Sunday, August 10, 2008

கமல் அவசர கதை ஆலோசனை

தனக்குப் பிடித்த இயக்குனர்கள்,எழுத்தாளர்களை அழைத்து கமல் அடுத்த பட கதை ஆலோசனை செய்தார். அதன் விவரம்.

கமல்- ரவிகுமார்,மௌலி,சுந்தர் சி.,கிரெசி மோகன்,மதன்,சுஜாதா..sorry., அவர் மறைஞ்சுட்டார்ங்கிறதை மறந்துட்டேன்.உங்களை எல்லாம் ஏன்
வரச்சொன்னேன்னா..என்னோட மர்மயோகி வர 2 வருஷம் ஆகும்.குறுகிய காலத்தயாரிப்பான குசேலன் சரியா ஓடல்லை.,அதனால்..
உடனே என் படம் ஒன்னு வரணும்.உங்ககிட்ட யாரிடம் எனக்கான கதை இருக்கு..

(எல்லோரும் ஒன்றாக கையைத் தூக்க..)

கமல்- ஒவ்வொருத்தரா..முதல்லே ரவிகுமார்..உங்க கதையைச் சொல்லுங்க

ரவிகுமார்-ஜக்குபாய் ன்னு ஒரு கதை இருக்கு

கமல்-அதுதான் ரஜினி நடிக்கறதா..இருந்து..இப்ப..சரத் நடிக்கிறாரே

ரவி- இது வேற ஜக்குபாய்..அது வேற ஜக்குபாய்..இதுல எதிர்காலத்தைக் காட்டக்கூடிய ஒரு கருவி..வில்லன்கள் கிட்ட கிடைக்கிறது.
அதைத் தெரிஞ்சுக்கிட்டா..பிரபஞ்ச ரகசியம் வெளிப்பட்டுடுமே என்று கதாநாயகன்..அதைக் கடத்தி அழிக்கப் பார்க்கிறான்.
அவனுடன் சேர்ந்து..அசினும் ஓடிக்கிட்டே இருக்காங்க..நம்ம வையாபுரி,சார்லி. இவங்கைள் காமடியனா போட்டுடுவோம்.

(சுந்தர் ( முணு முணுக்கிறார்) ஆமாம்..படமே காமடி..இதுல காமடியன் வேறயா..ஹீரோ,ஹீரோயின் ஓடினா படம் ஓடிடுமா)

கமல்- உங்களோட சேர்ந்தா..படம் முடிய 2 வருஷம் ஆகுமே..

ரவி- குறுகிய காலத் தயாரிப்புன்னு சொல்றீங்க..அதனால 730நாள்ல முடிச்சுடலாம்.

கமல்-கதைல..தசாவதார சாயல் இருக்கே

ரவி-திரைக்கதையிலே எல்லாம் மாறிடும்..மொத்தம் 12 கேரக்டர்ஸ்..எல்லாத்தையும் நீங்களேக் கூடச்செய்யாலாம்.நான் மட்டும்
ஒரு பாடல்ல வந்து பூமிக்கும்..வானத்துக்கும் குதிச்சுடறேன்.

கமல்- உங்க கிட்ட அப்புறம் வர்றேன்..கிரேசி..உங்ககிட்ட ஏதாவது...


கிரேசி-இருக்கே...இருக்கே...முஹம்மது ஜான் சுந்தர பாண்டியன்னு ஒரு கதை.நாலு ரோலும் நீங்க பண்ணாலாம்..அதுலே சுந்தர் ரோல்
ஒரு சமயல்காரான்...ஐ..மீன்...

கமல்-யூ மீன்..என்னன்னு புரிஞ்சுப் போச்சு.. மௌலி நீங்க..

மௌலி- கிரேசி..சொன்ன கதையையே எடுத்திடலாம்...வேணும்னா..டைடில..ஹரி சந்திரமதின்னு மாத்திடலாம்.(கமல் மௌனமாயிருக்க)
இல்லேன்னா..சங்கரதாஸ் uvve சாமி ன்னு வைச்சுப்போம்

கமல்-அது என்ன நடுவே uvve

மௌலி-அது சங்கரதாஸ் உவ்வே வாந்தி சத்தம் சுவாமி உங்க பேரு...பிண்ணனி இசையே வேண்டாம்..திருப்பாவையை ஓட விட்டுடலாம்.

கமல்- சுந்தர் உங்க கிட்ட

சுந்தர்-நான் இப்ப நடிப்பிலே பிஸி..உங்க கதை அன்பே சிவம் மாதிரி எதாவது இருந்தா..நான் டைரக்ட் பண்ணிடறேன்..

(ரவி முணுமுணுக்கிறார்-நோவாம நோம்பு கும்பிடப் பார்க்கிறார்)

கமல்-மதன் நீங்க

மதன்-டூ..டூ..டூ..டூன்னு(two to two to) ன்னு படப்பேரு..ஹீரோ...ஒரு விபத்திலே..மூக்கு கோணிடுது..அப்பறம்..பீஹார்ல வெள்ளத்திலே மாட்டிக்கிறான்..இப்படி
போகுது கதை...

கமல்-அன்பே சிவம் மாதிரி தெரியுதே

சுந்தர்-அப்போ..நானே..டைரக்ட் பண்ணிடறேன்

மதன்-அதனால் என்ன..படப்பேரை 'வாழ்க வளர்க'ன்னு வைச்சுப்போம்

(ஃபோன் அடிக்க..கமல் பேசுகிறார்)

கமல்-நாம கதை டிஸ்கஸ் பண்றது தெரிஞ்சு..தயாரிப்பாளர்கள்..ஏ.எம்.ரத்னம்,ஆஸ்கர் ரவி,செவென்த் சேனல் மாணிக்கம் எள்ளாம் எங்கேயோ ஓடிட்டார்களாம்.
முதல்லே அவங்களை கண்டுபிடிப்போம் வாங்க..

(அனைவரும் விரைகின்றனர்)

Saturday, August 9, 2008

வறுமையில் வாடும் குசேலன்

குசேலன் படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி மதுரையில் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தை தியேட்டர் உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.
மதுரையில் 5 தியேட்டர்களிலும்,தென் மாவட்டங்களில் 26 தியேட்டர்களிலும் படம் திரையிடப்பட்டது.சிவாஜியை விட அதிகம் வசூல் இருக்கும்
என்று சொல்லப்பட்டதால்..மினிமம் காரண்டி முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால்..படம் வெளியீட்டு சமயம் ரஜினி..இப்படத்தில் 25%தான் வருவதாகவும்..இது முழுக்க முழுக்க பசுபதியின் படம் என்று கூறியதாலும்,
மேலும்..கன்னடர்களை சமாதானம் செய்துக் கொள்ள அளித்த பேட்டியாலும் வசூல் பாதித்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தியேட்டர் நிர்வாகிகள்
கூறுகின்றனர்.
இதுவரை வட்டியுடன் சேர்த்து 90 சவிகிதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்,மினிமம் காரண்டியை..டிபாசிட் தொகையாக மாற்றி..வசூலில்
சதவிகிதம் தரவேண்டும் என்றும் அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கோரிக்கை நிராகரிக்கப் படுமாயின்...12ம் தேதி சென்னையில் பிரமிட் சாய்மீரா அலுவலகம் முன்..உண்ணாவிரதப் போராட்டம்,தர்ணா
ஆகியவை நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.
(தினமலர்)

ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே.....

என்று மனைவியைத்தவிர வேறு பெண்களைப்பார்த்து நாம் சொல்வோம்.(மனைவிக்கூட காதலியாய் இருந்த போது இப்படி புளுகி இருப்போம்) அந்தப் பெண்ணும்..தான் எப்படி இருக்கிறோம் என்பது தெரிந்தும்..நம் புகழ்ச்சியில் மனம்
மயங்கி கண்ணாடியில் தன்னை அடிக்கடி பார்த்துக்கொள்வாள்.ஆனால் இனிமேல் அப்படி முடியாது.
இஸ்ரேல் விஞ்ஞானிகள் ..கம்ப்யூட்டருக்கு எப்படிப்பட்ட பெண் அழகானவள் என சொல்லிக்கொடுத்து இருக்கிறார்களாம்.அதன்படி ஒரு பெண்ணின் மேக்கப்,நடை,உடை.பாவனை ஆகியவற்றை வைத்துஅழகை கம்ப்யூட்டர்
தீர்மானிக்குமாம்.அழகை தன் மொழியில் கிரகித்து முடிவை சொல்லுமாம்.
ஜாக்கிரதை...இனி நீங்கள் யாரையாவது, அழகாய் இருக்கிறாய் என சொல்லிவிட்டு.,அவளூம் ஆசையுடன் தன்
படத்தை கம்ப்யூட்டரில் போட்டுவிட்டு, மௌசை கிளிக்கினால் நம் பொய் வெட்ட வெளிச்சமாய் ஆகிவிடும்

Friday, August 8, 2008

ஜெ.ஆட்சியில் பயந்த தி.மு.க. - ராமதாஸ்

ராமதாஸ் பேச்சிலிருந்து சில துளிகள்.
1.கூட இருந்து குழி பறிப்பவர்கள் நாங்கள் அல்ல.
2. மிசா காலத்தில் தமிழகம் வந்த இந்திரா காந்தி மீது பயங்கர தாக்குதல் நடத்தியது தி.மு.க.
ரயிலில் ஜன்னல் கதவுகளை மூடிக்கொண்டு சென்னை வந்தார் இந்திரா.மதுரையில் அன்று அவரை
காப்பாற்றியவர்களில் நெடுமாறனும் ஒருவர்.
3.எம்.ஜி.ஆரை மலையாளி என்று சொன்னதுடன் அல்லாது மலையாளிகள் தாக்கப்பட்டது யார் ஆட்சியில்.
அவரின் நேற்று..இன்று..நாளை படம் வந்தபோது என்ன நடந்தது.
4.M.G.R., நீக்கப்பட்டதும் நடந்த D.M.K. பொதுக்குழு கூட்டத்தில் எஸ்.எஸ்,ஆர் தாக்கப்பட்டு ரத்தம் ஒழுக
வெளிவந்தது யாரால்
5.ஜெ. ஆட்சிக்காலத்தில் 3 மாதத்தில் அவர் கூட்டணியிலிருந்து வெளீயே வந்தோம்..பின் 4 3/4 ஆண்டுகள்
துணிச்சலாக எதிர்கட்சியாக செயல்பட்டோம்.உங்களைப்போல் பேரவைக்கு உள்ளேயும்,
வெளியேயும் பயந்து பயந்து செயல்படவில்லை.
பா.ம.க.வை அழிக்க வேண்டும் என நினைப்பவர்கள் வெற்றி பெற முடியாது.அப்படி நாங்கள் அழிந்தால் மொழி,
இனம் காக்க குரல் கொடுக்க ஆளில்லாத நிலை ஏற்படும் ஆகவே எங்கள் பயணம் தொடரும்.எங்களுக்கு என்றும்
தோல்வி இல்லை.
(தினகரன் 21-6-08)

Thursday, August 7, 2008

எதற்கும் அஞ்சா ஏகாம்பரத்திற்கு பாராட்டுவிழா

எதற்கும் அஞ்சா ஏகாம்பரத்திற்கு அவரது நண்பர்கள்(??!!)ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்தனர்.
விழா நிகழ்ச்சிகளை ஏகாம்பரத்தின் மகன் தொகுத்து வழங்கினார்.ஏகாம்பரத்தை வாழ்த்தி அவர்
தந்தை பேசினார்'.'என் மகன் பிறந்ததுமே..குழந்தையை வந்து பார்த்தவர் ஒருவர்..என்ன பெயர் வைத்திருக்கிறாய்?
என்று கேட்டார்.'ஏகாம்பரம்"என பதிலளித்தேன்.உடனே அவர்..ஏடாகூட பெயர் ஆயிற்றே..இவன்
பிற்காலத்தில்...கொலை..கொள்ளை என எதற்கும் அஞ்சா தவனாயிருப்பான்..என்றார்.
அது இன்று நிறைவேறியுள்ளது.இன்று எதற்கும் அஞ்சாமல்..தனக்குத்தானே பாராட்டு விழா ஏற்பாடு
செய்துள்ளார்.என்னைப் பொறுத்தவரை..பேரன்களைப் பாராட்டத்தான் பயமாயிருக்கிறது.மகன்களை
எவ்வளவு வேண்டுமானாலும்..பாராட்ட நான் தயார்.நான் அதிக நேரம் பேச ஆசைப் பட்டேன்..
ஆனால்..எனக்குமுன் பேசிய நையாண்டி நயினார் அதிக நேரம் எடுத்துக் கொண்டுவிட்டார்'என்றார்.
விழாவிற்கு பெரும் கூட்டமாக..மனைவி,மக்கள்,தாயார்..ஆகியவர்கள் வந்திருந்தனர்.
நன்றி தெரிவித்து பேசிய ஏகாம்பரம்..'இது போல மாதம் ஒருமுறை என்னைப் பாராட்டி விழா நடத்துவேன்'என்றார்.

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்

அண்ணாசாமி ஒரு சமயம் கர்ப்பிணி பெண் ஒருத்தியைப் பார்த்தார்.அவருடன் வந்த நண்பர்
அந்த பெண் pregnant ஆக இருக்கிறார் என்றார்.அண்ணாசாமிக்கு வழக்கமான சந்தேகம் வந்தது.
pregnant என்றால்..என்று நண்பரைக்கேட்க நண்பரும் pregnant என்றால்one who carries a child
என்றார். வேறு ஒரு சமயம்...அண்ணாசமியின் வீட்டுக்கு அருகில் ஒரு அடுக்ககம் தீப்பிடித்து எரிந்தது.
மேல் மாடியில் ஒரு குழந்தை மாட்டிக்கொண்டது.அதை ஒரு தீ அணைப்பு வீரர் கயிறு மூலமாக தன் வயிற்றில்
கட்டி இறங்கினார்.அதைப் பார்த்த அண்ணாசமி உடனே 'he is pregnant..he is pregnent' கத்தினார்.
2.ஒரு சமயம் அண்ணாசாமிக்கு துப்பறியும் நிறுனமொன்றில் வேலைக்கு interview வந்தது.ஒரு புகைப்படத்தை கொடுத்து 'இந்த புகைப்படத்தில் உள்ளவன் ஒரு கிரிமினல்..புகைப்படத்தைப் பார்த்து அவனைப்பற்றி நீங்கள்
அறிந்ததைக் கூறுங்கள்'என்றனர்.
அதைப்பார்த்த அண்ணாசாமி உடனே'இவன் ஒரு கண் உள்ளவன்..கண்ணாடி போடாதவன்'என்றார்.
அவரைப் பாராட்டிய அதிகாரிகள் 'எப்படி கண்டுபிடித்தீர்கள்'என வியப்புடன் கேட்டனர்.அண்ணாசாமி'நீங்கள் கொடுத்த புகைப்படத்திலேயே தெரிகிறதே'என்றார்.அவருக்கு கொடுத்திருந்த புகைப்படம் அந்த கிரிமினலின்
'side profile'புகைப்படம்.

Wednesday, August 6, 2008

நானும்..நடிகவேள் ராதாவும்..ரத்தக்கண்ணீரும்

M.G.R.,சுடப்பட்டதும்..ராதா தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகவும் வழக்கு நடந்து ..ராதாவும் தண்டிக்கப்பட்டு
சிறையிலிருந்து வெளிவந்த நேரம்.,ராதா அண்ணாமலைபுரத்தில் அவரது இல்லத்தில் தங்கியிருநதார்.மூட்டுவலியால்
அவதிப்பட்டு வந்தார்.
அந்த சமயத்தில்..எனது சபாவில் அவரது ரத்தக்கண்ணீர் நாடகம் போட்டால் என்ன..என்ற எண்ணம் தோன்ற
அவரை அவரது இல்லத்தில் சந்தித்து தேதி கேட்டேன்.என்னைப்பற்றி விசாரித்தார்.நான் state bankல் வேலை
செய்வதாகவும்..அம்பத்தூரில் 2 வருடங்களாக சபா நடத்திவருவதாயும் கூறினேன்.அவர் உடனே'தம்பி நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்கமாட்டீங்களே..என்று சொல்லிவிட்டு 'நீங்க என்ன ஜாதி" என்றார்.
எனக்கோ..இப்படி "பட்" டென்று கேட்கிறாரே..என ஆச்சர்யம்.உடன் சொன்னேன்.சரி என்றவர்..நாடகத்திற்கான
தேதியும் கொடுத்தார்.
ஒரு பெரிய கண்ணை கலரில் வரைந்து..அதிலிருந்து ரத்த நிறத்தில் கண்ணீர்த்துளிகள் வருவதுபோல..பிரமாதமாக
சுவரொட்டி போட்டு அம்பத்தூர் தெருக்களில் ஒட்டினேன்.
நாடகத்தன்று..காலையிலிருந்தே என் வீட்டிற்கு மக்கள் டிக்கட் வாங்க படையெடுத்தனர்.
மாலை...நாடகம் ஆரம்பிக்கும் நேரம் ராதா என்னைகூப்பிட்டு..இடைவேளையில் எனக்கு ஒரு மாலை போடு என்றார்.
நானும் சரி என தலையாட்டிவிட்டு....இவர் மரியாதையை கேட்டு வாங்குகிறாரே என எண்ணிக்கோண்டேன்.
இடைவேளையில்..சபா சார்பில் மாலை அணிவித்தேன்.பின் அவர் பேசினார்..
'M.G.R.,பற்றி குறிப்பிடும்போது மக்கள் கை தட்டினர்.சிவாஜி பற்றி குறிப்பிடும்போது வாளா யிருந்தனர்.ஏன்..இவருக்கு கை தட்டக்கூடாதா..என்றார்..பிறகு என்னைப்பற்றிக் குறிப்பிட்டார்.'இந்த பையன்.(என் ஜாதியை குறிப்பிட்டு) இந்த ஜாதி..ஆனாலும் தைர்யமா என் நாடகம் போடறான்..என்னை தெரிஞ்சவங்கக்கூட இப்போ
என்னைப்பார்க்கிறதை தவிர்க்கும்பொது ........ர ஜாதிப்பையன் தைர்யமா வந்து நாடகம் போடறியான்னு கேட்டான்.
அவனை பாராட்டறேன்னு சொல்லிவிட்டு தன் கழுத்தில் இருந்த நான் போட்ட மாலையை கழட்டி எனக்கு அணிவித்தார்.
என்னைப்பாராட்டத்தான்..இடைவேளையில் மாலை போட சொல்லியிருக்கிறார்.அவரை தப்பாக நினைத்து விட்டோமே என எண்ணினேன்.
பின்..பல சபாக்களில் நாடகம் தொடர்ந்தது.ஆனாலும் சிறையிலிருந்து வந்ததும் முதலில் போடப்பட்டது எனக்குத்தான் என்ற இறுமாப்பு இன்றும் எனக்கு உண்டு.

தமிழன்...அரசியல்வாதி...கவிஞன்

1. தமிழ் வாழ்க
என்றால்
அவனுக்கு புரிவதில்லை
லாங்லிவ் டமில்
என்றால்
அவனுக்கு புரிகிறது
ஏனெனில்
அவன் ஒரு தமிழன்.

2. தமிழ்
கட்டாய பயிற்சி மொழிக்காக
ஆங்கிலப் பள்ளியில்
அரசியல் வாதி
ஆர்ப்பாட்டம்
வகுப்பறையிலிருந்து
வெளியே தந்தையை
பார்த்தான் மகன்.

3. வாழும்போது
வறியவன் நீ
தனிமனிதன் உனக்கு
உணவில்லை தரணியில்
இறந்தபின் உன்
புகழ்ப் பாடப்படும்
நினைவில்லம் கட்டப்பட்டும்
உன் ஜாதகம் அப்படி
ஏனெனில்..நீ
ஒரு தமிழ்க்கவிஞன்

Tuesday, August 5, 2008

ஒகேனக்கல் கர்நாடகாவிற்கே சொந்தம்-அமைச்சர் தகவல்

ஒகேனக்கல் கர்நாடகாவிற்கே சொந்தம் என்றும்..அங்கு வசிக்கும் மக்கள் கர்நாடகாவில் வாக்களிப்பவர்கள் என்றும்..
அவர்கள் பெயர்கள் கர்நாடகாவின் வாக்காளர் பட்டியலில் தான் இருக்கிறது..அவர்களிடம் கர்நாடகா ரேஷன் கார்டுகள்
தான் உள்ளது..என்றும்..கர்நாடகாவின் நீர் வளத்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.மத்திய அரசு..இரு மாநில
முதல்வர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டும் இது சம்பந்தமாக..என்றும் அவர் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக மீண்டும் ஒரு உண்ணாவிரத போராட்டமோ..அல்லது யாரையாவது உதையுங்கள் என்ற பேச்சோ
கூடிய விரைவில் இருக்குமா?

வாய் விட்டு சிரியுங்க

சுமதி டார்லிங்..உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்
ஆமாம்..இதையே எவ்வளவோ..தரம் சொல்லிட்டீங்க..ஒரு தரம் கூட செயல்படுத்தலை

2.வீடு கட்டணும்னு கடன் வாங்கினியே கட்டி முடிச்சுட்டியா?
ரூஃப்,அறைகள் எல்லாம் கட்டி முடிச்சுட்டேன்..இன்னும் அஸ்திவாரம் தான் பாக்கி

3.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கமில்லை எனக்கு..
பொய் சொல்லாதே..நேற்றுக்கூட வாழிக்காய் பஜ்ஜின்னு சொன்னே..ஆனா உள்ள
உருளைக்கிழங்குதான் இருந்தது.

4.முட்டாள்னு யாரையோ திட்டினியே..என்னையா?
சே..சே..ஊர்ல உன்னைத்தவிர வேற முட்டாளே இல்லையா என்ன?

5.உன்னோட அறிவுதான் டார்லிங் என்னை மயக்கிடுச்சு
நான் உன்னை லவ் பண்றதுக்கும் அதுதான் காரணம்
என்னைப்போல உன்னாலயும் பொய் சொல்ல முடியுதே

6.கள்ளச்சாராயம் விக்கற பக்கிரியின் பொண்ணை பெண் பார்க்க போனியே என்ன ஆச்சு
பொண்ணு எப்படியிருக்கா?
பீப்பாய் மாதிரி இருக்கா.

Monday, August 4, 2008

அந்த திரைப்படம் பற்றி பிரபல அரசியல் தலைவர்

பிரபல அந்த முதல்வர் கைராசிக்காரர் என்பதால் பட துவக்க விழாவிற்குஅவரை அழைத்திருந்தனர்.படபிடிப்பை ஆரம்பித்து பேசிய அவர் 'சினிமாவிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை.என்னை கைராசிக்காரர்ன்னு கூப்பிட்டதா சொன்னாங்க.எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.நான் உழைப்பை நம்பறவன்.வரும்பொது படத்துக்கு என்ன பெயர்ன்னு கேட்டேன்...'பார்த்தால் பசி தீரும்'னு சொன்னாங்க.ஆமாம்..இவங்க கஷ்டப்பட்டு...செலவு பண்ணி எடுக்கிற படத்தை மக்கள் பார்த்தா இவங்க பசி தீரும்னேன்'
அப்படி சொன்ன அந்த முதல்வர் கர்மவீரர் காமராஜர்

'சோ' வும்..அவரது கோபமும்

நான் அம்பத்தூரில் சபா நடத்திக் கொண்டிருந்த நேரம்.சமீபத்தில் 1974ல்(டோண்டு சார்..தாக்கம்)எனது சபாவின்
ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு..மேஜர் சுந்தரராஜனின் 'டைகர் தாத்தாச்சாரி'நாடகம் சென்னை பார்த்தசாரதி சபா ஹாலிலும்,'சோ'வின் 'யாருக்கும் வெட்கமில்லை' அம்பத்தூரிலும்(சென்னையிலிருந்து அம்பத்தூர்16km தூரம்)ஏற்பாடு செய்திருந்தேன்.முதல் நாள் நாடகம் முடிந்தது.அடுத்த நாள் 'சோ'நாடகம்.
6 மணி அளவில் அம்பத்தூர் வந்த "சோ' வை வரவேற்றேன்.காரிலிருந்து இறங்கிய அவர் என்னைப் பார்த்ததும்
முகத்தை திருப்பிக் கொண்டார்..சிறிது நேரம் கழித்து என்னைகூப்பிட்டு,கோபமாக"சோ உனக்கு கிள்ளுக்கீரையா?"
என்றார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.அவரே தொடர்ந்தார்'மேஜர் நாடகம் சென்னையில்..என் நாடகம் இவ்வளவு
தொலைவில்"என்றார்.அப்போதுதான் அவர் கோபத்துக்கான காரணம் தெரிந்தது.நான் சொன்னேன்'மேஜருக்கு இங்கு
gate collection இருக்காது..ஆனால் உங்களுக்கு இருக்கும்.அந்த collection ஐ வைத்து என் சபாவின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ளலாம்.அதனால்தான்'.அவர் பின் என்னிடம் ஏதும் பேசவில்லை.
நாடகத்திற்கு நல்ல கூட்டம்..நல்ல வசூல்..
நாடகம் முடிந்ததும் என்னை கூப்பிட்டார்.."எவ்வளவு gate collection என்றார்.சொன்னேன்(3000 என்று ஞாபகம்.அது அந்த காலத்தில் பெரிய அமௌண்ட்)'
சென்னையில் போட்டிருந்தால்..இன்னும் அதிகம் இருக்கும்..என்றவர்..தன் நாடகக்குழு நிர்வாகி திரு.ரங்காச்சாரி யை கூப்பிட்டு நம் city rate1000 வாங்கிக்கொள் போதும் என்றார்.(அம்பத்தூருக்கு குழு வந்த செலவே அதிகமிருக்கும்)
சோ விற்கு திடீரென கோபம் வரும்..வந்த வேகத்தில் மறையும் என்று ரங்காச்சாரி என்னிடம் கூறினார்.அவர் சொல்ல மறந்தது சோ பெருந்தன்மையானவர் என்பதை.

Sunday, August 3, 2008

நண்பர் கஜினியின் கதை

நானும்,கஜினியும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்.இவர்களுடன் கண்ணன் என்ற நண்பரும் எங்களுக்கு உண்டு.
நாங்கள் மூவரும் ஒன்றாக மாலை உணவு உண்போம்.ஒரு நாள் நான் உண்ணும்போது குடிக்க தண்ணீர் தேவைப்பட்டது.
நண்பர் கண்ணன் தான் இரண்டு பாட்டில் தண்ணீர் கொண்டு வந்ததால்..ஒரு பாட்டில் தண்ணீரை எனக்கும் கொடுத்து விட்டார்.
நான் மூடியை திறந்து..குடிக்கும் போது ..என்ன நினைத்தாரோ கண்ணன்..என்னைக் குடிக்கக் கூடாது என்று சொன்னார்.
கண்ணனின் ஊரை சேர்ந்த கஜினி உடனே 'அவருக்கு தண்ணீர் கொடுத்து விட்டு..அதை அவர் குடிக்கக்கூடாது'என்று
சொல்வது என்ன நியாயம் என்றார்.கண்ணனோ பிடிவாதமாக இருக்க..எனக்கோ தண்ணீர் இல்லாமல் நா வறட்சி ஏற்பட..
என் நிலை உணர்ந்த கஜினி'டேய்..கண்ணா..அவர் தண்ணீர் இன்றி தவிக்கிறார்..நீ அவருக்கென்று கொடுத்த நீரை
அவர் குடிக்கக்கூடாது என்பது என்ன நியாயம்.உன்னைப் போல தடுப்பவர்களை உதைத்தால் என்ன..என்றார்.நானோ
தண்ணீர் குடிக்காமல் இருந்து விட்டேன்.
இது நடந்து சில நாட்கள் ஆகிவிட்டன.இரு தினங்களுக்கு முன்..கண்ணனுக்கு ஒரு பொருளை வாங்கிவந்து....தான் அதற்கு
செலவு செய்ததை விட அதிக விலை வைத்து..விற்க முயன்றார்.கண்ணன் மறுத்துவிடப் போகிறானே என்ற எண்ணத்தில்
'உன்னை நான் உதைத்தால் என்ன..என்று அன்று பேசியது தவறு..இந்த பொருளை வாங்கிக்கொள்' என்றார்.
உடனே நான் 'அவரிடம் ஏன் மன்னிப்பு கேட்கிறாய்?'என்றேன்.
கஜினி செய்ய நினைப்பது..வியாபாரம்..அதில் நெளிவு..சுளிவுகள் உண்டு..அதனால் அவர் சொல்வது தப்பில்லை.
உனக்கோ கஜினியிடம் பற்று அதிகம்..அதனால்..அவர் சாதாரணமாக சொன்னது..அவர் நிலை தாழ்ந்து மன்னிப்புக்
கேட்டதாய் நீ நினைக்கிறாய்..அதனால் உன் மீதும் தப்பில்லை.
ஆனால்...தன் காரியத்தை மௌனமாக சாதித்துக் கொண்டிருக்கிறானே..கண்ணன் அவன் அதி புத்திசாலி..என
எங்கள் பொது நண்பர் கூறினார்.

வாய் விட்டு சிரியுங்க

1.எங்க வீட்லே எனக்கு ஷூகர்னு தெரிஞ்சதும் என்னை தெய்வத்துக்கு சமமா நினைக்க ஆரம்பிச்ச்ட்டாங்க
அப்படியா?
ஆமாம் ..எந்த இனிப்புப் பொருளையும் என் கண்ணுலேதான் காட்டறாங்க..அவங்க சாப்பிடறாங்க

2.அந்த படத்தயாரிப்பாளர் நீ கவிஞனே இல்லைன்னு என்னை அவமானப்படுத்திட்டார்
அப்படி என்னாச்ச்
நான் எழுதின கவிதையிலே ஒரு ஆங்கில வார்த்தைக் கூட இல்லையாம்...

3.வாஸ்து சாஸ்திரப்படி என் கணவர் பின்னால இருக்கிற ஜன்னலை முன்னாலே
வைக்க சொல்றார்
செஞ்சுட வேண்டியதுதானே
அவர் சொல்றது என் ஜாக்கெட்ல இருக்கிற ஜன்னலை.

4.ஆச்சர்யமா இருக்கே..உங்களுக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் குணமாச்சு
அது ஒண்ணுமில்ல டாக்டர்..நீங்க கொடுத்த மருந்து எதையும் நான் சாப்பிடலை.

5.நீங்க காபி,டீ எல்லாம் சாப்பிடக்கூடாது
வேறு என்ன சாப்பிடலாம்
எந்த எண்ணையும் கூடாது

6.படத்தோட கதை அங்கங்க தொய்யுதே
அது தொய்யாம சாஞ்சு பிடிக்க வேணும்னா கதாநாயகியா சாயாசிங்க போட்டுடலாம்.

Saturday, August 2, 2008

யாரோ சொன்னார் கேட்டேன்அதை உன்னிடம் சொன்னேன்

..1.அழகு குணத்தால் அணி பெறுகிறது
இனம் சீலத்தால் அணி பெறுகிறது
கல்வி பயன்படுத்துவதால் அணி பெறுகிறது
செல்வம் அனுபவிக்கப் படுவதால் அணி பெறுகிறது

2.பணம் இல்லாததால் ஒருவன் தாழ்வடைவதில்லை.
செல்வந்தர்கள் எல்லாம் உயர்ந்தோர் என்பதுமில்லை
கல்வி எனும் ரத்தினம் இல்லாதவன் எல்லாப் பொருளிலும் தாழ்ந்தவனே
என்பதில் ஐயம் இல்லை.

3.பயம் நம் எதிரே வராத வரைக்கும்
பயந்துக்கொண்டே இரு.அது வந்து விட்டால் கண்டதுமே
அதனை சந்தேகப்படாமல் அடித்து தொலைத்துவிடு.

4.மன அமைதியைவிட உயர்ந்த தவம் வேறில்லை.மகிழ்ச்சியை விட
உயர்ந்த இன்பம் வேறீல்லை.ஆசையைவிட உயர்ந்த நோய் ஒன்றுமில்லை.
கருணையைவிட உயர்ந்த தருமம் வேறில்லை

5.வெட்டி நறுக்கப்பட்டாலும் சந்தனமரம் நறுமணம் இழக்காது.முதுமை எய்தினும் கூட
யானை தன் விளையாட்டை விடாது.ஆலையில் இட்டுப் பிழிந்தாலும் கரும்பு
இனிமையை விடாது.நற்குடிப் பிறந்தோர் வறுமையால் கெட்டழிந்தாலும்
ஒழுக்க குணங்களைக் கைவிட மாட்டார்கள்.

வாய் விட்டு சிரியுங்க

1.நேற்று டைபிஸ்ட் நளினி ஏன் உன்னை திட்டினாள்?
அவளோட மாமியார் மறைவுச் செய்தி கேள்விப்பட்டு'உன் மகிழ்ச்சியில்
பங்குக் கொள்கிறேன்' என்று சொன்னேன் அதனால்தான்..

2.கோட்டையை கைப்பற்றுவோம்னு தலைவர் பேசினாரே..என்னாச்சு
கோட்டையை கோட்டை விட்டுட்டார்.

3.தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை சிம்பாலிக்கா எப்படி தெரிவிச்சிருக்கார்
தெரியுமா?
எப்படி
மகாநாட்டிற்கு தொண்டர்கள் பிணி பிணியாய் வருக என்று..

4.நேற்று என் மாமியார் என்னை கட்டிப்பிடிச்சு ஆனந்தக்கண்ணீர் விட்டாங்க
அப்படி என்ன பண்ணினே?
அவங்களுக்கு சமமா நானும் சண்டை போடறேனாம்..

5.முதல் நாளே நீங்க எடுத்த படம் நொண்டுதே
அதனால்தான் படத்துக்கு சுளுக்கு என்று பெயர் வைக்க வேண்டாம்னு சொன்னேன்.

6.எங்க வீட்ல ஒரே நேரத்திலே எங்க பாட்டி,எங்க அம்மா,என் பொண்ணு வாந்தி
கங்கிராட்ஸ்..உங்களுக்கு சித்தப்பா,தம்பி,பேரன் எல்லாம் பிறக்கப்போறாங்களா?

Friday, August 1, 2008

நம்ம பங்குக்கு குசேலன் கதை

நாட்டில எல்லோரும் தசாவதாரம் பற்றி பேசி ஓய்ந்த வேளையில் இப்போ பேச..பதிவிட குசேலன் வந்திருக்கிறது.ஆகவே நம் பங்கிற்கு குசேலன் பற்றி
ஒரு மொக்கை பதிவு.
குசேலன் ஏழை..வறுமையில் வாடுபவர்.வேறு ஏதும் வேலையில்லாததால் 27 குழந்தைகளைப் பெற்றவர்.அவரது பள்ளி நண்பன் கிருஷ்ணன்..சாட்சாத்
அந்த ஆண்டவன் கிருஷ்ணன் தான்.குசேலன் மனைவி கணவரை கிருஷ்ணரிடம் உதவி கேட்டு வரச் சொல்லி அனுப்புகிறாள்.வீட்டில் இருந்த அவுலை
சிறிது எடுத்துக் கொண்டு குசேலன் புறப்படுகிறார்.
ஆண்டவன் அவரை கட்டித் தழுவி வரவேற்கிறார்.அண்ணி என்ன கொடுத்து அனுப்பினார்?என்று கேட்க ..கூனிக் குறுகி அவல் மூட்டையை தருகிறார்.
அதை வாங்கி..முதல் வாயை போட்டுக்கொள்கிறார்.குசேலன் வீடு மாளிகை ஆகிறது .இரண்டாவது வாய்..பொன்னும்,மணியும் வீட்டில் குவிகிறது.மூன்றாவது
வாய் எடுத்த போது..வழக்கமாக பெண்களுக்கே உரிய ஜாக்கிரதை உணர்வோடு ருக்மணி தடுக்கிறாள்.ஆனாலும் கண்ணன் அதை சட்டை செய்ய வில்லை.
'வேறு என்ன விஷயம்'என்று கண்ணன் கேட்க...ஏதும் இல்லை..என்று யாசகம் கேட்க மனமில்லாமல் வீடு திரும்ப...அப்போதுதான் கண்ணனின்
விளையாடல் புரிகிறது.குசேலன் குபேரன் ஆகிறார்.
இதுதான் குசேலன் கதை.

ஆளும் கட்சியின் தவறைத் தடுப்பது யார்?- ராமதாஸ் (அல்ல)

ஆளும் கட்சி தவறு செய்கிறபோது அநியாயம் என அநேகம் பேர் கூறுவர்.
தவறுதான் என ஆறாயிரம் பேர் கூறுவர்.
தவறாய் இருந்தால் நமக்கென்ன என ஒதுங்கியிருப்போர் அறுபதாயிரம் பேர் உண்டு
ஆனால்...அந்தத் தவறை தடுத்து நிறுத்துவோர் எதிர்க்கட்சியினர்தான்.
அப்பேர்ப்பட்ட நம்மைப்பார்த்துத்தான் 'இவர்களுக்கு பதவி பைத்தியம்"என்கிறார்கள்.
இவர்கள் ஏதோ பதவியை விரும்பாதவர்கள் போல..பேசுகிறார்கள்.
கல்யாண வீட்டில் முதல் பந்தியில் சாப்பிட்டுவிட்டு..இரண்டாவது பந்திக்குப்
போகிறவர்களைப் பார்த்து'ஏன்..அடித்துக் கொள்கிறாய்?கல்யாண சாப்பாடு சாப்பிடா
விட்டால் குடியா முழுகிவிடும்'என்று கேட்பது போல் இவர்கள் கேட்கிறார்கள்.
இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா?
அறிஞர் அண்னாதான்.

Thursday, July 31, 2008

ஒரு NRI க்கு அன்னையின் கடிதம்

அமெரிக்காவில் மேல் படிப்புக்கு சென்று ...அங்கேயே வேலையும் கிடைத்து தங்கியிருக்கும் தன் மகன்/மகளுக்கு
ஒரு அன்னையின் கடிதம்.

அன்பு மகனுக்கு/மகளுக்கு
அம்மா அனேக ஆசிர்வாதத்துடன் எழுதிக்கொண்டது
இந்த காலத்துக் குழந்தையான உனக்கு அம்மா நான் சொல்லித் தெரிய வேண்டியது எதுவுமில்லை.உன் வயதில்
எங்களுக்கு தெரிந்த விஷயங்களை விட அதிகமாக உனக்கு இன்று தெரியும்.நாற்பது,ஐம்பது மதிப்பெண்கள்
பெற்று பள்ளிப்படிப்பில் கற்று தேறியவர்கள் நாங்கள்.ஆனால் இப்போதோகீழே போடப்படும் மதிப்பெண்களைவிட
மேேல் போடப்படும்மதிப்பெண்கள் அதிகரித்து விடுமோ(120/100)என்ற அளவில் படித்துத்தேறி ...ஓய்வு பெறும்
வயதில் கூட எட்டமுடியாத உன் அப்பாவின் சம்பளத்தை ஆரம்ப நிலையிலேயே 'சூப்பர்சீட்' பண்ணியவன் நீ.

கம்ப்யூட்டர் துறையில் உலக நாடுகளுடன் போட்டியிட...இல்லை...இல்லை...அந்த துறைக்கே சவால் விடும் அளவுக்கு அறிவை பெற்றவர்கள் இந்தியர்கள். ஆனால் உங்களை ஒரு இஞ்சினீயராகவோ,மென் பொருள் துறை
வல்லுனராகவோ உருவாக்க இந்திய அரசும் ஒரு கணிசமான தொகையை உங்களை நம்பி முதலீடு செய்கிறது அல்லவா?

கற்றுத்தேர்ந்ததும் உங்கள் செயல்திறனை இங்கே முதலீடு செய்ய வேண்டும்.உங்கள் கண்டுபிடிப்புகள் இங்குதான்
ஆரம்பிக்க வேண்டும்.ஆனாலும் பல காரணங்களுக்காக உன்னைப்போன்றோர் மேல் நாடுகளுக்கு படிக்க செல்கிறிர்கள்.அங்கேயே வேலைக்கும் சேர்கிறீர்கள்.
அப்படிப்பட்ட நிலை இன்று தவிர்க்கப்பட முடியாத ஒன்று.ஆனால் உங்களுக்கு படிப்பை தந்த நாட்டிற்கு உங்களால்
அந்நியச்செலவாணியை ஈட்டித்தரமுடியும்.ஆதலால் உங்கள் முதலீடுகள் இங்கேயே இருக்கட்டும்.உங்களைப்போன்றோரால்... இன்று இந்தியரை உலகளவில் மதிக்கின்றனர்.
இயற்கை சீற்றங்களான புயல்,மழை,சுனாமி வரும் நேரங்களில்...பாதிக்கப்பட்டவர்களுக்கு... கணிசமான நன்கொடைகளை நீங்கள்தான் தந்து இருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்று.
கடைசியில் தாய் என்ற முறையில் உன் போன்றவர்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன்.
உங்களுக்கு சரியான உடலுழைப்பு இல்லை.ரத்தக்கொதிப்பு,சர்க்கரை என சிறு வயதிலேயே அவதிப்படுகிறீர்கள்.
இனியேனும் தினம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய்யுங்கள்.சரியான உணவை உட்கொள்ளுங்கள்.
உணவு பொருட்களை வாங்கும்போதே அதில் எத்தனை சதவிகிதம் கொழுப்பு இருக்கிறது,சோடியம் இருக்கிரது,கால்ஷியம் இருக்கிறது என பார்த்து பார்த்து வாங்காதீர்கள்.சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுதமுடியும்.
இது நீங்கள் சாப்பிட வேண்டிய வயது.கல்லைத்தின்றாலும் ஜீரணம் ஆக வேண்டிய வயது.நீங்கள் சாப்பிடுவது
போதவே போதாது.அதுதான் என்னைப் போன்ற தாய் களின் ஏக்கம்.
உங்களுக்கெல்லாம் எங்களைவிடத்தெரியும் என்பது உண்மைதான்..ஆனால் அது உணவு விஷயத்தில் அல்ல என்ற எண்ணமே இந்த கடிதம்.

அன்பு அம்மா.

உண்மையான பாரதரத்னா யார் தெரியுமா?

பாரதரத்னா பற்றி இந்த ஆண்டு அதிகம் பேச்சு இருந்தது.

ஒரு நடிகன் தன் நடிப்பு தொழிலை செய்ய ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார் .அதிலே ஒரு பகுதி கறுப்புப்பணம் .ஆனாலும் அவங்களுக்கு பத்மஸ்ரீ பத்மபூஷன் போன்ற நேஷனல் விருது.
ஒரு விளையாட்டு வீரர் தன் விளையாட்டு மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார் .அதைத்தவிர
விளம்பரங்களிலே நடிச்சு ப்பணம் .அவங்களுக்கும் பத்மஸ்ரீ ,பத்மபூஷன் போல விருது கொடுக்கப்படுகிறது.ஆனால் ஆசிரியர் தொழிலில் உள்ளவங்களுக்கு ஏன் இது போல விருது கொடுப்பதில்லை?
இந்த சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு .பாரதரத்னா ...
அது நம் நாட்டின் உன்னத உயரிய தேசிய விருது .அது இதுவரைக்கும் எத்தனைப்பேருக்கு கொடுத்திருக்காங்க?
எம் எஸ் .,காமராஜ் ,சி எஸ் .,டாக்டர் அம்பேத்கர் .,எம் ஜி ஆர் .,அப்துல் கலாம் போல சில அவுட் ஸ்டாண்டிங் பெர்சொனாளிட்டிகளுக்கு மட்டும் தான் .
ஆசிரியர்கள் லே இப்படி அவுட் ஸ்டாண்டிங் பெர்சொனளிட்டி ன்னு யாரை சொல்ல முடியும்? எல்லோருமே அவுட் ஸ்டாண்டிங் தான்.
இந்த ஆசிரியர்கள் உருவாக்கும் விஞ்ஞானிகள் எத்த்தனைப்பேர் .,சாபிட் வேர் என்ஜீநீர்கள் எத்தனைப்பேர் ஐ எ இஸ் .,ஐ பி எஸ் அதிகாரிகள் எத்தனைப்பேர் .,
இப்படி அனைவரையும் உருவாக்கும் ஆசிரியர் களில் யாரை பாகுப்பாடு படுத்தி இவர் உயர்ந்தவர்,இவர் தாழ்ந்தவர்னு சொல்லமுடியும்?
ஆசிரியர்கள் அனைவரும் பாரதரத்னா க்கள் தான் .
அதனால்தான் அது போன்ற நேசனல் விருதுகள் அவர்களுக்கு வழங்க ப்படுவதில்லை என நினைக்கிறேன் .

Wednesday, July 30, 2008

கன்னட திரைப்பட வர்த்தகசபைக்கு ரஜினி பக்தன் ஒருவன் கடிதம்

செயலாளர் அவர்களுக்கு,
ரஜினிகாந்த் ரசிகன் என்ற முறையில் இந்த வேண்டுகோள் கடிதம்.எனக்கு கன்னடம் தெரியாததால் தமிழில் எழுதுகிறேன்.
ரஜினி அவர்கள் ஒகேனக்கல் விவகாரத்தில் ..உதைக்க வேண்டாமா..என்று பேசியதெல்லாம் 'ஒளவாக்கட்டைக்கு"
தண்ணீருக்கு அழும் தமிழனுக்கு..வேடிக்கைக்காட்டி அவன் அழுகையை நிறுத்துவதற்கு.அதனால் அவரை தவறாக எண்ணக்கூடாது.
அவர் முன்னதாக..அம்மாவுக்கு(!!)ஓட்டுப் போட்டால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது..என்று
கூறிவிட்டு..அடுத்த தேர்தலில் அம்மாவுக்கு ஓட்டுப்போட்டுவிட்டு..தன் இரு விரல்களை உயர்த்திக் காட்டியவர்.
காவேரி பிரச்னையில் சக திரைப்படத் துறையுடனருடன் சேராது தனியாக உண்ணாவிரதம் இருந்து தனது ஆதரவை(!)தெரிவித்ததோடு
அதற்கு ஒரு கோடி நன்கொடை தருவதாக தெரிவித்தவர்.
சிவாஜி படத்தில்..தான் அமெரிக்காவில் சம்பாதித்து கொணர்ந்த 200 கோடியை படிப்புக்கு செலவழிக்க..பொறியியல் கல்லூரியும்,மருத்துவக்கல்லூரியும்
கட்டுவதாகக்கூறியவர்..அவர் சம்பந்தப்பட்ட (மனைவியின்)பள்ளியில் இலவசமாக மாணவர்களை செர்த்துக்கொள்ளாதவர்.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்..அவர் சொல்வது ஒன்று..செய்வது ஒன்று..அதனால் அவர் அன்று 'உதைக்கலாம்"என்று பேசியதற்கு
எதிர்மறையான அர்த்ததை கன்னடர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.உங்களுக்கு இப்போது அவர் இயல்பு தெரிந்திருக்கும்.
எப்பாடுபட்டாவது குசேலன் படம் அங்கு வெளியாகவேண்டும் என்ற அவர் நல்ல எண்ணத்தை புரிந்துக் கொண்டு ஆதரவு தாருங்கள்.
இந்த வேளையில்..தமிழனான எங்களைப் பாருங்கள்..150,200 என்றெல்லாம் பட்ஜெட்டை மீறி செலவு பண்ணி படம்
பார்க்கவும்..அவர் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யவும் தயாராகிவருகிறோம்.
தயவு செய்து..எங்கள் சூப்பர் ஸ்டாரின் இயல்பை புரிந்துக் கொள்ளுங்கள்.
நன்றி
இப்படிக்கு
அப்பாவி தமிழ் ரசிகன்

Tuesday, July 29, 2008

வாய் விட்டு சிரியுங்க.

1.எங்க வீட்ல எலி உபத்திரவம் அதிகம்..உங்க வீட்லே?
என் மனைவி உபத்திரவம் அதிகம்.

2.தந்தை(மகனிடம்)உங்க டீச்சர் என்னை மக்குன்னு சொன்னாங்களா? எப்போ?
மகன்- நேற்று நீ செஞ்சுக்கொடுத்த ஹோம் ஒர்க்கை பார்த்து 'மக்கு'எப்படி
செஞ்சிருக்குப் பாருன்னாங்க.

3.டாக்டர்..என் கனவுல ஒரே ஃபிகருங்களா வருது..
கொடுத்து வச்சவர் நீங்க
ஐயோ..நான் சொல்ற ஃபிகருங்க எண்கள்..கணக்கு வாத்தியார் நான்

4.உங்க வீட்ல அவர் சமையலா?
அவன்(ovan) சமையல்

5.கார்த்தால என் மாமனார்..காய் நறுக்குவார்,துணி துவைப்பார்,கோலம் போடுவார்
உனக்கு இவ்வளவு உதவி செய்வாரா?
அவர் பையனுக்கு உதவியா இருப்பார்.

6.மனைவி(கணவனிடம்)அழகான மனைவி கணவனுக்கு எதிரி..தெரியுமா?
கணவன்-அப்போ..நீ எனக்கு எதிரி இல்லைன்னு சொல்றியா?

Sunday, July 27, 2008

வாய் விட்டு சிரியுங்க - 26

1.மனைவி-(கணவனிடம்)நீங்க புத்திசாலின்னு எப்படி சொல்றீங்க?
கணவன்-முட்டாள்களுக்குத்தான் அழகான மனைவி கிடைக்கும்னு சொல்றாங்களே

2.ரௌடித்தனம் பன்ணி பணம் பறிச்சுக்கிட்டிருந்த கேடி கபாலிக்கு..அதே மாதிரி வேலை கிடைச்சுடுத்தாமே
ஆமாம்..கான்ஸ்டபிள் வேலை கிடைச்சுருக்காம்

3.டாக்டர்-உங்க வயிற்றிலே எப்படி தீக்காயம் ஏற்பட்டது
நோயாளி-+2 பரிட்சை எழுதி இருந்த என் பையன் நல்ல மதிப்பெண் வாங்கணும்னு இத்தனை நாள் வயிற்றிலே
நெருப்பை கட்டிக்கிட்டு இருந்தேன்

4.டாக்டர்- உங்க வீட்டு பிரஷர் குக்கர்க்கெல்லாம் வந்து பிரஷர் செக் பண்ணமுடியாது

5.டாக்டர்-(நோயாளி பெண்ணிடம்)நீங்க இனிமே கஷ்டமான வேலை எல்லம் செய்யக்கூடாது
பெண்- ஐயோ..டாக்டர்..இனிமே கஷ்டப்பட்டு எங்க மாமியார் மேல குற்றம் கண்டுபிடிக்க முடியாதா?

6.பெண்ணின் தந்தை-(பெண் பார்க்க வந்தவரிடம்)-என் பொண்ணு தமிழும்..ஆங்கிலமும் கலந்து கொஞ்சற மாதிரி பேசுவாள்
வந்தவர்-ஓஹோ..தமிழ் சேனல்ல காம்பியரிங்க் பண்றாள்னு சொல்லுங்க

Saturday, July 26, 2008

கேள்வியும் நானே..பதிலும் நானே..

(தமிழ் பத்திரிகைகளில் கேள்வி-பதில் பகுதி..வலைப்பூவில் இப்போது டோண்டு சாரின் கேள்வி பதில்.
நாமும் அப்படி ஒரு பதிவு போட்டால் என்ன? என்ற ஆசை.ஆனால் நம்மை யாரும் கேள்விகள் கேட்கப்போவதில்லை.
அதனால்தான் கேள்வியும் நானே- பதிலும் நானே என்ற இப்பதிவு.)
1.இன்னிக்கு செத்தால் Naalaikkup Paal இது பற்றி...?
நீங்கள் சொல்வது அந்தக்காலம். இப்போதெல்லாம் எரிவாயு சுடுகாடானால் இன்னிக்கு செத்தா..இன்னிக்கே பால்.

2.சிலர் தானே கேள்விகள் கேட்டு..தானே பதில் சொல்வது பற்றி?
அது பற்றி எனக்குத்தெரியாது.ஆனால் என்னிடம் நிறைய பதில்கள் இருக்கிறது.அதற்கான கேள்விகள் தான் யாரும் கேட்கமாட்டார்களா என்ற ஆசை.

3.பத்திரிகைகளில் வரும் ராசிபலனை நம்புவது உண்டா?
நம்பிக்கை இல்லை.அது உண்மையெனில் நாட்டில் 12ல் ஒருவருக்கு பலன்கள் ஒன்றாக இருக்கும்.வாகனம் வாங்கு
வீர்கள் என ஒரு ராசிக்கு பலன் சொன்னால்..நாட்டில் 100கோடியில் கிட்டத்தட்ட 8 கோடி மக்கள் அன்று வாகனங்கள் வாங்கினால் என்னாவது.
(ஒரு உபரி செய்தி- கண்ணதாசன் தன் பெயரில் ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார்.அதில் ராசிபலன் போடுவதுண்டு.ஒரு மாதம் உரிய நேரத்தில் ஜோதிடர் அனுப்பவில்லையாம்.பத்திரிகையோ அச்சுக்கு போக
வேண்டிய நேரம்.பார்த்தார் கண்ணதாசன்..பழைய நாலு இதழ்களை கொண்டு வரச்சொன்னார். அவற்றில் வந்திருந்த
பலன்களை ராசிகளுக்கு மாற்றி மாற்றி போட்டு பத்திரிகையை அச்சுக்கு அனுப்பினாராம்.)

4.உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டங்களே வருவதில்லையே..ஏன்?
சினிமா நடிக,நடிகை களுக்கு மட்டுமல்ல..இணைய பதிவாளர்களுக்கும் ரசிகர்களோ அல்லது அவர்களை தெரிந்துவைத்துள்ள மற்றைய பதிவாளர்கள் ஆதரவோ வேண்டும்.அதுஇல்லாவிட்டால் சிறந்த குணசித்திர நடிகராக இருந்தும் புகழ் பெறாத s.v.சுப்பையா கதிதான் நமக்கும்.

5.இப்பொழுதெல்லாம் கிட்டத்தட்ட எல்லா தமிழ் படங்களும் 100 நாட்கள் ஓடுவது போல இருக்கிறதே?
சென்னையில் கோபிகிருஷ்ணா என்று ஒரு தியேட்டர்.100days ஓடும் படங்கள் அதிகம் இங்கு தான் ஓடுகின்றன.அதுவும் 3ஆவதோ4ஆவதோ ரன்..அதுவும் தினசரி ஒருகாட்சி.

வாழ்வில் வெற்றி பெற 10 கட்டளைகள்

சுறு சுறு ப்பாய் இரு ..ஆனால் படபடப் பாய் இராதே
பொறுமையாய் இரு ...ஆனால் சோம்பலாய் இராதே
சிக்கனமாய் இரு... ஆனால் கருமியாய் இராதே
அன்பாய் இரு ...ஆனால் அடிமையாய் இராதே
இரக்கமாய் இரு... ஆனால் ஏமாந்து விடாதே
கொடையாளியாய் இரு... ஆனால் ஓட்டாண்டியாய் இராதே
வீரனாய் இரு... ஆனால் போக்கிரியாய் இராதே
இல்லறத்தானாய் இரு ஆனால் காமவெறி யனாய் இராதே
பற்றற்று இரு ஆனால் காட்டுக்குப் போய் விடாதே
நல்லோ ரை நாடு ஆனால் அல்லோரை வெறுக்காதே
இந்த பத்துக் கட்டளைகள்
வாழ்வை சீராக்கும்.

Friday, July 25, 2008

குருவி படத்துக்கு நானும் ஒரு ஜோக்

சுற்றுச்சூழல் ஆர்வலர்-உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்..நகரிலிருந்து
குருவி எல்லாம் எங்கே போச்சு..
விஜய்- என் படம் வந்ததும்..அந்த கோபத்தில் அவர்கள் தாக்கப்படுவார்களோ என
பயந்து நகரத்தை விட்டு புலம் பெயர்ந்து விட்டன.

இருந்தால் நன்றாயிருக்கும் (அறிவியல் போட்டிக்கான கதை)

தன் பழைய மாணவன் வந்து சொன்னதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டுப் போனார் பேராசிரியர் அனுமந்த ராவ்.
கிருஷ்ணகுமார்..அவரிடம் படித்த மாணவன்.புத்திசாலி.அதனால்தான் பல ஆண்டுகள் ஆகியும் அவன் அவர்
ஞாபகத்தில் இருந்தான்.அவன் முதுநிலை படிப்பு படித்து முடிந்ததுமே..ஏதேனும் ஒரு தலைப்பில் ஆராய்ச்சி
செய்து..டாக்டர் பட்டம் வாங்க்கச் சொன்னார்.ஆனால்..அன்று அவன் மறுத்து விட்டான்.ஆனால் ஏழெட்டு
ஆண்டுகள் கழிந்து அவனே வலிய வந்து கேட்கிறான் என்றால்...அதுக்கூட ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.
அவன் ஆராய்ச்சி செய்ய தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு..'கடவுள் இருக்கிறாரா..இல்லையா'
'குமார்..இப்படிப்பட்ட தலைப்பை பல்கலைக்கழகம் அங்கீரித்து இருக்க வேண்டும்.நான் கேட்டுப் பார்க்கின்றேன்.
பிறகு நீ உன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம்'
ஒரு நிமிடம்..யோசித்தவன்'சார்,இந்த தலைப்பில்..ஆராய்ச்சி செய்ய அனுமதி கிடைக்க வில்லை என்றாலும்..நான்
ஆராய்ச்சி செய்யத்தான் போறேன்..என்றான் பிடிவாதமாக.
'சரி..உன் ஆசையைக் கெடுப்பானேன்..நீ முயற்சி செய்..ஆனால் பல நூற்றாண்டுகளாக மனிதர்களிடம் இருந்து வரும்
நம்பிக்கை கடவுள் பக்தி.எந்த ஒரு காரியத்திற்கும்..அது முதல் நம்பிக்கை ஆகும்'
'இல்லை சார்..நீங்கள் சொல்லும் அந்த நூற்றாண்டுகளில்..அதைப்பற்றி அபிப்ராயபேதங்களும்..இருந்திருக்கின்றன'
'குமார்..எனக்குத் தெரிந்தவரை..சிவன் பெரியதா..சக்தி பெரியதா..சைவம் பெரியதா..வைஷ்ணவம் பெரியதா..இப்படித்தான்
அபிப்பிராய பேதங்கள் இருந்திருக்கின்றன.நீ சொல்லும்..அந்த அடிப்படையிலேயே மறுப்பு சென்ற நூற்றாண்டில்தான்
ஏற்பட்டிருக்கிறது என நினைக்கின்றேன்'
'சார்..இது சம்பந்தமாக அனேக புத்தகங்கள் சேகரித்து வைத்திருக்கிறேன்.கடவுளை மறுத்த பெரியாரின்
சிந்தனைகளையும் படித்து வருகின்றேன்..நாயன்மார்கள்..ஆழ்வார்கள் சொன்னதை படிக்கிறேன்..'
பேச்சை..திசைதிருப்ப எண்ணிய பேராசிரியர்'சரி..இப்போ உன்னைப் பற்றி சொல்.உனக்கு திருமணமாகிவிட்டதா,
குழந்தைகள் உண்டா?'
'சார்..எனக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஓடி விட்டன.இது நாள் வரை குழந்தைகள் இல்லை..இப்போதுதான் என் மனைவி
7 மாத கர்ப்பம்'என்றான்.
'பாராட்டுகள்' என்றார் பேராசிரியர்.
'ஏன் சார்..நீங்கள் சொல்லும் கடவுள் இருந்திருந்தால்..அந்த ராமர் கடவுள்தானே..அவர் ஏன் சிவ பக்தனான ராவணனை
அழிக்க வேண்டும்.சிவ பக்தனான ராவணனுக்கு சிவன் ஏன் முதலிலேயே அறிவுறித்தி பிறன் மனை விழையாமையை
உணர்த்தி..அவனை சீதை மேல் ஆசை வராமல் தடுத்திருக்கலாமே'
'அது இதிகாசம்..மேலும்..ராமர்..சீதை இவர்கள் பூமியில் அவதரித்ததுமே மனிதர்கள்.இறைவன் இல்லை'
'சரி அது போகட்டும்.தன் மாமன் கம்சனைக்கொல்ல ..கிருஷ்ணன் அவதரித்தான்..பின் அவனே பாண்டவர்களுடன்
சேர்ந்து கௌரவர்களை அழித்தான்..திரௌபதியை துகில் உரித்தபோது உடன் காப்பாற்றவரவில்லை.நீ என்னை முற்றிலும்
நம்பாமல் கைகளால் மறைத்திக்கொண்டிருந்தாய்.எப்போது என்னை நம்பி..கைகளை உயர்த்தினாயோ அப்போது உதவிக்கு வந்தேன்
என்பது..நீங்கள் சொல்லும் அந்த கடவுள் ஒரு sadist என்று ஆகவில்லையா?'
'கடவுளை முழுவதுமாக நம்ப வேண்டும் என்பதற்காக அப்படி கூறப்பட்டது'
ஏன் சார்..தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்..என்பதற்காக திரௌபதி அப்படி
செய்திருக்கலாம்..இல்லையா?'
பேராசிரியர் இதற்கு பதில் கூற வாயைத்திறந்த போது ..குமாரின் அலைபேசி ஒலித்தது.
அதை இயக்கினான் குமார்'என்ன..அப்படியா?..இப்போதே வருகிறேன்' என்றவன்..'சார் என் மனைவிக்கு திடீரென உடல்னலம்
சரியில்லை..அவள் வயிற்றில் கரு அசையவே இல்லையாம்..உடன் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.பிறகு சந்திக்கிறேன்'என
விரைந்தான்.
பேராசிரியர் தலை ஆட்டினார்.
**** **** **** ****
இரண்டு..மூன்று மாதங்கள் ஓடி விட்டன
திரும்ப ..ஒரு நாள் கிருஷ்ணகுமார் அவரைப் பார்க்க வந்தான்.தன் ஆராய்ச்சித் தலைப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததா என
அறிந்துக்கொள்ள.
'அது இருக்கட்டும்..உன் மனைவி எப்படி இருக்கிறாள்?குழந்தை பிறந்து விட்டதா?'
'அந்த ஆச்சர்யத்தை ஏன் கேட்கிறீர்கள்?உங்களிடம் வந்த அன்று அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன்.
வயிற்றில் இருந்த சிசுவிற்கு மூச்சே இல்லை.மருத்துவர்கள் இறந்துவிட்டது என்றனர்.ஆனாலும் ஒரிரு நாட்கள் பார்க்கலாம் என்றனர்
மருத்துவர்கள்.அழுதபடியே வீட்டிற்கு வந்தவள்..இளையராஜாவின் திருவாசகத்தை வி.சி.டி.யில் ஓட விட்டாள்.அது ஒலிக்க..ஒலிக்க..
சிசு அசையத்தொடங்கியது.மருத்துவருக்கு விஷயத்தைச் சொல்ல..ஆச்சர்யப்பட்ட அவர்..தினமும் என் மனைவியை அதைக்
கேட்கச் சொன்னார்.போன வாரம் சுகப்பிரசவம்.பையன்'என்றான் உற்சாகத்துடன்.
ஆச்சரியம் அடைந்தார்..பேராசிரியர்..'ஏம்ப்பா இது எதனால் என்று நினைக்கிறாய்?''இது கடவுளின் அருள் என்று உனக்குத்
தோன்றவில்லையா?கடவுள் காப்பாத்திட்டாரு'என்றார்.
'அப்போ அதற்கு முன்னால்..அந்த சிசுவிற்கு..அந்த நிலை ஏற்பட்டது யாராலே?'பதில் கேள்விக் கேட்டான்.
'குமார்..பிரபஞ்சம் தான் கடவுள்.நேற்று அறியாததை இன்று அறியலாம்.இன்று அறியாததை நாளை அறியலாம்.
ஆனால்..எப்போதுமே அறிய முடியாதது ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும்..அது பிரபஞ்ச ரகசியம்.புரிந்துக் கொள்'
என்றார்.சற்றே குழம்பியவன்..'சரி நீங்கள் சொல்வதை ஒப்புக்கொண்டாலும்..இறைவன் என்று ஒருவன் தானே இருக்க
முடியும்..நீங்கள் பல கடவுள்களை சொல்கிறீர்களே?'
'குமார்..நீ..ஒருவன்..ஆனால் உன் பேற்றோருக்கு நீ மகன்..மனைவிக்கு கணவன்..தம்பிக்கு அண்ணன்..அண்ணனுக்கு
தம்பி..இப்படி இருக்கும்போது..அந்த கடவுள் பலருக்கு பல பெயரில் இருப்பது என்ன தப்பு'
சற்று நேரம் என்ன செய்வது என்று தெரியாமல்..யோசித்தான் அவன்.
அதை பயன்படுத்திக் கொண்ட பேராசிரியர்'இப்ப நீ கடவுள் இருக்கிறதை நம்புகிறாய் இல்லையா'என்றார்.
'இருந்தால்..நன்றாயிருக்கும்'என்றான்.

Thursday, July 24, 2008

பத்தை விட ஒன்பது பெரியது என்கிறார் சுப்பு தாத்தா

நவராத்தியையும்,தசாவதாரத்தையும் அடுத்து அடுத்து சமீபத்தில் பார்த்தாராம் சுப்பு தாத்தா.
அவர் கூறிய கருத்துக்கள்.
சமீபத்தில் 1964ல் வந்த சிவாஜியின் 100வது படம் நவராத்திரி.இதில் ஒன்பது மாறுபட்ட வேடங்க்களில்
சிவாஜி நடித்திருக்கிறார்.ஒரே வேடத்தில் நடித்திருந்தாலும் சாவித்திரி 9 மாறுபட்ட உணர்ச்சிகளை
வெளிப்படுத்தி சிவாஜிக்கு இணையாக நடித்திருப்பார்.சிவாஜி..கதாநாயகனாகவும்,அற்புதராஜ் என்ற
மனைவியை இழந்து ஒரு குழந்தையுடன் வசித்துவருபவராகவும்,குடிகாரனாகவும்,வயதான மனநல
மருத்துவராகவும்,கொலைகாரனாகவும்,கிராமத்து அப்பாவியாகவும்,குஷ்டரோகியாகவும்,கூத்துக்கலைஞனாகவும்,
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும் வருவார்.எந்த வெளிநாட்டு மேக்கப்காரனையும் நம்பாமல்..சாதாரண மேக்கப்புடன்
ஒவ்வொரு பாத்திரத்திலும் வந்து நடிப்பில் நவரசத்தையும் கொட்டி வேறுபாடுகளைக் காட்டி இருப்பார்.

ஆனால்..தசாவதாரமோ..நடிப்பைவிட ஒப்பனைக்கு முக்கியத்துவம் கொ டுக்கப்பட்டிருந்தது.சில பாத்திரங்கள்
ஒப்பனை..சப்பாத்திமாவை ஒட்ட வைத்ததுபோல இருந்தது. கஷ்டப்பட்டு மணிக்கணக்கில் ஒவ்வொரு பாத்திர மேக்கப்பும்
போடப்பட்டதாம்(?!)கமல் என்பதற்காக ஒப்புக்கு ஓகோ என பாராட்டுபவர்களை கமல் நம்பக்கூடாது.மனதைத்
தொட்டு அவர் தனியாக அமர்ந்து..தனிப்பட்ட சாதனை இதில் என்ன என்று யோசிக்கவேண்டும்.
சாவித்திரி ஒன்பது இரவுகளும் நடிப்போடு ஓடிக்கொண்டிருந்தார்..ஆனால் அசின்.. எதற்கு வீணாக
மலையையும், மடுவையும் ஒப்பிட வேண்டும்.
மொத்தத்தில்..நவராத்திரியின் அருகில் கூட தசாவதாரம் வர முடியாது.திரைக்கதையில் வேறு பல ஓட்டைகள்தசாவதாரத்தில்.
ஆகவே என்னைப் பொறுத்தவரை 10ஐ விட 9 பெரியது என்றார் சுப்பு தாத்தா.
எச்சுமிபாட்டியோ தன் பங்குக்கு சிவாஜி நவராத்திரியில் டாக்டராக வருவாரே..அந்த பாத்திரமும்..சாவித்திரியின்
பைத்திய நடிப்பையும் லேசில் மறக்க முடியுமா?என்றார்.

Wednesday, July 23, 2008

வாய் விட்டு சிரியுங்க - 25

நீ இன்னிக்கு அழகாய் இருக்கேன்னு சொன்னதுக்கு உன் மனைவி ஏன் சண்டை போட்டாள்?
அப்போ நேற்று வரைக்கும் அசிங்கமாய் இருந்தேனான்னு..

2.எங்க வீட்ல என் மனைவி வேலைக்காரியைப்போல எல்லா வேலையையும் செய்திடுவா..உங்க வீட்ல..
வேலைக்காரி மனைவியைப்போல எல்லா வேலையையும் செய்திடுவா

3.அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற
ஷூகர் டெஸ்ட் பண்ணனும்னா ஒரு கிலோ ஷூகருக்கு 20ரூபாய் ஆகும்னு சொல்றார்

4.எங்க ஹாஸ்பிடல்ல இன் பேஷண்ட்டே கிடையாது
எப்படி
அவங்க தான் அட்மிட் ஆனதுமே அவுட்பேஷண்ட் ஆயிடறாங்களே

5.போலீஸ்காரங்க எல்லாம் வலையை எடுத்துக்கிட்டு எங்கே போறாங்க..
குற்றவாளியை வலைவீசி தேடத்தான்

6.உன்னோட புடவை இப்ப எல்லாம் இவ்வளவு வெளுக்கிறதே சோப்பை மாத்திட்டியா?
என் கணவரை மாத்திட்டேன்

Monday, July 21, 2008

கலைஞர் எந்த பேரனைச் சொன்னார்

பேரன்களை வாழ்த்துவதே ஆபத்து என்று கலைஞர் பேசியுள்ளார்.அவரது பேரனும்..மு.க.முத்துவின் மகனுமானவனைப்
பற்றி பேசும்போது அவர் இதைக் கூறியுள்ளார்.ஆனால் அவர் யாரை மனசில் வைத்து அப்படிக் கூறினார் என்பது
அனைவருக்கும் தெரிந்ததே.அவர் மனசில் இருந்த பேரன்களின் தந்தை முரசொலி மாறன் கடைசி வரை
கலைஞரின் வலது கையாக செயல் பட்டவர்.அவர் ஒரு கூட்டத்தில் பேசும்போது தி.மு.க.மந்திரிகளை
வாங்கு..வாங்கு..என வாங்கினார்.கலைஞர் கண்டுக்கொள்ளவில்லை.ஆனால் மாறனின் மகன்களோ கலைஞரின்
மகன் அழகிரிக்கு எதிராகச் சொன்னதால் தான் தகராறு.மாறன் சகோதரர்களைப் பொறுத்தவரை..அவர்கள் தந்தை
செய்ததைப் போலத்தான் செய்திருக்கிறார்கள்.
ஆனால் கலைஞர் வாழ்த்திய பேரனின் தந்தையும்..அவர் மகனுமான மு.க.முத்து தந்தைக்கு வேண்டாதவர்.
ஆனாலும் கலைஞரால் வாழ்த்தப்பட்டார்.ஒரு சந்தேகம்.
கலைஞர் ஒரு சமயம் குருவி படம் எடுத்த உதய நிதியை மனதில் நினைத்து இதை சொல்லியிருப்பாரோ?

மாற்றம் மட்டுமே மாறாதது அல்ல (அறிவியல் போட்டிக்கான என் கதை)

அந்தரங்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஈகடார் நகர் விண்வெளி ஸ்பேஸ் ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் 5 வினாடிகளாக காத்திருந்தான் கே789456.
கவச உடைகளுடன்.காலை இந்திய நேரம் 7.01.அவனது வாட்ச்சில் இந்திய நேரம் அதுதான் என்றது.இந்திய - சென்னை ஷட்டில் வரவேண்டிய நேரம்.
அவன் இந்த ஷட்டிலை பிடித்தால் தான்.9.02க்கு சென்னையை அடைய முடியும்.
சற்று இரைச்சலுடன் விண்வெளிகலம் வந்து நிற்க..பறக்கும் மனிதக்கூட்டத்துடன் தானும் பறந்து..அடித்து ,பிடித்துக் கொண்டு கலத்தினுள் சென்றான்.அதில் இருந்த வருகை
மாணிட்டரில்..தனது மாதாந்திர பயணச்சீட்டை காண்பிக்க..அது சிறு விசில் ஒன்றை அடித்து..அவன் பயணத்தைக் குறித்துக்கொண்டது.அவன் பயணம் முடியும் முன் ..நாம் சற்று பின்
நோக்கிச் செல்வோம்.
அவனது முன்னோர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முன்..இந்தியாவின் ஒரு பகுதியான சென்னையில் வாழ்ந்து வந்தவர்கள்.அங்கு சாஃப்ட்வேர் நிறுவனங்கள்..வளர..வளர..
மக்கள் வாழும் பகுதிகளெல்லாம் கட்டிடங்கள் கட்டப்பட்டன.வயல்வெளிகளில் பயிர் விளைந்ததுப் போக..கான்கிரீட் கட்டிடங்கள் விளைந்திருந்தன.ஜனத்தொகை ஆயிரம் கோடியை
எட்டிப்பிடித்தது.உலகில் அனைத்து நிறுவனங்களும் தங்கள் வேலைகளை இந்தியாவிற்கு அவுட்சோர்ஸிங்க் செய்தது.
உண்ண உணவின்றி..மக்கள் தவிக்க..விஞ்ஞானிகள் தங்கள் மூளைக்கு முழுநேர வேலைக்கொடுத்து..காலை உணவிற்கு..நீல நிறத்தில் ஒரு மாத்திரையும்,மாலை உணவிற்கு
ஒரு சிவப்பு மாத்திரையும்..இரவு டின்னருக்கு மஞ்சள்நிற மாத்திரையும் கண்டுபிடித்தனர்.ஆனால் ஒரு வேலை மாத்திரை பத்தாயிரம் இந்திய ரூபாய்.மக்கள் உணவுத் தேவை
பூர்த்தி ஆயிற்று.இருக்க இடம்..என்ன செய்வது என்றபோதுதான்...
..உலக நாடுகள் அனைத்தும் ஐ.நா.வில் கூடின.விண்வெளியில் பகுதிகளை..தங்கள் நாட்டு நிலப்பப்புக்கேற்ப..அவை பிரித்துக் கொண்டன.அங்கு தொங்கும் வீடுகள்
கட்டப்பட்டன.அனைத்து மக்கள் குடியிருப்பும்..விண்ணுக்கும்..தொழில்கள் அனைத்தும் மண்ணுக்கும் என்ற நிலை ஏற்பட்டது.
நீச்சே பாரத்..ஊஞ்சே பாரத் மகான் ஆயிற்று.
அப்படி குடியேறிய ஒரு குடும்பத்தில் பிறந்தவன் தான் நாம் முதல் பாராவில் பார்த்த கே789456.அவன் வசிக்கும் இடம் ஈகடார் எனப்பட்டது.அங்கு புவிஈர்ப்பு இல்லாததால்
பறக்கும் ஜாக்கெட்டுகளுடன் மக்கள் இருக்க வேண்டும்.அந்த செலவே மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் பகுதியை சாப்பிட்டன.அந்த ஜாக்கெட்டை அணிந்தால்தான்
அவர்களால் குறிப்பிட்ட இடங்களை அடையமுடியும்.இல்லையேல்..விண்வெளியில் சுற்றிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.
அவனது இருப்பிடத்திலிருந்து இரண்டு நிமிட பயணம் ஈகடார் நிலையத்திற்கு.அவனது முன்னோர்கள் இந்தியாவில் ரயில் பயணம் செய்திருப்பதாக அவனது தாத்தா ஒரு முறை
அவனிடம் கூறியிருந்தார்.
*** **** ****
9.01 க்கு கலம் வங்கக்கடலில் இறங்கியது.அங்கு தயாராய் நின்றிருந்த மோட்டார் படகுகளில் பயணிகள் ஏற்றப்பட்டனர்.அவர்களை கரையில் கலங்கரை விளக்கம் அருகே கொண்டுவந்து விட்டன அவை.அங்கு நின்றுக்கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்றில் அவன் ஏறினான்.அது அவனையும்..மற்ற சில பயணிகளையும் சுமந்துக்கொண்டு...சிறுசேரி என்ற இடத்தில் இருந்த ஒரு உயரமான கட்டிடத்தின் உச்சியில் நின்று அவனையும்,மற்றவர்களையும் இறக்கிவிட்டது.மேலிருந்து கீழ் வரும் லிஃப்டில் ஏறி 65ம் மாடியில் இறங்கினான்.அங்கிருந்த உடைமாற்றும் அறைக்குச்சென்று..அவன் பெயர் பொறித்திருந்த லாக்கரைத் திறந்து..தன் ஜாக்கெட்டுகளைக் கழட்டி அதில் வைத்துவிட்டு..சாதாரண பேண்ட்..சட்டைக்கு மாறினான்.
தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தபோது மணி 9.58
பத்து மணிக்கு வேலை ஆரம்பம்.அவன் பார்க்கும் வேலை வெளிக்கம்பெனி ஒன்றால் ஒப்படைக்கப்பட்டிருந்த ப்ராஜக்ட் ஒன்று.
அப்போது தான் தனக்கென கொடுத்திருந்த உதவி ஆள் வராத்தைப் பார்த்தான்.அந்த ஆள் வந்த போது மணி10.15.
தாமதத்திற்கான காரணத்தைக் கேட்டான்.
'நான் ஏறவேண்டிய கடக விண்வெளி ஸ்டேஷனில்..விண்வெளிக்கப்பலை நிறுத்தி அரசியல்வாதிகள் போராட்டம்' என்றான் அவன்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பார்கள்.ஆனால்..எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்தியஅரசியல்வாதிகளும் மாறமாட்டார்கள் என்று நினைத்தான்.
அதற்குள்...அவன் வேறு சிந்தனையில் இருப்பதை..அவன் தலைக்கு மேல் இருந்த சிவப்பு விளக்கு எறிந்து காட்டிக்கொடுத்தது.
இது முதல் எச்சரிக்கை..வேலையில் உஷாரானான் அவன்.
மாலை மணி 5.
ஷட்டவுன் போட்டுவிட்டு வேகமாக எழுந்தான்.
உடை மாற்றும் அறைக்கு வந்து..ஜாக்கெட்டுக்குள் மாறினான்.5.22க்கு ஹெலிகாப்டர் உச்சிக்கு வரும்..அதைப் பிடித்தால்தான் அவனால்5.38 விண்வெளிக்கப்பலை வங்கக்கடலில் பிடிக்கமுடியும்.எட்டு மணிக்கு வீடு போய் சேரமுடியும். டின்னர் மாத்திரையை முழுங்கிவிட்டுப் படுத்தால்தான் காலையில் சீக்கிரம் எழுந்து 7.01 கப்பலை பிடிக்க முடியும்.
சற்று சலிப்பு ஏற்படத்தான் செய்தது.

Sunday, July 20, 2008

வாய் விட்டு சிரியுங்க - 24

போன வாரம் 50% டிஸ்கவுண்ட்ல ஒரு புடவை வாங்கினியே..அது சாயம் போகாம நல்லாயிருக்கா?
(கையில் உள்ள கர்சீப்பைக்காட்டி)சாயம் போயிருக்கான்னு நீங்களே பாருங்க.

2.நம்ம தலைவர் டிபாசிட் இழந்துட்டார்
எந்த தொகுதியிலே
நான் சொல்றது..அவர் டிபாசிட் போட்டு வைத்திருந்த ஃபைனான்ஸ் கம்பனி மூடிட்டதால

3.ஹலோ..நடிகை நளினி இருக்காங்களா?
நளினிதான் பேசறேன்..நீங்க..
எங்க கட்சியிலே நீங்க சேரணும்..மேடம்..தலைவர் கேட்கச் சொன்னார்.
கண்டிப்பா சேரறேன்..எனக்கும் ரொம்ப நாளா உங்க கட்சியிலே சேரணும்னு ஆசை
ரொம்ப நன்றி..மேடம்..
ஆமாம்..உங்ககட்சி பெயர் என்ன?

4.தலைவரே! நம்ப கட்சியில் இருந்து எதிர்கட்சிக்கு போறவனைப் பத்தி கூட்டத்திலே என்னன்னு பேசணும்
நம்பிக்கைத்துரோகின்னு சொல்லுங்க
எதிர் கட்சியிலே இருந்து நம்ம கட்சிக்கு வர்றவனை
குடும்பத்திலிருந்து பிரிந்த உடன்பிறப்பே மீண்டும் குடும்பத்துடன் இணைய வந்துள்ள உன்னை நெஞ்சார தழுவி வரவேற்கிறேன்னு சொல்லுங்க

5.நிருபர்(கவர்சி நடிகையிடம்) கவர்ச்சின்னு நீங்க எதை நினைக்கிறேங்க
நடிகை-நம்மிடம் இருப்பது பாதி..நம்மிடம் இருப்பதாக பிறர் நினைத்துக் கொண்டிருப்பது பாதி..
இரண்டும் சேர்ந்ததுதான் முழு கவர்ச்சி

6.நீ ரிடையர் ஆனப்பிறகு மிகவும் கஷ்டப்படறியா...ஏன்?
pin.gemclip எல்லாம் காசு கொடுத்து வாங்க வேண்டி இருக்கு.

Saturday, July 19, 2008

வாய் விட்டு சிரியுங்க - 23

1.தலைவர் இன்னிக்கு கூட்டத்திலே வாரிசு அரசியலை எதிர்த்து பேசப்போறாராம்
யார் தலைமை? யார் முன்னிலை?
அவர் மச்சான் தலைமையிலே..மாமா முன்னிலையிலே..மகன் வரவேற்புரை வழங்கியதும்.

2.எங்க தலைவர் எப்போதும் கைகளுக்கு கிளவ்ஸ் போட்டுட்டுத்தான் இருப்பார்
ஏன்?
தன் கை சுத்தம்ன்னு சிம்பாலிக்கா சொல்றாராம்.

3.போன மாசம் என் கிட்ட 100 ரூபாய் கடன் வாங்கினியே..மறந்துட்டியா?
சேச்சே..வாங்கி ஒரு மாசம்தானே ஆச்சு..அதுக்குள்ள மறந்துடுவேனா?

4.நூறு ரூபாய் இருந்தா கை மாத்தா கொடேன்..
கொடேன்..கொடேன்..

5.என்னது..ஆவியை நீ பார்த்திருக்கியா? எப்போது?
இட்லி வேகும்போது..பிரஷர் குக்கர்ல வெயிட் போடும்பொது..தண்ணீர் கொதிக்கிறப்போது
இப்படி பல தடவை பார்த்திருக்கேன்.

6.குறவர்கள் கிட்ட ஓட்டு கேட்கப்போன தலைவர்..அவர்களது மூதாதையர் தமிழுக்கு செய்த
சேவைக்கு பாராட்டு தெரிவித்தாராமே!
சமயக்குரவர்கள் என்பதை..இவர்கள் தான் என நினைத்து விட்டார்.

இந்த படத்திற்கு கலைஞர் வசனமா?சுப்பு தாத்தா ஆச்சர்யம்

கலைஞரால் இப்படியும் சாதாரணமாக வசனம் எழுத முடியுமா?என ஆச்சர்யப் பட்டாராம் சுப்பு தாத்தா.
அவர் சமீபத்தில் பார்த்த படத்தை விமரிசிக்கிறார்.
சிவாஜி கதானாயகனாக வந்து...சரோஜாதேவி கதானாயகியாக நடித்து சமீபத்தில் வந்த 'இருவர் உள்ளம்'தான் அப்படம்.
எழுத்தாளர் லட்சுமி எழுதிய 'பெண்மனம்'நாவல் தான் படம்.கலைஞர் வசனம்.
சிவாஜி ஒரு ஜாலி பேர்வழி.பார்க்கும் பெண்களை எல்லாம் தன் வலையில் வீழ்த்தி விடுவார்.அவர் கண்களில்
ஒரு நாள்சரோஜாதேவி பட..விடுவாரா..மனுஷன்..அவரை உண்மையாகவே காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.
ஆனால்..அவரது குணம் பற்றி அறிந்த naayaki அவரை வெறுக்கிறாள்.'உன் மேல் உள்ள காதல்..என்னை மாற்றிவிட்டது'
என சிவாஜி கூறுவதை அவர் நம்ப மறுக்கிறார்.சந்தர்ப்பங்களும் அப்படியே அமைகின்றன.சரோஜாதேவி உடல் நலம் குன்றி
படுத்துள்ளபோது..சிவாஜி செய்யும் பணிவிடைகள்..நாயகியின் மனதை மாற்றுகிறது.சிவாஜி திருந்திவிட்டார் என்பதை
உணரவைக்கிறது.கடைசியில் எல்லாம் சுபமாக முடிகிறது.
இப்படத்தில்..M.R.ராதா,முத்துலட்சுமி ஜோடி நகைச்சுவையில் தியேட்டரையே அதிரவைக்கிறது.
'புத்திசிகாமணி பெற்ற பிள்ளையே'என அவர்கள் பாடும் போதும்..கோர்ட்டில் ராதா பேசும்போதும் எச்சுமி பாட்டியாலேயே சிரிப்பை
அடக்கமுடியவில்லையாம்.
மற்றபடி,'பறவைகள் பலவிதம்'நதி எங்கே போகிறது' 'அழகு சிரிக்கிறது' (இந்த படத்தில் உண்மையிலேயே அபிநயசரஸ்வதி கொள்ளை
அழகாக இருப்பாராம்..தாத்தா இதைச்சொல்லும் போது பாட்டி..முகவாயை தோள்பட்டையில் இடித்துக்கொள்கிறார்)'இதய வீணை தூங்கும்
போது' 'ஏன் அழுதாய்" என எல்லா பாட்டுகளும் ஹிட்டாம்.
படம் மா பெரும் வெற்றியை தயாரிப்பாளர் L.V.பிரசாத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்ததாம்.

Thursday, July 17, 2008

வாய் விட்டு சிரியுங்க - 22

1. டாக்டர் - உங்க மாமியார் புழைக்கறது ரொம்ப கஷ்டம்
மருமகள்- டாக்டர்..அப்படியெல்லாம் சொல்லாதீங்க..கண்டிப்பா பிழைக்கமாட்டார்னு சொல்லுங்க.
உங்களை கடவுள் மாதிரி நினைப்பேன்.

2.தலைவர் ஏன் மீட்டிங்ல பேசறதுக்கு முன்னாலே ஒரு புத்தகத்தை மக்களுக்கு திறந்து காட்டிவிட்டு பேசறார்?
தன் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்னு symbolicஆ சொல்றாராம்

3.எங்க தமிழ் ஆசிரியை நேற்று கவர்ச்சிகரமா இலக்கண பாடம் நடத்தினாங்க
என்ன சொல்ற
இடை,தொடை பற்றி எல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க

4.நிச்சயதார்த்தம் முடிஞ்சு ரொம்ப நாள் கழிச்சு கல்யாணம் வைச்சுண்டது தப்பாப்போச்சு
ஏன்
கல்யாணத்தோடு வளைகாப்பையும் சேர்த்து வைச்சுடச் சொல்றா என் பொண்ணு

5.மனைவி- காலைலே ஏன் கழுதை மாதிரி கத்திக்கிட்டு கிடக்கறீங்க
கணவன்-பேப்பர்காரனை இன்னும் காணும்

6.என் கணவருக்கு என்னைப்பார்த்தா பயம்..நான் என்ன புலியா இல்ல சிங்கமா?
சேச்சே..அது எல்லாம் சாதுவான மிருகங்கள் ஆச்சே!

Wednesday, July 16, 2008

வாய் விட்டு சிரியுங்க - 21

தலைவரே..எந்த படக்கடைக்குப்போனாலும் அங்க உங்க படம்தான் இருக்கு
அப்படியா?
ஆமாம்..மத்த தலைவருங்க படம் எல்லாம் உடனே வித்துப்போவுதாம்.

2.அவர் கணக்கிலே புலின்னு எப்படி சொல்ற
அவரது மகன் கடைக்குப் போனாலும்'பை' எடுத்துட்டுப்போன்னு சொல்லமாட்டாராம்..22/7
எடுத்துட்டுப் போன் னுதான் சொல்வாராம்.

3.என்னோட மனைவி சரியான ஏமாளி..ஈஸியா ஏமாத்திடலாம்
அப்படியா
ஆமாம்..நேத்து வைச்ச சாம்பாரை இன்னிக்கு வைச்சதுன்னு சொன்னேன்..நல்லாயிருக்குன்னு
சாப்பிட்டுட்டு போயிட்டா.

4.ஹீரோ..டைரக்டர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வர்றார்
எப்படி
முன்னாலே ரப்பர் எஸ்டேட்ல வேலை பார்த்தவராம்.

5.(சாப்பிட்டுக்கொண்டே.டி.வி.பார்த்துக்கொண்டிருக்கும் மனைவியிடம் கணவன் அழும் குழந்தையைக்காட்டி)
குழந்தை ஏன் அழறான்?
சாப்பிடும்போது கார்ட்டூன் சானல் பார்க்கணும்னு சொன்னான்..அதனாலே அடிச்சேன்.

6.முன்னெல்லாம் மீந்துப்போன சாதம்,குழம்பு எல்லாம் கொடுப்பியாம்..இப்போ ஒன்னும் கொடுக்கறது இல்லைன்னு
உன்னோட வேலைக்காரி புலம்பறா..
என் மாமியார் ஊர்லே இருந்து வந்திருக்காங்க..அதான்..

Monday, July 14, 2008

வாய் விட்டு சிரியுங்க - 20

அந்த நீதிபதி தீர்ப்பு சொல்லும் போது எல்லாம் கையிலே ஒரு தீப்பந்தத்தை வைச்சிருப்பார்
ஏன்?
சட்டம் ஒரு இருட்டறைன்னு யாரும் சொல்லிடக்கூடாது இல்லையா?

2.உங்களுக்கு மாடு வாங்க லோன் தந்தா அதை எப்படி திருப்பிக் கட்டுவீங்க?
கால் நடையா வந்துதான்.

3.கள்ள நோட்டை அடிச்ச நீ எப்படி மாட்டிண்ட
நோட்டிலே ரிசர்வ் பாங்க் கவர்னர் கையெழுத்து போட வேண்டிய இடத்திலே என் கை நாட்டை வைச்சுட்டேன்.

4.தலைவர் போற இடத்திற்கெல்லாம் ஒரு கட்டு பேப்பர்களை எடுத்துட்டுப் போறாரே..ஏன்?
அவர் மேல உள்ள வழக்குகளுக்கு முன் ஜாமீன் வாங்கினத்துக்கான பேப்பர்களாம்

5.என் கணவர் தூங்கும்போதும் கண்ணாடி போட்டுக்கிட்டுத்தான் தூங்குவார்
ஏன்?
கனவுல வர்றவங்க சரியா தெரியணும்னுட்டுத்தான்

6.நீங்க பேய்,பிசாசு இருக்கறதை நம்பறீங்களா?
கல்யாணம் ஆறவரைக்கும் எனக்கு அதில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது

சுப்பு தாத்தாவின் திரை விமரிசனம்

சுப்பு தாத்தா படம் பார்ப்பதை நிறுத்தி பல வருஷங்கள் ஆயிற்றாம்.அவரிடம் நீங்கள் பார்த்த கடைசி படம் என்ன?
என்று கேட்க ..அதைப்பற்றி ஒரு விமரிசனமே எழுதிக்கொடுத்து விட்டார்.
சமீபத்தில் வி.சி.கணேசன் நடித்து வெளிவந்த தூக்குத்தூக்கி என்ற படத்தில் திருவாங்கூர் சகோதரிகளான..லலிதா,
பத்மினி,ராகினி மூவரும் நடித்துள்ளனர்.கதாநாயகன் ஒரு நாள் அறிஞர்கள் சபையில் கீழ்கண்ட வற்றைகேள்விப்படுகின்றான்.
'கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டுவந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் காப்பான் தோழன்'
உடனே அவற்றை பொய் என நீரூபிப்பேன் என சூளுரைத்து கிளம்புகின்றான்.ஆனால் நடந்தது என்ன?
தந்தையால்..வீட்டை விட்டு வாளாயிருப்பதால் விரட்டப் படுகிறான்..தாயோ கண்ணீர் விடுகிறாள்.
தன் சகோதரிவீடு சென்றவன் அன்பாக வரவேற்கப்படுகின்றான்.வெள்ளித்தட்டில் சாப்பாடு.
ஆனால்..அவன் தனக்கு எந்த சீரும் கொண்டுவரவில்லை என்று எண்ணி அடுத்தாநாள் வாழையிலையில் சாப்பாடு.
அடுத்த நாள் மந்தார இலையில் என அவமானப்படுத்தப் படுகின்றான்.தான் கொண்டு வந்திருந்த பொருளைக்காட்டி,
அவளது குணத்தை ஏசி வெளியேறுகிறான்.
அவன் இல்லாத வேளையில் அவன் மனைவி லலிதாவிற்கு ஒரு பனக்கார மார்வாடி சிநேகம் ஏற்பட..அவனுடன் சேர்ந்து கணவனை கொலை
செய்ய திட்டமிடுகிறாள்.மார்வாடியாக வரும் டி.ஸ்.பாலையா...'ப்யாரி நிம்பல்கி நும்பல் மேல மஜா"என பாடி நடிப்பில் அட்டகாசப் படுத்துகிறார்.
பின் கதாநாயகன் மீது கொலை குற்றம் சாட்டப்படுகின்றது.ராஜ சபையில் வந்து..அவன் உயிரை காப்பாற்றுகிறான் அவன் நண்பன்.
கடைசியில் அறிஞர்கள் சொன்ன அனைத்தும் உண்மை என உணர்கிறான் .
மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தில்..அனைத்து பாடல்களும் அருமை.டி.எம்.எஸ்.குரலில் ஒளித்த 'பெண்களை நம்பாதே'''ஏறாத மலைதனிலே"
'சுந்தரி சௌந்தரி'அபாய அறிவிப்பு" 'ஏலம்..ஏலம்"மற்றும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்'.
இப்ப்டத்தில் பத்மினி மிகவும் அழகாக இருப்பார்..என பொக்கை வாய் ஜொள்ளுவிட சுப்பு தாத்தா சொல்ல..இடையில் புகுந்த எச்சுமி பாட்டி
சிவாஜி மட்டுமென்ன சும்மாவா?குறு..குறுன்னு அழகாய் இருப்பார் என்றாள்.

Friday, July 11, 2008

டோண்டு சாருக்கு வந்த கேள்வியும் அதற்கான என் பதிலும்

//தென்காசி
நாடக குழுக்களில்'பிசி'யாக உள்ள குழு யாருடையது?
பதில்-நண்பர் காஞ்சனா ராதாகிருஷ்ணனுக்கு இக் கேள்வி அனுப்பி வைக்கப் படுகிறது//

இந்த கேள்விக்கு சற்று விரிவாகவே பதில் சொல்ல ஆசைப்படுகிறேன்.சமீபத்தில் 1985 வரை நாடகங்கள்
சக்கைப்போடு போட்டன.சாதாரண என்னைப்போன்ற அமைச்சூர் குழு நாடகங்ககளும் 100 தடவைகளுக்கும்
மேல் நடைப்பெற்றன.சிவாஜி.மனோகர்,பாலசந்தர்,கோமல்,சோ,மெரினா இவர்களின் நாடகங்களுக்கு
blackல் டிக்கட்டுகள் விற்கப்பட்டிருக்கின்றன.சென்னையில் 100க்கும் மேற்பட்ட சபாக்கள்,வெளியூர்களில்30
க்கும் மேற்பட்ட சபாக்கள் இருந்தன.ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாதம் 30 நாட்களில் 45காட்சிகள்
(சனி,ஞாயிறு 3 காட்சிகள்)நாடகங்கள் நடந்த காலங்கள் உண்டு.ஆனால் இன்றோ ஒரு டஜன் சபாக்கள் தான்.
அதுவும் தென் சென்னையில் மட்டும்.நாடகம் மூலம் வெள்ளித்திரைக்குப் போனவர்கள் நாடக மேடையை
மறந்தார்கள்.ஆனாலும்..சில அமெச்சூர் குழுக்கள் நாடகக்களையை I.C.U. வில் வைத்து காப்பாற்றிவருகிறார்கள்.
அவற்றுள் எனது சௌம்யா நாடகக் குழுவும் ஒன்று.(எனது சமீபத்திய நாடகம்'மாண்புமிகு நந்திவர்மன்' a political
satire)
இப்போது..உங்கள் கேள்விக்கான பதில்
இன்றும் பிசி யாக உள்ள குழுக்கள் S.Vee.சேகர்,கிரேசி மோகன் குழுவினர்.இவர்களுடன் எந்த நாளிலும்
நாடகத்தை மறக்காத Y.G.மஹேந்திரனின் குழு.ஆகிய 3 troupe தான்.T.V.வரதராஜனை அடுத்து கூறலாம்.மற்றபடி என் போன்றவர்களுக்கு நாடகத்தன்றுதான் பிசி.
R.S.மனோகரின் நாடகங்களை அவரது நேஷனல் தியேட்டர் குழுவைச் சேர்ந்த சில மூத்த கலைஞர்கள் நடத்தி
வருகின்றனர்.இவர்கள் நாடகங்களுக்கு ஆகும் செலவு பல ஆயிரங்கள்.அதைக் கொடுக்க சபாக்கள்தான் இல்லை.

டோண்டு..சார்..உங்களிடம் கேட்கப்பட்ட கேள்வியை எனக்கு அனுப்பிவைத்த உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி.

Thursday, July 10, 2008

புள்ளிவிவரத்துடன் விஜய்காந்த் பேச்சு

கழிவறை போய் திரும்பும்போதும்,வெளியில் போய் வீடு திரும்பும்போதும் கைகளை தண்ணீரால் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் தொற்று நோய்களான வாந்தி,பேதி,காலரா,நிமோனியா போன்றவை ஏற்படும்.
இன்று கலைஞர் ஆட்சியில்..53% தான் ஒழுங்காக கை கழுவுகின்றனர்.அதிலும் உணவளிக்கும் முன் 30% தான்
கை கழுவுகின்றனர்.மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் கை கழுவுவோர் எண்ணிக்கை குறைவு.இந்த சதவிகிதத்தை
அதிகரிக்க முதல்வர் என்ன செய்தார்?
இந்தியாவில் 18லட்சம் பேருக்கு வாந்தி பேதி ஏற்படுகிறது.இதில் 90%குழந்தைகள்.மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால்
45% பாதிப்புகள் குறையும்.
இந்த முக்கிய பிரச்னையை விட்டு விட்டு..கலைஞர் என் கல்யாண மண்டபத்தை இடித்தார்.எனது கல்லூரியில் புறம்போக்கு நிலம்
எவ்வளவு சதவிகிதம் என்று பார்க்கிறார்.புதுச்சேரியில் உள்ள எனக்கு சம்பந்தமில்லாத..என் மனைவியின் சகோதரியின் மருத்துவ கல்லூரி
பற்றி பொன்முடியை தூண்டிவிட்டு..அது என்னுடயது என்று பேசச்சொல்லுகிறார்.
இதையெல்லாம் என் சொல்கிறேன் என்றால் மக்களில் 100% உண்மையை உணர வேண்டும் என்றுதான்.
இப்படி விஜய்காந்த் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
(உபரி செய்தி..புள்ளிவிவரங்கள் தினமலர் கொடுத்தது..விஜய்காந்த் பேச்சு ஹி...ஹி...நம்ம கைங்கர்யம்)

Wednesday, July 9, 2008

வாய் விட்டு சிரியுங்க - 19

1.எங்க தொகுதி M.L.A. இதுவரைக்கும் அசெம்பளிலே 40தடவை எழுந்து..
தொகுதி பற்றி பேசியிருக்கிறாரா?
இல்லை..அவிழ்ந்து போன வேட்டியை கட்டிக்கிட்டு இருக்கார்.

2.கோயிலுக்கு போறவங்க எல்லாம்..பொய் சொல்றவங்களாக இருப்பாங்க..
எப்படி சொல்ற.
'மெய்' மறந்து தானே சாமியை கும்பிடுவாங்க

3.

4.தலைவரோட கூட்டத்தில என்ன கலாட்டா?
மேடைக்கு வந்த கிழவியை எப்பவும் அணைச்சுக்கிற மாதிரி தலைவர் அணைச்சுக்கிட்டாராம்..ஆனா அது கிழவி
இல்லையாம்..மேக்கப் இல்லாமல் வந்த நடிகை பூஜாவாம்.

5.ஆஃபீஸ்ல கடைசி சீட்ல உட்கார்ந்துண்டு ஃபைல் பார்த்துக்கிட்டிருப்பாரே...அவரை ஆஸ்பத்திரில அட்மிட்
பண்ணியிருக்காங்களாம்..
என்ன உடம்பாம்
ஃபைல்ஸாம்

6.போன மாசத்துக்கு இந்த மாசம் எல்லாமே ஏறியிருக்கு..எதுலயும் இறக்கம் இல்லை
நம்ம பையனோட ப்ரொக்ரஸ் ரிபோர்ட் ல இறக்கம் இருக்கே..

Sunday, July 6, 2008

பொதுத்தொண்டும்..பண விவகாரமும்

பொதுத்தொண்டு செய்யப் புறப்படுபவர்கள் பண விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
நல்ல ஆதரவு நம் காரியத்துக்கு கிடைத்தாலும் அதனால் over enthusiastic ஆகி நிறைய பணம் collect
பண்ண ஆரம்பிக்கக் கூடாது.இப்படி ஆரம்பித்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது.இதனாலே, உதவும் அன்பு
எண்ணத்தை 'வசூல் எண்ணம்' முழுங்கிவிடும்.எப்போது பார்த்தாலும் ரசீதும்..கையுமாக அலைவதும்,பேப்பர்காரர்களைப்
பிடித்து அப்பீல் பன்னலாமா...அட்வெர்டைஸ்மென்ட் பிடித்து ஸோவனீர் போடலாமா..என்பதே சிந்தையாகத்
தவித்துக் கொண்டிருக்கும்படியும் ஆகும்.நிறைய பணம் சேர்த்து அதைக் கையாள வேண்டியிருக்கும் போது, நாமே எப்படி
மாறிப்போய் விடுவோமோ என்ற பயம் எப்போதும் இருக்க வேண்டும்.அதுவுமில்லாமல் ரொம்பவும் பணம் சேர்த்தால் ஊரிலிருப்போருக்கும்
அது சரியாகப் பிரயோஜனமாகிறதா என்ற சந்தேகம் எழும்பும்.இதோடு கூட..சற்று முன் சொன்னபடி ,இஷ்டமில்லாதவனையும்
நிர்பந்தப்படுத்தி வாங்குவதும்..இப்படி வாங்கிவிட்டால் அவனிடம் பந்தப்பட்டு நிற்பதும்..நம் பணியையே அசுத்தம் செய்துவிடும்.
ஆதலால்..எந்த நல்லக்காரியமானாலும் 'அதி'யாக அதைக் கொண்டு போய் விடாமல்..அவசியத்தோடு நிறுத்திக் கொண்டு
சிக்கனமாகவே அதற்கான வரவு செலவுகளை நிர்வகிக்கவேண்டும்.
பொதுத்தொண்டுக்கு மூல பலம் பணம் இல்லை..ஐக்கியப்பட்ட மனம்தான் என்று புரிந்துக் கொள்ள வேண்டும்.

(மகா பெரியவர்)

இப்படிச் சொன்னவர் யார்? கண்டுபிடித்து பின்னூட்டம் இடுங்கள் பார்க்கலாம்..

வாய் விட்டு சிரியுங்க - 17

1.என் பையன் போற போக்கிலே உருப்படமாட்டான் போல இருக்கு
ஏன் அப்படி சொல்றே
டாக்டருக்கு படிக்கணும்னு சொல்றான்..ஆனா..கையெழுத்து தெளிவா இருக்கு

2.அதோ போற பேரணி எந்த கட்சியோடது
கட்சி பேரணியில்லை..கூட்டணி தலைவருங்க எல்லாம் ஒன்னா வராங்க

3.மெகா சீரியல் டைரக்டரை லவ் பண்ணினியே எப்ப கல்யாணம்
நடக்காத விஷயத்தை எல்லாம் பேசறார்..எப்ப கல்யாணம்னு கேட்டா..சீரியல் முடியட்டும்னு சொல்றார்

4.உன் கணவர் உன் மேல் சந்தேகப்படறாரா? ஏன்?
என் ஜாக்கெட்டை டைலர் அளவு சரியா தச்சிருக்கார்னு சொன்னேன்..அவ்வளவுதான் சந்தேகம் வந்துடுத்து

5.கவர்ச்சி நடிகை நளினாவை இயக்குநர் ஏமாற்றிட்டாராம்.குணசித்திர வேஷம்னு சொல்லிட்டு படம்
முழுவதும் புடவைக் கட்டி நடிக்க விட்டுட்டாராம்.

6.மேனேஜர் மடியிலே..ஸ்டெனோ உட்கார ஜோக்கையே எவ்வளவு நாள் எழுதுவீங்க?
சரி..இனிமே..ஸ்டெனோ மடியிலே மேனேஜர் உட்காரரான்னு மாற்றி எழுதிடறேன்

Friday, July 4, 2008

வாய் விட்டு சிரியுங்க - 16

1.மன்னா..நீங்க சொன்னபடி நம்ப எதிரி நாட்டு மன்னனின் படை ரகசியத்தை தெரிஞ்சுக் கிட்டு வந்துட்டேன்
சொல்லுங்கள் மந்திரியாரே
அவர்கள் தங்கியுள்ள பகுதியில் கொசு தொந்தரவு தாங்காமல் சொறிஞ்சு..சொறிஞ்சுதான் படை வந்திருக்காம்.

2.தலைவருக்கு எப்பவும் தங்க ராசி உண்டு..
எப்படிச் சொல்றே
முதல் மனைவி பெயர் 'தங்கம்' இரண்டாம் மனைவி பெயர்'பவுனு'மூணாவது மனைவி 'சொர்ணம்"

3.ஜன்னல் வழியே எலி புகுந்துடுத்து
அப்புறம் என்ன பண்ணினே
டைலர் கிட்ட ஜாக்கெட்டை கொடுத்து ஜன்னலை மூடச் சொல்லிட்டேன்.

4.அந்த கவர்ச்சி நடிகையை கல்யாணம் பண்ணினப் பின்னாடி தெரிஞ்சுது
ஏன் முன்னாடி தெரியலையா?
முன்னாடிதான் பல படங்கள்ல பார்த்திருக்கேனே..

5.பிரசவத்துக்கு பின் உன் வயிற்றிலே இருந்த சுருக்கங்கள் எங்கே?
என் கணவர் தண்ணீர் தெளிச்சு இஸ்திரி போட்டுட்டார்.

6.(நடுவானில்) பிளேன் நகராமல் திடீரென நின்னுப்போச்சு..யாராவது பத்து பேர் இறங்கி தள்ளுங்க.

Thursday, July 3, 2008

அந்த கிரகமும்..அதன் மக்களும்..

அந்த கிரகத்தில் அரைகுறையாக ஆடை அணிந்திருந்த ஒரு பெண்ணைச்சுற்றி..ஒரு கூட்டம்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது போல ..சேட்டிலைட் மூலம் எடுக்கப் பட்டிருந்த புகைப்படத்துடன்
செய்தி ஒன்று அன்றைய செய்தித் தாள்களில் வந்திருந்தது.
அத்துடன் அந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சத்தியக்கூறுகள் இருப்பதாகவும்..உயிர்கள்
வாழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறி இருந்தனர்.
விண்வெளி ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள்..அடுத்ததாக உயிருள்ளவர்களை அந்த கிரகத்திற்கு அனுப்பி
வைக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
இவர்களின் இந்த கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி,பிரதமர் முதல் குப்பன்..சுப்பன் வரை பாராட்டு
தெரிவித்திருந்தனர்.
சில வல்லரசு நாடுகள் இந்த கண்டுபிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல்..விஞ்ஞானிகள் மேற்கொண்டு ஆராய்ச்சியில்
ஈடுபடலாயினர்.
பத்து விண்வெளி வீரர்களுக்கு கடும் பயிற்சி அளிக்கப்பட்டு...நான்கு பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
அதில் சாதனா சாவ்லா என்று ஒரு பெண்ணும் இருந்தார்.
நாட்டின் பொருளாதார நிலை சரியாய் இல்லாததாலும்..பணவீக்கம் அதிகரித்து வருவதாலும்..
மேற்கொண்டு ஆராய்ச்சிகளுக்கு பண ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் இருப்பதாக நிதி அமைச்சர்
பட்டினியார்...தெரிவிக்க..அதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சில கட்சிகள்..ஆதரவை..வாபஸ் வாங்கப்போவதாகவும்..அவர்கள்
தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுமென்றால்..விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான பணம்
ஒதுக்க வேண்டும் என்றும்..நிதி அமைச்சர் பட்டினியார் பதவி விலக வேண்டும் என்றும் நிபந்தனைகள்
விதித்தனர்.
என்ன செய்வது என்று தெரியாமல்..பிரதமர் தன் தலைப்பாக்குள் கையை விட்டு முடியை பிய்த்துக்
கொண்டார்.கட்சித் தலைவர் மானியா..விண்வெளி ஆராய்ச்சிக்கு...தடை இல்லை என்றும்..
தொடர்ந்து நிதி ஒதுக்கப் பட்டு..திட்டமிட்டப்படி வீரர்கள் அனுப்பப்படுவர் என்றும் கூறி
தற்காலிகமாக ஆட்சியை காப்பாற்றினார்.
நான்கு வீரர்களுடன் விண்கலம் புறப்படும் நாள் வந்தது.விண்வெளி விஞ்ஞானி சங்குண்ணி
மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டார்.
10..8...7..6..5..4..3..2..1..0..
உஷ் என கலம் புகையைக் கக்கிக்கொண்டு பறந்தது.
**** ***** ***** *****
இரண்டு மாதம் தன் பயணத்தை முடித்துக்கொண்டு..சில புகைப்படங்களை அனுப்பிய வீரர்கள்
திரும்பினர்.
அவர்கள் பின் அளித்த அறிக்கை..

'நாங்கள் போன இடம் பூமி எனப்பட்டது.அதில் மக்கள் வாழ்கிறார்கள்.மூன்று பாகம் கடல்..ஒரு பாகம் நிலம்.
நாங்கள் இறங்கிய இடத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாய்..தியேட்டர் எனப்படும் இடத்தில் கூடுகின்றனர்.
வறுமையில் வாடினாலும்..ஒலி,ஒளி நிகழ்ச்சியான இவற்றுக்கு மக்கள் பணத்தை செலவழிக்க தயங்குவதில்லை.
அரைகுறையாக உடை உடுத்தியுள்ள நடிகைகளை பார்ப்பதிலும்..தனக்குப் பிடித்த நடிகர்களுக்கு பால்..பீர் போன்ற
திரவ பொருள் கொண்டு அபிஷேகம் செய்யவும் இவர்கள் தயங்குவதில்லை.இந்த பகுதிக்கு தமிழ்நாடு என்கிறார்கள்.
அவர்கள் பேசும் மொழி தமிழ்.இதுபோல பல மொழி பேசுபவர்கள் மற்ற இடங்களிலும் இருக்கிறார்களாம்.
தண்ணீருக்கு இவர்கள் மாற்றி...மாற்றி..அடித்துக் கொள்கிறார்கள்.
இப்படி இவர்கள் அறிக்கை நீண்டுக்கொண்டே போகிறது.
அவை அனைத்தும்..செவ்வாய் கிரக பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தன.
உடன்...நமீதாவின் ஒரு குத்தாட்ட புகைப்படமும் பிரசுரமாகி இருந்தது.

Thursday, June 26, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்

அண்ணாசாமி தன் மனைவிக் கூப்பிட்டு உடனே கடைக்குப் போய் 6 டம்ளர் வாங்கிவரச் சொன்னார்
மனைவி எதற்கு என்று கேட்க 'டாக்டர் தினமும் என்னை 10டம்ளர் தண்ணீர் குடிக்கச் சொல்லியிருக்கார்.
நம்ம வீட்ல 4 டம்ளர் தானே இருக்கு" என்றார்.

2.அண்ணாசாமி-(டாக்டரிடம்)எனக்கு இந்த ஜுரம் எப்படி வந்தது.
டாக்டர்-கொசுவாலேதான்.இந்தாங்க ..கொசு கடிக்காம இருக்க இந்த கிரீமை தடவுங்க
அண்ணாசாமி-அதெப்படி டாக்டர் ஒவ்வொரு கொசுவா பிடிச்சு இந்த கிரீமை தடவ முடியும்?

3.அமெரிக்க அதிபர் புஷ் பில் லேடனைப் பிடிச்சா 10 லட்சம் பரிசுன்னு அறிவித்தார்.
அண்ணாசாமி உடனே புஷ்ஷை தேடிப்போனார் 'எனக்கு 10லட்சம் தாருங்கள் என்றார்.புஷ்
எதற்கு எனக் கேட்க அண்ணாசாமி'எனக்கு பில் லேடன் ஐ பிடிச்சிருக்கு'என்றார்.

4.அண்ணாசாமி தசாவதாரம் பார்க்க தியேட்டருக்குப் போனார்.டிக்கெட் வாங்கினார்.திரும்ப வந்து
டிக்கெட் வாங்கினார்.கௌண்டர் கிளார்க் 'நீங்க தானே முன்னாலே வாங்கினீங்க என்றார்.
ஆமாம்..ஆனால் உள்ளே நுழையும் போது ஒருத்தன் அந்த டிக்கட்டை வாங்கி பாதியா கிழுச்சிட்டானே என்றார்.

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்

அண்ணாசாமி ஒரு நாள் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்.அப்போது சுடுகாட்டிற்கு
2 சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.அவற்றுடன் நாயுடன் ஒருவர் செல்ல அவர் பின்னால் ஒருவர் பின் ஒருவராக
கிட்டத்தட்ட 500பேர் சென்றுக்கொண்டிருந்தனர்.அதைப் பார்த்த அண்ணாசாமிக்கு ஆச்சர்யம்.டீக்கடைக்காரரிடம்
நான் எவ்வளவோ பிண ஊர்வலங்களைப் பார்த்திருக்கிறேன்..ஆனால் இவ்வளவு ஒழுங்காக ஒருவர் பின் ஒருவராக
சென்று பார்த்ததில்லை..ஆமாம் ..யாருடைய ஊர்வலம் இது? என்றார்.
அவர் நாயுடன் செல்பவரை சுட்டிக்காட்டி 'அவரைக் கேளுங்கள்' என்றார்.
நாயுடன் செல்பவர் சொன்னார்'முதலில் சென்றது என் மனைவி..'
'ஆமாம் ..அவருக்கு என்னவாயிற்று?'
என் நாய் அவளைக்கடித்து விட்டது.இரண்டாவது பிணம் என் மாமியார்..என் மனைவியைக் காப்பாற்ற சென்றவரை
என் நாய் கடித்து விட்டது.
உடனே ஆவலுடன் அண்ணாசாமி'இந்த நாய் எனக்கு வாடகைக்கு கிடைக்குமா?'என்றார்.
வரிசையில் போய் நில்லுங்கள் என்றார்...நாயுடன் சென்றவர்.
அண்ணாசாமி 501வது ஆளாக வரிசையில் நின்றார்.

Monday, June 23, 2008

வாய் விட்டு சிரியுங்க - 15

1.உன்னை நம்பி வநதவனை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வந்தது?
நம்பி வந்தவனைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவனை என்ன செய்ய முடியும்.

2.நம்ம தலைவரை நான் எழுதிய நூல் வெளியீட்டு விழாவிற்கு கூப்பிட்டது தப்பாப் போச்சு
ஏன்? என்ன ஆச்சு
என்னய்யா ஏதோ நூல் வெளியீடுன்னு சொல்லிட்டு கையிலே புத்தகம் ஒன்னைக் கொடுத்து
வெளியிடச் சொல்றியேன்னு கோபப்பட்டார்

3.தயாரிப்பாளர்-(கவர்ச்சி நடிகையிடம்)வயதான கிராமத்து கிழவியை மையமா வைச்சு ஒரு படம் எடுக்கிறோம்
யாருக்கும் எந்த மேக்கப்பும் கிடையாது..நீங்க நடிச்சா தத்ரூபமாயிருக்கும்.

4.உங்க ஆஃபீசிலே வேலை செய்யற சாஃப்ட்வேர் எஞ்சினீயர் தங்கம் உண்மையிலேயே பத்தரை மாற்று தங்கம் னு
எப்படி சொல்றே
உரசி பார்த்துட்டேனே

5. இன்னயிலேயிருந்து நம்ம கம்பனிலே உங்களை அப்பாயிண்ட் பண்றேன்..உங்களுக்கு எதாவது சந்தேகம்
இருந்தா கேளுங்க..
நான் VRS ல போகமுடியுமா...சார்

6.உன்னோட நண்பன் அண்டப்புளுகு ன்னு எப்படி சொல்ற
ஹாஸ்பிடல்லே ஆபரேஷன் தியேட்டர்ல புரஜக்டர் ஆபரேட்டராய் இருக்கேன் னு சொல்றான்

Sunday, June 22, 2008

வாய் விட்டு சிரியுங்க - 14

1.நம்ப தலைவரோட வேட்பு மனு ஏன் நிராகரிக்கப்பட்டது
பழக்க தோஷத்திலே வேட்பு மனுவுக்கு பதிலாக முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துட்டாராம்.

2.வேலைக்காரி- அம்மா..வர..வர..உம் புருஷன் செய்ய்யறது நல்லா இல்லை ..சொல்லிட்டேன்
பெண்-(பதட்டத்துடன்) அப்படி என்ன செஞ்சார்
வேலைக்காரி- இன்னிக்கு சாம்பார்லே உப்போ காரமோ இல்லை

3.நண்பன்-(தன் நண்பனிடம்) கடன் கேட்டா இல்லைன்னு சொல்லிட்டே..என்னைப்பற்றி இப்போ
உனக்குத் தெரியாது..நீ accident ஆகி hospital ல இருக்கும்போதுதான் உயிர் காப்பான் தோழன்னு
என்னைப் புரிஞ்சுப்ப...

4.போன வாரம் செத்தது..நீயா..இல்ல உன் அண்ணனா?
ம்...நீ அண்ணன்னு சொன்னது என்னையா இல்ல என் தம்பியையா?
???!!!!

5.அந்த ராப்பிச்சை உங்க்களுக்கு ஏன் பணம் கொடுட்துட்டுப் போறான்?
மாசக்கடைசி கைச் செலவுக்கு பணம் இல்லைன்னு சொன்னேன்..வட்டிக்கு பணம்
கொடுத்துட்டு போறான்.

6.என்னை யாராவது முட்டாள்..மடையன்னு திட்டினா..நீ தாண்டா அதுன்னு மனசுலே நினைச்சுக்கிட்டு 'வரட்டுமா'
அப்பிடின்னு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவேன்
அப்போ நான் வரட்டுமா...
???!!!!

Thursday, June 19, 2008

-கக்கன்-

கக்கன்.தமிழக அமைச்சராய் இருந்தவர் காங்கிரஸ் ஆட்சியில்.
அமைச்சராய் இருந்தும்,தனக்கெனவோ, தன் மனைவிக்கென்றோ,மகன்களுக்காகவோ
எதையும் சேர்க்காதவர்.கடைசிவரை எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.
ஒருசமயம்..நான்..Ice House பஸ் நிறுத்தத்தில் இருந்து31A பஸ்ஸில் பாரிஸ் செல்ல ஏறினேன்.
உட்கார இடமில்லை.நின்றுக்கொண்டிருந்தேன்.என் பின்னால் நின்றுந்த ஒருவர் 'தம்பி..கொஞ்சம்
இடம் விடுங்க..அடுத்த ஸ்டாப்பிங்கில் நான் இறங்கணும் என்றார்.சற்றே இடங்கொடுக்க நகன்ற நான்..
அந்த பெரியவரை ஏறிட்டேன்.என்ன ஆச்சர்யம்..கக்கன் அவர்கள்தான் அது.
நான் கண்ட உண்மை நிகழ்ச்சி இது. உடல்நலக்குறைவின்போதும் பஸ்சில் சென்ற மஹாமனிதன் இவர்.
எப்போதும் போல இப்படிப்பட்டவர்களை மறப்பதுதானே நம் வழக்கம்.
இன்று இந்ந நிகழ்ச்சி என் ஞாபகத்துக்கு வருகிறது ....அவர் எங்கே?
எம்.எல்.ஏ.க்களுக்கு வீடு கட்ட நிலம் வேண்டும்,சம்பள்த்தை உயர்த்தவேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கைகள்
வைக்கும் இன்றைய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எங்கே?
கக்கன் போன்றவர்கள் இன்று எங்கே? கஹா கயே வோ லோக்? வேர் ஆர் தே? எங்கே போனார்கள் அவர்கள்?

வாய் விட்டு சிரியுங்கள் - 13

 


1.ஆசிரியர்- திரவ பொருளுக்கு ஒரு உதாரணம் சொல்
மாணவன்- இருட்டு சார்...இராத்திரியிலே கரண்ட் கட்டாச்சுன்னா அடுத்த நாள் பேப்பர்ல'ஊரே இருளில் மூழ்கியது'
என்று போடறாங்களே!!

2.நான் ஒரு திரில்லான கதை எழுதி இருக்கேன்..ஆனா அதை முடிக்கத்தான் முடியலை
ஏன்?
குற்றவாளி யார்னு என்னாலே கூட கண்டுபிடிக்க முடியலை.

3.அதோ போறாரே..அவர் தீவிர காங்கிரஸ்காரர்னு நினைக்கிறேன்.
எப்படி சொல்ற
அவர் பொண்ணு சோனியா இருக்கு..கேட்டா என் தலைவி ஞாபகமா அப்பிடியே இருக்கட்டும்னு சொல்றார்

4.தமிழ் டீச்சரை லவ் பண்ணினது தப்பாப்போச்சு
ஏன்
லவ் லெட்டர் எழுதினா.. அதில் எழுத்துப் பிழை,சந்திப்பிழைன்னு ஏதாவது தப்பு கண்டுபிடிச்சுக்கொண்டே
இருக்கா..

5.அப்பா-நேற்று கணக்கு ஹோம் ஒர்க்கை என்னை போடச்சொன்னே..இன்னிக்கு நீயே போடறே
மகன்- யார் போட்டா என்ன..இரண்டு பேரும் தப்பாத்தானே போடப்போறோம்.

6.என் மனைவி ஒரு தேவதை
நீ அதிர்ஷ்டக்காரன்..என் மனைவி இன்னும் உயிரோடு இருக்கா

Wednesday, June 18, 2008

அதிமுக வுடன் கூட்டுப் பற்றி அன்புமணி

மத்திய அமைச்சர் அன்புமணி நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்.
பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்..திமுக உடன் உறவு முறிந்தது பற்றியும்,தமிழக அரசியல் நிலை
குறித்தும் சோனியாவிடம் விளக்கியதாகக் கூறினார்.கூட்டணிகட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என சோனியா கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
திமுக உடன் மீண்டும் சமரசம் ஆகும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அதை திமுக விடம் கேளுங்கள் என்றார்.
அதிமுக உடன் கூட்டணி உண்டா என்ற கேள்விக்கு'அரசியலில் எதுவும் நடக்கலாம்'என்றார்..மேலும் அதுபற்றி நான் எதுவும் சொல்லமுடியாது என்றார்.அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.
இதனிடையே..பா.ம.க.வை பி.ஜே,பி.க்கு அழைத்து திருநாவுக்கரசு சந்துலே சிந்து பாடி இருக்கிறார்.

Tuesday, June 17, 2008

வாய் விட்டு சிரியுங்க - 12

பொண்ணு வேலைக்கும் போகணும்,நல்லாவும் சமைக்கத் தெரியணும்...இப்படி இரண்டும் சேர்ந்த பொண்ணு கிடைக்கிறது கஷ்டம்
தனித்தனியா கிடைச்சாலும் ..இரண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மதம்.

2.என்ன சப்பாத்தி பண்ணியிருக்கே..முதல் சப்பாத்தி சாப்பிட்டேன்..இரண்டாவது மெல்லவே முடியலை..
அது சப்பாத்தி இல்ல...பேப்பர் பிளேட்..அதிலேதான் சப்பாத்தியை போட்டுக் கொடுத்தேன்

3.உனக்கு பின்னாலே சீட்ல வேலை செய்யறவர் பின்னழகை ரசிப்பார்னு சொல்றியே..நீ ஒண்ணும் சொல்ல மாட்டியா?
அவர் குண்டூசியின் அழகை ரசிப்பதை தடுக்க நான் யார்?

4.என்ன டாக்டர்..வலது கால்லே ஆபரேஷன் பண்றதுக்கு பதிலா..இடது கால்லே பண்ணிட்டீங்களே
அப்படியா? சரி..என் ஃபீஸ் ல 50% டிஸ்கவுண்ட் பண்ணிடறேன்.

5.நம்ம பையன் 50 பைசா காசை முழுங்கிட்டான்.டாக்டர் கிட்ட உடனே போகணும்
சரி..டாக்டர் கிட்ட 50 பைசான்னு சொல்லாதே..நம்மை கேவலமா நினைப்பார்.5 ரூபாய் முழுங்கிட்டான்னு சொல்லு.

6.அம்மா- (மகனிடம்) நீ என் கைப்பையிலிருந்து காசு திருடினதை அப்பா கிட்ட சொல்லப் போறேன்
மகன்- சொல்லேன்.நானும் அப்பா பாக்கெட்டிலிருந்து நீ பணம் எடுத்ததை அப்பா கிட்ட சொல்றேன்.

Sunday, June 15, 2008

வாய் விட்டு சிரியுங்க - 11

தயாரிப்பாளர்-(இயக்குநரிடம்)நம்ம படத்திலே கிளைமேக்ஸ் எல்லோரும் நம்பும்படி இருக்கணும்
இயக்குநர்- வில்லன் கார்ல தப்பி ஓடறான்..ஹீரோ ஒரு ரோடு ரோல்லர் ல போய் அவனைப் பிடித்து விடுகிறான்.

2.என் முதலாளி சரியான நன்றி கெட்ட ஜன்மம்..எதெற்கெடுத்தாலும் வள் வள்னு விழறார்
வள் வள்னு விழறவர் எப்படி நன்றி கெட்ட ஜன்மமாய் இருப்பார்.

3.சிறுவன்(வீட்டுக்குவருபவரைப்பார்த்துவிட்டு) அப்பா..இந்த மாமாவிற்கு இரட்டை நாக்குன்னு சொன்னே ஆனா
ஒன்னுதான் இருக்கு

4.நகைச்சுவை எழுத்தாளராக கொடி கட்டி பறந்தீர்கள்..இப்போல்லாம்..நீங்க ஏன் நகைச்சுவை கதை எழுதறதில்லை?
இப்போ எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு

5.டாக்டர்..உங்ககிட்ட வர்ற பேஷண்ட்ஸ் குறைவுதான்..அதுக்காக வர்ற பேஷண்ட்ஸ் எல்லாம்..தன்கூட இன்னொரு
பேஷண்டை கூட்டிக்கிட்டு வரணும்னா எப்படி?

தந்தையர் தினம்

மனிதனாக பிறந்த அனைவரும் தனது தாய்,தந்தையருக்கு நன்றி உள்ளவராக இருக்க வேண்டும்.
நம் கடைமைகளை செய்ய வேண்டும்."அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" அவர்கள் உயிருடன் இருக்கும்
காலத்தில்..அவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொண்டு ..நம்மால் இயன்ற வசதிகளை செய்து தர வேண்டும்.
அவர்கள் நமக்காக செய்துள்ள தியாகங்களுக்கு ஈடு இணை எதுவுமில்லை..அவர்கள் மனம் கோணாமல்..
அவர்களை வைத்துக் காக்க வேண்டும்.
நமக்கு எல்லா நாட்களுமே அன்னையர் தினம்
எல்லா நாட்களுமே தந்தையர் தினம்
ஏனெனில் நாம் வாழும் நாட்கள் எல்லாமே அவர்கள் கொடுத்த நாட்கள்

Tuesday, June 10, 2008

மீசைகள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒரு விதம்

பரங்கியனுக்கு அடிப்பணியா
வீரபாண்டியன் மீசை
கப்பலோட்டிய தமிழனின்
தொங்கு மீசை
மீசையிலும் வெள்ளையனை
அணுகவிடா பாரதி மீசை
அவரது தாசனின்
அடர்த்தி மீசை
பகுத்தறிவு பகலவன்
பெரியாரின் தாடிமீசை
கர்ம வீரன் காமராஜின்
களையான மீசை
திருத்தணி மீட்ட
மாபொசியின்
முறுக்கு மீசை
டிகேசியின் இலக்கிய மீசை
கலைஞரின் தமிழ் மீசை
கருமீசை தெரியா
வைரமுத்துவின் மீசை
வாலியின் தாகூர் மீசைதாடி
தமிழனின் அழகு மீசை
பலவிதம் -அவற்றை ஒப்பிடாதீர்
அறிவிலிகளின்
கரப்பு மீசையுடன்

Sunday, June 8, 2008

நானும்..நடிகவேள் ராதாவும்..ரத்தக்கண்ணீரும்

M.G.R.,சுடப்பட்டதும்..ராதா தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகவும் வழக்கு நடந்து ..ராதாவும் தண்டிக்கப்பட்டு
சிறையிலிருந்து வெளிவந்த நேரம்.,ராதா அண்ணாமலைபுரத்தில் அவரது இல்லத்தில் தங்கியிருநதார்.மூட்டுவலியால்
அவதிப்பட்டு வந்தார்.
அந்த சமயத்தில்..எனது சபாவில் அவரது ரத்தக்கண்ணீர் நாடகம் போட்டால் என்ன..என்ற எண்ணம் தோன்ற
அவரை அவரது இல்லத்தில் சந்தித்து தேதி கேட்டேன்.என்னைப்பற்றி விசாரித்தார்.நான் state bankல் வேலை
செய்வதாகவும்..அம்பத்தூரில் 2 வருடங்களாக சபா நடத்திவருவதாயும் கூறினேன்.அவர் உடனே'தம்பி நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்கமாட்டீங்களே..என்று சொல்லிவிட்டு 'நீங்க என்ன ஜாதி" என்றார்.
எனக்கோ..இப்படி "பட்" டென்று கேட்கிறாரே..என ஆச்சர்யம்.உடன் சொன்னேன்.சரி என்றவர்..நாடகத்திற்கான
தேதியும் கொடுத்தார்.
ஒரு பெரிய கண்ணை கலரில் வரைந்து..அதிலிருந்து ரத்த நிறத்தில் கண்ணீர்த்துளிகள் வருவதுபோல..பிரமாதமாக
சுவரொட்டி போட்டு அம்பத்தூர் தெருக்களில் ஒட்டினேன்.
நாடகத்தன்று..காலையிலிருந்தே என் வீட்டிற்கு மக்கள் டிக்கட் வாங்க படையெடுத்தனர்.
மாலை...நாடகம் ஆரம்பிக்கும் நேரம் ராதா என்னைகூப்பிட்டு..இடைவேளையில் எனக்கு ஒரு மாலை போடு என்றார்.
நானும் சரி என தலையாட்டிவிட்டு....இவர் மரியாதையை கேட்டு வாங்குகிறாரே என எண்ணிக்கோண்டேன்.
இடைவேளையில்..சபா சார்பில் மாலை அணிவித்தேன்.பின் அவர் பேசினார்..
'M.G.R.,பற்றி குறிப்பிடும்போது மக்கள் கை தட்டினர்.சிவாஜி பற்றி குறிப்பிடும்போது வாளா யிருந்தனர்.ஏன்..இவருக்கு கை தட்டக்கூடாதா..என்றார்..பிறகு என்னைப்பற்றிக் குறிப்பிட்டார்.'இந்த பையன்.(என் ஜாதியை குறிப்பிட்டு) இந்த ஜாதி..ஆனாலும் தைர்யமா என் நாடகம் போடறான்..என்னை தெரிஞ்சவங்கக்கூட இப்போ
என்னைப்பார்க்கிறதை தவிர்க்கும்பொது ........ர ஜாதிப்பையன் தைர்யமா வந்து நாடகம் போடறியான்னு கேட்டான்.
அவனை பாராட்டறேன்னு சொல்லிவிட்டு தன் கழுத்தில் இருந்த நான் போட்ட மாலையை கழட்டி எனக்கு அணிவித்தார்.
என்னைப்பாராட்டத்தான்..இடைவேளையில் மாலை போட சொல்லியிருக்கிறார்.அவரை தப்பாக நினைத்து விட்டோமே என எண்ணினேன்.
பின்..பல சபாக்களில் நாடகம் தொடர்ந்தது.ஆனாலும் சிறையிலிருந்து வந்ததும் முதலில் போடப்பட்டது எனக்குத்தான் என்ற இறுமாப்பு இன்றும் எனக்கு உண்டு.

Saturday, June 7, 2008

வாய் விட்டு சிரியுங்க - 10

சுமதி டார்லிங்..உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்
ஆமாம்..இதையே எவ்வளவோ..தரம் சொல்லிட்டீங்க..ஒரு தரம் கூட செயல்படுத்தலை

2.வீடு கட்டணும்னு கடன் வாங்கினியே கட்டி முடிச்சுட்டியா?
ரூஃப்,அறைகள் எல்லாம் கட்டி முடிச்சுட்டேன்..இன்னும் அஸ்திவாரம் தான் பாக்கி

3.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கமில்லை எனக்கு..
பொய் சொல்லாதே..நேற்றுக்கூட வாழிக்காய் பஜ்ஜின்னு சொன்னே..ஆனா உள்ள
உருளைக்கிழங்குதான் இருந்தது.

4.முட்டாள்னு யாரையோ திட்டினியே..என்னையா?
சே..சே..ஊர்ல உன்னைத்தவிர வேற முட்டாளே இல்லையா என்ன?

5.உன்னோட அறிவுதான் டார்லிங் என்னை மயக்கிடுச்சு
நான் உன்னை லவ் பண்றதுக்கும் அதுதான் காரணம்
என்னைப்போல உன்னாலயும் பொய் சொல்ல முடியுதே

6.கள்ளச்சாராயம் விக்கற பக்கிரியின் பொண்ணை பெண் பார்க்க போனியே என்ன ஆச்சு
பொண்ணு எப்படியிருக்கா?
பீப்பாய் மாதிரி இருக்கா.

Friday, June 6, 2008

வாய் விட்டு சிரியுங்க - 9

1.எங்க வீட்லே எனக்கு ஷூகர்னு தெரிஞ்சதும் என்னை தெய்வத்துக்கு சமமா நினைக்க ஆரம்பிச்ச்ட்டாங்க
அப்படியா?
ஆமாம் ..எந்த இனிப்புப் பொருளையும் என் கண்ணுலேதான் காட்டறாங்க..அவங்க சாப்பிடறாங்க

2.அந்த படத்தயாரிப்பாளர் நீ கவிஞனே இல்லைன்னு என்னை அவமானப்படுத்திட்டார்
அப்படி என்னாச்ச்
நான் எழுதின கவிதையிலே ஒரு ஆங்கில வார்த்தைக் கூட இல்லையாம்...

3.வாஸ்து சாஸ்திரப்படி என் கணவர் பின்னால இருக்கிற ஜன்னலை முன்னாலே
வைக்க சொல்றார்
செஞ்சுட வேண்டியதுதானே
அவர் சொல்றது என் ஜாக்கெட்ல இருக்கிற ஜன்னலை.

4.ஆச்சர்யமா இருக்கே..உங்களுக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் குணமாச்சு
அது ஒண்ணுமில்ல டாக்டர்..நீங்க கொடுத்த மருந்து எதையும் நான் சாப்பிடலை.

5.நீங்க காபி,டீ எல்லாம் சாப்பிடக்கூடாது
வேறு என்ன சாப்பிடலாம்
எந்த எண்ணையும் கூடாது

6.படத்தோட கதை அங்கங்க தொய்யுதே
அது தொய்யாம சாஞ்சு பிடிக்க வேணும்னா கதாநாயகியா சாயாசிங்க போட்டுடலாம்.

Thursday, June 5, 2008

'சோ' வும்..அவரது கோபமும்

நான் அம்பத்தூரில் சபா நடத்திக் கொண்டிருந்த நேரம்.சமீபத்தில் 1974ல்(டோண்டு சார்..தாக்கம்)எனது சபாவின்
ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு..மேஜர் சுந்தரராஜனின் 'டைகர் தாத்தாச்சாரி'நாடகம் சென்னை பார்த்தசாரதி சபா ஹாலிலும்,'சோ'வின் 'யாருக்கும் வெட்கமில்லை' அம்பத்தூரிலும்(சென்னையிலிருந்து அம்பத்தூர்16km தூரம்)ஏற்பாடு செய்திருந்தேன்.முதல் நாள் நாடகம் முடிந்தது.அடுத்த நாள் 'சோ'நாடகம்.
6 மணி அளவில் அம்பத்தூர் வந்த "சோ' வை வரவேற்றேன்.காரிலிருந்து இறங்கிய அவர் என்னைப் பார்த்ததும்
முகத்தை திருப்பிக் கொண்டார்..சிறிது நேரம் கழித்து என்னைகூப்பிட்டு,கோபமாக"சோ உனக்கு கிள்ளுக்கீரையா?"
என்றார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.அவரே தொடர்ந்தார்'மேஜர் நாடகம் சென்னையில்..என் நாடகம் இவ்வளவு
தொலைவில்"என்றார்.அப்போதுதான் அவர் கோபத்துக்கான காரணம் தெரிந்தது.நான் சொன்னேன்'மேஜருக்கு இங்கு
gate collection இருக்காது..ஆனால் உங்களுக்கு இருக்கும்.அந்த collection ஐ வைத்து என் சபாவின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ளலாம்.அதனால்தான்'.அவர் பின் என்னிடம் ஏதும் பேசவில்லை.
நாடகத்திற்கு நல்ல கூட்டம்..நல்ல வசூல்..
நாடகம் முடிந்ததும் என்னை கூப்பிட்டார்.."எவ்வளவு gate collection என்றார்.சொன்னேன்(3000 என்று ஞாபகம்.அது அந்த காலத்தில் பெரிய அமௌண்ட்)'
சென்னையில் போட்டிருந்தால்..இன்னும் அதிகம் இருக்கும்..என்றவர்..தன் நாடகக்குழு நிர்வாகி திரு.ரங்காச்சாரி யை கூப்பிட்டு நம் city rate1000 வாங்கிக்கொள் போதும் என்றார்.(அம்பத்தூருக்கு குழு வந்த செலவே அதிகமிருக்கும்)
சோ விற்கு திடீரென கோபம் வரும்..வந்த வேகத்தில் மறையும் என்று ரங்காச்சாரி என்னிடம் கூறினார்.அவர் சொல்ல மறந்தது சோ பெருந்தன்மையானவர் என்பதை.

Wednesday, June 4, 2008

வாய் விட்டு சிரியுங்க - 8

1.என் மூளையை இன்ஷ்யூர் பண்ணலாம்னு இருக்கேன்
இல்லாததையெல்லாம் இன்ஷ்யூர் பண்ண மாட்டாங்களே

2.அதோ போறாரே அவர் கைலே ஆவி யை வைச்சிருக்கார்
அப்படியா? ஆச்சர்யமாயிருக்கே
இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கு..நான் சொல்ற ஆவி ஆனந்த விகடன் புத்தகம்

3.பீரோலே நான் பத்திரமா வைச்சிருந்த என் பேன்ட்,ஷர்ட் எல்லாம் காணோம்
நீங்க பத்திரமா வைச்சதெல்லாம் பாத்திரமா ஆயிடுச்சு

4.என்னை பொண்ணு பார்க்கவந்த அன்னிக்கே என் கணவர் கிரௌண்ட் வாங்கி இருந்தார்
எந்த ஏரியாவிலே?
அவர் தலையில்தான்.

5.என் கனவில் அவங்க கல்யணத்துக்கு முன்னாலே ஜோதிகா வந்துகிட்டு இருந்தாங்க.
இப்போ யார் வராங்க
அதற்கான தேர்வு நடத்திகிட்டு இருக்கேன்

6.அந்த எழுத்தாளரின் படைப்புகள் எல்லாம்..அற்புதமாய் இருக்கும்
நீஎதையாவது படிச்சு இருக்கியா?
அதுக்கு முன்னால அவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுச்சு

Tuesday, June 3, 2008

அதிபுத்திசாலி அண்ணாசாமியின் சந்தேகம்

அண்ணாசாமிக்கு திடீரென ஒரு சந்தேகம்..நம் நாட்டு நிதித்துறைப் பற்றி.
அங்கு யாருக்கும் எதுவும் தெரிவதில்லை என்கிறார்.
நிதி அமைச்சரைப் பார்க்கப் போகிறாராம்.
அவர் சந்தேகம் என்ன?
விவசாயிகளுக்காக 71000 கோடி கடன் ரத்து என்று சொல்கிறார்கள்.
நம் நாட்டில் மொத்த ஜனத்தொகை 112கோடி.
அவ்வளவு பேரும் விவசாயிகள் இல்லை.அவர்கள் விவசாயிகள்
என வைத்துக்கொண்டாலும்...அனைவருக்கும் ஒரு கோடி கடன் என்றாலும்
மொத்தம் 112 கோடிதானே கடன் இருக்கும்.ஆனால் நிதியமைச்சகம்
71000 கோடி என்று சொல்கிறார்களே...எங்கேயோ ஏதோ ஊழல் நடக்கிறதாம்..
நிதியமைச்சர் உடனே விசாரிக்க வேண்டுமாம்.

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்

1.அதி புத்திசாலி அண்ணாசாமி,ஒரு சமயம் அமெரிக்கா போனார்.அங்கு ஒரு அமெரிக்கன் ஒரு இடத்தை அவரிடம்
தோண்டச் சொன்னான்.100 அடி தோண்டியதும் ஒரு சிறு wire கிடைத்தது.உடனே அமெரிக்கன் 100 வருஷம்
முன்னமே எங்களிடம் ஃபோன் இருந்தது.என்றான்.அந்த அமெரிக்கன் ஒரு முறை இந்தியா வந்தான்.அவனை
அண்ணாசாமி ஒரு இடத்தை தோண்டச்சொன்னார்.ஒன்றும் கிடைக்கவில்லை.உடனே'பார்த்தீரா..400 வருஷம்
முன்னரே எங்களிடம் wireless இருந்தது என்றார்.

2.ஒரு சமயம் அண்ணாசாமி வட இந்தியா சுற்றுலா சென்றார்.அவருடன் அவர் மனைவியும்,மகனும் சென்றனர்.
அண்ணாசாமிக்கு lower berth மனைவிக்கு middle berth மகனுக்கு upper berth கொடுத்திருந்தார்கள்.
ஒரு ஸ்டேஷனில் காபி சாப்பிட அவரும்.மகனும் இறங்கினர்.அச்சமயம் தமிழ் தெரியா வட இந்தியன் வண்டியில்
ஏறி upper berth தில் படுத்துவிட்டான்.ரயிலில் ஏறிய அண்ணாசாமி தன் மகனிடத்தில் வேறொருவன் படுத்திருந்ததைப் பார்த்தார்.உடனே tte ஐப் பார்த்து தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கூறினார்.'see sir..that man sleeping top of my wife is not giving birth to my child'

3.ஒரு ஆங்கிலேயர் கொடுத்த ஒரு partyக்கு அண்ணாசாமி தன் மனைவி,மகன்,மகளுடன் சென்றார்.அந்த
ஆங்கிலேயனுக்கு தன் குடும்பத்தை அறிமுகப்படுத்தினார்.
I annasaamy
she mywife
boy my kid
girl my kidney

4.ஒரு சமயம் அண்ணாசாமி லண்டன் சென்று திரும்பி வந்தார்.பின் மனைவியிடம்..நான் பார்க்க வெளிநாட்டுக்காரன்
மாதிரியா இருக்கிறேன்? என்றார்.
மனைவியோ 'இல்லயே" என்றாள்
பின் மகனைக் கூப்பிட்டு 'நான் பார்க்க வெளிநாட்டுக்காரன் மாதிரியா இருக்கிறேன்?' என்றார்.
அவனும் 'இல்லயே' என்றான்.
உடனே அண்ணாசமி'லண்டனில் எல்லாரும் பொய் சொல்கிறார்கள்.என்னைப்பார்த்து வெளிநாட்டுக்காரன் மாதிரி இருக்கிறேன்னு பொய் சொல்றாங்க'என்றார்.

Monday, June 2, 2008

85 வயது இளைஞருக்கு நம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழக முதல்வரின் 85ம் பிறந்த நாளான இன்று அவர் பல்லாண்டு நீடூழி வாழ இறைவனை(இயற்கையை?) வேண்டுவோம்.
இந்த இளைஞரின் இன்றைய நிகழ்ச்சியை பாருங்கள்.
காலை7 மணி - அண்ணா நினைவிடம்
7.15 -பெரியார் நினைவிடம்
8 மணிக்கு-கோபாலபுரம் இல்லத்தில் வாழ்த்து பெறுதல்
(இதில் பல்வேறுஅரசியல் கட்சிகள் தலைவர்கள்,அரசு அதிகாரிகள்,திரைஉலக
பிரமுகர்கள் பலரும் வாழ்த்துவர்.)
9 மணிக்கு -அண்ணாஅறிவாலயம் -லட்ச்சக்கணக்காண தொண்டர்களை சந்திக்கிறார்
(இது 1 மணி வரை)
பின்னர் சி.ஐ.டி.காலனி வீட்டிற்கு செல்கிறார்
இரவு 7 மணிக்கு தீவுத்திடலில் பல மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம்.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடில் 3 இணை கமிஷனர்கள்,10துணைகமிஷனர்கள்,50 உதவி கமிஷனர்கள்
123 இன்ஸ்பெக்டர்கள்,182 சப் இன்ஸ்பெக்டர்கள்,1100போலீசார்,700 ஆயுதப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
(உபரிச்செய்தி. நான் நீண்டநாள் வாழ ஆசைப்படக்காரணம்..இன்னும் தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டிய து
பாக்கி இருக்கிறது என்று சொன்ன கலைஞர்'என் பிறந்தநாளில் யாசகம் கேட்கிறேன்..சேதுதிட்டத்தை நிறைவேற்றித்தாருங்கள்'என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.)

Sunday, June 1, 2008

வாய் விட்டு சிரியுங்க - 7

என் மாமனார் வீடு தரேன்னுட்டு என்னை ஏமாத்திட்டார்..
கல்யாணத்துக்கு முன்னாலே வீட்டோட மனைவியைத் தர்றதா சொன்னார்.
அப்புறம்தான் ஹௌஸ் ஒயிஃப்ங்கிறதை அப்படியே நேரடியா தமிழ்லே மொழி
பெயர்த்து சொல்லியிருக்கார்னு புரிஞ்சது

2.டாக்டர்- மக்கள் கிட்ட இப்ப எல்லாம் விழிப்புணர்ச்சி அதிகமாயிடுச்சு
நண்பர் - எப்படி சொல்றீங்க
டாக்டர்- தூக்கம் வரல்லேன்னு யாரும் இப்போ வர்ற்தில்லயே

3.காதலி- மழையே இல்லைன்னு என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றியே ..ஏன்?
காதலன் -கழுதைக்கு கல்யாணம் பண்ணினா மழை வருமாமே

4.விட்டு விட்டு வயிறு வலிக்கிறதுன்னு டாக்டர் கிட்ட போனியே என்னாச்சு
இப்ப விடமா வலிக்கிறது

5.நடிகை-(நிருபரிடம்) எனக்கு இன்னும் 5 வருஷம் கல்யாணம் கிடையாது
நிருபர்-உங்க வீட்ல அடுத்த வாரம்..கல்யாணம் இருக்குன்னு சொன்னாங்களே
நடிகை-அது என் மகளோட கல்யாணம்

6.நம்ம டைபிஸ்ட் வீணா கல்யாணம் பண்ணிக்கப் போறாளாமே
வீணா அவளுக்கு எதுக்கு கல்யாணம்

Thursday, May 29, 2008

வாய் விட்டு சிரியுங்க - 6

1.உங்க பையன் நிறைய மார்க் வாங்கியிருக்கான்..m.b.b.s. try பண்ணலாமே
அவன் கொஞ்சம் குள்ளம்..எம்பாம படிக்க முடியுமா?

2.நம்ம படத்திலே கதாநாயகன் ஒரு டெய்லர்..அதனாலே கதையிலே எங்கே எங்கே தொய்வு
விழுதோ அங்கங்க இழுத்து தைச்சுடுவார்.

3.அப்பா காக்காவிற்கு நாக்கு இருக்கா?
ஏண்டா
அம்ம சமைச்சதைப் போட்டா..சாப்பிட மாட்டேன்னு சொல்லுதே

4.கதை என்னன்னு சொல்லாம ஒரு படம் எடுத்தீங்களே..என்னாச்சு?
படம் ரிலீஸ் ஆகி தியேட்டருக்கு வந்தப்போ மக்களுக்கும் கதை என்னனு தெரியாமப் போச்சு

5.பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார்- பெண்ணுக்கு பாடத்தெரியுமா? ஒரு பாட்டு பாடச்
சொல்லுங்க..
பெண்- (பாடுகிறாள்)சின்ன வீடா வரட்டுமா?பெரிய வீடா வரட்டுமா?

6.உங்க கணவர் தூங்கும்போதும் கண்ணாடி ஏன் போட்டுக்கிறார்?
அப்பத்தான் கனவுலே வர்றவங்களையெல்லாம் நல்லாப் பார்க்க முடியுதாம்.

Wednesday, May 28, 2008

நாடகம் பொழுதுபோக்கா..கலையா - சொற்போர் -5

எந்த ஒரு நடிகரையும்,எந்த சமயத்திலும் காப்பி அடிக்கக்கூடாது.தனக்கென தனி பாணி வேண்டும்.காப்பியடிக்கும் கலை மட்டும் வேண்டாம்.
நாடகக்கலையை பொறுத்தமட்டில்..புதுமைக் கருத்து அல்லது மறுமலர்ச்சிக் கருத்து என்பது ரசிகர்களின் கை தட்டலின் வாயிலாக வெளிப்பட்டால் போதாது..பார்ப்பவர் உள்ளத்தில் அது பாய்ந்து நம் பண்புக்கேற்ற வகையில் அது செயலாக வெளிப்பட வேண்டும்.
கலை என்பது நன்மைக்காக வளர வேண்டும்.மனிதரின் அறிவை நல்ல வழியிலும் திருப்பலாம்.கெட்ட வழியிலும் திருப்பலாம்.நல்லதைவிட தீயதைத்தான் மனித மனம் விரைவில் ஏற்றுக்கொள்ளும் தன்மை வாய்ந்தது.ஆகவே பொழுது போக்கு என்ற பெயரில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் கூட மக்களின் நலன் கருதியே வரவேண்டும்.
நாடக கலாசாலைப்போல நல்ல கலாசாலை நீடுலகில் உண்டோ?என்றார் கவிமணி.ஆம்..நாடகத்தை நல்ல கலாசாலையாக அந்த கவிஞன் நினைத்தான்.
இக்கருத்தின்படி நாட்டில் நாடக நற்கலாசாலைகள் அமைக்க வேண்டும்..நடிப்புக்கலையை போதிக்க வேண்டும்.
அதன் மூலம் மக்களின் கண்களையும்,செவிகளையும் கவர்ந்து,அவர்களுடைய வாழ்வை வளமுடையதாக்க
வேண்டும்.தூய்மைப்படுத்த வேண்டும்.
புராண நாடகம்,இதிகாச நாடகம்,வரலாற்று நாடகம்,கற்பனை நாடகம்,பக்தி நாடகம்,இலட்சிய நாடகம்,சமுதாய நாடகம்,சமுதாய சீர்திருத்த நாடகம்,தேசிய நாடகம்,நகைச்சுவை நாடகம் என நாடகங்கள் நடத்தப்பட வேண்டும்.
நடிப்புக்கலைக்கு உரிய தனிச்சிறப்பு என்ன தெரியுமா?ஒரு ஓவியன்..தன் கலையை செய்து முடித்ததும்..அவன்
வேறாகவும்..அவன் வரைந்த ஓவியம் வேறாகவும் அமைந்து விடுகிறது.அதுபோன்றதுதான் சிற்பக்கலையும்.ஆனால்
நடிகன் நிலை முற்றிலும் மாறுபட்டது.நடிகன் வேறாகவும்..அவன் படைப்பு வேறாகவும் இருக்க முடியாது.நடிகன் படைக்கும் பாத்திரம் அவனுக்குள்ளேயே அடங்கிக்கிடக்கிறது.நடிகனும் அவனே..பாத்திரமும் அவனே..
இந்த சிறப்பை கலைஞர்கள் அனைவரும் உணர வேண்டும்.இது நடிப்புக் கலைக்கே உரிய தனி சிறப்பாகும்.
நாடகத்தில் சொல்லப்படும் கதை அழகோடு,கலையழகோடு..மனித குலத்தின் நல்வாழ்வுக்கும் வழிகோல வேண்டும்.



கலை வழியே-நாடகக் கலை வழியே
அன்பு வழி - அறவழி வளர வேண்டும் நம் நாட்டில்
நன்றி..வணக்கம்

(சென்னை முத்ரா சபாவில் நடைபெற்ற சொற்போரில் ..நாடகம் ஒரு கலைதான் என்று நான் ஆற்றிய
உரை இப்பகுதியுடன் நிறைவுப் பெறுகிறது)

Tuesday, May 27, 2008

வாய் விட்டு சிரியுங்க-5

1.நேற்று டைபிஸ்ட் நளினி ஏன் உன்னை திட்டினாள்?
அவளோட மாமியார் மறைவுச் செய்தி கேள்விப்பட்டு'உன் மகிழ்ச்சியில்
பங்குக் கொள்கிறேன்' என்று சொன்னேன் அதனால்தான்..

2.கோட்டையை கைப்பற்றுவோம்னு தலைவர் பேசினாரே..என்னாச்சு
கோட்டையை கோட்டை விட்டுட்டார்.

3.தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை சிம்பாலிக்கா எப்படி தெரிவிச்சிருக்கார்
தெரியுமா?
எப்படி
மகாநாட்டிற்கு தொண்டர்கள் பிணி பிணியாய் வருக என்று..

4.நேற்று என் மாமியார் என்னை கட்டிப்பிடிச்சு ஆனந்தக்கண்ணீர் விட்டாங்க
அப்படி என்ன பண்ணினே?
அவங்களுக்கு சமமா நானும் சண்டை போடறேனாம்..

5.முதல் நாளே நீங்க எடுத்த படம் நொண்டுதே
அதனால்தான் படத்துக்கு சுளுக்கு என்று பெயர் வைக்க வேண்டாம்னு சொன்னேன்.

6.எங்க வீட்ல ஒரே நேரத்திலே எங்க பாட்டி,எங்க அம்மா,என் பொண்ணு வாந்தி
கங்கிராட்ஸ்..உங்களுக்கு சித்தப்பா,தம்பி,பேரன் எல்லாம் பிறக்கப்போறாங்களா?

நாடகம் பொழுதுபோக்கா..கலையா?சொற்போர் - 4.

நடிப்புக் கலையைப் பற்றி சற்று பார்ப்போம்.வீட்டில் குழந்தைகள் நாய்,பூனை இவற்றுடன் பயமின்றி விளையாடுகின்றன.அந்த நாயும்,பூனையும் தன் கூரிய நகங்களைக் கொண்டு..குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி எப்படி விளையாடுகின்றன..அதுவும் அவற்றின் நடிப்புத்தானே?
பெண் குழந்தைகள் பொம்மைகளை வைத்துக் கொண்டு..சமையல் செய்வது போல விளையாடுகின்றனவே..
அதுவும் நடிப்புத்தானே?
உலகம் ஒரு நாடக மேடை..நாம் அனைவரும் நடிகர்கள் என்கிறார்களே..அப்படியெனில் நாம் ஒவ்வொருவரும் நடிகர்கள்தானே?நடிப்புக்கலை தெரிந்தவர்கள் தானே?
ஒரு பிச்சைக்காரன்..தனது..நல்ல காலை மடக்கி முடம்பொல காட்டுகின்றானே..அது அவன் நடிப்பு.நன்கு தெரியும்
கண்களை..தெரியாதது போல குருடாக்கிக் காட்டுகின்றானே..அதுவும் நடிப்புத்தானே?
மனிதன் மொழியை உருவாக்குவதற்கு முன்..பேசத்தொடங்குமுன்..நடிப்பின் மூலம் தானே தன் எண்ணங்களை
வெளிப்படுத்தி இருப்பான்.ஹிந்தி தெரியாத நாம் இன்றும் வடக்கே சென்றால்.. நெருக்கடி சமயங்களில்..நடிப்புத்
தானே நம்மை காப்பாற்றி உதவி செய்கிறது.புரிய வைக்க வேண்டியதை கை கால்கள் அசைவு மூலம் புரிய
வைப்பது கலைதானே.நடிகனுடைய கண்கள்தான் மற்ற உறுப்புக்களை விட மிகவும் முதன்மையானது.
கண்கள் இருளிலே ஒளியாக..நடிப்பிலே உயிராக விளங்குகின்றன என்று சொல்லலாம்.சபையிலிருக்கும் மக்கள்
நடிகனின் பாத்திரத்தின்தன்மையை புரிந்துக் கொள்கிறார்கள்.ஒவ்வொரு நடிகனும் நடிப்புக் கலையில் தேர்ச்சிபெற
பேசும் கண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
மேடையில் நடிக்கும் போது நடிகன் ஒருவன் அதற்குரிய பாவத்தைக் கண்களில் காட்டாது..வேறு எங்காவது
சுழல விட்டுக் கொண்டிருந்தால் சுவை கெட்டு விடும்.பாவத்தைக் காட்டும் கலையை பயில வேண்டும்.
அழும் போது அழகாக அழுவது ஒரு கலை.கோபம் கொண்டாலும் அழகாகக் கோபப் பட வேண்டும்.எந்த வகையிலும்
தன்னை விகாரப்படுத்திக் கொள்ளக்கூடாது.விகாரப்படுத்திக் கொள்ளாமல் கோபப்படுவது ஒரு கலை.குரல் பயிற்சி
..மிக முக்கியமானது.வார்த்தைகளிலே ஏற்றத்தாழ்வு இருக்க வேண்டும்.குழைவு இருக்க வேண்டும்.அன்பு காட்டி
பேசுவதும்..ஆத்திரத்தோடு பேசுவதும் குரலிலேயே தெரிய வேண்டும்.அடுத்த படியாக பேச்சிலே தெளிவு இருக்க
வேண்டும்.அதுவும் ஒரு கலை.ஒரு பாத்திரத்தின் வசனங்களை மனப்பாடம் செய்யும் போது வார்த்தைகளை
நன்கு கவனிக்க வேண்டும்.எந்தெந்த இடத்தில் தெளிவும்..அழுத்தமும் வேண்டும் என உணர வேண்டும்.ஒரு நடிகனின் பேச்சிலிருந்து மற்றொரு நடிகனுக்கு பேச்சு தொடங்கும்.அது போன்ற சமயங்களில் அழுத்தமாக
சொல்லாவிட்டால் மக்களுக்கு புரியாது.அழும் காட்சிகளில் உண்மையாக அழக்கூடாது.அழுதால் பேச்சு தெளிவாக
இருக்காது.அழுகை நடிப்பாக இருந்தால்தான் பேச்சு தெளிவாக இருக்கும்.அப்படி அழ தெரிந்திருக்க வேண்டியது
ஒரு கலை.
(தொடரும்)

Monday, May 26, 2008

வாய் விட்டு சிரியுங்க -4

1.என் மனைவி எப்பவும் பணம்..பணம் என்று நச்சரிக்கிறாள்
நீ கொடுக்கற பணத்தை எல்லாம் என்ன செய்யறா?
யாருக்குத் தெரியும்? இதுவரை நான் கொடுத்திருந்தாத்தானே...

2.டாக்டர்- உங்களுக்கு வந்திருக்கிறது மெமொமோமன்டின் வியாதி
நோயாளி-அது என்ன வியாதி
டாக்டர்- யாருக்குத்தெரியும்?

3.நிருபர்-(நடிகையிடம்) உங்கள் வயது என்ன?
நடிகை-இருபத்தினான்கு
நிருபர்-(சரியாக காதில் வாங்காததால்)திருப்பச் சொல்லுங்க
நடிகை-திருப்பச்சொன்னாலும் இருபத்தி நான்கு தான்
நிருபர்-ஓஹோ 42ஆ

4.கணவன்_(மனைவியிடம்) வர வர t.v நிகழ்ச்சி எல்லாம் போரடிக்க ஆரம்பிச்சிடிச்சு..உனக்கு?
மனைவி- உங்களைவிடவா எனக்கு tv

5.தந்தை-(மகனிடம்)நீ இப்படி படிக்காம திரிஞ்சா உருப்பட மாட்டாய்
மகன்-உங்கப்பா உங்களை சொன்னது உங்க கேஸ்ல வேணும்னா பலிச்சிருக்கலாம்..நீங்க
சொல்றது என் கேஸ்ல பலிக்காது

6.தமிழ் டீச்சரை காதலிச்சது தப்பாப்போச்சு
ஏன்
லவ் லெட்டர் எழுதினாக்கூட எழுத்துப்பிழை,சந்திப்பிழைன்னு
எதாவது தப்பு கண்டுபிடிக்கிறா..

நாடகம் பொழுதுபோக்கா..கலையா -சொற்போர் - பகுதி3

நடிகர்களிடையே பங்குபெறுபவர்கள் கலைஞர்கள்.நாடகக்கலை சிறப்புற இவர்கள் முழு ஒத்துழைப்பும் தேவை.
நடிகர்களிடையே ஒழுங்கும்..கட்டுப்பாடும் இருக்க வேண்டும்.நாடகத்தில் நடிகன் நவரசங்களையும்
காட்ட வேண்டும்.அதாவது சுபாவத்தில் சாதுவாக இருப்பவன்..நடிக்கும் போது..காதல்,வீரம்,சிரிப்பு,கோபம்,
வியப்பு,இழிப்பு,சோகம்,பயம்,சாந்தம் ..இப்படி நவரசங்களையும் காட்ட வேண்டும்.அந்தக் கலை அவனுக்குத்
தெரிந்திருக்க வேண்டும்.அதனால்தான் நாடகத்தை கலை என்கிறோம்.நாடகங்களின் தந்தை என போற்றப்பட்ட
பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் 'நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி' என்று ஒரு புத்தகமே எழுதியுள்ளார்.
எங்கேனும் அப்புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படியுங்கள்.
பெர்னாட்ஷா...எப்போது உலகப் புகழ் பெற்றார் தெரியுமா?
நாடகங்கள் எழுதி செல்வாக்கு பெற்ற பின்னர்தான்..சிறுகதை,நாவல் எழுதுவதைவிட நாடகம் எழுதுவது கடினம்.
நாடகம் மக்களுக்கு அதிகப் பயனைத் தரக்கூடியது என்பது உண்மையான கூற்று.இவ்வளவு பெருமையான
நாடகக்கலையை வெறும் வேடிக்கை நிகழ்ச்சியாகக் கருதக்கூடாது.நல்ல நாடக நிகழ்ச்சிகள் உங்கள் உள்ளத்தை
உயர்த்திச் சென்ற கால சிந்தனைகளையும்,நிகழ்காலத்து உண்மைகளையும்,வருங்காலத்தின் வளமைகளையும்
எடுத்துக் காட்டுகின்றன.ஷேக்ஸ்பியரின் ஹாம்லட் நாடகம்..உங்களுக்குத் தெரிந்திருக்கும்.அந்த நாடகத்தினுள்
ஒரு நாடகம் வரும்.தன் தந்தையைக் கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க எண்ணுகிறான் ஹாம்லட்.
அதற்கு நாடகம் தான் நல்ல வழி என்று எண்ணி ..உணர்ச்சி மிக்க நடிகர்களைக் கொண்டு தன் தந்தையின்
கொலை நிகழ்ச்சியை நாடகமாக்கி நடிக்க வேண்டும்.தன் சிற்றப்பன் கிளாடியசும்,தன் அன்னையும் அதை
பார்க்கவேண்டும்.அவர்கள் மன உணர்ச்சி எப்படி மாறுகிறது எனப் பார்க்க வேண்டும் என விரும்புகிறான்.
தானே, கதை எழுதி..நடிகர்களை நடிக்கச் சொல்கிறான்.நாடகம் பார்க்கும் சிற்றப்பன் முகம் மாற..
அவனே கொலையாளி என காண்கிறான் ஹாம்லட்.
நாடகத்தின் மூலம் ஒரு கொலையாளியையும் கண்டுபிடிக்கலாம் என்கிறார் ஷேக்ஸ்பியர்.
நம் நாடு சுதந்திரம் அடைய..நாடகங்கள் ஆற்றிய பணியை யாரும் மறுக்கவோ,மறக்கவோ முடியாது.
பேசும்படம் வந்த போது..நாடக மேடை இறந்துவிடும் என்றார்கள்.இன்றும் நாடகங்கள் அழிந்து வருகிறது
என்கிறார்கள்.ஆனால்..அது அழியாது..
நாடக மேடையை நல்ல முறையில் கையாண்டால்..அதை யாராலும் அழிக்கமுடியாது.
இனி..நடிப்புக்கலைப் பற்றிப் பார்ப்போம்...
(தொடரும்)

Saturday, May 24, 2008

நாடகம் பொழுதுபோக்கா..கலையா சொற்போர்-2

முதன் முதலில் பண்டைக்காலத்தில் நடகக்கலை எப்படி தோன்ற ஆரம்பித்தது?
நம் முன்னோர்கள்..மரத்தால் பொம்மைகளை செய்து அவற்றை ஆடி..ஓடி விளையாட வைத்தார்கள்.
பின்னர் மண்ணாலும்..துணியாலும் மனிதர்களைப்போல் அழகான பொம்மைகள் செய்து அந்த பொம்மைகளின் கை..கால்..தலை..முதலியவற்றை கயிற்றால் கட்டி..பின்னர் ,,அதற்கு பொம்மலாட்டம் என பெயர் வைத்தனர்,இது பொம்மலாட்டக்கலை.நாள் பட நாள்பட இப்படி உயிரில்லா பொம்மைகளை கொண்டு நடத்துவதை விட உயிருள்ள மனிதர்களுக்கு வேடம் போட்டுஇந்த விளையாட்டை அவர்களைக் கொண்டு நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்ற
எண்ணம் தோன்ற..இன்று நாம் காணும் நாடக விளையாட்டு தோன்றியது.அதனால் தான் கிராமங்களில்
நாடகத்தை விளையாட்டு என்கிறார்கள்.அத காரணமாகத்தான் நாடகத்தை ஆங்கிலத்தில் play என்கிறோம்.
மனிதன் தன் எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளியிடும் ஒலிக்குத்தான் மொழி என்று பெயர்.தமிழ் மொழியில் இதை விளக்க முத்தமிழை வகுத்தார்கள்.
அதாவது....இயல்..இசை..நாடகம்
நான் இப்போது பேசிக்கொண்டிருப்பது வார்த்தைகளால்..இது இயல்
இதையே ஒரு பாட்டாக நான் பாடினால் அது இசை
இயலும்..இசையும் மேடையில் சேரும்போது..அதுதான் நாடகம்.
இயல்..இசை..இரண்டும் சேர்ந்தால் நாடகம்.
ஆகவே தான் இயல்..இசை..நாடகம்..என நாம் நாடகத்தை கடைசியில் வைத்தோம்.
ஆம்..நாடகத்தை ஏன் கலை என்கிறோம்?ருசிக்கத்தக்கது..ரசிக்கத்தக்கது..உணரத்தக்கது..மகிழத்தக்கது
எல்லாவற்றையும் நாம் கலை எங்கிறோம்.
ஆய கலைகள் அறுபத்தினான்கினையும் என சரஸ்வதியை ஔவை விளிக்கிறார்.
மகிழத்தக்கதான கலை-மன்மதக்கலை
ருசிக்கத்தக்கது-சமையல் கலை
பார்த்து ரசிப்பது-ஓவியக்கலை
மகிழத்தக்கது-இசை மற்றும் ஓவியக்கலை
ரசிக்கத்தக்கது-நாடகக்கலை
நாடக்கலையில் பங்குபெறுபவர்கள் கலைஞர்கள்.நாடகக்கலை சிறப்புற இவர்கள் முழு ஒத்துழைப்பும் தேவை.
இவை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்
(தொடரும்)

Friday, May 23, 2008

நாடகம் பொழுதுபோக்கா? கலையா?நடந்த சொற்போரில் நான் ஆற்றிய உரை

இலக்கியம் என்றால் படித்து மகிழ்வது.
நாடக இலக்கியம் என்றால் பார்த்து மகிழ்வது.
நாடகம் கலைகளுக்கெல்லாம் அரசன்.மக்கள் பயன்படுத்தும் ஒரு மகத்தான கலை.
எது ஒருவனை மகிழ்விக்கிறதோ..அது கலை.எது சமுதாயத்தை அப்படியே பிரதிபலிக்கிறதோ அது கலை.
மிகைப்பத்தப்படாதது எதுவோ..அது கலை.அதனால் தான் தத்ரூபமாக வரும் படங்களை art film
என்கிறோம்.நாடகங்களை நாடகக்கலை என்கிறோம்.
நாடகம்...நாடு+அகம்..நாட்டை அகத்தில் கொண்டதே நாடகம்.அதாவது நாட்டின் சென்ற காலத்தையும்,நிகழ்காலத்தையும் தன்னகத்தே காட்டுவதால்..நாடு..அகம்..நாடகம் என பெயர் பெற்றது எனலாம்.
நாடு..அகம்..அதாவது அகம் நாடு..உன்னுள் நோக்கு,உன்னை உணர்..சுருங்க ஒரு வரியில் சொல்ல
வேண்டுமென்றால்..நாடகம் உலக நிகழ்ச்சிகளை காட்டும் கண்ணாடி எனலாம்.
நாடகக் கலை என்பது என்ன? சிந்தித்துப் பாருங்கள்..
நாம் வெளியே போகும்போது எத்தனையோ காட்சிகளைப் பார்க்கிறோம்.ரசிக்கிறோம்.சில காட்சிகள்
நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன.
அப்படிப் பதிந்துவிட்ட காட்சியை ஒரு ஓவியன் ஓவியமாக வரைகிறான்.
நம் வீட்டில் குழந்தைகள் செய்யும் குறும்புகளை..மழலை பேச்சுகளை எப்படி ரசிக்கிறோம்.அந்த குழந்தையை
புகைப்படம் எடுத்து..அதைப்பார்த்து எவ்வளவு மகிழ்கிறோம்?கடைகளில் பலகாய்கறிகளைப் பார்க்கிறோம்.
ஆனால் அவற்றை அதிசயமாகவோ..ஆர்வமாகவோ..பார்ப்பதில்லை.ஆனால் அவற்றை மண்ணாலோ..
காகிதத்தாலோ..செய்து வர்ணம் பூசி பார்க்கும் போது..அடடே..நிஜ மாம்பழம் போல இருக்கிறதே
என மகிழ்கிறோம்.
இப்படி நாம் தினசரி பார்க்கும் காட்சிகளை ஓவியமாகவோ..புகைப்படமாகவோ..மண்ணால் உருவான
படைப்புகளாகவோ பார்க்கும் போது தனி மகிழ்ச்சி அடைகிறோமே..அது ஏன்? அந்த உணர்ச்சிக்குப் பெயர் என்ன?அதுதான் கலை உணர்வு.
முதன் முதலில் பண்டைக்காலத்தில் நாடகக்கலை எப்படி தோன்ற ஆரம்பித்தது?
(அடுத்த பதிவில் பார்க்கலாம்)

Friday, May 9, 2008

வாய்விட்டு சிரியுங்க

1.நேற்று கச்சேரியிலே பாகவதர் அமிர்தவர்ஷினி ராகம் பாடினதுமே மழை வந்ததாமே!
ஆமாம்..பாகவதர் வாயைத் திறந்ததுமே..முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தவங்க
மேலே எல்லாம் மழைச்சாரல்.

2.உன்னோட கணவர் இன்னிசைக் கச்சேரியில் 'ட்ரம்ஸ்'வாசிப்பார்னு சொன்னே..ஆன வீட்ல
ஒரு சத்தத்தையும் காணுமே..
'ட்ரம்ஸ்'எல்லாம் திருப்பிப் போட்டு தண்ணீர் பிடிச்சு வைச்சிருக்கேன்.

3.கடம் வித்வான் வரலியேன்னு கிரிக்கட் ஆடறவனை அழைச்சுண்டுப் போனது
தப்பாப் போச்சு
ஏன்? என்னவாச்சு?
கடத்தைத் தூக்கிப்போட்டு பிடிக்கிறேன்னுட்டு..தூக்கிப்போட்டு பிடிக்காம கோட்டைவிட்டுட்டான்.

4.நேற்று என் பையன் எதிரில்..வாசல் கதவு 'கீரிச்..கீரிச்' நுசத்தம் போட்டப்போ எண்ணை போட்டது
தப்பாப் போச்சு.
ஏன் அப்படி?
இன்று நான் வயலின் வாசிச்சு முடிந்ததும்..என் வயலினுக்கு எண்ணை போட ஆரம்பிச்சுட்டான்.
5.போன வாரம்தான் உங்க குழந்தைக்கு காது குத்தறோம்னு விடுமுறை கேட்டீங்க..இப்ப திரும்ப
விடுமுறை கேட்கறீங்களே?
போன வாரம் ஒரு காதுதான் குத்தினோம்..இப்போ இன்னொரு காதை குத்த்ப்போறோம்.

Monday, May 5, 2008

அடுத்த முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக அறிவிப்பு

நேற்று சட்டப் பேரவையில் தொழில்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடந்தது.இதற்கு முதல்வர் கலைஞர்
சார்பில் ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.இது ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கான ஒரு பயிற்சி எனத் தெரிகிறது.
இதற்கான பயிற்சிகள்'படிப்படியாக மேற்கொள்ளப்படும்' என்றார் முதல்வர்.ஸ்டாலின் பேசிமுடித்ததும்'நான் பேசியது
சரியா?'என தந்தையைப் பார்த்து கேட்டதும்,கலைஞரும் 'நன்றாக செய்தாய்"என பாராட்டினாராம்.கலைஞரின்
மகள் கனிமொழியும்,தன் சகோதரன் ஸ்டாலின் பேச்சைக் கேட்க ராஜ்யசபாவிற்கும் போகாமல் நேற்று சட்டசபைக்கு
வந்திருந்தார்.
வாழ்த்துக்கள் வருங்கால முதல்வரே!!

Friday, May 2, 2008

வாய் விட்டு சிரிங்க.. நகைச்சுவை

1. திருமணம் ஆனப்பிறகு நம்ம காவ்யாவுக்கு கர்வம் ரொம்ப அதிகமாயிடுச்சு
ஏன்?
அவ கணவன் அருமையா சமைக்கிறானாம்.

2.காலை எட்டிலிருந்து ஒன்பது வரை என் மனைவிக்கு செய்திகள் கேட்டாகணும்
டி.வி.லியா
எங்க வீட்டு வேலைக்காரி சொல்ற செய்திகளைத்தான்

3.காதலன்(காதலியிடம்)மழை பெய்யணும்ங்கிறதுக்காக என்னை கல்யாணம்
பண்ணிக்க சொல்றியே...ஏன்?
காதலி- கழுதைக்கு திருமணமானா மழை வரும்னு சொல்லுவாங்களே!

4.மெகா தொடர் இயக்குநரை காதலிச்சியே..என்ன ஆச்சு?
எப்ப திருமணம்னா தொடர் முடியட்டும்னு சொல்றார்.

5.என் காதலர் M.L.A., ஆனதும் என்னையும் அவர் தொகுதியா நினைச்சுட்டார்
என்ன சொல்றே
என்னையும் சுத்தமா மறந்துட்டார்.
6.செவிக்குணவில்லாத போது வயிற்றுக்கு கொடுத்தால் போதும்னு சொல்றாங்களே
..செவிக்கு என்ன மாதிரி உணவு கொடுக்கணும் டாக்டர்

7.உன் பாட்டியை ஆம்புலன்சிலே தூக்கிக்கிட்டு எங்கே போறே?
பாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு ...லீவு கேட்டா அதிகாரி நம்பமாட்டேன்னு சொல்றார்.
அதான்.

Wednesday, April 30, 2008

இவரை தெரிந்துக் கொள்ளுங்கள் - காமராஜ்

காமராஜின் அன்னை நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையாய் இருந்தார்.மதுரையில் ஒரு விழாவில் கலந்துக்கொள்ள வந்த காமராஜ்,அன்னையைப் பார்க்க வந்தாராம்.தன் மகனை (இறுதியாக?!)பார்த்த தாய் 'ஒரு வாய் சாப்பிட்டுட்டு
போ'என்றாராம்.தாயின் கண்களில் கண்ணீரைப்பார்த்த தலைவர்..என்ன நினைத்தாரோ 'சரி' என்றபடி அடுக்களைக்குள் நுழைந்து, அவசர அவசர மாக சிறிது சாப்பிட்டு எழுந்தாராம்.பின் தாய் சந்தோஷமாக விடை கொடுத்தாராம்.ஆமாம்..இதில் என்ன செய்தி?என்கிறீர்களா? காமராஜ் தன் தாயைப் பார்ப்பது அதுதான் கடைசி தடவை.
மேலும் அவர் வீட்டில் அவர் சாப்பிட்டு 25 வருஷங்களுக்கு மேலிருக்குமாம்.

Tuesday, April 29, 2008

இவரை தெரிந்துக் கொள்ளுங்கள்-காமராஜ்

1954 முதல் 1963 வரை தொடர்ந்து 10 ஆண்டு காலம் தமிழக முதல்வராய் இருந்தவர் காமராஜ்.ஒருவரே தொடர்ந்து
பதவி வகிப்பது சரியல்ல என்று காமராஜ் திட்டத்தில் முதலில் பதவி விலகிய தலைவர் இவர் மட்டும்தான்.
காந்தியைப்போல் ஏழை எளிய மக்களிடம் பற்றி கொண்டவர்.இவர் மறைந்த போது ஒரு அமெரிக்க பத்திரிகை என்ன எழுதியது தெரியுமா?
இந்தியாவின் கடைசி காந்தியவாதி இறந்தார்
எவ்வளவு உண்மையான வரிகள்.

Thursday, April 24, 2008

இறைச்சி உண்பதும்,புகை பிடிப்பதும் சீர்திருத்த நோக்கம்(?!)- கலைஞர்

விவேகானந்தர் இல்லத்தை இடிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என சட்டசபையில் நேற்று கலைஞர் கூறினார்.
பகுத்தறிவு இயக்கத்தின் கருத்துக்களை பெரியார்,அண்ணா கருத்துக்களை பெரும்பகுதி எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர்.அப்படிப்பட்டவரிடம் நாங்கள் ஏன் விரோதம் பாராட்ட வேண்டும்?விவேகானந்தர்,மூட நம்பிக்கை,ஜாதி வெறியை சாய்த்தவர்.மத வெறிக்கு ஆளாகாதவர்.அவர் இறைச்சி உணவு சாப்பிடுபவர்..புகை பிடிப்பவர்..ஆனால் இவை எல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்றும்,மனம் சுத்தமாக இருந்தால் போதும் என சீர்த்திருத்த நோக்கங்களுடன்
செயல் பட்டவர்(?!)(அன்புமணி கவனிக்க)அப்படிப்பட்டவர் பெயரில் உள்ள மண்டபத்தை இடிப்போமா? என்றார்.ஆனால், நமக்கு ஒரு சிறு சந்தேகம்.. நீங்கள் சொல்லும் அய்யன் திருவள்ளூவர் புலால் உண்பவரிடம் அருளுடைமை
இருக்காது என்கிறாரே..அவர் சீர்திருத்த வாதி இல்லையோ?

Thursday, April 17, 2008

யாரோ சொன்னார் கேட்டேன்அதை உன்னிடம் சொன்னேன்

..1.அழகு குணத்தால் அணி பெறுகிறது
இனம் சீலத்தால் அணி பெறுகிறது
கல்வி பயன்படுத்துவதால் அணி பெறுகிறது
செல்வம் அனுபவிக்கப் படுவதால் அணி பெறுகிறது

2.பணம் இல்லாததால் ஒருவன் தாழ்வடைவதில்லை.
செல்வந்தர்கள் எல்லாம் உயர்ந்தோர் என்பதுமில்லை
கல்வி எனும் ரத்தினம் இல்லாதவன் எல்லாப் பொருளிலும் தாழ்ந்தவனே
என்பதில் ஐயம் இல்லை.

3.பயம் நம் எதிரே வராத வரைக்கும்
பயந்துக்கொண்டே இரு.அது வந்து விட்டால் கண்டதுமே
அதனை சந்தேகப்படாமல் அடித்து தொலைத்துவிடு.

4.மன அமைதியைவிட உயர்ந்த தவம் வேறில்லை.மகிழ்ச்சியை விட
உயர்ந்த இன்பம் வேறீல்லை.ஆசையைவிட உயர்ந்த நோய் ஒன்றுமில்லை.
கருணையைவிட உயர்ந்த தருமம் வேறில்லை

5.வெட்டி நறுக்கப்பட்டாலும் சந்தனமரம் நறுமணம் இழக்காது.முதுமை எய்தினும் கூட
யானை தன் விளையாட்டை விடாது.ஆலையில் இட்டுப் பிழிந்தாலும் கரும்பு
இனிமையை விடாது.நற்குடிப் பிறந்தோர் வறுமையால் கெட்டழிந்தாலும்
ஒழுக்க குணங்களைக் கைவிட மாட்டார்கள்.

Sunday, April 6, 2008

ஒகேனக்கல் விவகாரம் ஒரு சிறு அலசல்

எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு-கலைஞர்
தமிழ் திரை உலகமே வீறுகொண்டு எழுந்தது.மாபெரும் உண்ணாவிரதம்.
பெங்களூரு தமிழ் பட தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
தமிழ்நாட்டு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன.
வக்கீல்கள் போராட்டம். கன்னடர் நடத்தும் உணவு விடுதிகள் இவ்வளவு நாட்கள் சாப்பாடு போட்டதை மறந்து
அடித்து நொறுக்கப்பட்டன.
முளையிலேயே கிள்ளிவிடவேண்டும் ரஜினி பேச்சு.
ராஜ்குமாரை வீரப்பன் பிடித்து வைத்திருந்த போது உங்கள் கண்ணீர் துடைத்த கலைஞருக்கு தண்ணீர் இல்லையா?வாலி பேச்சு.
இப்படி இந்த பதிவு மூலம் எழுதிக்கொண்டே போகலாம்.
கடைசியில் என்ன நடந்தது?
வழக்கம்போல் தமிழன் வாய் மூடி மௌனியானான்.
கர்நாடகாவில் மீண்டும் நுழைந்த கிருஷ்ணாவிற்கு முதல் வெற்றி.
கலைஞரே!! தமிழனின் பொறுமை எல்லைக்குள்தான் இருக்கிறது என எண்ணி விட்டீர்களா?
தேர்தல் முடிந்து எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சுமூக தீர்வு ஏற்படும் என எண்ணுகிறீர்களா?
திடீர் என மனம் மாறியதற்கு காங்கிரஸ் கொடுத்த பிரஷரா?
தமிழனை வெட்கி தலை குனிய வைத்து விட்டீர்களே!!