Tuesday, October 27, 2020

என்னவென்று சொல்ல...

 "அம்மா..அம்மா..நேரமாயிடுச்சு..ஒர்க் ஃபிரம் ஹோம்னா வேலை குறைச்சல்னு நெனைக்காதே.வேலை அதிகமாயிடுச்சு.ஒன்பது மணிக்கே லேப்டாப் முன்னால உட்காரணும்..தெரிஞ்சுக்க.." என கத்திக் கொண்டிருந்தான் சுரேந்தர்.

'எனக்குத் தெரியும்.முதல்ல டிஃபனை சாப்பிடு" என்றார் அம்மா.



"இல்லைம்மா..அதுக்கெ எல்லாம் நேரமில்லை.என்னைப் போல சாஃப்ட் வேர் பீப்புள் எல்லாம் நேரம் காலம் பார்க்காம வேலை செய்யறதாலத்தான்..கம்பெனியால எங்கள் எல்லாருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் சம்பளம் கொடுக்க முடியுது.இதையெல்லாம் நீ எப்ப தெரிஞ்சுக்கப் போறியோ...அப்பா..அப்பா..கொஞ்சம் தள்ளி நில்லு..வீடியோ கான்ஃபெரென்ஸ்..நீ தெரியறபார்.."என பேசிக் கொண்டே இருந்தான் சுரேந்தர்.


"கம்பெனிக்கு ஏகப்பட்ட லாஸ்னு வேலையை விட்டு இவனை அனுப்பின அதிர்ச்சிலே இருந்து இவன் இன்னமும் மீளலையே! இன்னிக்கும் வேலைக்குப் போறாப் போல ஒர்க் ஃபிரம் ஹோம்னு சொல்லிட்டு பைத்தியம் போல பேசிக்கிட்டு இருக்கானே..எப்ப பழைய நிலைமைக்கு வருவானோ..?' என அம்மாவிடம் வருத்தப் பட்டுக் கிட்டு இருந்தார் அப்பா. 


No comments: