Sunday, August 10, 2008

கமல் அவசர கதை ஆலோசனை

தனக்குப் பிடித்த இயக்குனர்கள்,எழுத்தாளர்களை அழைத்து கமல் அடுத்த பட கதை ஆலோசனை செய்தார். அதன் விவரம்.

கமல்- ரவிகுமார்,மௌலி,சுந்தர் சி.,கிரெசி மோகன்,மதன்,சுஜாதா..sorry., அவர் மறைஞ்சுட்டார்ங்கிறதை மறந்துட்டேன்.உங்களை எல்லாம் ஏன்
வரச்சொன்னேன்னா..என்னோட மர்மயோகி வர 2 வருஷம் ஆகும்.குறுகிய காலத்தயாரிப்பான குசேலன் சரியா ஓடல்லை.,அதனால்..
உடனே என் படம் ஒன்னு வரணும்.உங்ககிட்ட யாரிடம் எனக்கான கதை இருக்கு..

(எல்லோரும் ஒன்றாக கையைத் தூக்க..)

கமல்- ஒவ்வொருத்தரா..முதல்லே ரவிகுமார்..உங்க கதையைச் சொல்லுங்க

ரவிகுமார்-ஜக்குபாய் ன்னு ஒரு கதை இருக்கு

கமல்-அதுதான் ரஜினி நடிக்கறதா..இருந்து..இப்ப..சரத் நடிக்கிறாரே

ரவி- இது வேற ஜக்குபாய்..அது வேற ஜக்குபாய்..இதுல எதிர்காலத்தைக் காட்டக்கூடிய ஒரு கருவி..வில்லன்கள் கிட்ட கிடைக்கிறது.
அதைத் தெரிஞ்சுக்கிட்டா..பிரபஞ்ச ரகசியம் வெளிப்பட்டுடுமே என்று கதாநாயகன்..அதைக் கடத்தி அழிக்கப் பார்க்கிறான்.
அவனுடன் சேர்ந்து..அசினும் ஓடிக்கிட்டே இருக்காங்க..நம்ம வையாபுரி,சார்லி. இவங்கைள் காமடியனா போட்டுடுவோம்.

(சுந்தர் ( முணு முணுக்கிறார்) ஆமாம்..படமே காமடி..இதுல காமடியன் வேறயா..ஹீரோ,ஹீரோயின் ஓடினா படம் ஓடிடுமா)

கமல்- உங்களோட சேர்ந்தா..படம் முடிய 2 வருஷம் ஆகுமே..

ரவி- குறுகிய காலத் தயாரிப்புன்னு சொல்றீங்க..அதனால 730நாள்ல முடிச்சுடலாம்.

கமல்-கதைல..தசாவதார சாயல் இருக்கே

ரவி-திரைக்கதையிலே எல்லாம் மாறிடும்..மொத்தம் 12 கேரக்டர்ஸ்..எல்லாத்தையும் நீங்களேக் கூடச்செய்யாலாம்.நான் மட்டும்
ஒரு பாடல்ல வந்து பூமிக்கும்..வானத்துக்கும் குதிச்சுடறேன்.

கமல்- உங்க கிட்ட அப்புறம் வர்றேன்..கிரேசி..உங்ககிட்ட ஏதாவது...


கிரேசி-இருக்கே...இருக்கே...முஹம்மது ஜான் சுந்தர பாண்டியன்னு ஒரு கதை.நாலு ரோலும் நீங்க பண்ணாலாம்..அதுலே சுந்தர் ரோல்
ஒரு சமயல்காரான்...ஐ..மீன்...

கமல்-யூ மீன்..என்னன்னு புரிஞ்சுப் போச்சு.. மௌலி நீங்க..

மௌலி- கிரேசி..சொன்ன கதையையே எடுத்திடலாம்...வேணும்னா..டைடில..ஹரி சந்திரமதின்னு மாத்திடலாம்.(கமல் மௌனமாயிருக்க)
இல்லேன்னா..சங்கரதாஸ் uvve சாமி ன்னு வைச்சுப்போம்

கமல்-அது என்ன நடுவே uvve

மௌலி-அது சங்கரதாஸ் உவ்வே வாந்தி சத்தம் சுவாமி உங்க பேரு...பிண்ணனி இசையே வேண்டாம்..திருப்பாவையை ஓட விட்டுடலாம்.

கமல்- சுந்தர் உங்க கிட்ட

சுந்தர்-நான் இப்ப நடிப்பிலே பிஸி..உங்க கதை அன்பே சிவம் மாதிரி எதாவது இருந்தா..நான் டைரக்ட் பண்ணிடறேன்..

(ரவி முணுமுணுக்கிறார்-நோவாம நோம்பு கும்பிடப் பார்க்கிறார்)

கமல்-மதன் நீங்க

மதன்-டூ..டூ..டூ..டூன்னு(two to two to) ன்னு படப்பேரு..ஹீரோ...ஒரு விபத்திலே..மூக்கு கோணிடுது..அப்பறம்..பீஹார்ல வெள்ளத்திலே மாட்டிக்கிறான்..இப்படி
போகுது கதை...

கமல்-அன்பே சிவம் மாதிரி தெரியுதே

சுந்தர்-அப்போ..நானே..டைரக்ட் பண்ணிடறேன்

மதன்-அதனால் என்ன..படப்பேரை 'வாழ்க வளர்க'ன்னு வைச்சுப்போம்

(ஃபோன் அடிக்க..கமல் பேசுகிறார்)

கமல்-நாம கதை டிஸ்கஸ் பண்றது தெரிஞ்சு..தயாரிப்பாளர்கள்..ஏ.எம்.ரத்னம்,ஆஸ்கர் ரவி,செவென்த் சேனல் மாணிக்கம் எள்ளாம் எங்கேயோ ஓடிட்டார்களாம்.
முதல்லே அவங்களை கண்டுபிடிப்போம் வாங்க..

(அனைவரும் விரைகின்றனர்)

13 comments:

முரளிகண்ணன் said...

\\கமல்-நாம கதை டிஸ்கஸ் பண்றது தெரிஞ்சு..தயாரிப்பாளர்கள்..ஏ.எம்.ரத்னம்,ஆஸ்கர் ரவி,செவென்த் சேனல் மாணிக்கம் எள்ளாம் எங்கேயோ ஓடிட்டார்களாம்.
முதல்லே அவங்களை கண்டுபிடிப்போம் வாங்க..
\\
Ha hA ha Ha ha ha ha ha

சின்னப் பையன் said...

ஹாஹா... போட்டுத் தாக்குங்க...:-)))

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி முரளி கண்ணன்

Kanchana Radhakrishnan said...

//ஹாஹா... போட்டுத் தாக்குங்க...:-)))//

இப்படியே உசுப்பேத்திக்கிட்டு இருங்க

கோவி.கண்ணன் said...

//சுந்தர் ( முணு முணுக்கிறார்) ஆமாம்..படமே காமடி..இதுல காமடியன் வேறயா..ஹீரோ,ஹீரோயின் ஓடினா படம் ஓடிடுமா)//

கலக்கல் !

Kanchana Radhakrishnan said...

//சுந்தர் ( முணு முணுக்கிறார்) ஆமாம்..படமே காமடி..இதுல காமடியன் வேறயா..ஹீரோ,ஹீரோயின் ஓடினா படம் ஓடிடுமா)

கலக்கல் !//

கோவிசார்..பாராட்டுதலுக்கு நன்றி

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ஆஹா நீங்களுமா??
ம்ம்ம் சூப்பராயிருக்கு.
கலக்குங்க.
இன்னும் எதிர்பார்க்கும்
சுபாஷ்

Kanchana Radhakrishnan said...

varukaikku nanri subaash

Anonymous said...

அருமை..அருமை..

Kanchana Radhakrishnan said...

nanri anaani

மங்களூர் சிவா said...

கலக்கறீங்க !!

:))))))))

Kanchana Radhakrishnan said...

:-)))))