Wednesday, October 21, 2020

பயம்

 புது மனைவி மாலதியை மெரினா கடற்கரைக்கு அழைத்து வந்திருந்தான் ரகு.அவனுக்குத் திருமணமாகி ஒரு வாரமே ஆகியிருந்தது.


அலை அலையாய் வந்திருந்த மக்கள்..தண்ணீரில் நின்றுக் கொண்டு அலைகள் வந்து தங்கள் கால்களை நனைத்து காலடி மண்ணை எடுதுதுக் கொண்டு மீண்டும் கடலுக்குள் செல்வதை ரசித்த படி இருந்தனர்.


அப்போதுதான் சற்று தள்ளி அவனுடன் வங்கியில் வேலை செய்யும் அவனது மேலதிகாரி வேதாசலத்தைப் பார்த்தான்.


உடனே..முகம் சற்றே மாற, "மாலதி வா..வா..நேரமாச்சு..போகலாம்" என அவளை அவசரப் படுத்தினான்.


"இவ்வளவு நேரம் சந்தோஷமாய் இருந்தவர் ஏன் கலவரமாய்க் காணப்படுகிறார்? என்ன ஆச்சு இவருக்கு?" என புரியாது விழித்தாள் மாலதி.


அவளை "தர தர.." என் இழுத்துக் கொண்டு ராணி மேரி  கல்லூரி அருகில் ஒரு ஆட்டோ பிடித்து ஏறிய பின்னரே..நிம்மதி பெருமூச்சு விட்டான்.


வங்கியில் மெசஞ்சராகப் பணி புரியும் அவன்..மாலதி வீட்டாரிடம் கிளார்க் வேலையில் இருப்பதாகக் கூறி மணம் முடித்திருத்தான்..வேதாசலம், இவனைப் பார்த்ததும் ,உண்மையை மாலதியிடம் சொல்லிவிடப் போகிறாரே! என்ற பயம்தான் காரணம்.

No comments: