடுவம் தெரிவித்துள்ளது.

தகவல் வெப்துனியா

செய்திகள்- நிகழ்வு

Thursday, April 5, 2012

படிச்சுட்டு இங்கிலாந்தில் வேலையா..? நோ சான்ஸ்





இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்கள், தங்கள் படிப்பு முடித்த உடன் சொந்த நாடு திரும்ப வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து மாணவ விசாவில் இங்கிலாந்திற்கு வந்து உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்த உடன், மேலும் 2 ஆண்டுகள் அங்கேயே தங்கி வேலையும் செய்யலாம்.

இந்த வசதியால் சுயநிதியில் படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பு செலவை ஈடுகட்ட 2 ஆண்டுகள் வேலை செய்து சரிக்கட்டலாம்.

அதுமட்டுமல்லாது, இங்கிலாந்தில் வேலை செய்த அனுபவம், இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற பெரிதும் உதவும்.

ஆனால், இந்த சலுகைகளை நாளை (6-4-2012) முதல் நிறுத்தப்படுவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இதனால், மாணவ விசாவில் வந்தவர்கள் படித்து முடித்து உடனே நாடு திரும்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு  இங்கிலாந்து நாட்டு பல்கலைக்கழகங்கள், பிரிட்டிஷ் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

செய்திகள் - இங்கிலாந்த்

Wednesday, April 4, 2012

புதிய தலைமை செயலக கட்டிடம் அரைகுறையாக கட்டப்பட்டது: -ஜெயலலிதா



திமுக ஆட்சியில் எல்லாமே அரைகுறையாக இருந்தது. புதிய தலைமை செயலக கட்டிடமும் அரைகுறையாகவே கட்டப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில்....

துரைமுருகன் பேசும்போது ஏதோ இந்த சட்டமன்றத்தில் இட நெருக்கடி இருந்ததாகவும், அதனால் வேறு இடம் பார்த்ததாகவும் கூறினார். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை புறக்கணித்து இந்த அரசு வீணடிப்பதாக கூறினார். அவர் சொல்லும் அடிப்படையே தவறு. இந்த சட்டசபையில் இட நெருக்கடி என்று நான் சொல்லவில்லை. ஒட்டு மொத்த தலைமை செயலகத்தில் தான் இட நெருக்கடி என்று கூறினோம். சரி, திமுக ஆட்சியில் விசாலமான இடத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம் முழுமையாக தலைமை செயலகத்துக்கு பயன்பட்டதுபோல் துரைமுருகன் குறிப்பிட்டார்.

தமிழக அரசில் மொத்தம் 36 துறைகள் உள்ளன. புதிய தலைமை செயலகத்துக்கு கடைசி வரை 6 துறைகள் தான் மாற்றப்பட்டு செயல்பட்டன. மீதி 30 துறைகள் கோட்டையில் தான் செயல்பட்டன. இவர்கள் அரைகுறையாக கட்டிவிட்டு அங்குமிங்குமாக அதிகாரிகள் அலைய வேண்டிய நிலையை உருவாக்கினர். அங்கு 36 துறைகளின் அமைச்சர்கள் இருப்பார்கள். ஆனால் 6 துறைகளுக்கு மட்டுமே இடம் இருக்கும். மீதி 30 துறைகளுக்கு அலுவலகம் கிடையாது. இதனால்தான் நிர்வாகத்தில் குழப்பம், தாமதம் ஏற்பட்டது.

கோட்டையில் இருந்து அலுவலகத்தை மாற்ற வேண்டுமானாலும் ஒரே ஒரு துறைக்கு மட்டுமே இடம் இருந்தது. எல்லாமே அரைகுறையாக இருந்தது. அந்தக் கட்டிடமும் அரைகுறையாகவே கட்டப்பட்டுள்ளது என்றார்.

செய்திகள் - நிகழ்வு

Tuesday, April 3, 2012

கேள்விக்கு பாக்கியராஜ் பதில்...




இந்த வார பாக்யா இதழில் கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்விக்கு பாக்கியராஜின் பதில் ரசிக்கும்படி இருந்தது..அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..

கேள்வி - சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதிலைக் கூறுங்கள்..பார்ப்போம்?

பதில் - ஒருநாள் கிராமத்தின் வழியே ஒரு அறிஞர் போயிட்டிருந்தாரு.மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு கிராம இளஞனைப் பார்த்தாரு.நல்ல அறிவாளிகளே நாம கேள்வி கேட்கிறேன்னாலே பயப்படுவாங்க. இவன் படிப்பறிவில்லாத கிராமத்தான்.இவன் நம்ம கேள்விகளுக்கு பதில் சொல்லாம முழிக்கிறதைப் பார்த்து ரசிக்கணும்னு விரும்பினார்.

அறிஞன் அவன் கிட்டே போய் ;'உன்னிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன்' ன்னு சொல்ல, மாடு மேய்க்கும் இளைஞன். 'கேளுங்க..என் அறிவுக்கு எட்டின வரைக்கும் முயற்சிக்கிறேன்'னான். 'பரவாயில்லையே! பயமில்லாம இவன் கேள்வி கேளுங்கள்னு சொல்றானே' ங்கற ஆச்சரியத்தோட 'உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது?" ன்னாரு.

மாடு மேய்க்கும் இளைஞன்; ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு "சூரிய ஒளிதான்.அதற்கு மேற்பட்ட ஒளி இருக்கிற மாதிரி தெரியலை' ன்னான்.

அறிஞன், 'உலகின் சிறந்த நீர் எது?' என்றார்.

மாடு மேய்க்கும் இளைஞன் யோசிச்சுட்டு ' கங்கை நீர்தான்.சிவன் தலையிலிருந்தும், விஷ்ணுவின் பாதம் வழியாயும் வந்து அதில் மூழ்கியவர்களுக்கு புண்ணியத்தைக் கொடுக்குது.அதனால் கங்கை நீரைவிட சிறந்த நீர் இருக்கிறதான்னு தெரியலை' ன்னான்.

சந்தோஷப்பட்ட அறிஞன்' உலகின் சிறந்த மலர் எது?' என்றார்.

மாடு மேய்க்கும் இளைஞன், 'தேவதேவியரும் வீற்றிருக்கும் சிறந்த மலர் தாமரை.அதாத்தான் இருக்கும்' என்றான்.

அறிஞன், 'இவனை படிப்பறிவில்லாதவன்..வெறுங்குடம் என்றெல்லவா நினைச்சேன்..இவன் நிறைகுடம்னு தெரிஞ்சு, 'உன் அறிவை மெச்சுகிறேன்..இந்தா என்னுடைய விலையுயர்ந்த  முத்துமாலை' னு பரிசளித்தான்.

ஆனா மாடு மேய்க்கும் இளைஞன், 'ஐயா..நல்லா யோசிச்சுப் பார்த்தா நான் இந்த பரிசுக்குத் தகுதியில்லாதவன்னு தோணுது.அதனால் வேண்டாம்.என்னா நான் சொன்ன பதில்கள் மூன்றுமே தவறோன்னு இப்போ தோணுது' என்றான்.

அறிஞன் திகைச்சு பேச்சின்றி முழிச்சு, 'என்னப்பா சொல்கிறாய்? இதற்கு மேல் இந்தக் கேள்விக்கு பதிலே இல்லையே.." என்றார்.

அதற்கு மாடு மேய்க்கும் இளைஞன், 'ஐயா..சூரியஒளி சிறந்ததுதான்  இருந்தாலும் அந்த ஒளியைப் பார்க்கறதுக்கு நம்ம கண்ணிலே ஒளி வேண்டும் இல்லையா? அதனால் கண்ணொளி தான் சூரியஒளியைவிட உயர்வானதுன்னு தோணுது.

கங்கை நீர் புனிதமானதுதான்..இருந்தாலும் அதனை எல்லா நாட்டினருக்கும்..சமயத்தாருக்கும் கிடைக்குமா? கிடைச்சாலும் தாகத்தோடு ஒருவனுக்கு கிடைக்காத கங்கை நீர், கிடைத்த சிறிதளவு நீராடு ஒப்பிட்டுப் பார்த்தால், கங்கை நீரைவிட அதுதான் உயர்வானதுன்னு தோணுது..

தாமரைமலருக்கு பல சிறப்புகள் இருந்தாலும் நீரை விட்டு வெளியே எடுத்தா..தாமரை வாடிடும்.உண்மையில் மலர்களில் சிறந்தது பருத்தி மலர்தான்.ஏன்னா அதிலிருந்து கிடைக்கும் நூல்ல நெய்யப்படும் ஆடைகள்த்தான் மக்கள் மானத்தை நாள்தோறும் காக்குது.ஆக பருத்திமலரைவிட தாமரை எந்தவிதத்தில் மக்களுக்கு பயன்படும் சிறந்த மலராய் இருக்கமுடியும்' ன்னு முடிச்சான்

அறிஞன் தன்னோட கர்வம் முற்றிலும் அழிந்த நிலையில் தலைதாழ்த்தி உண்மையை ஒத்துக்கிட்டு புறப்பட்டான்.

பாக்கியராஜ்- பதில்

ஜெய்ராம் ரமேஷ் மூலம் ஜெயலலிதாவுக்கு தூது விடும் காங்கிரஸ்!!




தேசிய ஊரகக் குடிநீர் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதை பாராட்டி தமிழகத்துக்கு ரூ.98.20 கோடியை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. கூடவே இதற்காக முதல்வர் ஜெயலலிதாவை ஏகத்துக்கும் பாராட்டி ஒரு லெட்டரும் அனுப்பியுள்ளார் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்... இது செய்தி.

இந்தச் செய்தியின் பின்னணியில் உள்ள அரசியல் தான் உண்மையிலேயே 'செய்தி'.

விரைவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்கள் நடக்கவுள்ளன. எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களித்து நாட்டின் ஜனாதிபதி-துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் இது.

உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட படுதோல்வியால் காங்கிரசிடம் போதிய எம்எல்ஏக்கள் இல்லை. மேலும் கூட்டணியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தேர்வு செய்யும் வேட்பாளரை ஆதரிப்பாரா என்பது அவருக்கே இதுவரை தெரியாது.

அதே போல பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை.

ராஜ்யசபாவில் பெரும்பான்மை கூட இல்லாத நிலையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. அங்கு எதிர் தரப்புக்குத் தான் அதிக எம்பிக்கள் உள்ளனர்.

இந் நிலையில், அடுத்த ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதில் தனது கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவையே காங்கிரஸ் நம்பியிருக்க வேண்டிய நிலையில் உள்ளது.

இதற்காக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு ஐஸ் வைக்கும் வேலையை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் தான் ஜெய்ராம் ரமேஷை விட்டு பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளதோடு, தமிழகத்துக்கு கூடுதலாக ரூ.98.20 கோடியையும் குடிநீர்த் திட்டங்களுக்காக ஒதுக்கியுள்ளது. (கடந்த ஆண்டு ரூ. 273.84 கோடி தான் தந்தனர். இப்போது கேட்காமலேயே கூடுதல் நிதி தந்துள்ளனர்).

''Dear Madam Chief Minister” என்று ஆரம்பிக்கும் ஜெய்ராம் ரமேஷின் கடிதம், தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 60 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழகம் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

இதனால், மேலும் அதிக மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க உதவியாக மேலும் ரூ.98.20 கோடியை ஒதுக்கியுள்ளோம். மாநிலத்தை எந்தக் கட்சி ஆளுகிறது என்கிற பாரபட்சம் இன்றி கூடுதல் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த வாரத்தில் உங்களை சந்தித்துப் பேசவும் விரும்புகிறேன். நேரம் ஒதுக்கித் தந்தா நல்லாயிருக்கும் என்றரீதியில் போகிறது அந்தக் கடிதம்.

இத்தனைக்கும் மூன்றாவது முறையாக ஜெயலலிதா முதல்வரான பின் அவரை முக்கிய மத்திய அமைச்சர்கள் யாருமே சந்தித்துப் பேசவும் இல்லை, தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அவர் கேட்ட நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை.

இந் நிலையில் திடீரென ஜெய்ராம் ரமேஷுக்கு தமிழகத்தின் மீதும் முதல்வர் மீதும் கரிசணம் ஏற்பட்டுவிட்டதோடு சந்திக்கவும் நேரம் கேட்டிருப்பது ஜனாதிபதி தேர்தல் ஓட்டுக்களை மனதில் வைத்தே என்கிறார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் பக்கமாக வந்து கொண்டுள்ள அதிமுகவை திடீரென காங்கிரஸ் குறுக்கே புகுந்து இழுத்துச் செல்ல விட்டுவிடுமா பாஜக.

உடனே ஜெயலலிதாவை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டார் பாஜக மூத்த தலைவரான அருண் ஜேட்லி. செவ்வாய்க்கிழமை காலை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா தரப்பிலிருந்து பதில் வரவே நேற்று மாலையே சென்னைக்கு பறந்து வந்துவிட்டார்.

இன்று காலை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவை 'மரியாதை நிமித்தமாக' சந்தித்துப் பேசினார்,

இந்த சந்திப்புக்குப் பின், ''ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசினீர்களா?'' என்ற நிருபர்களின் கேள்விக்கு ''இல்லை'' என்று கரெக்டாக பதில் சொல்லிவிட்டுப் போனார் ஜேட்லி.

அடுத்தபடியாக ஜெய்ராம் ரமேஷ் அப்பாயிண்ட்மென்ட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கும் ஜெயலலிதா நேரம் ஒதுக்கித் தந்தால், அது தான் 'அரசியல்' ஐபிஎல் 5.

தகவல் தட்ஸ்தமிழ்

செய்திகள் - நிகழ்வு

Sunday, April 1, 2012

புதுகை அப்து ஐயர் எம்.எல்.ஏ., ஆவாரா?




புதுகை எம்.எல்.ஏ., முத்துகுமரன் அகால மரணம் அடைந்ததற்கு வருந்தும் அதே வேளையில்...புதுகை தொகுதிக்கு மறு தேர்தல் வரும் என்பதால் தான் இந்த இடுகை.

புதுகை அப்து ஐயர் என பதிவர்களாலும், நண்பர்களாலும் அன்புடன் அழைக்கப்படும் புதுகை அப்துல்லா விற்கு எம்.எல்.ஏ., ஆகும் வாய்ப்பு இருப்பதாக நான் எண்ணுகிறேன்.

ஏற்கனவே கடந்த வருட சட்டசபைத் தேர்தலில் அவர் விராலிமலை தொகுதிக்கு சீட் கேட்டு...சில..பல..காரணங்களால் கிடைக்காமல் போயிற்று.

ஸ்டாலினின் ஆதரவாளரான அப்துல்லா அவர்களுக்கு..வரும் இடைத்தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்க வாய்ப்புகள் ஏராளமாக இருப்பதாகத் தெரிகிறது.

விரைவில் புதுகை அப்துல்லா வை ஒரு எம் எல் ஏ வாக பார்க்கலாம்.

பழகுவதற்கு அருமையானவரான இவருக்கு தி.மு.க., சந்தர்ப்பம் அளிக்கும் என எண்ணுகிறேன்..அப்படியாயின்..இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்னும் நிலையை இவர் மாற்றிக்காட்டுவார் என்பது உறுதி.

இடைத்தேர்தல்