ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Sunday, November 25, 2012
சிவாஜி ஒரு சகாப்தம் - 2
1954ல் இவர் நடித்து வெளிவந்த படங்கள்
மனோகரா, இல்லறஜோதி, அந்தநாள், கல்யாணம் பண்னியும் பிரம்மச்சாரி, துளிவிஷம், கூண்டுக்கிளி, தூக்கு தூக்கி, எதிர்பாராதது. இவைத் தவிர..மனோகரா..ஹிந்தி மற்றும் தெலுங்கு.
மனோகரா...மீண்டும் கலைஞர்..கதை வசனம்.மாபெரும் வெற்றி பெற்ற..படம்..பராசக்தி..கோர்ட் காட்சி வசனம் போல்...இப்படத்திலும்...கிளைமாக்ஸில்..கண்ணாம்பா,சிவாஜி வசனங்கள்..தனியாக இசைத்தட்டாகவே வந்து..அனைவராலும் முணுமுணுக்கப்பட்டவை. இப்படத்தில்..கிரிஜா என்னும் நடிகை நடிகர் திலகத்தின் ஜோடி.டி.ஆர்.ராஜகுமாரி,எஸ்.ஏ.நடராஜன்..வில்லி..வில்லன்.
இல்லறஜோதி..கண்ணதாசன்..கதை..வசனம்..படம் எதிர்ப்பார்த்த அளவு பேசப்படவில்லை.
எஸ்.பாலசந்தர் கதை வசனத்தில் வந்த படம்..அந்தநாள்.தயாரிப்பாளர் ஏ.வி.ஏம்.,சிவாஜிக்கு..வில்லத்தனமான கதானாயகன் பாத்திரம்.தேசதுரோகம் செய்யும் அவரை..அவர் மனையாக வரும் பண்டரிபாயே கொலை செய்துவிடுவார்.(பின்னாளில் வந்த கே.பாலசந்தரின்..அச்சமில்லை..அச்சமில்லை.ஞாபகம் வருகிறதா?)அந்தநாளில்..அந்தநாள் தான் பாடல்களே இல்லாமல் வந்த முதல் தமிழ் படம் எனலாம்.
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி...நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து..பி.ஆர்.பந்துலு எடுத்தபடம்.பத்மினி காதானாயகி.படம் வெளிவந்த போது..எதிர்ப்பார்த்த வெற்றி அடையவில்லை என்றாலும்..இரண்டாவது..மூன்றாவது ஓட்டங்களில்..வசூலை குவித்தது எனலாம்.
துளிவிஷம்...சிவாஜி வில்லன் பாத்திரம்..பாரதிதாசன் கதை என்பதைத் தவிர..சொல்ல ஒன்றுமில்லை.
கூண்டுக்கிளி....தமிழ்த் திரையில்..புரட்சி நடிகரும்..நடிகர் திலகமும் நடித்து வந்த ஒரே படம்.டி.ஆர்.ராமண்ணா தயாரிப்பு..இயக்கம்.பி.எஸ்.சரோஜா நாயகி.சிவாஜிக்கு வில்லன் பாத்திரம்..படம் ஏனோ படு தோல்வி.
எதிர்பாராதது..ஸ்ரீதரின் கதை வசனம்.நாயகனின் நாயகி (பத்மினி)யே..எதிர்பாராமல்..நாயகனுக்கு அம்மா வாகிறார்.(மூன்று முடிச்சு?).படம் வெற்றி. சிற்பி செதுக்காத பொற்சிலையே..என்ற ஏ.எம்.ராஜாவின் பாடல் இன்றும் கேட்க இனிமையானது.
தூக்கு தூக்கி...என்ன சொல்ல முடியும்..வெற்றி..வெற்றி...வெற்றி..தான்.இன்றும் இப்படத்திற்கு ரசிகர்கள் உண்டு.பத்மினி.லலிதா,ராகினி,பாலையா..இப்படி நட்சத்திரக் கூட்டம்.இப்படப் பாடல்களைப் பாட..திருச்சி லோகனாதனைக் கேட்டார்களாம்.அச்சமயத்தில் பீக்கில் இருந்ததால்..அவர் அதிகத் தொகைக் கேட்க தயாரிப்பாளர்கள்..அவ்வளவு முடியாது என உரைக்க ..அப்போ..மதுரைல இருந்து ஒரு
பையன் வந்திக்கான்..அவனை பாடச்சொல்லுங்க..என்றாராம்..லோகநாதன். அந்த பாடகர்தான்..டி.எம்.எஸ்.,
பெண்களை நம்பாதே...ஏறாத மலைமேலே..அபாய அறிவிப்பு, சுந்தரி சௌந்தரி..குரங்கிலிருந்து போன்ற அற்புதமான பாடல்கள் நிறைந்த படம் இது.
இனி 1955ல் வந்த படங்கள்...அடுத்த பதிவில்...
Thursday, November 22, 2012
நான் படித்த சில அருமையான வரிகள்...
1.தப்பு செய்யற யாருக்குமே பலம் கிடையாது..எப்பவும் அப்படிப்பட்டவர்களை முறியடிக்க சாதுர்யம்தான் முக்கியம்.
2.பெண்களுக்கு சம அந்தஸ்து இருக்கா..அவளுக்குன்னு ஒரு மனசு இருக்குன்னு கூட சிலர் நினைக்கறதில்ல,(சிலர் என்பதை மனதில் கொள்ளவும்)
3.பேனாவில்..மையும்..திமிரும் இருந்தா..எதை வேண்டுமானாலும் எழுதிடறதா?
4.பணம்..பெண்..இரண்டுமே போதையானது..அது நல்ல வழியில் வந்தா நிலைக்கும்...கெட்ட வழியில் வந்தால் விட்டு ஓடிடும்..
5.you can erase some one from your mind..getting them out of your heart is another story.
6.winners never quit...quitters never win
7.வண்டிக்கு வருத்தம் ஏது...அதை இழுக்கற மாட்டுக்குத்தான் வலி தெரியும்.
8.படிப்பறிவு என்பது வேறு..கல்வி அறிவு என்பது வேறு..படிப்பறிவு என்றால் ..அடுத்தவரின் அறிவை உள்வாங்குகிறோம்..கல்வி அறிவு என்றால் உள்ளே இருக்கும் ஆற்றல் வெளியே வருவது.
9.தந்தை...ஒரு நண்பனைப்போல உன்னைக்கவனிக்கிறார்..வேலைக்காரனைப்போல உனக்கு பணிந்து போகிறார்..குருவைப்போல வழி காட்டுகிறார்..
10.அழுக்கிலே நெருப்பு பத்தி எரிஞ்சாலும்..நெருப்பில அழுக்கு கொஞ்சம் கூட ஒட்டறதில்ல...
11.உலகில் இன்று எது வேண்டுமானாலும் விலைக்கு கிடைக்கும்...விலைக்கு கிடைக்காத ஒன்றே ஒன்று..தாயின் அன்பு மட்டுமே..
இவற்றை எல்லாம்..எழுதியவர்கள் யார் என தெரியவில்லை...எழுதியவர்களுக்கு நன்றி.
Wednesday, November 21, 2012
வரலாறு படைக்கப் போகும் விஸ்வரூபம்..
சமீபத்தில் கமல்ஹாசன்..விஸ்வரூபம் படம் வெளியாவதில் தாமதம் ஏன்? என்பதற்கு...
இப்படம் 3000 பிரிண்டுகள் போடப்படுகின்றன.அதனால்தான் படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது என்றார்.
3000 பிரிண்டுகள் எனில் கண்டிப்பாக 3000 திரையரங்குகள்.ஒரு அரங்கில் குறைந்த பட்சம் நாளைக்கு நான்கு காட்சிகளாவது திரையிடப்படுமெனில்..ஒருநாளைக்கு 12000 காட்சிகள்.ஒரு காட்சிக்கு நிகர வருமானம் 20000 என்று வைத்துக் கொண்டாலும்..ஒரு நாளைக்கான வசூல் 24 கோடி.படம் ஐந்து நாட்கள் ஓடினாலும் வசூல் நூறு கோடிகளைத் தாண்டும்.
ஆகவே படம் வெற்றியடைய வாழ்த்தினாலும்...வசூலிலும் அது சாதனைப் புரியும் என எதிர்பார்க்கலாம்.
வாய் விட்டு சிரிங்க...!!
1.நேத்து கண்காட்சியில என் மனைவி காணாம போயிட்டா..
நீ கண்காட்சி போறதை முன்னாலேயே சொல்லக்கூடாது,..நானும் என் மனைவியை அழைச்சுட்டு வந்திருப்பேன்.
2.என் மனைவிக்கும்...எனக்கும் பெரிய சண்டை
ஏன்
ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினார்னு என் மனைவி கிட்ட சொன்னேன்..நான் செத்தா நீ என்ன கட்டுவேன்னு கேட்டா..உன் தங்கச்சியை கட்டுவேன்னு சொன்னேன் அதுதான்.
3. நம்ம தலைவர் ..ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியோட கூட்டு வைச்சிருக்கறதால...நம்ம கட்சிக்கு பச்சோந்தி சின்னம் கேட்கிறாராம்.
4. சுடச்சுட சாம்பாரைக் கொட்டிட்டேன்னு..காதில பஞ்சை ஏன் அடைச்சிக்கிற
நான் சாம்பாரை கொட்டினது உங்க அம்மா மேல..
5.நடுராத்திரி பெண் பார்க்கப்போறியா...ஏன்?
பொண்ணு ஸாஃப்ட்வேர் இஞ்சினீயர்...நைட்ஷிஃப்ட் அதுதான்..
6.உன்னை நம்பி வந்தவங்களை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வருது..
நம்பி வரவங்களைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவங்களை எப்படி ஏமாற்றமுடியும்?
7.என்னோட லட்சியமே ஒரு கோவில் கட்டறதுதான்
அவ்வளவு பக்தியா?
அதெல்லாமில்லை...கோவில் கட்டினா...மெகா சீரியலுக்கு வாடகைக்கு விடலாம்..அதுதானே இன்னிக்கு முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்
8..நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்
என்ன சொல்றீங்க
இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே
9.(வேகமாக ஓடும் காரை நிறுத்திய போக்குவரத்து காவலர்) சார்...நீங்க மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில போறீங்க
ஏன்..அபாண்டமா பொய் சொல்றீங்க?..நான் காரையே 10 நிமிஷம் முன்னாலதான் எடுத்தேன்.
10.உங்க வீட்டு பெண்கள் எல்லாம்...cat walk பழகறாங்களா? ஏதாவது ஃபேஷன் ஷோவில கலந்துக்கிறாங்களா?
இல்ல...வீட்ல இருக்கிற எலிகளை பிடிக்கத்தான்.
11.பேச்சுப் போட்டியில அரை மணி நேரம் பேசியும் உனக்கு பரிசு கிடைக்கலையா? எதைப்பற்றிப் பேசினே?
சுருங்கச் சொல்லி விளக்க வைப்பது எப்படின்னு
12.வக்கீல் சார்...என் கேஸ் ஜெயிக்குமா?
உண்மையை சொல்லணும்னா..ஜெயிக்கிறது கஷ்டம் தான்
உண்மையைச் சொல்றதாயிருந்தா இருந்தா...உங்களை வக்கீலா வைச்சிருக்க மாட்டேனே
Tuesday, November 20, 2012
தமிழுக்கு அமுதென்று பெயர் - 3
காளமேகம் பிற்காலப்புலவர்.நகைச்சுவை மன்னர்.
ஒரு நாள் வெயில் நேரம்.புலவருக்கோ தாகம்.அப்போது மோர் விற்று வருகிறாள் ஒரு பெண்.அவளிடம் மோர் வாங்கிகிறார்.அவளோ..காசு வேண்டாம்..என் மீது ஒரு கவி பாடுங்கள் என்கிறாள்.
உடன் கவி'அம்மையே..உன் மகத்துவத்தைக் காட்டிலும்..உன் மோரின் மகத்துவம் மிகப்பெரிது.அதைப்பாடுகிறேன்..என்கிறார்.
மோரே..நீ இம்மண்ணுலகப் பிறவியா..இல்லை..இல்லை..நீ தேவலோகப் பிறவி.திருமால் 10 அவதாரம் எடுத்தார்..நீ 3 அவதாரம் எடுத்தாய்.திருமாலுக்கு உவமை கூறும் வகையில் பெருமை மிக்க கருமை நிற வானில் சஞ்சரித்தாய்.உனக்கு கார் என பெயர் சூட்டி மண்ணுலகிற்கு அழைத்தோம்.திருமால் மண்ணுலகில் தேவகி வயிற்றில் அவதரித்தது போல் நீயும் மண்ணுலகில் நீராய் பொழிந்தாய்.
கண்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்தாலும்..யசோதை என்ற இடையர் குல பெண்ணிடம் புகுந்தான்.நீயும் நீராய் பொழிந்து பிறந்த இடத்தில் நில்லாமல்..இந்த ஆச்சியின் குடத்தில் புகுந்தாய்.உடனே இவளும் உனக்கு மூன்றாவது பெயர் 'மோர்" என சூட்டி விட்டாள்.உன் திருநாமத்தை 'மோரோ..மோர்..'என பன்முறை ஓதி பாராட்டுகிறாள்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிப் பிறவுமாகி நிற்கும் இறைவனை எப்படிப் பாராட்டுவேன் என்கிறார் மணிவாசகர்.காராகி,நீராகி,மோராகி நிற்கும் உன்னை எப்பேரால் வாழ்த்துவேன் என்கிறார் காளமேகம்.அம்மையே..பிடியுங்கள் உங்கள் மோர் மீது என் ஆசுகவி என்கிறார்.
கார் என்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீர் என்ரு பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின்
வார் ஒன்று பூங்குழலார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே
Monday, November 19, 2012
சிவாஜி ஒரு சகாப்தம்..- 1
(2009ல் என் வலைப்பூவில் இத்தொடரை எழுதினேன்.இன்று பல புதியவர்கள் இணையத்தில் எழுத ஆரம்பித்துவிட்ட நிலையில், இத் தொடரை மீள் பதிவிடுவது அவசியம் எனக் கருதியதால் ...மீள் பதிவிடுகிறேன்)
சிவாஜி கணேசன்...
தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்..
இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான்.
ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது.
படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப்படித்தான் இருப்பார்கள்..என்று நம் கண் முன் நிறுத்திய ஒப்பற்ற கலைஞன்.
ஆம்...அவர் ஒரு பல்கலைக்கழகம்..சகாப்தம்..
இனி வாரம்தோறும் ..1952 முதல் அவர் நடித்த படங்கள் பற்றி..எழுதலாம் என்ற ஆசை.இப்பதிவு..அவர் நடிப்புப் பற்றி மட்டுமே..இதில்..அரசியல் வாழ்க்கை போன்றவற்றை எழுதப்போவதில்லை.
என் நினைவிலிருந்தும்..படித்த சில புத்தகங்களை வைத்தும் இப்பதிவு எழுதப்படுவதால்..இதில்..ஏதேனும் விட்டுப்போயிருந்தாலோ..தவறிருந்தாலோ..அவற்றை சுட்டிக்காட்டினால்..பதிவில் மாற்றம் செய்துவிடுகிறேன்.
இனி..கலையுலக சக்கரவர்த்தியாய் திகழ்ந்தவர் பற்றி..
தமிழ் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த வி.சி.கணேசன் 1952ல் பராசக்தி மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.இவர் ஏற்ற பாத்திரத்தில் ..கே,ஆர்.ராமசாமி நடிக்க வேண்டும்..என்று சம்பந்தப் பட்டவர்கள் கூற.. அப்படத்தின் கதை வசனம் எழுதிய கலைஞர் பிடிவாதமாக..கணேசன் தான் நடிக்க வேண்டும் என்றாராம்.கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கணேசன் பேசிய முதல் வசனம் 'சக்சஸ்..சக்சஸ்" என்பதுதான்.பின் திரையில் வெற்றியுடன் ஆட்சி புரிந்தார் என்று நாம் அறிவோம்.
அதே வருஷம் வந்த படம் பணம்..என்.எஸ்.கே.,மதுரம்.,பத்மினி., ஆகியோர் நடித்தது.
பராசக்தி 42 வாரங்கள் ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது.
1953ல் சிவாஜி நடித்து வந்த படங்கள்..பூங்கோதை,திரும்பிப்பார்,அன்பு,கண்கள்,மனிதனும் மிருகமும்,பரதேசி(தெலுங்கு),பொம்புடு கொடுகு(தெலுங்கு)
பூங்கோதை
-----------------
தெலுங்கில் பர்தெசி என்றும் தமிழில் பூங்கோதை என்றும் எடுக்கப்பட்ட படம் அஞ்சலி பிக்க்ஷர்ஸ் தயாரிப்பு.திரைக்கதை,இயக்கம் எல்.வி பிரசாத்.இசை ஆதி நாராயண ராவ்.
சிவாஜி யின் முதல் படமாக இது வெளிவந்திருக்கக் கூடும்.ஆனால்..நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் கேட்டுக் கொண்டதன் பேரில்..சற்று தள்ளி ..சில மாதங்கள் இடைவெளியில் வந்த படம் இது. 7-2-53 அன்று இப்படம் வெளியானது.
நடிகர் திலகத்துடன் ஏ.நாகேஸ்வர ராவ், அஞ்சலி தேவி, ரங்காராவ் நடித்திருந்தனர்..
சீகிரி என்னும் மலை வாசஸ்தலத்தில் பூ வியாபாரம் செய்து வருபவ்ள் லட்சுமி
சந்திரன் அங்கு வந்து தங்கும் நேரத்தில் ,அப்பூக்காரியுடன் காதல் ஏற்பட்டு..ஒரு கோயிலில் இருவரும் மணமுடிக்கின்றனர். லட்சுமி கரு தரித்ததும் ..மணமான செய்தியை அறிகிறார் அவர் தந்தை.சந்திரனை அவர் பார்க்க விரும்புகிறார்.ஆனால்..அவனோ தவிர்க்க முடியாத காரணங்களால் அவ்விடத்தை விட்டு ..லட்சுமியிடமும் சொல்லாது சென்று விடுகின்றான்.
இடைபட்ட காலத்தில்..லட்சுமியின் தந்தை ஊராரின் ஏச்சுகளைக் கேட்க முடியாது தற்கொலை செய்து கொள்கிறார்.லட்சுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. இதனிடையே அவளைத் தேடிவரும் சந்திரனிடம் அவள் இறந்து விட்டதாகத் தகவல் சொல்லப் படுகிறது.
சந்திரனின் நண்பரின் மகன் ஆனந்த.நண்பன் இறக்கும் நேரத்தில் ..ஆனந்தை வளர்க்கும் பொறுப்பை சந்திரனிடம் ஒப்படைக்கிறான்.
லட்சுமியின் பெண் வளர்ந்து வளர்ந்து..ஆனந்தை விரும்புகிறாள்.ஆனால் லட்சுமி அதை விரும்பவில்லை..
சந்திரன் ,லட்சுமியை மீண்டும் சந்தித்தானா..ஆனந்த் லட்சுமியின் மகளை மணந்தானா..என்பதே மீதக்கதை.
திரும்பிப்பார்
------------------
அடுத்து.திரும்பிப்பார்..
வெளியான தேதி 10-7-1953
இதிலும் கலைஞர் வசனம்..
மாடெர்ன் தியேட்டர்ஸ் தயாரிக்க டி ஆர் சுந்தரம் இயக்கம்.
ஜி ராமநாதன் இசையில் எஸ்.சி.கிருஷ்ணன் பாடிய "கலப்படம்..கலப்படம்" என்ற பாடல் பிரபலம்
பண்டரிபாய் நடித்திருந்தார்...படம் வெற்றி..இதில் இவர் ஏற்று நடித்த பாத்திரம் பெயர் பரந்தாமன்..
திரும்பிப்பார் படத்தில் செக்ஸ் ஒன்றே வாழ்க்கையின் பரமானந்தம் என நினைத்து, யாராக இருந்தாலும் பெண்டாள துடிக்கிற மோசமான வேடம் பாத்திரம்.. பராசக்தி குணசேகரனுக்கும் அடுத்த ஆண்டு வந்த திரும்பிப்பார் பரமானந்தத்திற்கும் இடையேதான் நடிப்பில் எவ்வளவு வேறுபாடு..
.படம்..மாபெரும் வெற்றி படமாக அமைந்தது எனலாம்.
1954..அடுத்த பதிவில்...
.படம்..மாபெரும் வெற்றி படமாக அமைந்தது எனலாம்.
1954..அடுத்த பதிவில்...
துப்பாக்கி...- என் பார்வையில்..
துப்பாக்கி படத்தை இணைய நண்பர்கள் பலரும் தோய்த்து காயப்போட்டு விட்ட நேரத்தில்..எனது விமரிசனம் தேவையா? என ஒரு நிமிடம் நினைத்தாலும்...உடன்..நீண்ட நாள் கழித்து..முன்னணி நடிகர் ஒருவர் நடித்து..வெற்றி பெற்றுள்ள படம் என்பதால்..கண்டிப்பாக விமரிசனமாய் இல்லாமல் என் எண்ணங்களை எழுத வேண்டும் என எண்ணியதால்தான் இப்பதிவு .
விஜய்..இளைய தளபதி பட்டத்திற்கு தான் தகுதியானவர் தான் என்பதை நிரூபித்துள்ளார்.காஜலோடு ஆட்டம் போடுவதில் ஆகட்டும்..வில்லனோடு மோதும் காட்சியில் ஆகட்டும், சத்யனோடும்..ஜெயராமுடனும்..காமெடி செய்வதில் ஆகட்டும்...சூப்பர்.
பழைய இளமையும், துள்ளலும் அமர்க்களப்படுத்தி விட்டார்.
திரைக்கதையை வடிக்க முருகதாஸ் பட்ட மெனக்கடல் தெரிகிறது.ஆனால் நாடகம் போல ஒரு காட்சி காதல், அடுத்த காட்சி துப்பாக்கி என மாறி மாறி வருவதை சற்று தவிர்த்திருக்கலாம்.மற்றபடி குறை சொல்ல முடியாது.தனி காமெடி டிராக் இல்லாமல்..பல இடங்களில் சிரிக்க வைத்துள்ளார்.ஜெயராமன் நன்கு ஒத்துழைத்துள்ளார்.
ஒளிப்பதிவு..சந்தோஷ் சிவன்...எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத்..பட வெற்றிக்கு உறுதுணையாய் உள்ளனர்.ஹாரீஸ் ..ம்..ஹூம்..ஏமாற்றி விட்டார்..பாடல்களில்.ஆனால் பின்னணி இசை நன்கு உள்ளது.
டீவி செய்தியில் ஜெயா டீவியும், புதிய தலைமுறையையும் காட்டி விட்டனர்..(சன்..கலைஞர்..???)
27-12-12 அன்று குண்டு வெடிப்பு என சொல்லி அதை முறியடிக்கும் படம் 13-11-12 அன்றே வந்துவிட்டதே (வரும் முன் நடப்பதைக் காட்டி விட்டார் .போதிதர்மன் முருகதாஸ்.
சத்யன் ஒரு சப் இன்ஸ்பெக்டர் ரேங்க்..ஆனால்...கண்ட்ரோல் ரூமில்..யாருக்கும் தெரியாமல் அமர்ந்து,..நகரில் நடப்பதைக் கண்காணிப்பது..சற்று ஓவராகத் தெரியவில்லையா..முருகதாஸ் சார்.
கிளைமாக்ஸ்.. பாராட்டப்பட வேண்டிட ஒன்று.கிளேஷே ஆக இருந்தாலும்.
பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும்..இரண்டே முக்கால் மணி நேரம் போவதே தெரியாமல் படம் வேகமாகப் போகிறது தான் திரைக்கதையின் வெற்றியாகும்.
வெற்றிபெற்ற விஜய் கூட்டணியை வாழ்த்துவோம்.
Sunday, November 18, 2012
மதப் பிரச்னை, ஜாதிப் பிரச்னை இவை வராமல் படம் எடுப்பது எப்படி?
படத்தயாரிப்பாளரை..கதாசிரியர் ஒருவர் பார்க்க வந்தார்.தயாரிப்பாளரிடம், "ஐயா..தீவரவாதத்தை ஒழிக்கும் விதத்தில் என்னிடம் ஒரு சப்ஜெக்ட் உள்ளது..கேட்கிறிர்களா'? என்றார்.
தனது முந்தைய படம் அருமையாய் இருந்தும்..சில சாதி அமைப்புகளாலும்..மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது என சில, பல சங்கங்களால் மிரட்டப்பட்டதாலும், திரையரங்குகளில் படத்தைக் காட்டவிடாமலும் ஆர்ப்பாட்டம் செய்ததால்..படம் தோல்வியடைந்ததால் , மனம் வெறுத்திருந்த தயாரிப்பாளர், 'ஐயா..இனி அப்படிப்பட்ட படங்களே வேண்டாம்..வெறும் காதல் கட்சிகள் படமே போதும்' என்றார்.
'ஐயா..என் கதைகள் அப்படிப்பட்ட பிரச்னைகள் வரக் காரணமேயில்லை.ஏனெனில்..இதில் வரும் காதாபாத்திரங்கள் அனைவருமே தலைக்குத் தொப்பி அணிந்திருப்பர்.அவர்களின் பெயர்களும்..எக்ஸ், ஒய், இஜட் என்றுதான் இருக்கும்.ஆகவே எந்த மதத்தினர் அதிருப்தியும் வர வாய்ப்பில்லை' என்றார் கதாசிரியர்.
இப்படி செய்யும் முறை தயாரிப்பாளருக்குப் பிடித்துப்போக...பட விளம்பரம் கீழ்கண்ட முறையில் செய்யப்பட்டது.
"ஏ..புரடக்க்ஷன்ஸ் அளிக்கும்
"B:"
கதை - C
தயாரிப்பு -D
திரைக்கதை இயக்கம் - E
நடிகர்கள் - F, G, H
Saturday, November 17, 2012
சாதியால் வந்தது ஐயா...தொல்லை..
சாதி இரண்டொழிய வேறில்லை...பாலர் பாடத்திலேயே நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது.
அதன் பின் பாரதி..'சாதிகள் இல்லையடி பாப்பா..குலம் தாழ்ச்சி..உயர்ச்சி சொல்லல் பாவம்..' என்றார்.
ஆனாலும்..சாதி என்பது...தமிழர்களிடையே..மட்டுமல்ல..இந்தியர் அனைவரிடமுமே அழிக்க முடியாத ஒன்றாக உள்ளது.வடக்கே நடக்கும் கௌரவக் கொலைகளே இதற்கு ஆதாரம்.
வாக்குகளுக்காக...சாதிகள் இல்லையென..குடிசை வீட்டில் அமர்ந்து..அவர்களுடன் உணவு உண்டவரும்...ஒரு கட்டத்தில் நானும் பிராமண சமூகத்தைச் சார்ந்தவன் என்று பேசினார்.
தன் குடும்பத்தினர் பற்றி எழுதியதற்கு..இவ்வளவு வருடங்களாக தன் ஆதரவு பத்திரிகையாய் இருந்தாலும்..அதிக் கூட கணக்கில் எடுக்காது..'நான் பார்ப்பன ஜாதியில் பிறந்திருந்தால்..அப்பத்திரிகை பல வழக்குகளை சந்திக்கும் என்பதால்..இப்படி எழுதியிருக்குமா?நான் பிற்படுத்தப் பட்ட சாதியில் பிறந்ததால்தானே அப்பத்திரிகை இப்படி எழுதுகிறது' என்கிறார் ஒரு தலைவர்.
தமிழகத்தில் ஜாதிக்கட்சியாய் ஆரம்பித்து..பின் அரசியலுக்காக பெயரை மாற்றிய கட்சியும்...இதுவரை எங்கள் சாதியைச் சார்ந்தவர் யாரும்..பதவிக்கு வரவில்லை என்று கூறுவதுடன்..'இனி சாதிக் கட்சிகளுடன் தான் கூட்டணி' என்கிறது..
தமிழகத்தில்..தங்கள் சாதி பெயரில் கட்சிகளோ..சங்கங்களோ அமைக்காதார் யார்..
யாதும் ஊரே..யாவரும் கேளிர்..
இது படிப்பதற்கும்...வாய்ப்பந்தல் போடவுமே பயன்படுகிறது.
தன் வீட்டுக் கல்யாணம் என்றால் முதலில்...நாம் பார்ப்பது அதே சாதியைச் சார்ந்த மணமகனையோ/ மணமகளையோத் தானே!
இப்படி எங்கும்..எதிலும் சாதிதான் என்ற நிலையில்..'பிறாமணாள்' என்ற பெயரை உபயோகிப்பது தவறா..?
பொதுவாக சாப்பாடு ஓட்டல்களில்..'சைவ ஓட்டல்...அசைவ ஓட்டல்' என்றாலே போதுமானது.
அது முடியாது எனில்...மாமி மெஸ், ஆச்சி மசாலா, நாயுடு ஹால். ஐயங்கார் பேக்கரி' என்பது போல..
'ஐயர் ஓட்டல்' என பெயர் வைத்துக் கொள்ளலாம்..அதைவிடுத்து
'பிறாமணாள்' என பெயர் வைத்தது.. அது தப்பா//சரியா..என்பதைவிட.. தேவையா என்பதே கேள்வி..
சமைக்கப்படும் உணவுவகை தரமாக, சுவையாக இருந்தால்..
அது பிறாமணாளாய் இருந்தால் என்ன..இல்லாவிட்டால் என்ன..மக்கள் ஆதரவு கண்டிப்பாக இருக்கும்.அந்த உணவகங்களுக்கு.
சரவணபவன் என்ன பிறாமணாளா...தரமான ஓட்டல் என்றால்..இன்று அந்தப் பெயரும் மனதில் தோன்றும் விதமாக ஆகவில்லையா?
அதைவிடுத்து..தேவையில்லாமல்...அசட்டுப் பிடிவாதத்துடன் அப்பெயரை வைத்ததால்...அவருக்கு செலவில்லா விளம்பரம் கிடைத்தாலும்....வாடகைக்கு இருந்த இடத்தை காலி பண்ணச் சொல்லவில்லையா..?
அதனால்..அந்த ஓட்டல் அதிபருக்கு, தேவையில்லாமல்..வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதல்லவா?
இனிமேலும்..தன் பலத்தை உணர்ந்து சாமானியன் முடிவெடுக்க வேண்டும்..
Friday, November 16, 2012
பிரதமர் அலுவலகமும்..கடிதங்களும்...
அலுவலகத்தில் நுழைந்த பிரதமர் வாசலில் சிலர் நிற்பதைப் பார்த்து, தன் செயலரிடம்,'அவர்கள் எல்லாம் யார்?' என வினவ..
அதற்கு செயலர், 'அவர்கள் பழைய பேப்பர்களை எடுக்கும் வியாபாரிகள்' என்கிறார்.
"ஓகோ..அப்படியா..ஆமாம் ..அதிலும் சில்லறை வர்த்தகத்திற்கு அந்நிய முதலீடை பயன்படுத்தலாமா?' -பிரதமர்.
'அந்த அளவு...வியாபாரம்.." என செயலர் இழுக்க..
'அலுவலகத்திற்கு உள்ளே வந்து பாரும்...தமிழக முதல்வர், மற்றும் கலைஞரிடம் இருந்து வந்த கடிதங்கள் மலை போல குவிந்திருக்கு' - பிரதமர்.
செயலர் உடன், 'ஐயா ..மறந்து விட்டேன்..இன்று கூட நாடார் சமுகத்தை இழிவுபடுத்தி சி.பி.எஸ்.இ., பாடத்தில் உள்ளதை நீக்க வேண்டும்..என தமிழகத்திலிருந்து மூன்று கடிதங்கள் வந்திருக்கு.
'மூன்றா..ஒன்று முதல்வர், மற்றொன்று கலைஞர்..மூன்றாவது யாரிடமிருந்து..?"
"அந்த மூன்றாவது கடிதம்..இன்று வரை தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராய் இருக்கும் விஜய்காந்த் என்பவரிடமிருந்து'
'அப்படியா..அப்போ..இனி தமிழகத்திலிருந்து இனி வரும் கடிதங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்....நான் சொன்னது சரி..அதிலும் அந்நிய முதலீட்டுக்கு ஏற்பாடு பண்ணவும்'
செயலர் என்ன செய்வது என அறியாது..வெளிநாட்டில் பழைய காகிதங்கள் வாங்கும் நிறுவனம் உள்ளதா? என ஆராயத் தொடங்கினார்.
Thursday, November 15, 2012
கொள்ளை..(ஒரு பக்கக் கதை)
காலை எழுந்ததும்..கையில் காஃபியுடன்..அன்றைய தினசரியை எனக்கு படித்து விட வேண்டும்..அப்போதுதானே..நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகளை நம்மால் அறிய முடியும்.
கடந்த சில நாட்களாக செய்தித்தாள்களில் நான் வசிக்கும் அசோக்நகர் பகுதியில் ..ஏதேனும் ஒரு இடத்தில் பட்டப் பகலில் கொலை..கொள்ளை என்றிருக்கிறது.நாடே கெட்டுப் போச்சு..
நான் நினைத்தது சரி....'அசோக் நகரில் நேற்றும் பகல் கொள்ளை' என்றது தலைப்புச் செய்தி.அதைப் பார்த்ததும்..உடன் மனைவையைக் கூப்பிட்டேன்..'பார்த்தியா..நேற்றுக் கூட நம்ம ஏரியாவிலே திருட்டுப் போயிருக்கு..' என்றவாறு ..அவள் கழுத்தில் அணிந்திருந்த கிட்டத்தட்ட பத்து பவுன் சங்கிலியைப் பார்த்தேன்.
'மேல படியுங்க' என்றாள்.
'அசோக் நகர்..18 ஆம் தெருவில் உள்ள சுபிக்க்ஷா அடுக்குமாடி குடியிருப்பில்..இரண்டாம் தளத்தில் உள்ளது 8 ஆம் எண் உள்ள..ஃப்ளாட்.அங்கு வசிக்கும் கந்தசாமி என்பவரும்..அவரது மனைவி லட்சுமியும் வேலைக்குச் செல்லும் தம்பதிகள்.அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தினமும் வேலைக்குச் செல்வது வழக்கம்.நேற்றும்..அப்படிச் சென்று விட்டு மாலை வீடு திரும்பியவர்கள்..வீடு திறந்திருப்பதைப் பார்த்து..உள்ளே சென்று பார்த்த போது..பீரோவை உடைத்து 35 சவரன் நகைகள்..ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்'
படித்து முடித்து..'பார்த்தியா நாம ஜாக்கிரதையா இருக்கணும்' என்றேன்.
திடீரென ..'என்னங்க..நம்ம ஃப்ளாட்டும் 18ஆவது தெருதானே..' என்றாள் சகதர்மணி .
'சுபிக்க்ஷா' நம்ம ஃப்ளாட் தானே.'
'நம்ம வீட்டு நம்பர் 7..அப்போ 8..அடடே..நம்ம பக்கத்து வீடுங்க..' என்றாள் படபடப்பாக
Wednesday, November 14, 2012
'துப்பாக்கி'யால் சர்ச்சை.. விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு!
துப்பாக்கி படத்தில் முஸ்லீம்களை விமர்சித்திருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதையடுத்து நடிகர் விஜய்யின் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள துப்பாக்கி திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. தமிழகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் நன்றாக இருப்பதாக பாசிட்டிவான ரிசல்ட் வர ஆரம்பித்துள்ள நிலையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
மும்பை தீவிரவாத சதிச் சம்பவப் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இந்த நிலையில் முஸ்லீம்களை விமர்சிப்பது போல இப்படம் உள்ளதாக தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. மேலும் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் இணைந்து விஜய் வீட்டு முன்பு போராட்டம் நடத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து விஜய் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வரும் நீலாங்கரை வீட்டுக்கும், அவரது பெற்றோர் வசித்து வரும் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
(தட்ஸ் தமிழ்)
Tuesday, November 13, 2012
தமிழுக்கு அமுதென்று பெயர் - 2 (குறள் விளக்கம்)
அவன் அனைவரின் நலம் நாடும் நண்பனாய் திகழ்ந்தான்.
நண்பர்களுக்கு ஏதேனும் கெடுதல் வந்தால்...அதனால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்றாலும் கவலையின்றி அவர்கள் நலனுக்கு உழைத்தான்.
நண்பர்கள் நலமே தன் மூச்சு எனத் திகழ்ந்தான்.
அவன் நண்பர்களும் அவனை தலை மீது வைத்துக் கொண்டாடினர்.
காலம் ஓடியது..
அவன் முதுமை அடைந்தான்..முன்னர் போல அவனால் நண்பர்களுக்கு உதவிட முடியவில்லை.அப்படியே அவன் உதவ எண்ணினாலும்..சந்தர்ப்பம், சூழ்நிலை அதற்கேற்ப அமையவில்லை.
அவன் இனி பயனற்றவன்..என அறிந்த உடன் இருந்த நண்பர்கள்..அவனை விட்டு விலகினர்..விலகியவரில் சிலர் அவனைத் தூற்றினர்..அவன் அவர்களுக்கு கொடுமை இழப்பதைப் போல பேச ஆரம்பித்தனர்.
ஆனால் அவனுடன் ,அவன் நிலை அறிந்து சிலர் இன்னமும் இருக்கின்றனர்..அவற்றில் ஒருவர்..
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைக் கூட நம் உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது...என்றார்.
துப்பாக்கி - எதிர்பார்ப்புகளே ஏமாற்றம் தருகின்றன....
இளையதளபதி விஜய்..மற்றும் முருகதாஸ் கூட்டணியில் தீபாவளிக்கு வந்துள்ள படம் துப்பாக்கி.
இப்படம் ஆரம்பித்த நாள் முதல்..வெளியாகும் நாள் வரை சந்தித்த சோதனைகள் எவ்வளவு?
படத்தலைப்பிற்காக இப்படம் பட்ட பாடு எவ்வளவு?
சென்சாரில் கூட ரீரிகார்டிங் சரியாக அமையாத அவசரத்தில்...தவணை கேட்டதாக வேறு செய்திகள் வந்தன.
படவெளியீடு தேதி வேறு..தள்ளிப் போனது.வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கு இதனால் நஷ்டம் என்று வேறு செய்தி.
இவ்வளவையும் மீறி..இந்தாண்டு பெரும் பொருள் செலவில் வெளியான..சகுனி,மாற்றான்,தாண்டவம்,பில்லா 2, ஆகிய படங்களும்
வசூலில் வெற்றி என்றாலும்..தோல்வி படங்களாக அமைந்தன.துப்பாக்கியும் அப்படித்தான் ஆகப்போகிறது என ரசிகர்களிடையே வதந்தி வேறு.
எல்லாவற்றையும் தாண்டி விஜய் வெற்றி பெற்றுள்ளார்..என வரும் ரிபோர்ட்டுகள் தெரிவிக்கின்றன.
இதற்குக் காரணம்..மற்ற படங்கள் எதிர்ப்பார்ப்பு இருந்தது..அதனால் ஏமாற்றம் ஏற்பட்டது.
அந்த ஏமாற்றம்..இந்த படத்திற்கான எதிர்ப்பார்ப்பை குறைத்தது.
அதுவே..இப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையானது எனலாம்.
வாழ்த்துகள் விஜய்.., முருகதாஸ்.
(டிஸ்கி- எச்சரிக்கை - படம் வியாழன் அன்று பார்க்கிறேன்...அதற்கு பின் என் விமரிசனம் )
Monday, November 12, 2012
தீபாவளி...
வெடித்துச் சிதறின
வெடிகளின் ஓசை
அதைவிட
அதைத் தயாரித்த
குட்டிக் கரங்களின்
விசும்பல் ஓசை
அதிகமாய்க் கேட்டது
செவியில்
Saturday, November 10, 2012
தீபாவளியும்..துப்பாக்கியும்...
அப்பா...துப்பாக்கி..என பேச்சை ஆரம்பித்தான் பையன்..
'துப்பாக்கியும் ஆச்சு...கிப்பாக்கியும் ஆச்சு..மனுஷன் கிடந்து அவதிப்படறான் தீபாவளிக்கு..இதுல இவனுக்குத் துப்பாக்கியாம்.'.அப்பா முணுமுணுத்தார்.
"குழந்தை என்ன கேட்டுட்டான்னு இப்படி எரிஞ்சு விழறீங்க..அவன் என்ன நிஜ துப்பாக்கியா கேட்கிறான்..கள்ளத் துப்பாக்கித்தானே..எவ்வளவு வருஷமா தீபாவளி கேப் வெடிக்க துப்பாக்கி கேட்டுட்டு இருக்கான்..நீங்களும் ஒவ்வொரு வருஷமும் அவனை டபாய்ச்சுனு தானே இருக்கீங்க' என்றாள் மனைவி.
'விவரம் புரியாம பேசாதே...தீபாவளிக்கு மாப்பிள்ளை வரேன்னு சொல்லி இருக்கார்.அவருக்கு துணி, வாட்ச் இதெல்லாம் வாங்கணுமேன்னு கவலைல நான் இருக்கேன்..இந்த சமயத்திலே என் கவலைத் தெரியாம...நீங்க வேற..'
'அடடே..உங்களுக்கு விவரம் தெரியாதா.9ஆம் தேதியே துப்பாக்கி படம் வரும்னு..மாப்பிள்ளை ரிசர்வ் பண்ணீருந்தாராம்.ஆனால் நாலு நாள் படம் தள்ளிப் போனதால...முதல் நாள் ரிசர்வ் பண்ணினவங்க டிக்கெட் எல்லாம்..படம் வெளிவரும் 13ஆம் தேதிக்கு மாற்றிக் கொடுத்துட்டாங்களாம்.அதனாலே..தீபாவளிக்கு வரமுடியாதுன்னு மாப்பிள்ளை சொல்லிட்டார்"
'அப்பாடா..படம் வெளிவர தாமதம் ஆனதுலே..யாருக்கு எவ்வளவு நஷ்டமானா என்ன...எனக்கு லாபம்.வாழ்க விஜய்.டேய்..கடைக்கு கிளம்பு..உனக்கு இந்த வருஷம் துப்பாக்கி நிச்சயம் வாங்கித் தரேன்'
Friday, November 9, 2012
இலவசம்..இலவசம்..தேவையா?
பக்கத்து வீட்டிற்கு வந்த செய்தித்தாளை இரவல் வாங்கி படிக்கும் போதுதான்..அந்த போட்டி பற்றிய அறிவிப்பை படித்தேன்.இலவசங்கள் தேவையா? என்ற தலைப்பிற்கு கட்டுரை எழுதச் சொல்லி இருந்தார்கள்.
அன்று ஞாயிற்றுக் கிழமை யாக வேறு இருந்ததால்..என்னை நண்பன் ஒருவன் சாப்பாட்டிற்கு அழைத்திருந்தான்..அவனுடன் சாப்பிட்டவாறே இப்போட்டியைப் பற்றிக் கூறினேன்.அவன் கண்டிப்பாகக் கலந்துக் கொள் என்றான்..அப்போதுதான் மேசையில் கிடந்த பேனாவைப் பார்த்தேன்.அதைக் கையில் எடுத்து அதையும், நண்பனையும் மாறி மாறி பார்த்தேன்.வேணுமானால் வைத்துக் கொள் என்றான்.பதிலுக்கு 'நன்றி' என்றவாறே என் சட்டையில் அப்பேனாவைக் குத்திக்கொண்டேன்.
அடுத்த நாள்..அலுவலகம் வந்ததும்..மேசையைத் திறந்து இரண்டு வெள்ளைத்தாள்களை எடுத்தேன்.
'இலவசம்' பற்றி என்ன எழுதுவது..என்று யோசித்த படியே..பக்கத்து மேசை ரகுவைப் பார்த்தேன். தன் வெற்றிலைப் பெட்டியைத் திறந்து ஆடாக மாறி இருந்தான்.அவனிடம் சென்று..இரண்டு வெற்றிலையையும்,சீவலையும் எடுத்து வாயில் போட்டு மென்றவாறே என் இருப்பிடம் வந்து கற்பனை ஆமையை (எவ்வளவுநாள் குதிரை என்று சொல்வது..மேலும்..எனது கற்பனை மெதுவாகவே வருவதால்..ஆமை என்பதே சரி) தட்டிவிட்டேன்.
பொங்கலுக்கு அரசு இலவசமாகத் தரும் வேஷ்டி..சட்டைப் பற்றி எழுதலாமா? இல்லை நண்பகல் இலவச உணவு பற்றி..வேண்டாம் ..வேண்டாம் ..அது குழந்தைகளுக்கு..அதில் கை வைக்க வேண்டாம்.இலவச சைக்கிள் ,இலவச டி.வி., இலவச நிலம் ..எதைப் பற்றி எழுதுவது?
ஆமை ஓட மறுத்தது..
அந்த சமயம் அலுவலகம் கொடுக்கும் இலவச தேநீர் வந்தது.அதைக் குடித்துவிட்டு..வெளியே வந்தேன்..வெளியே நண்பன் ஒருவன் புகைத்துக் கொண்டிருந்தான்.அவனிடம் ஒரு சிகரெட் ஓசி வாங்கினேன்..அவனே பற்றவும் வைத்தான்.சிறிது நேரம் அரட்டை அடித்தேன் அவனிடம்.திரும்ப மேசைக்கு வந்தேன்.
எண்ணம் இலவசம் பற்றியே இருந்ததால்..அலுவலக வேலை ஓட மறுத்தது..மதியம் ஒரு மணி..
பக்கத்து மேசை ரகு..சாப்பிடப் போகலாமா? என்றான்.உடன் தலையாட்டினேன்.ஏனெனில்..அவன் யாரிடமும் எதையும் இலவசமாக பெறமாட்டான்..நான் ஹி..ஹி..ஹி..
அதைத் தவிர ரகு..அவனோடு யார் வந்தாலும்..அவர்களுக்கு செலவு செய்வான்..(பிழைக்கத் தெரியாதவன்)
சாப்பிட்டுவிட்டு..வந்ததும் மேலதிகாரி கூப்பிட்டு வங்கிக்குச் சென்று..கவனிக்க வேண்டிய வேலைகள் சிலவற்றைச் சொன்னார்.'மிகவும் அவசரம்..வண்டியில் சென்று விடுங்கள்'என்றார்.
'சார்..நான் இன்று வண்டி கொண்டுவரவில்லை' என ஒரு சின்ன பொய்யைச் சொன்னேன்.'சரி..சரி..ஆட்டோவில் சென்று விடுங்கள்' என்றார்.அப்பாடா..நூறு ரூபாய் கிளைம் பண்ணலாம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.வங்கி வேலைகளை முடித்துவிட்டு..திரும்ப மணி நாலாகிவிட்டது.இனி எழுதினாற்போலத்தான்..என எண்ணிய போது..நண்பன் ஒருவன் தொலைபேசினான்.அன்று மாலை திரைப்படம் ஒன்றிற்கு இரண்டு டிக்கட் இருப்பதாகவும்..வருகிறாயா? என்றான்..
கரும்பு தின்னக் கூலியா? 'சரி' என்றேன்.அலுவலகம் விட்டு கிளம்பும் போது ஞாபகமாக வெள்ளைத்தாள்களை எடுத்துக் கொண்டேன்.
சினிமா..இரவு டின்னர் எல்லாம் நண்பன் செலவில் முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்ததும்..எழுதத் தொடங்கினேன்...
"ஏழைகளுக்கு..இலவசம்..இலவசம் என்று கொடுத்து அரசு அவர்களை சோம்பேறி ஆக்கிவிட்டது..' என ஆரம்பித்தேன்....
Thursday, November 8, 2012
வள்ளுவனும்..கண்ணழகும்..
கயல்விழி,மான்விழி,குவளைக் கண் என கண்களைப் பாடாத கவிஞனே இல்லை எனலாம்.
காதல் ஏற்பட கண் பிரதான உறுப்பாய் அமைந்து விடுகிறது.காதலுக்கு கண்ணில்லை,கண்டதும் காதல் என்றெல்லாம் சொல்லப் படுகிறது.
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே..கண்கள் இரண்டும் உன்னைத் தேடுதே..கண்ணுக்குள் சிக்கிக் கொண்ட..கண்களும் கவி பாடுதே..கண்கள் இரண்டால்.. என்றெல்லாம் கவிஞர்கள் காதலுக்கும்..கண்ணிற்கும் முடிச்சுப் போட்டுள்ளார்கள். அவ்வளவு ஏன்..காதலியின் இதயத்தில் காதலன் நுழையும் வாசல் அவளின் கண்களே..என்பதை கவியரசு..'இதயத்தின் வாசல் விழியல்லவா?' என்கிறார் ஒரு பாடலில்..
இவர்களுக்கெல்லாம் முன்னோடி யார்..என்றால்..வழக்கம் போல வள்ளுவனே முன் நிற்கிறான்..கண்ணழகு பற்றி அவர் இன்பத்து பாலில் பல குறள்களில் சொல்கிறார்.முதலில் தலைவனைக் கவர்வதும்..கடைசிவரை நிற்பதும் தலைவியின் கண்ணழகே என்கிறார்.
காதலில் அடையும் ஐம்புலவின்பத்திலும் ..கண்டு, கேட்டு எனக் கண்,காது ஆகியவற்றலாகும் இன்பத்தை முதலில் குறிக்கிறார்.
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து
தலைவி வீசும் விழிவேலுக்கு எதிராக தலைவன் அவளை நோக்க..அக்கணமே அவள் பார்வை..அவள் மட்டுமே தாக்குவது போதாது என்று தானையுடன் தாக்குவது போல இருந்ததாம்.
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு
எமனைப் பற்றி தலைவன் ஏதும் அறிந்ததில்லை..ஆனால் எமன் எனப்படுபவன் பெண்ணுருவில் வந்து போர்த்தொடுக்கக் கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை தலைவியின் பார்வையால் அறிகிறானாம்.
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்
பெண்மையின் வார்ப்படமாக திகழும் தலைவியின் கண்பார்வை மட்டும் மாறுபட்டு உயிரைப் பறிப்பது போலத் தோன்றுகிறதாம்.
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்
தலைவியின் புருவம் மட்டும் கோணாமல் நேராக இருக்குமே யாயின்..அவள் கண்கள் அவனுக்கு நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யாதாம்.
இன்னுமொரு இடத்தில்..
பிணயேர் மடநோக்கும்.. என்கிறார்..பெண் மானைப் போன்று இளமைத் துள்ளும் பார்வையாம்...
(கண்ணழகு தொடரும்)
மீள் பதிவு
Wednesday, November 7, 2012
வாய் விட்டு சிரியுங்க..
1) ராகு காலம், எம கண்டம் இதுல எல்லாம் நம்பிக்கையில்லைன்னு எமகண்டத்தில கிளம்பி ஆஃபீஸ் போனியே என்ன ஆச்சு?
எனக்கு முன்னாலேயே அந்த மேனேஜர் எமன் வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்கு
2)மெகாசீரியலுக்கான கதை உங்கக் கிட்ட இருக்கா..எங்கே ஒன் லைன்ல சொல்லுங்க
ஒரு பணக்கார மருமகள்..அவளைக் கொடுமைப் படுத்தற அத்தை..மௌனியாய் கணவன்...
ஆகா..அற்புதம் ..பிடியுங்க அட்வான்சை
3)அவருக்குப் பின்னாலேயே சொம்பைத் தூக்கிக்கிட்டு ஒருத்தர் போறாரே எதற்காக..
இணையதளத்தில ஏதோ சர்ச்சையாம்..நாட்டாமைப் பண்ணப் போறார் முதல்லப் போறவர்..பின்னால அவர் எச்சலைத் துப்ப சொம்போட போறார் உதவியாளர்
4)இந்த சமயத்தில நீ வந்தது என் மனைவிக்குப் பிடிக்கலைன்னு நினைக்கிறேன்
எப்படிச் சொல்ற
அவ போட்ட காஃபியை உனக்குக் குடிக்கக் கொடுக்கிறாளே
5)தொண்டர் 1- தலைவருக்கு வயிறு சரியில்லைன்னு நினைக்கிறேன்
தொண்டர்2- எப்படிச் சொல்ற
தொண்டர்1- மக்கள் கிட்ட இரண்டு விரல்களைக் காட்டும் போது திருப்பிக் காட்டறாரே!
6)பல் மருத்துவர்- உங்க மொத்தப் பல்லையும் இன்னிக்கு பிடுங்கியாகணும்
நோயாளி- ரொம்ப வலிக்குமே டாக்டர்
பல் மருத்துவர்- பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பொறுத்துக்கங்க
7)பதிவர் - எனக்கு இதுவரைக்கும் தலைவலின்னு வந்ததே இல்லை
நண்பர்-உங்களாலே மத்தவங்களுக்குத்தானே தலைவலி வரும்
Tuesday, November 6, 2012
நமது கருத்தும்..சுதந்திரமும்...
கடந்த சில நாட்களாக இணையத்தில் அதிகம் அடிபடும் வார்த்தைகள்...நமது கருத்துகளும்..அதை நாம் இணையத்தில் வெளியிடும் சுதந்திரமும்.
பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் கருத்து..கொள்கைகள் பற்றி நம் கருத்துகளை சொல்லும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு..ஆனால் அதற்கான எல்லை என்ன..? அதை யார் நிர்ணயிக்கிறார்கள்..?
அந்த சம்பந்தப்பட்ட நபர் தான்..
கலைஞரை திட்டி வந்த பின்னூட்டங்கள் அவரது ஃபேஸ்புக்கில் எத்தனை? எவ்வளவு ஆபாச பின்னூட்டங்கள்...சைபர் கிரைமிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அவர் நினைத்திருந்தால்...அவரது புகார்கள் கின்னஸ் சாதனையை அடைந்திருக்கும்...ஆனால் அவர் அதை செய்யவில்லை.இன்னும் சொல்ல போனால்..நம்மால் அதிகம் சுதந்திரத்தோடு திட்ட முடிந்த தலைவர் அவர் ஒருவர்தான்.
சரி ..அது போகட்டும்..விஷயத்திற்கு வருகிறேன்...
ஃபேஸ்புக்கிலும்..டிவிட்டரிலும்..ஒரு பிரபலம் இருந்தால்..உடனே..அவரைத் தொடர்கிறோம்...உங்கள் எண்ணத்தை ஒட்டி அவர் எழுதிவிட்டால்..ஜன்ம சாபல்யம் அடைந்து விட்டதாகவே எண்ணுகிறோம்.ஆனால்..அந்த பிரபலத்தைப் பொறுத்தவரை அவருக்கும் தன்னை ஃபாலோ பண்ணுபவர் எண்ணிக்கை அதிகம் வேண்டும் அவ்வளவுதான்.
ஆர்வக் கோளாறு காரணமாக..நாம் ஏதேனும் சொல்ல...சாரி...எழுதப்போக..அந்த பிரபலத்தின் மூடைப் பொறுத்து..மாட்டிக் கொள்கிறோம்.
இது நமக்குத் தேவையா சொல்லுங்கள்..
மாதா மாதம் சம்பளம் வாங்கி குடும்பத்தை நடத்தறதுக்கே..நாக்கு..வெளியே தள்ளிடும் நிலையில்..பொழுது போக்குக்காக .எழுதப்போக ..போலீஸ்..கோர்ட்..வக்கீல் செலவு ..எல்லாவற்றையும் விட பொழுதே இல்லாமை...மனக்கவலை...தேவையா..
கொஞ்சம் சிந்தியுங்கள்..
முதலில் நாம செய்ய வேண்டியது...
பிரபலங்களைத் தொடர்வதை நிறுத்த வேண்டும்.
நமக்கு வேண்டிய நண்பர்களை மட்டுமே தொடர வேண்டும்.
நாம் தொடர்வது யாராயிருந்தாலும்...வரம்பு மீறாது..ஆபாசம் இல்லாமல் கமெண்டை எழுத வேண்டும்..
இதெல்லாம்..முடியாது என்றால்..இணையத்திலிருந்தே ஓய்வு பெறுங்கள்.
இவை என்னுடைய எண்ணங்கள்..அவ்வளவுதான்..
இதை நீ யார் சொல்ல என சண்டைக்கு வந்துவிடாதீர்கள்...பிடித்தால் எடுத்துக் கொள்ளுங்கள்..
இல்லையேல்...பிரபலங்களைத் தொடருங்கள்...அவ்வளவுதான்.
(இந்த பதிவு யாரையும் மனதில் வைத்துக் கொண்டு எழுதவில்லை..பொதுவான ஒன்றே)
Sunday, November 4, 2012
தமிழுக்கு அமுதென்று பெயர்
கவி காளமேகம் சிலேடையாக கவி பாடுவதில் வல்லவர்.பல சமயங்களில் அவை வசை பாடும் கவிகளாக அவை அமைவதால் 'வசைப்பாட காளமேகம்' என்னும் பெயர் பெற்றார்.இவர் பாடல்களில் எள்ளல்,ஏசல்,கிண்டல் என எல்லாம் இருக்கும்.
சிவபெருமானை முக்கண்ணன் என்பர்.நெற்றிக்கண்ணையும் சேர்த்து ..ஆனால் காளமேகம் சொல்கிறார்..சிவனுக்கு இருப்பது அரைக் கண்ணாம்.
முக்கண்ண னென்றானை முன்னோர் மொழிந்திடுவார்
அக்கண்ணிற் குள்ள தரைக் கண்ணே
என்கிறார்.
அதாவது..சிவனுக்கு இருக்கும் முக்கண்ணில் ..தன் உடலில் பாதியை உமைக்கு கொடுத்துவிட்டபடியால்..மீதிப் பாதியில் இருப்பது ஒன்றரைக் கண்ணே..அதிலும் ஒரு கண் கண்ணப்ப நாயனார் கொடுத்தது.மீதம் இருக்கும் அரைக் கண்ணே சிவனுடையது என்கிறார்.
இனி தமிழில் உள்ள ஒரு சிறப்பு..
எண்களை எழுத்தால் எழுதும் போது தமிழில் மட்டுமே ஒன்று முதல் 899 வரை அவை 'உ' கரத்தில் முடியும்.
உதாரணம்...ஒன்று ..கடைசி எழுத்து 'று'..அதாவது ற்+உ=று
எந்நூற்று தொன்னூற்று ஒன்பது..கடைசி எழுத்து 'து' த்+உ=து
Thursday, November 1, 2012
ஃபோஃபர்ஸ் ஊழலும்..மகாத்மா காந்தியும்...
ராணுவத்திற்கு ஃபோஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் நடந்ததை நம் பத்திரிகைகள் வெளிக் கொணர்ந்தது நாம் அறிந்ததே.இதில் மகாத்மா காந்தி அவர்கள் பெயரும் இடம் பெற்று அவர் அடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததும் நமக்குத் தெரியும்...
என்ன தலையைப் பிய்த்துக் கொள்ளத் தோன்றுகிறதா..?
தமிழக காங்கிரஸின் கீழே கண்ட அறிக்கை ஒன்று பார்த்ததால் வந்த வினை...
இந்திரா காந்தியை சோனியா காந்தியாக ஆக்கியவர்கள்..இனி வரும் காலங்களில் ராஜீவ் காந்தியை..மகாத்மா காந்தியாக ஆக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்!!!!
ஆமாம்...இவர்கள் டைம் பத்திரிகையை டயம்ஸ் ஆஃப் இந்தியா என எண்ணியவர்கள் தானே!!
Tuesday, October 30, 2012
தினமணி தலையங்கம்..(கண்டிப்பாக படிக்கவும்) அதுவரை... இது தொடரும்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில், தன் அறக்கட்டளை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு நலஉதவிகள் வழங்கியதில் முறைகேடு குறித்து நிரூபித்தால் பதவி விலகுவேன் என்று அறிவித்தார் அப்போது சட்டத் துறை அமைச்சராக இருந்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித். அமைச்சரவையில் மாற்றம் என்று பேசப்பட்டபோது, குர்ஷித் பதவி விலகுவார் என்று எதிர்பார்த்தால், அவரை வெளியுறவு அமைச்சராக்கியிருக்கிறார் பிரதமர்.
ஐபிஎல் அணி உரிமம் வாங்கிய விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக புகார்கள் எழுந்து, பெரிய விவகாரமாகி, அதனால் அமைச்சர் பதவியைத் துறக்க நேர்ந்த சசி தரூர், தற்போது மீண்டும் மனித வள ஆற்றல் துறைக்கு அமைச்சராக்கப்பட்டுள்ளார். மிகவும் பொருத்தமான பதவிதான் அவருக்குத் தரப்பட்டிருக்கிறது!
ஊழல் புகாரில் சிக்கியவர்கள், அந்த ஊழல் குற்றச்சாட்டில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் பொய்யானவை என்று நிரூபிக்கப்படும்வரை தாங்களாகவே பதவி விலகுவதுதான் அரசியல் நாகரிகம். சல்மான் குர்ஷித் மீதும், சசிதரூர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று காரணம் கூறுகிறார்கள். நிரூபிக்கப்படாதவரை தவறு இல்லை என்றால், ஆ. ராசாவையும் தயாநிதி மாறனையும் மீண்டும் அமைச்சர்களாக்கி அழகு பார்த்திருக்கலாமே...
ஆ. ராசாவுக்கும், தயாநிதி மாறனுக்கும் வக்காலத்து வாங்குவதற்காக இதைக் கூறவில்லை. தமிழகம் காரணமே இல்லாமல் வஞ்சிக்கப்படுகிறதே என்கிற ஆதங்கம்தான். மத்திய அமைச்சரவை மாற்றம் எத்தகைய அளவில் எப்படி நடந்திருந்தாலும், இந்த மாற்றத்தால் தமிழகத்துக்குக் கிடைத்தது என்ன என்று பார்த்தால் ஒன்றுமில்லை. தமிழகத்தின் தலையாய பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் யாருக்குமே உளப்பூர்வமான அக்கறை இல்லை என்பதற்கு அமைச்சரவை மாற்றத்தில் தமிழகம் தவிர்க்கப்பட்டிருப்பது ஓர் உதாரணம்.
புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து திமுக தலைவர் கருணாநிதியை அண்மையில் அமைச்சர் நாராயணசாமி சந்தித்துப் பேசியபோது, அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு நல்ல இலாகா அளிக்கும்படி கருணாநிதி கூறியதாகப் பேச்சு எழுந்தது. நல்ல இலாகாவாகக் கொடுக்க வேண்டும் என்று கருணாநிதி கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியானபோது, அமைச்சர் பதவிகளை தமிழ்நாட்டின் நலனுக்காகப் பயன்படுத்தக் கேட்கிறாரோ என்று நினைக்கத் தோன்றியது. அப்படி ஏதாவது செய்து, தமிழகத்தின் நலனுக்காகத் திட்டங்களைச் செயல்படுத்தி வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் நல்ல பெயருடன் மக்கள் செல்வாக்கைத் திமுக பெற்றுவிடுமோ என்கிற அச்சம் அதிமுக தலைமைக்கேகூட ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடவில்லை.
இன்றைய தமிழகத்தின் உயிர்த்தேவை மின்சாரம். உடனடியாக மின் உற்பத்தி செய்ய இயலாத நிலையில், வெளியில் இருந்துதான் விலைக்கு வாங்கிக்கொண்டு வந்தாக வேண்டும். ஆனால், மத்திய மின்வழித்தடத்தில் இடமில்லை என்று மறுக்கப்பட்டதால்தான் தமிழகத்தால் அதிக விலை கொடுக்கத் தயாராக இருந்தாலும் மின்சாரத்தைக் கொண்டுவந்து சேர்க்க முடியவில்லை.
"வடமாநிலங்கள் தன் மின்வழித்தடப் பாதையை நவீனமயமாக்கி, கூடுதல் பாதைகள் அமைத்துத் தடையின்றி மின்சாரம் கிடைக்க வகை செய்துகொண்டுவிட்டன. கடைக்கோடியில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கரிசனம் காட்டவில்லை. கடந்த பல ஆண்டுகளாக, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று வரும் தமிழகத்தின் காங்கிரஸ், திமுக அமைச்சர்கள் இத்தகைய மின்வழித் தடத்தை தமிழகத்துக்காக அமைக்கத் தவறிவிட்டனர்' என்று முதல்வர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுக்கு, திமுக தலைவர் கருணாநிதி அளித்த பதில் - பிரச்னையை ஜெயலலிதா திசை திருப்புகிறார் என்பது மட்டுமே.
முதல்வர் ஜெயலலிதா இத்தகைய புகார் எழுப்பிய அடுத்த கணமே அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி, உண்மையிலேயே தமிழர்களின் மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு தன்னால் உதவ முடியும் என்று நினைத்திருந்தால், தற்போது ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள மின்துறையைத் தனது திமுக அமைச்சர் ஒருவருக்குப் பெற்றுத்தந்து, தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்கச் செய்திருக்க முடியும். இதை அவர், தனது தனிப்பட்ட சாதனையாகச் சொல்லிக் கொள்ளவும், 2014-மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் பேசவும் வாய்ப்பாக அமைந்திருக்கும். இந்த வாய்ப்பை திமுக தலைவர் கருணாநிதி தவறவிட்டுவிட்டார். தமிழர் நலனும் நழுவிப் போனது.
மத்தியில் தமிழகத்துக்கான ஒரு மின்துறை அமைச்சர் இருந்தால், நாம் நீதிமன்றத்தின் படியேறி உபரி மின்சாரத்தைக் கேட்டு நிற்க வேண்டியதில்லை. மின்வழித்தடங்களை சரியாக அமைத்துக்கொண்டு, வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரத்தைக் கொண்டு வந்து சேர்ப்பதிலும் சிக்கல் இருக்காது. இதைப் பற்றி யாருமே கவலைப்படுவதாகவே தெரியவில்லையே...
ரயில்வே, மின்சாரம், விவசாயம் போன்ற துறைகளை நமது மாநிலக் கட்சிகள் கேட்டுப் பெற்று அதன் மூலம் தமிழகத்திற்கு நன்மை செய்வதை விட்டுவிட்டு, தனிப்பட்ட முறையில் பயனளிக்கும் துறைகளைத்தான் கேட்டுப் பெறுகின்றன. இல்லையென்றால், அப்படி வாய்ப்பிருந்தும் அமைச்சர் பதவியே வேண்டாம் என்று வலிய வரும் அதிர்ஷ்டத்தையும் எட்டி உதைத்து விடுகிறார்கள்.
÷இன்றைய தமிழக ஆளும் கட்சி மத்திய அரசைக் கடுமையாக விமர்சிக்கும் கட்சி. அதனால் தமிழகத்திற்கு வர இருப்பது வரப்போவதில்லை. சரி, மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவாவது தமிழக நலன் கருதி செயல்படுகிறதா என்றால், மக்களுக்கு நன்மை ஏற்பட்டால் அதன் பயன் அதிமுகவுக்குப் போய்விடுமோ என்று பயந்து, வேண்டுமென்றே வாளாவிருக்கிறது.
தங்களது தலைமையில் கூட்டணி அமையப் போவது இல்லை என்பதாலும், தங்களை மாநிலக் கட்சிகள் வளரவிடப் போவதில்லை என்பதாலும் தேசியக் கட்சிகளுக்கும் தமிழகத்தின் மீது அக்கறை இல்லை. அப்படியானால், தமிழகத்தின் வருங்காலம்தான் என்ன? பகலில் இரவும், தெருவில் போதையுமாகத் தேர்தலுக்கு தேர்தல் நமது வாக்குகளுக்கு வழங்கப்படும் பிச்சைக் காசை எதிர்பார்த்து வாழ்வதுதான் நமது தலைவிதியா?
÷தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 39 மக்களவை உறுப்பினர்களும், கட்சி மனமாச்சரியங்களை மறந்து, தமிழகத்தின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எப்போது செயல்படுகிறார்களோ, ஓர் குரலில் தமிழகத்தின் கோரிக்கைகளைத் தில்லித் தலைமைக்கு வலியுறுத்திப் பெறப் போகிறார்களோ, அப்போதுதான் தமிழகத்தின் தலைவிதி திருத்தி எழுதப்படும். அதுவரை... இது தொடரும்...!
Monday, October 29, 2012
மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் வரை தண்டனை..
பள்ளிக்கூடங்களில் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற உள்ளது.
பள்ளிகளில் ஆசிரியர்கள் மீதான புகார்கள், கட்டாய டியூசன் விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டுவர பள்ளிக்கூடங்களில் நேர்மையற்ற நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவர உள்ளது.
இந்த புதிய சட்டம் சொல்வது என்ன?
- மாணவர்களை அடிக்கக்கூடாது. அவர்கள் தகுதிவாய்ந்த தேர்வுகளை எழுதுவதற்கு தடை விதிக்கக்கூடாது.
- குறைவாக மதிப்பெண் பெற்றதற்காக மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கவும்கூடாது. மாணவர்களை வேண்டுமென்றே பெயில் ஆக்கக்கூடாது.
- பள்ளிக்கூட பருவங்களின் இடையில் கட்டணம் வசூலித்தால் அதுவும் ஆராயப்படும்.
- விதிமுறை மீறி கேபிடேஷன் கட்டணம் வசூலிக்கக்கூடாது.
- 6-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு ஆகியவற்றில் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்கலாம்.
- மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும். சில நேரங்களில் இரண்டும் விதிக்கப்படும்.
டெல்லியில் வரும் நவம்பர் 1- ந் தேதி நடைபெற உள்ள மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தில் இப்புதிய சட்டத்துக்கான மசோதா முன்வைக்கப்பட இருக்கிறது. இக்கூட்டத்துக்குப் பிறகு சட்டமாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
டிஸ்கி- அது சரி...மாணவர்கள் ஆசிரியர் மீது பொய்ப்புகார் கொடுத்தால்....
ஆசிரியர் பிழைப்பே..கம்பங்கூத்தாடி கம்பின் மீது நடப்பது போல...கரணம் தப்பினால் மரணம் ????
Saturday, October 27, 2012
ஆஜீத் வெற்றீ முன்னரே தீர்மானிக்கப்பட்டதா...??
சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 போட்டியில் ஆஜீத் வெற்றி பெற்றுள்ளார்.அவருக்கு வாழ்த்துகள்..
ஆனால்...இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டதா? என்ற கேள்வி பரவலாய் இருக்கிறது.முந்தைய ஜூனியர் 2 போட்டியில் சந்தேகமின்றி அல்கா வெற்றி பெற்றது குறித்து எள்ளளவும் சந்தேகம் எழவில்லை.
ஆனால் இந்த போட்டி...
ரஹ்மான் வருவது ரகசியமாய் வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.ஆனால்..அஜீத்தை உனக்குப் பிடித்தவர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டு அவனும் ரஹ்மான் சார்தான் தனக்குப் பிடித்தவர் என்றான்.
ரஹ்மான் பாடிய பாடல்களே அவன் பாடினான்.தவிர்த்து வந்தே மாதரம் பாடலை போட்டியில்..அதுவும் ஃஃபைனலில் யாரும் பாடமாட்டார்கள்.அப்பாடல் முதலில் கிளாஸிகள் பாடலோ..படப்பாடலோ இல்லை.
(போட்டிமுடிவு எப்படிருந்தாலும்..ஏதேனும் குறைகள் சொல்லக்கூடும்..சந்தேகங்களும் வரும் )
(முன்னதாக..கௌதம் ஒருமுறை 'பிச்சைப்பாத்திரம்:" பாடல் பாடிய போது..'இது இச் சுற்றுக்கு ஏற்றபாடல் இல்லை' என மறுக்கப்பட்டது..நினைவிருக்கலாம்)
எது எப்படியோ...இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தியமைக்கு விஜய்டீவிக்கு பாராட்டுகள்.
லட்சக்கணக்கில் எஸ் எம் எஸ் அனுப்பி...எதிர்பாராத வருவாயை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கிய மக்களுக்கும் பாராட்டு (?!)
பிரகதி இரண்டாம் இடத்தில் இருந்தாலும்..கண்டிப்பாக முதலிடத்திற்கு தகுதியானவர்.
சுகன்யா தான் சற்றே ஏமாற்றிவிட்டார்.
(டிஸ்கி - தலைப்பு வெற்றீ என்று போடப்பட்டுள்ளதே எனக் கேட்கலாம்..வெற்றி...இழுக்கப்பட்டால்..? அதற்கு அர்த்தம் என்ன..உங்களுக்கேப் புரியும் )
நிருபர்களை நாய் எனத் திட்டிய விஜய்காந்த்...
சென்னை விமான நிலையத்திற்கு வந்த தே.மு.தி.க. தலைவர்கள் விஜயகாந்த், நிருபர்களை கெட்டவார்த்தைகளால் திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய தொகுதி தே.மு.தி.க எம்.எல்.ஏ. ஆர்.சுந்தரராஜன், திட்டக்குடி தே.மு.தி.க எம்.எல்.ஏ. தமிழ்அழகன் ஆகியோர் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, தொகுதி பிரச்சனை குறித்து கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் ராதாபுரம் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், பேராவூரணி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. நடிகர் அருண்பாண்டியன் ஆகியோர் கோட்டையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர்.
