Monday, August 4, 2008

'சோ' வும்..அவரது கோபமும்

நான் அம்பத்தூரில் சபா நடத்திக் கொண்டிருந்த நேரம்.சமீபத்தில் 1974ல்(டோண்டு சார்..தாக்கம்)எனது சபாவின்
ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு..மேஜர் சுந்தரராஜனின் 'டைகர் தாத்தாச்சாரி'நாடகம் சென்னை பார்த்தசாரதி சபா ஹாலிலும்,'சோ'வின் 'யாருக்கும் வெட்கமில்லை' அம்பத்தூரிலும்(சென்னையிலிருந்து அம்பத்தூர்16km தூரம்)ஏற்பாடு செய்திருந்தேன்.முதல் நாள் நாடகம் முடிந்தது.அடுத்த நாள் 'சோ'நாடகம்.
6 மணி அளவில் அம்பத்தூர் வந்த "சோ' வை வரவேற்றேன்.காரிலிருந்து இறங்கிய அவர் என்னைப் பார்த்ததும்
முகத்தை திருப்பிக் கொண்டார்..சிறிது நேரம் கழித்து என்னைகூப்பிட்டு,கோபமாக"சோ உனக்கு கிள்ளுக்கீரையா?"
என்றார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.அவரே தொடர்ந்தார்'மேஜர் நாடகம் சென்னையில்..என் நாடகம் இவ்வளவு
தொலைவில்"என்றார்.அப்போதுதான் அவர் கோபத்துக்கான காரணம் தெரிந்தது.நான் சொன்னேன்'மேஜருக்கு இங்கு
gate collection இருக்காது..ஆனால் உங்களுக்கு இருக்கும்.அந்த collection ஐ வைத்து என் சபாவின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ளலாம்.அதனால்தான்'.அவர் பின் என்னிடம் ஏதும் பேசவில்லை.
நாடகத்திற்கு நல்ல கூட்டம்..நல்ல வசூல்..
நாடகம் முடிந்ததும் என்னை கூப்பிட்டார்.."எவ்வளவு gate collection என்றார்.சொன்னேன்(3000 என்று ஞாபகம்.அது அந்த காலத்தில் பெரிய அமௌண்ட்)'
சென்னையில் போட்டிருந்தால்..இன்னும் அதிகம் இருக்கும்..என்றவர்..தன் நாடகக்குழு நிர்வாகி திரு.ரங்காச்சாரி யை கூப்பிட்டு நம் city rate1000 வாங்கிக்கொள் போதும் என்றார்.(அம்பத்தூருக்கு குழு வந்த செலவே அதிகமிருக்கும்)
சோ விற்கு திடீரென கோபம் வரும்..வந்த வேகத்தில் மறையும் என்று ரங்காச்சாரி என்னிடம் கூறினார்.அவர் சொல்ல மறந்தது சோ பெருந்தன்மையானவர் என்பதை.

8 comments:

கோவி.கண்ணன் said...

//அவர் சொல்ல மறந்தது சோ பெருந்தன்மையானவர் என்பதை.//

இந்த பதிவை டோண்டு ராகவன் படித்தால் மிக மிக மகிழ்வார்

:)

Kanchana Radhakrishnan said...

ஏற்கனவே தேன்கூட்டில் டோண்டு சார் படித்துவிட்டார் ..தமிழ்மணத்தில் இப்போதுதான் பதிவிட்டேன்.அதனால் டோண்டுசாரை மகிழ்வித்து விட்டேன்.

சின்னப் பையன் said...

ம். பார்த்தசாரதி சபா ஹால்... ஏகப்பட்ட நாடகங்கள் பாத்திருக்கேன் இங்கேயும்... ஆர்.எஸ்.மனோகர் நாடங்களும்... அதை இடிச்சி குடியிருப்புகள் கட்டி ரொம்ப நாளாச்சுதே.....

சின்னப் பையன் said...

நீங்க பழைய நாடக புகைப்படங்களைக்கூட பதிவேற்றலாமே?....

Kanchana Radhakrishnan said...

இது நடந்தது 1974ல்..அப்போது சபா இருந்தது.நாடகங்களின் பொற்காலம் அது

Kanchana Radhakrishnan said...

நம்ம பதிவை படிக்கிறவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கட்டும்..பிறகு ஜாமாய்ச்சிடலாம்

மங்களூர் சிவா said...

நல்ல சுவாரஸ்யமான தகவல்.

Kanchana Radhakrishnan said...

nanri sivaa