ஜெயலலிதாவுடன் சந்திப்பை தொடர்ந்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் அ.தி.மு.க.வில் இணைய போகிறார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு மனைவி பிரேம லதாவுடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று காலை வந்தார்.
அப்போது, தினகரன் நிருபர் பாலு, விஜயகாந்திடம் ரெக்கார்டு மைக்கை நீட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த் அந்த நிருபரை சரமாரியாக கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.
பின்னர், கூடியிருந்த நிருபர்களை பார்த்து, சொல்லுங்க சார் என்று விஜயகாந்த் கூறியதும், முதல்வர் ஜெயலலிதாவை தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
இதற்கு பதில் அளிக்காத விஜயகாந்த், மின்சாரம், டெங்கு பத்தி பேசுவோம் என்று கூறினார். அப்போது, சூரிய மின்சக்தி மூலம் 3000 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளாரே என்று ஒரு நிருபர் பதில் அளித்தார்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், அந்த அம்மாவிடம் போய் கேளுடா என்று கோபமாக பேசிவிட்டு மனைவியுடன் நடந்து சென்றார்.
நிருபர்கள் பின் தொடர்ந்து சென்று கேள்வி கேட்க முயன்றால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற விஜயகாந்த், நாய்... நாய்... என்று நிருபர்களை திட்டிவிட்டு விமான நிலையத்திற்குள் விஜயகாந்த் சென்று விட்டார்.
(வெப் துனியா)
டிஸ்கி- தி மு க விற்கு பிரதான எதிர்க்கட்சி ஆகும் வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளது
Friday, October 26, 2012
தமிழனுக்கு தண்ணீர் தராதவர் தமிழக கவர்னர் ஆகலாம்...
மத்திய அமைச்சரவையில் இருந்து திராணமுல் காங்கிரஸ் விலகியுள்ள நிலையில் ஏற்கனவே தி.மு.க வினரின் பதவி விலகளாலும் அமைச்சரவையின் சில இலாகாக்கள் காலியாக உள்ளன. இதனால் சில அமைச்சர்கள் கூடுதல் பொறுப்புகளிலும் இருந்துவருகின்றனர்.
இதனை அடுத்து இரண்டு நாட்களில் அமைச்சரவை மாற்றம் பெற உள்ளது, அதில் ராகுல் காந்தி போன்ற புது முகங்களுக்கு முக்கிய பதவிகள் அளிக்கப்படும் என்ற கருத்தும் நிகழ்கிறது.
அமைச்சரவை மாற்றங்கள் நடக்கவிருக்கும் வேலையில் வெளியுறவு துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் வெளியுறவு துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் பிரதமர் மன் மோகன் சிங் உடனான லாவோஸ் பயணத்தையும் அவர் ரத்து செய்துள்ளார்.
இதனால் அமைச்சரவையில் இன்னும் சில முக்கிய பதவிகளில் மாற்றம் பெறுவது உறுதியாகியுள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி, வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா மற்றும் மனிதவள மேம்பாடு மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோரது பெயர்கள் புதிய பட்டியலில் இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிஸ்கி- கர்நாடகாவின் முதல்வராயிருந்த போதும் சரி,மத்திய அமைச்சரவையில் இருந்த போதும் சரி...தமிழனின் தவித்த வாய்க்கு தண்ணீர் தராதவர் இவர் என்பது அனைவரும் அறிந்ததே..
Thursday, October 25, 2012
மகாத்மா காந்தியை 'தேசத் தந்தை' என்று அழைக்க சட்டத்தில் இடமில்லை
தேசதந்தை என்று மகாத்மா காந்தியை அழைக்க இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை என தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிவித்துள்ளது.
லக்னோவை சேர்ந்த ஐஷ்வர்யா பராஷர் என்ற மாணவி மகாத்மா காந்தி பற்றி விவரங்கள் தேடி வந்துள்ளார். அப்போது அவருக்கு மகாத்மா காந்தியை தேச தந்தை என்று அழைக்கப்பட வேண்டிய காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழுந்தது..
இதனை அறிய அவர் தேசத்தந்தை என்று காந்தியை குறிப்பிடும் காரணங்கள் தேட தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதன் படி இந்திய அரசியல் சட்டத்தில் கல்வித்துறை மற்றும் ராணுவம் தவிர மற்ற துறையினருக்கு எந்த வித சிறப்புப் பெயரும் வழங்கும் உரிமை இல்லை என்று தெரியவந்தது.
உடனடியாக ஐஸ்வர்யா பராஷர் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு எழுதி மகாத்மா காந்தி தேசத் தந்தை என்று அறிவிக்கை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தனது கோரிக்கை என்னவானது என்று மீண்டும் அந்தச் சிறுமி தகவலறியும் உரிமைச் சட்டத்தை நாடினார். இவரது இந்த மனு உள்துறை அமைச்சகத்திற்கு விளக்கம் அளிக்க அனுப்பப்பட்டது.
அப்போதுதான் இந்திய அரசியல் சட்டத்தின் படி மகாத்மா காந்திய தேசத் தந்தை என்று அழைக்கும் சிறப்புப் பட்டத்தை அரசு தர முடியாது என்பது தெரியவந்துள்ளது.
(வெப் துனியா)
Wednesday, October 24, 2012
மானுடம் பொய்க்குதம்மா! - தலையங்கம் (கண்டிப்பாய் படிக்கவும்)
(தினமணி பத்திரிகைச் செய்திகள் குறித்து எனக்கு கருத்து வேறுபாடுண்டு.ஆனால் அவர்கள் எழுதும் தலையங்கம் பௌல சமயங்களில்
அருமையாய் இருக்கும்..இது அவற்றில் ஒன்று)
எல்லா வீடுகளிலும் பால் வாங்கப்பட்டிருக்கும். பண்டிகை நாளில் பால் இல்லாமல் இருக்காது. அந்தப் பால் கலப்படம் இல்லாததுதானா?
இந்த ஆய்வு முடிவுகள் இந்தியா முழுவதிலும் ஆங்காங்கே எடுக்கப்பட்ட மாதிரிச் சான்றுகளின் அடிப்படையில் அமைந்தது என்பதும், இந்த மாதிரிச் சான்றுகளின் எண்ணிக்கை குறைவு என்பதும் தெரிந்ததுதான். இத்தகைய ஆய்வு முடிவுகளைப் 10 விழுக்காடு கூடுதலாக அல்லது குறைவாக மதிப்பிடலாமே தவிர, இந்த ஆய்வு முடிவுகளை முழுவதுமாகத் தவறு என்று குறை சொல்லிவிட முடியாது. இந்தியாவில் விற்கப்படும் பாலில் கலப்படம் மிக அதிக அளவில் இருக்கிறது என்பதுதான் உண்மை.
இன்றைய சூழ்நிலையில், பால் என்பது இந்தியாவில் எல்லா வீடுகளிலும் பயன்படுத்தும் பொருளாக இருக்கிறது. பால் இல்லாமல் குழந்தை உணவு இல்லை. சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கும் பால் மிகவும் அவசியமான உணவாக ஆகிவிட்டது. தமிழகத்தின் ஒவ்வொரு தெருக்களிலும் இடம்பெற்றுவிட்ட தேநீர்க் கடைகளில் பால் இல்லாமல் ஒன்றும் நடக்காது. அனைவரும் ஏதோ ஒருவகையில் பால் மற்றும் பால் பொருள்களை உண்கிறோம்.
இவ்வாறாக நம் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட பாலில் 68 விழுக்காடு கலப்படம் என்றால், நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
ஆண்டுதோறும் பாலின் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் 2009-10-ஆம் ஆண்டில் பால் உற்பத்தி 11.60 கோடி டன். 2010-11-ஆம் ஆண்டில் இது 12.20 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. நிகழாண்டிலும் 60 லட்சம் டன் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாலுக்கான சந்தைத் தேவை அதிகரிக்கிறது. அதற்கேற்ப கலப்படமும், எடை, அளவுக் குறைபாடுகளும் அதிகரிக்கின்றன.
பால் உற்பத்தியில் அரசு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பங்களிப்பு மிகக் குறைவாக இருக்கிறது. அவர்களால் அனைவரது தேவையையும் பூர்த்தி செய்ய முடியவில்லை. தனியார் பால் உற்பத்தி நிறுவனங்கள் இந்த இடைவெளியை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. இவர்களில் பிரபலமான முத்திரை நிறுவனங்கள் சில இருப்பினும், பல நூறு நிறுவனங்கள் யாரும் கேள்விப்படாத பெயரில் செயல்படுவன. இவற்றின் மீது அரசின் கண்காணிப்பு மிகவும் குறைவு.
ஊரகப் பகுதிகளில் நடத்திய ஆய்வுகளில் கலப்படம் செய்யப்பட்டது கண்டறியப்பட்ட பாலில் 83 விழுக்காடு கேன்களில் விநியோகம் செய்யப்பட்டவை. நகர்ப்புறங்களில் 66 விழுக்காடு கலப்படப் பால் கேன்களில் விநியோகம் செய்யப்பட்டவை.
இந்தக் கலப்படத்தில் தண்ணீர் கலப்படம்தான் அதிகம். தண்ணீர் கலப்பதால் பாலின் சத்து குறைந்துவிடுகிறது என்பது ஒருபுறம் இருக்க, அந்தத் தண்ணீர் தூய்மையான தண்ணீராக இல்லை என்பதுதான் மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. சில இடங்களில் பால் அடர்த்தியாக இருக்க சோப்புநீர் கலக்கப்பட்டிருப்பதும், சிலவற்றில் பால்பவுடர் கலக்கப்பட்டிருப்பதும், சிலவற்றில் பாலின் தன்மையை சமன்படுத்த வேதிப்பொருள்களைச் சேர்த்திருப்பதும் தெரியவந்துள்ளது என்று இந்த உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்தின் அறிக்கை சொல்கிறது.
தமிழ்நாட்டில் அரசு நிறுவனமாகிய ஆவின் கூட்டுறவு பால் உற்பத்திக் கூடத்தைத் தவிர மற்ற அனைத்தும் தனியார் நிறுவனங்கள்தான். இவற்றில் எத்தனை நிறுவனங்களை நம்பலாம், அல்லது கேன் மூலம் பால் விநியோகிப்போரில் எத்தனைப் பேரை நம்புவது?
தற்போது மின்தட்டுப்பாடு காரணமாக, குளிரூட்டு வசதி இல்லாததால் ஆவின் பால் உள்பட அனைத்துப் பாலும் விரைந்து கெட்டுப்போய், திரிந்து விடுகின்றன என்று புகார்கள் எழுகின்றன. பால் விரைந்து கெட்டுப்போவதற்கு மின்தடையால் குளிரூட்டு வசதி இல்லை என்பது ஆணித்தரமாகச் சொல்ல முடிவதைப்போல, இந்தப் பால் தரமானதாக இல்லை என்பதால்தான் விரைந்து கெட்டுப்போனது என்று நம்மால் சொல்ல முடிவதில்லை. ஏனெனில், நாம் நம்புகிறோம். நமக்கு வழங்கப்படும் பால் உண்மையிலேயே தரமானது என்று!
இந்தியாவில் பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் 10 மாநிலங்களின் வரிசையில் தமிழகம் 8வது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் உத்தரப் பிரதேசம் ஆண்டுக்கு 2.10 கோடி டன் பால் உற்பத்தி செய்கிறது. தமிழகம் வெறும் 60 லட்சம் டன் மட்டுமே! இதிலும் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் மூலம் கிடைக்கும் அளவு மிகவும் குறைவு.
ஆவின் பால் விநியோக சேவையில் குறைபாடு இருந்தாலும், அவர்கள் கலப்படம் செய்தார்கள் என்பதாக முறைகேடு இல்லை. ஆவினைப் பொருத்தவரை, நிர்வாக ஊழல்கள் உண்டே தவிரக் கலப்படம் இல்லை. ஆனால் ஆவின் நிறுவனம் ஏன் வளரவில்லை, அதை வளர விடவில்லை என்கிற கேள்விக்கு சரியான பதிலில்லை.
இன்று தமிழகத்தில் தனியார் பால் விநியோகம்தான் அதிகமாக இருக்கிறது. தமிழக அரசு பால் தரத்தைச் சோதிப்பதில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பால்பண்ணைகளிலும் வாரம் ஒருமுறையாகிலும் திடீர் ஆய்வுகள் நடத்தி, பால் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் விற்பனை முகவர்கள் சங்கமும் வலியுறுத்தியுள்ளது.
மனிதனைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதால்தான் இயற்கை, குழந்தைகளுக்குத் தாயுருவில் பாதுகாப்பு அளிக்கிறது. போஸ்டர்களையும், குப்பைக் கூளங்களையும் தின்கிற அவலம் ஏற்பட்டாலும் பசு தனது கன்றுக்குக் கலப்படம் இல்லாத பாலைத்தான் வழங்குகிறது. ஆனால் மனிதன்...?
Tuesday, October 23, 2012
யாரிடத்து போயுரைப்பேன் -கலைஞர்
உள்கட்சி சண்டையால் நான் நிம்மதி இழந்திருக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.
திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு மீது அக்கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளரும், மத்திய இணை அமைச்சருமான பழனிமாணிக்கம் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக தொண்டர்களுக்கு "நீர் இடித்து நீர் விலகுவதா' என்ற தலைப்பில் திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில் கருணாநிதி கூறியிருப்பதாவது:
எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாத அளவுக்கு தோல்வி அடைந்தாலும் துவண்டு விடாமல் 89 வயதில் நானும், 90 வயதில் பொதுச்செயலாளர் அன்பழகனும் கட்சிக்காக தினமும் உழைக்கிறோம்.
திமுகவினர் குழு சேர்த்துக் கொண்டு மோதிக் கொள்கிறார்கள் என்ற செய்திதான் என்னை பெரிதும் வருந்தச் செய்கிறது. 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, ஆட்சி வந்து விட்டது, கட்சி போச்சே என்றார் அண்ணா. அதனை இப்போது அனுபவரீதியாக உணர்கிறேன்.
கட்சியினருடன் பேசிவிட்டு இரவு 11 மணிக்கு உறங்கச் சென்றால் உள்கட்சியை அரித்து வரும் இத்தகைய குழுக்கள் பற்றிய வேதனைதான் என்னை சூழ்ந்து கொள்கிறது. தூங்க விடாமல் செய்கிறது.
மத்திய இணை அமைச்சர் பழனிமானிக்கம் சனிக்கிழமை (அக்டோபர் 20) அளித்த பேட்டி குறித்து அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனும், முரசொலி செல்வமும் கூறியவுடன், இன்றிரவு என் தூக்கம் போச்சு என்றுதான் கூறினேன். அதுபோலவே இரவு முழுவதும் நான் உறங்கவில்லை.
அண்ணா சொன்ன குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது மறந்துவிட்டதா? தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையை சரி செய்ய நானும், அன்பழகனும் இரண்டு மணி நேரம் செலவிட்டோம். அப்போது பேசிய துரைமுருகன், தஞ்சை மாவட்டம் தலைவரின் (கருணாநிதி) நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் மாவட்டம். அங்கு அவர் கூறுவதுதான் வேதவாக்கு. அங்கு குழு உருவாகலாமா என்று கண்ணீர் மல்க கேட்டாரே? அந்த மாவட்டத்திலா இந்த தலைகுனிவு?
இரண்டு நாள்களுக்கு முன்பு என்னைச் சந்தித்த பழனிமாணிக்கம், அவரது தொகுதியில் நடப்பதைப் பற்றி சொன்னார். பொறுத்திருங்கள். தலைமைக்கு புகாராக எழுதிக் கொடுங்கள் என்றேன். அதற்குள் என்ன அவசரம்? எதற்காக இந்தப் பேட்டி? நான் அனைவருடனும் அன்புடன் பழகுகிறேன் என்பதை பலவீனமாக எடுத்துக் கொண்டு எது வேண்டுமானாலும் செய்வதா? நான் அனைத்தையும் மன்னித்து விடுகிறேன். மறந்து விடுகிறேன் என்பதற்காக எதையும் செய்யத் துணிவதா?
எதிர்க்கட்சிகளிடம் இருந்து கட்சியைக் காப்பாற்றுவதா அல்லது நமக்குள் நிலவும் குழு பேதத்தை போக்குவதா? இலையில் நிறைய பண்டங்களைப் பரிமாறிவிட்டு ஒரு ஒரத்தில் சாணத்தை வைப்பதற்கு பெயர் விருந்தோம்பலா? எதற்காக நான் இருக்கிறேன்? எதற்காக தலைமை இருக்கிறது? மாவட்டத்துக்கு மாவட்டம் இது போன்றதொரு நிலைமை உருவானால் அதற்கு எங்கே எல்லை?
மனசாட்சி உறுத்தியதால் பேட்டி கொடுத்த இரவே பழனிமாணிக்கம் என்னைச் சந்தித்து விளக்கம் அளித்தார். டி.ஆர். பாலுவும், பழனிமாணிக்கமும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் டி.ஆர். பாலுவை மேற்கு வங்க மாநில எம்.பி.க்கள் தாக்க வந்தபோது 5-வது வரிசையில் இருந்த பழனிமாணிக்கம் முதல் வரிசைக்கு ஒடி வந்து தடுத்தார். அந்த உணர்வு இன்று எங்கே போய்விட்டது?
பழனிமாணிக்கத்தை தாக்க யார் முற்பட்டாலும், ஓடிவந்து பாதுகாக்க கூடியவர் பாலு.
ஊரிடத்து பகை என்றால் உறவிடத்து போயுரைப்பேன். உறவிடத்தே பகை என்றால் என்ற நிலையில் யாரிடத்து போயுரைப்பேன் நான் நிம்மதி இழந்திருக்கிறேன்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.
டிஸ்கி- கலைஞரும்...இப்படி சொல்லியிருக்க வேண்டாமே...மூன்றாம் நபருக்குத் தெரியாமல்..உட்கட்சி பேச்சு வார்த்தையில் இப்பிரச்னையை தீர்த்திருக்கலாம்.
என் காங்கிரஸ் நண்பன் ஒருவன் கோஷ்டி பற்றி...நீங்கள் பேசாதீர்கள் என்கிறான் என்னிடம்.
Monday, October 22, 2012
புரசைவாக்கம் புன்னகை பவன் - உணவகம்..
புரசைவாக்கம்..தானா தெருவு தாண்டி சென்றால் ஒரு சின்ன குறுக்குத் தெரு வரும். தெருமுனையில் சிறுநீர் கழிக்கக்கூடாது என சுவரில் கிறுக்கியிருப்பார்கள்.ஆனால் அங்குதான் சிறுநீர் கழித்து நாற்றம் அடிக்க வைத்திருப்பர் குடிமகன்கள்.
அதைத் தாண்டி சற்றுச் சென்றால்..புன்னகை பவனைப் பார்க்கலாம்.போர்டு ஏதும் இருக்காது.அங்கு விசாரித்தால் சின்ன குழந்தைகளும் புன்னகையுடன் இடத்தைக் காட்டும்.
நீங்கள் உள்ளே நுழையும் போது வாயிலில் ஒருவர் கை கூப்பி புன்னகையுடன் 'வாங்க..வாங்க.'.என்று புன்னகையுடன் வரவேற்பார்.கல்யாண மண்டபத்தில்..பெண்ணைப் பெற்றோர்., பிள்ளை வீட்டாரை வரவேற்கும் தோரணைப் போலவே இருக்கும்.
நீங்கல் புன்னகையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று..ஒரு மேசையில் அமர்ந்து..இரண்டு பரோட்டா, பீஸ்மசாலா ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தால் கால்மணி நேரத்தில் பரோட்டா உங்கள் முன் வந்து அமரும்....சும்மா பள பள என..
கண்டிப்பாக நெய் போட்டிருக்க வாய்ப்பில்லை.ஆனால்..நெய் போன்ற வஸ்து உபயோகப்பட்டிருக்கக் கூடும்.அதை பிட்டு..பீஸ் மசாலாவை சேர்த்துச் சாப்பிட்டால்....அடடா...அடடா..
"தெய்வம் இருப்பது எங்கே..அது இங்கே..வேறெங்கே..' என பாட ஆரம்பித்துவிடுவீர்கள்.
பரோட்டா மாஸ்டரைப் பார்த்தால்...வேர்த்துக் கொட்ட இருப்பார்..பரோட்டாவின் பளபள ப்புக்கு காரணம் தெரிந்துவிடும்.
விலையும் அதிகம் இல்லை...
ஆனால்...அங்கு விஜயம் செய்து..உங்கள் உடல் நலம் கெட்டால்...நான் பொறுப்பல்ல.
Sunday, October 21, 2012
பீட்சா..(மாற்றான விமரிசனம்)
பீட்சா படம் பற்றி விமரிசனம் செய்ய ஆசை.
நாம் ஒரு நல்ல படத்தைப் பார்த்தால்...அந்த சந்தோசத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வோம்.
படம் பற்றி..விவாதிப்போம்..கிளைமாக்சை அலசுவோம்.
படம் நன்றாய் இருந்தால்..விமரிசனம் நன்றாக எழுதுவோம்.
ஆனால் பீட்சா பற்றியும் விமரிசிக்க ஆசை.
படத்தின் முடிவை வெளியே சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால்...
ஆரம்பம் பற்றி மட்டும் கூறிவிட்டு..முடிவைக் கூறாவிட்டால் முழு விமரிசனமும் ஆகாது என்பதால் படம் பற்றி விமரிசனம் செய்வதைத் தவிர்த்திருக்கிறேன்.
இதற்கு மேலும் எழுதினால்...நான் முடிவைச் சொல்லிவிடுவேனோ என அஞ்சுகிறேன்.
வெள்ளித்திரையில் மட்டுமே பார்த்து..முடிவை உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
யாரேனும் உண்டோ..?
வானவூர்தி ஒலிக் கேட்டு
விண்ணைப் பாராதார்
மழை கொட்டுகையில்
மனதில் மத்தாப்பாய் ரசிக்காதார்
விபத்து நடந்ததும்
விரைந்து சென்று
வேடிக்கைப் பார்க்காதார்
கடந்து சென்ற அழகைக் காண
கழுத்து வலிக்க திரும்பாதார்
பேருந்து நிறுத்தத்தில்
சரியாக நிறுத்தும் ஓட்டுநர்
ஆளும் கட்சியின் நற்செயலையும்
குறைகூறா எதிக்கட்சியினர்.
Friday, October 19, 2012
மின்வெட்டு...முதல்வர் அதிரடி பேட்டி..
மின்வெட்டு குறித்து..இன்று அமைச்சர்களின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.
அப்போது பேசிய முதல்வர், 'மாநிலத்தில் மின் பற்றாக்குறை இருப்பதை இதுவரை எந்த அமைச்சரும், அதிகாரிகளும் தன் கவனத்திற்குக் கொண்டு வராதது ஏன்? என வினவினார்.
அவர் மேலும் கூறுகையில்..தான் பத்திரிகைகள் மூலமே இதை இப்போதுதான் அறிந்ததாகக் கூறினார்.அதற்காகவே இந்த அமைச்சரவை கூட்டம் என்றார்.
மின்துறை அமைச்சரை நிலைமை சீராகும் வரை இலாகா இல்லாத அமைச்சராக இருக்குமாறு பணித்தார்.
Thursday, October 18, 2012
தினமணி தலையங்கம் (கண்டிப்பாக படிக்கவும்)
இல்லாமை, இயங்காமை அல்ல!
By ஆசிரியர்
மின்வெட்டைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விதவிதமான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சில இடங்களில் கடையடைப்பு நடத்துகிறார்கள். சில ஊர்களில் ஆர்ப்பாட்டம், தெருமுனைக்கூட்டம். சிறுதொழிலதிபர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். கோவை போன்ற நகரங்களில் பேரணி நடத்தப்படுகின்றது.
மின்சார அலுவலகங்களை பொதுமக்கள் முற்றுகையிடுகிறார்கள். சில இடங்களில் இரவு நேரத்தில் முற்றுகையிட்ட மக்கள், ஆத்திரத்தில் மின் அலுவலர்களைத் தாக்கியுள்ளனர்.
கரண்ட் காணாமல் போய்விட்டது கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று சிலர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள். அந்தப் புகாருக்கு காவல்நிலையமும் ரசீது கொடுக்கிறது. "காணவில்லை- பெயர் மின்சாரம், அடையாளம் - தொட்டால் ஷாக் அடிக்கும்' என்று சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.
இதெல்லாம் சரி. மின்தடைக்குத் தமிழக அரசு மட்டுமே காரணமா, தமிழக அரசும் காரணமா, அல்லது எந்த அரசாக இருந்தாலும் இந்த நிலையைச் சந்திக்க வேண்டியாகியிருக்குமா? மின்சாரத்தை வைத்துக்கொண்டே தமிழக அரசு வழங்க மறுக்கிறதா? சுமார் 4,000 மெகாவாட் மின் பற்றாக்குறை இருக்கும்போது ஒரு மாநிலம் என்ன செய்ய இயலும்?
இந்தக் கேள்விகளைப் போராட்டம் நடத்துபவர்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமே இந்தப் பிரச்னையை அணுகுகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிர்வாகம் செய்யத் தெரிந்திருந்தால், இந்நேரம் தட்டுப்பாட்டை போக்கியிருக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் வாதம் செய்கின்றன. ஆனால், மத்திய அரசு ஏன் தர மறுக்கிறது என்பதைப் பற்றி கேள்வி கேட்பதில்லை. கூடுதல் விலைக்கு வாங்கி, குறைந்த விலைக்கு எத்தனைக்காலத்துக்கு சமாளிக்க முடியும் என்பது பற்றியும் அவர்கள் யோசிப்பதாகத் தெரியவில்லை.
மின்வாரியத்திடம் மின்சாரம் போதுமான அளவு இல்லை என்பதே உண்மை. மத்திய தொகுப்பிலிருந்து அதிக மின்சாரத்தை தமிழகம் கெஞ்சிக் கேட்டாலும் தரப்படவில்லை. மேட்டூர் அனல்மின் நிலையம், தூத்துக்குடி அனல் மின்நிலையம் ஆகியன அடிக்கடி பழுதாகின்றன. பருவமழைக் காலத்தில் காற்றாலை மின்சாரம் குறைந்துபோனது. உற்பத்தியாகும் குறைந்த மின்சாரத்தை பகிர்மானம் செய்யவேண்டிய கட்டாயத்தில் தமிழக மின்வாரியம் திணறிக்கொண்டிருக்கிறது.
இதனால் பொதுமக்களுக்கு மட்டுமே இழப்பு என்றில்லை. மின்வாரியத்துக்கு மிகப்பெரிய இழப்பு. மாதம் முழுவதும் நாள்தோறும் 12 மணி நேரம் மட்டுமே மின் விநியோகம் செய்ய முடியும் என்றால், மின்வாரியத்துக்குக் கிடைக்க வேண்டிய மின்கட்டண வசூல் 50% குறையும். பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மக்கள் ஏற்க வேண்டும் என்பதற்காகத்தான் வேண்டுமென்றே மின்தட்டுப்பாட்டை தமிழக அரசு உருவாக்குகிறது என்ற பிரசாரங்கள் ஏற்புடையவை அல்ல. நீதிமன்ற விவகாரமும், ரஷ்யா தற்போது,"இழப்பீட்டுக்கும் பொறுப்பேற்க வேண்டுமானால், கூடங்குளத்தின் மின்உலைச் செலவுகள் இன்னும் கூடுதலாகும்' என்று சொல்வதால், கூடங்குளம் மின்உற்பத்தி இன்னும் சில ஆண்டுகளுக்கு நிச்சயமில்லை என்பதுதான் உண்மை நிலைமை.
கூடங்குளத்தால் தமிழகத்துக்கு 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்ற செய்திக்கு முகநூலில் ஒரு அன்பர் ஆவேசமாக குறிப்பிட்டிருந்தார். "எங்கள் வீட்டுல விளக்கெரிய அடுத்தவன் வீட்ல பொணம் விழணும்னு நாங்களா கேட்டோம்?' என்று. நல்லவேளை, அவருக்கு உண்மை தெரிந்திருக்கவில்லை. தமிழகத்தின் பாதித் தேவையைப் பூர்த்தி செய்யும் அனல்மின்சாரம், பல ஆயிரம் ஏக்கர் காடுகளை அழித்துக் கிடைத்த நிலக்கரியை எரிப்பதால் கிடைப்பதும், புவிவெப்ப மாறுதலை அது ஏற்படுத்துகிறது என்பதும்! தெரிந்தால், அனல் மின் நிலையங்களையும் மூட வேண்டும் என்பார்!.
இத்தகைய சூழ்நிலையில், மின்தட்டுப்பாடு குறித்து நிலைமையை ஆராய மின்துறை அமைச்சர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து, திங்கள்கிழமைதோறும் நிலைமையைத் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ள முதல்வரின் நடவடிக்கை இந்த நேரத்திற்கு அவசியமானது. அதே நேரத்தில், மக்கள் பிரதிநிதிகள், தொழில்துறையினர், அரசியல் கட்சியினரை அழைத்து நிலைமையை விளக்குவது பயன் உள்ளதாக அமையும்.
மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை என்பதால்தான் அரசு ஜூன் மாதத்தில் திறக்கவில்லை என்பது விவசாயிகளுக்குப் புரிவதைப் போல, இன்றைய மின்உற்பத்தி இவ்வளவுதான்; இதைக்கொண்டு இவ்வளவு நேரம்தான் மின்சாரம் வழங்க முடியும் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால் அரசு மக்களிடம் வெளிப்படையாக விளக்கம் தர வேண்டும். தொழில்துறைக்கு மின்சாரத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியத்தை மக்களுக்குப் புரியவைத்தால் போராட்டங்கள் தானே குறையத் தொடங்கும்.
தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு நிலவும் வேளையில், புதிய தொழிற்கூடங்களுக்கு அனுமதி அளிப்பதை சிறிது காலம் தள்ளிப்போடலாம். அல்லது மின்சாரத்தைத் தாங்களே தயாரித்துக்கொள்ள முன்வரும் நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கலாம். அரசும் தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.
நாள்தோறும் மத்திய அரசு தரும் மின்சாரம் இவ்வளவுதான் என்று சொல்வதால், அரசியல் ரீதியாகவும் மாநில அரசுக்கு சாதகம்தான். உள்ள நிலைமையை வெளிப்படையாகப் பேசுங்கள். மக்கள் புரிந்துகொள்வார்கள். பேசாவிட்டால், இதை, அரசின் தோல்வியாக எதிர்க்கட்சிகள் சித்திரிக்கும். இல்லாமை வேறு, இயலாமை வேறு, இயங்காமை வேறு! அரசியல் ரீதியாக அணுக வேண்டிய பிரச்னைகளை அதிகாரிகள் மூலம் தீர்க்க முடியாது. மக்களாட்சியில் மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடைவெளி ஏற்பட்டுவிடக் கூடாது. அரசின் இன்றைய நிலைமை இல்லாமைதானே தவிர, இயலாமையோ, இயங்காமையோ அல்ல என்பதைப் புரியவைக்காததால்தான் இத்தகையப் போராட்டங்கள்!
Wednesday, October 17, 2012
வைரமுத்து வரிகள் - நீர்ப்பறவையில் நீக்கப்பட்டது..
சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை தனது நீர்ப்பறவை படத்திலிருந்து சீனு ராமசாமி நீக்கினார். கவிப்பேரரசு வைரமுத்துவின் சம்மதத்துடன் இது நடந்ததாக கூறப்படுகிறது.
நீர்ப்பறவையில் கிறிஸ்தவ மீனவர்களின் வாழ்க்கையை சீனு சொல்லியிருக்கிறார். கதையோட்டம் எப்படியோ அதே ஓட்டத்தில் பாட்டு அமைக்கிறவர் வைரமுத்து. அப்படி அமைத்ததால் தென்மேற்குப் பருவக்காற்று அவருக்கு கிரீடமாக அமைந்தது.
நீர்ப்பறவையின் களம் கிறிஸ்தவ மீனவர்கள் என்பதால் விவிலிய வார்த்தைகளை பயன்படுத்தி மொத்தப் பாடல்களையும் எழுதியிருந்தார். இது பலராலும் சிலாகிக்கப்பட்டது. ஆனால் அதில் சில வரிகள் சர்ச்சையை கிளப்பியது. காதலன் காதலியைப் பார்த்து சத்தியமும் ஜீவனும் நீயே என்று சொல்வது போல் அமைந்த வரி கிறிஸ்தாவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்களைப் பொறுத்தவரை சத்தியமும் ஜீவனும் ஏசு மட்டுமே.
பாடல் வரிகளை நீக்க வேண்டும் என்ற போராட்டத்தை தொடர்ந்து யார் மனதையும் புண்படுத்த நான் அப்படி எழுதவில்லை என வைரமுத்து விளக்கமளித்தார். ரிலீஸ் நேரத்தில் படத்தைப் பற்றி பேசுவதற்குப் பதில் இந்த சர்ச்சை பாடுபொருளாகிவிடக் கூடாது என்று அந்த வரிகளையே நீக்கிவிட்டார் சீனு ராமசாமி.
(வெப்துனியா)
டிஸ்கி- இந்து மதம் தவிர எந்த மதத்தினர் பற்றி எழுதினாலும் நாங்கள் சும்மாயிருக்கமாட்டோம்.
Tuesday, October 16, 2012
ஊழலோ..ஊழல்...
பல தியாகங்களைச் செய்து நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது காங்கிரஸ் என நாம் படித்திருக்கிறோம்..
ஆனால்..நாடு போகும் போக்கைப் பார்த்தால்...ஊழல் கட்சி காங்கிரஸ்..நாட்டு வளங்களை அழித்தது காங்கிரஸ் என அடுத்த தலைமுறையினர் படிக்க வேண்டுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு ..கடந்த நான்கு வருட காங்கிரஸ் ஆட்சியைப் பாருங்கள்..
காமென்வெல்த் ஊழல்..கோடிக்கணக்கில்..
2ஜி ஸ்பெக்டர்ம் ஊழல்..கோடிக்கணக்கில்
நிலக்கரி சுரங்க ஊழல் கோடிக்கணக்கில்
மத்திய அமைச்சர் அறக்கட்டளை ஊழல் 76 லட்சங்கள்..
இவையெல்லாம் வெறும் புகார்கள்தான் என்று கூறினால்..ஆம்..புகார்கள் தான்..ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள்..
கண்டிப்பாக பத்திரிகைகள் சொன்ன அளவு கோடிகள் ஊழல் இல்லாமல் இருக்கலாம்...ஆனால் ஊழல் நடந்திருப்பது என்னவோ உண்மை..
இதுபற்றி சமீபத்தில் ஒரு மத்திய அமைச்சர் பேசுகையில்...மக்கள் ஃபோஃபர்ஸ் ஊழலை மறந்துவிடவில்லையா...அதுபோல நிலக்கரி ஊழலையும் மறந்து விடுவார்கள்...எனப் பேசுகிறார்.என்னே..ஒரு பொறுப்பற்ற பேச்சு..
நேற்று ஒரு மைய அமைச்சர் 76 லட்சம் ஒரு மத்திய அமைச்சர் செய்த ஊழலா..ஜுஜுபி...இந்த பணம் சர்வசாதாரணம் ஒரு மத்திய அமைச்சருக்கு..கோடிக்கனக்கில் என்றாலும் பரவாயில்லை என்ற பொருள் பட பேசியுள்ளார்.
காங்கிரஸ் தலைவரின் மருமகன் மீது சொல்லப்பட்ட ஊழல் விசாரணை அதிகாரி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்..
என்னவோ...மாதவா..நம்ம தலையெழுத்து இவர்களை எல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என புலம்புவதைத் தவிர சாதாரண குடிமகனால் என்ன செய்ய முடியும்?
வசூல் படங்கள் தோல்வியைத் தழுவுவதேன்?
கோடிக்கணக்கில் செலவழித்து எடுக்கப்படும் படங்கள் வசூலில் வேண்டுமானால் வெற்றி பெறுகின்றன.ஆனால் உண்மையில் அவை தோல்வி படங்களே.
பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் வெளியாகும் போதே 1000 ப்ரிண்டுகளுக்கு மேல் போடப்பட்டு..1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் (குறிப்பாக மல்டிபிளக்ஸ்- டிக்கெட் 120 ரூபாய்) திரையிடப்படுவதால், வெளியான சில நாட்களில், படத்தைப் பற்றிய விமரிசனம் வருவதற்குள் ஓரளவு பணத்தை ஈட்டிவிடுகின்றன.
சமீபத்தில் வெளிவந்த, பில்லா-2, தாண்டவம், சகுனி ஆகியவை சில உதாரணங்கள்.சமீபத்தில் மாற்றானும் இப்பட்டியலில் சேர்ந்து விட்டது.
இதற்குக் காரணங்கள் என்ன?
கதையில் புதுமையாக ஏதும் கிடையாது..
அப்படியே இருக்கும் பட்சத்தில்...அதற்கான காரணம்..வழக்கமான பழிவாங்கல்.
படம் வெளிவருவதற்கு முன் ஏராளமான எதிர்பார்ப்பை மக்களுக்கு ஏற்படுத்திவிடுதல்.(படம் வெளிவந்த பின் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்)
அதைப் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை..எங்கள் குறியே கலெக்க்ஷன்தான் என்றால்...
மன்னித்துக் கொள்ளுங்கள்...
நீங்கள் செய்வதும் விபச்சாரம் தான்.
ஆகவே..தயாரிப்பாளர்களே, நடிகர்களே, இயக்குநர்களே..புதிதாக சிந்தியுங்கள்...
தமிழில் ஏராளமான நாவல்கள் உள்ளன.அவற்றை படியுங்கள்..
எங்கள் வழி இதுதான் என்றால்..மக்கள் EXITஐ காட்டிவிடுவார்கள்..
Monday, October 15, 2012
தயாரிப்பாளரும்...சினிமா கதாசிரியரும்...
தயாரிப்பாளர் - என்ன கதாசிரியரே! நம்ம் படத்திலே கிளைமாக்ஸ் என்ன எழுதியிருக்கீங்க..
கதாசிரியர் _ மூணு நாலு கிளைமாக்ஸ் எழுதியிருக்கேன்..உங்களுக்கு எது பிடிக்குமோ அதை வைச்சுக்கலாம்..
முதல் கிளைமாக்ஸ்..வில்லன் கதாநாயகியை தூக்கிக் கிட்டு கார்ல வேகமா போயிடறான்...கதாநாயகனுக்கோ கார் இல்லை...அதனால தெருவில இருந்த ரோடு ரோலர்ல அவனை சேஸ் பண்ணி பிடிச்சு..நாயகியைக் காப்பாத்தறான்..
தயாரிப்பாளர் - இது சாதாரணமாய் எல்லாப் படத்திலேயும் வரது தானே..புதுசா..மக்கள் நம்பறாப்போல சொல்லுய்யா..
கதாசிரியர் - .வில்லன் எலிகாப்டர்ல போறான்...கதாநாயகன்...ஏர்போர்ட்ல நுழைஞ்சு...அங்க புறப்படத் தயாராயிருந்த பிளேனை எடுத்துக் கொண்டு எலிகாப்டரை துரத்தறான்.வில்லனோட நடுவானில சண்டை..பிளேன்ல இருந்த பயணிகள் முகத்திலே அதிர்ச்சி...கடைசியிலே எலிகாப்டர்ல இருந்த வில்லனை..பிளேன்லே இருந்து தாவித் தாவிப்போய் அழிக்கிறான்.
தயாரிப்பாளர்- இது நம்பறமாதிரி இருக்கு..வேற ஏதாவது வைச்சிருக்கியா..
கதாசிரியர்- வில்லன் கதாநாயகனை மின்சார நாற்காலில கட்டிப்போட்டுட்டு...மின்சாரத்தை ஆன் பண்ணிட்டு ஓடிப்போயிடறான்...கதாநாயகன் செத்துட்டதா...மக்களை நம்ப வைக்கிறோம்.ஆனால் அவன் சாகலை.. அந்தக் காட்சியை மக்கள் நம்பவைக்க...தமிழக மின்சார வாரியத்தோட போர்டைக் காட்டறோம்.
தயாரிப்பாளர்- அடடா..அற்புதம்..பிரமாதம்..நம்பறமாதிரியான கிளைமாக்ஸ்...இதையே வச்சுப்போம்.
Saturday, October 13, 2012
அபி அப்பாவும்..காவல்துறையும்...
அபி அப்பா..சென்னையில் அவரது செல் ஃபோனை தவறவிட்டதாகவும்..அதை காவல்துறையினரிடம் புகார் அளித்ததாகவும்..காவல்துறை அக்கறையுடன் கண்டுபிடித்துக் கொடுத்ததாக ஒரு பதிவிட்டு..அவர்களை நண்பர்கள்தான் என வாழ்த்தியிருந்தார்.
காவல்துறை இன்று முதல்வர் ஜெ யிடம் உள்ளது.அத்துறை சிறப்பாக செயல்பட்டதாக அபியப்பா எழுதியிருந்தது அதிர்ச்சியை அளிக்கிறது.
அபி அப்பா..ஒரு திமுக என்பது காவல்துறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அப்படி தெரிந்திருந்தால்..அவர் செல்ஃபோனும் கிடைத்திருக்காது...அவரையும் ஏதேனும் அபகரிப்பு வழக்கில் குண்டர் சட்டத்தில் (அபி அப்பா ஒல்லியாக இருந்தாலும்) கைது செய்திருப்பார்கள்.
ஆகவே..அவர் அவசரப்பட்டு காவல்துறையை அணுகியது அவரது அசட்டுத் துணிச்சலையேக் காட்டுகிறது என்கிறார் ஒரு திமுக முக்கியப் புள்ளி.
தவிர்த்து..காவல்துறையை அபி அப்பா பாராட்டிவிட்டதால் கலைஞர் சற்றே வருத்தத்தில் உள்ளதாக நம்பத் தகுந்த வட்டார செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
தமிழகத்தை சீனா கைப்பற்றும்- சிங்கள தலைவர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உள்ளிட்டோர் நேரில் அழைத்துப் பேசியிருப்பது சிங்கள அமைப்புகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற சிங்கள அமைப்பின் தலைவர் குணதாச சமசரசேகர கூறியுள்ளதாவது:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜ மரியாதையுடன் அழைத்துப் பேசுகிறது. இலங்கையில் ஈழத்தை அமைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டுச்சதியில் இறங்கியுள்ளன. இலங்கை விவகாரத்தில் தேர்ச்சிபெற்ற நிருபமாராவ் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான்.
இலங்கையைக் கூறுபோடுவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் செயற்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அழைத்துப் பேசுவதன் பின்னணியிலும் அமெரிக்காதான் மறைமுகமாக செயற்பட்டுள்ளது. சீனாவை அடக்கியாள்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படும் அமெரிக்காவின் சுயநலத்தை காலப்போக்கில் இந்தியா உணரும்.
இலங்கையில் அதிகாரங்கள் பகிரப்பட்டால் அது தனி ஈழத்துக்கு வழிகோலும். இதுதான் அமெரிக்கா, இந்தியாவின் எதிர்பார்ப்பாகும்.
இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ராஜமரியாதை கொடுத்து அழைத்துப்பேசும் இந்தியாவுக்குத் தமிழகத்தை சீனா கைப்பற்றும்போதுதான் இலங்கையின் அருமை தெரியவரும். அப்போதுதான் அவர்கள் அனைத்தையும் உணர்வர்.
தமிழர் பிரச்சினையை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கையிலெடுத்துள்ளதால் உலக நாடுகளுக்கிடையில் அது மோதலை உருவாக்கும் அவலநிலை தற்போது தோன்றியுள்ளது என்றார் அவர்.
(தகவல் - தட்ஸ்தமிழ்)
Subscribe to:
Posts (Atom)


